பிரிட்டிஷ் பிரதிநிதிகள் செட்டிகுளம் விஜயம்

பொதுநலவாய சங்கத்தின் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று வியாழன் பகல் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நிவாரண கிராமத்திற்கு விஜயம் செய்து அவர்களுடைய வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்தனர்.

மாவட்ட சிவில் நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகளும் பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கினார்கள். மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் இவர்களை செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் சந்தித்து உரையாடினாரென தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *