இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு – 180 பலி: 500க்கு மேல் மாயம்

tsunami.jpgஇந்தோ னேசியாவின் ஜாவாத் தீவுகளில் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களால் 180 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 500 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதித் தீவான மெத்தாவியில் திங்கட்கிழமை 7.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தில் 10 கிராமங்கள் முற் றாகச் சேதமடைந்துள்ளதுடன் 154 பேர் கொல்லப்பட்டனர். 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அதே நேரம் ஜாவாத் தீவுகளிலுள்ள மெராப்பி எரி மலை தீக் குழம்பை கக்கியதில் அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமித் தாக்கத்துக்குள்ளான பகுதிக் கடல் கொந் தளிப்புடன் காணப்படுவதால் நேற்றைய தினமே மீட்புப் பணியாளர்கள் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலம் அப் பகுதியைச் சென்றடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களும், மருந்துப் பொருள்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடு கள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. உணவுத் தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அரு கில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *