பொன்சேகாவின் மேன்முறையீடு நாளை பரிசீலனைக்கு

sarath-fonseka.jpgஇரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பினை ரத்து செய்யுமாறுக் கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீடு நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரஞ்சித் சில்வா மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று கவனத்தில் கொள்ளப்பட்ட வேளையில் நாளை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையிட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளார். எனினும் அதற்கு அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் மனுதாரர் என்ற வகையில் சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் குழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *