தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

Tamil_Muslim_RaceRelationவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

சமாதானம் புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும்  ஜனநாயகம்,  நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம்.

நீண்டதொரு போரின் பின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீக்கவோ  துருவப்பட்டுள்ள  சமூகங்களின்  முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவோ அரசு மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் போதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இன்னிலையில் சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் என்ன பாத்திரம் வகிக்கலாம்.?

சமூகங்கள் தொடர்ந்தும் துருவப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு புதிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகங்களுக்கிடையான இடைவெளி மேலும் அதிகரிக்கும் அபாய நிலை.

சொந்த இடங்களுக்கு திரும்புதல், மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையான புரிந்துணர்வு என்பன பிரிக்கமுடியாது பின்னிப்பிணந்துள்ளன. எனவே சொந்த இடங்களுக்கு மீளுதல், மீள் குடியேற்றம் என்பன சமூகங்களுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலேயே நிகழ்த்தப்படவேண்டும்.

இந்த பின்னணியில் தான் 20 வருடங்களுக்கு முன் வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அணுகவேண்டும்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதிமுகாம்களில் கடந்த 20 வருடங்களாக அல்லல்படும் அதே வேளை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தமது பாரம்பரிய பிரதேசங்களை பௌதீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் படிப்படியாக இழந்துள்ளனர்.

எனவே வடமாகாண முஸ்லிம்களும் வட கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமது சொந்த இடங்களுக்கு மீள சம உரிமையுள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே இம்மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுவே சமூகங்களுக்கிடையான நல்லுறவை கட்டியமைக்கும்.

ஜனநாயகம், நீதி, சமாதானம் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து சக்திகளும் வடமாகாண முஸ்லிம்களினதும் ஏனைய பிரதேசங்களில் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் மீள் குடியேற்றமானது நீதியானது  உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டியது என குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதுவே இன்றைய சவால்.

Nirmala Rajasingam
SLDF Steering Committee

The venue:
Conference Room
3rd Floor, Berkeley Business Centre
 44 Broadway,  Stratford, London,  E15 1XH
(nearest tube station:  Stratford )

Saturday 30 October from 2- 5 pm

கலந்துரையாடல்:

தலைமை: நஜா மொகமட்

பேச்சாளர்கள்:
ரீஸா யெகியா
சின்னையா ராஜேஸ்குமார்
ராஜேந்திரன் ராமமூர்த்தி

பிரதம பேச்சாளர்:
Ustaz.Hajjul Akbar (Sri Lanka)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

238 Comments

  • ashroffali
    ashroffali

    வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தல் தொடர்பாக மஹிந்த சிந்தனையின் முதலாம் பாகத்தில் ஒரு அத்தியாயமே உள்ளது. அது நடைபெற்றதா?

    இனியாவது அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். எதிர்காலத்தைத் தொலைத்த அந்த மக்களின் இழப்புகளுக்கேற்ற நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

    அத்துடன் எந்த விதமான நிர்ப்பந்தங்களும் மீளக் குடியமர்த்தலில் இடம்பெறக் கூடாது.அது மிக முக்கியமான விடயம்.

    கிழக்கை எடுத்துக் கொண்டால் சம்பூர் மக்களின் நிலம் மீளவும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்கள் மூன்றாண்டுகளாக பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றார்கள்.

    புலிகள் இருந்த காலத்தில் திருமலைத் துறைமுகத்தைப் பாதுகாக்க சம்பூர் தேவை என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆயினும் இப்போது அப்படியான அவசியம் இல்லாத போது அந்த அப்பாவிகளை மீளவும் அங்கு குடியமர்த்துவது தானே நியாயம்?

    இவை எல்லாவற்றையும் விட வட-கிழக்கில் மட்டுமன்றி இலங்கை முழுதும் அதற்கு அப்பாலும் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு வலுவாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். எங்களுக்கிடையிலான சந்தேகங்களைக் களைய சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்.

    Reply
  • rizviahmed
    rizviahmed

    Government’s major concern on how to resettle the sinhalist and build Budhist temple, every one can to show in realistic,
    that resettlement minister and government take most of risk and consideration on who located and living in railway station as temporarily shelter,calling to appropriate place in jaffna.(just only 300)well,

    So more than one lakh People crying to resettlement (North muslim community)any single….
    Government not only sinhalist but muslim community also living under government in this country we also SriLankans when will realize sinhala leaders?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… SriLankans when will realize sinhala leaders?…..//rizviahmed

    என்ன rizviahmed மாரி நெடுந்தூக்கத்தில் (Deep winter Sleep) இருந்து இப்போதுதான் எழுந்தது போல் பேசுகிறீர்கள். தமிழருக்கு உதைக்கும் போதுதான் முஸ்லிம்கள் சகோதரர்கள். இப்போ அப்படி எல்லாம் இல்லை!

    Reply
  • thurai
    thurai

    //தமிழருக்கு உதைக்கும் போதுதான் முஸ்லிம்கள் சகோதரர்கள். இப்போ அப்படி எல்லாம் இல்லை//சாந்தன்

    ஆனால் தமிழரை தமிழரே உதைத்துக் கொண்டு தமிழினம், தமிழ்தேசியம், உலகத்தமிழர் இன்னும் எவ்வளவோ பூச்சாண்டிகளை உலகமெங்கும் விட்டு வாழும் தமிழர் தான் ஈழத்தமிழர்.– துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஆனால் தமிழரை தமிழரே உதைத்துக் கொண்டு தமிழினம், தமிழ்தேசியம், உலகத்தமிழர் இன்னும் எவ்வளவோ பூச்சாண்டிகளை உலகமெங்கும் விட்டு வாழும் தமிழர் தான் ஈழத்தமிழர்.– துரை ….//

    திரு ரிஸ்வி அஹமட்டின் வேதனைக்கு பதில் சொன்னால் நீங்கள் எனக்கு கதை விடுகிறீர்கள். இங்கே பின்னூட்ட முஸ்லிம் சகோதரர் சிங்களத் தலைவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு உங்களிடம் பதிலை/கருத்தை எதிர்பார்க்கிறார்!

    Reply
  • thuai
    thuai

    //திரு ரிஸ்வி அஹமட்டின் வேதனைக்கு பதில் சொன்னால் நீங்கள் எனக்கு கதை விடுகிறீர்கள். இங்கே பின்னூட்ட முஸ்லிம் சகோதரர் சிங்களத் தலைவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு உங்களிடம் பதிலை/கருத்தை எதிர்பார்க்கிறார்!//சாந்தன்

    எப்ப தொடக்கம் புலிக்கும் புலிகளின் ஆதரவாளர்களிற்கும் முஸ்லிம்கள் சகோதரரானார்கள் எனக் கூறுவீர்களா?– துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….எப்ப தொடக்கம் புலிக்கும் புலிகளின் ஆதரவாளர்களிற்கும் முஸ்லிம்கள் சகோதரரானார்கள் எனக் கூறுவீர்களா?– துரை…./

    இங்கே கேள்வி சிங்களவர்கள் சகோதரர்களாக ‘கொண்டாடிய’ முஸ்லிமுடையது. மேலும் முஸ்லிம்களை சகோதரர்களாக கொண்டாடிய சிங்களவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? நீங்கள் மட்டும் என்ன திறமோ என எழுதியது.
    சிங்களத்தலைவரிடம் ஒரு முஸ்லிம் ‘சகோதரர்’ எனக்கு என்ன உரிமை எனக்கேட்டால். நீங்கள் ஒரு தமிழனைப்பார்த்து நீங்கள் என்ன திறமோ என கேட்கிறீர்கள்? இதன் மூலம் நீங்கள் சகோதர முஸ்லிம் என வாய்க்கு வாய் அழைக்கும் முஸ்லிமைன் பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள். இவ்வாறே இங்கு உங்களை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் உங்களின் பதில் சொல்லும் பாணி இருக்கிறது.
    மேலும் பின்னொரு நாளில் நீங்கள் முஸ்லிம்கள் பிரச்சினை என வரும் போது தமிழன் அவர்களின் பிரச்சினையை கணக்கெடுக்கவில்லை என குற்றமும் சாட்டுவீர்கள். ஏனென்றால் உங்களால் உருப்படியான பதில்கள் அல்லது போராட்டங்கள் செய்ய முடியாது. இதனை நீங்களே அறிவீர்கள்.

    ஆகவே மேலே திரு.ரிஸ்வி அஹமட் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அவர் எனது புலி ஆதரவுக்காரரின் சகோதரரா இல்லையா என்பது இருக்கட்டும் மனிதாபிமான இனச்சகோதரத்துவம் பேணும் உங்களின் சகோதரருக்கு உங்கள் சிங்களச்சகோதரரிடம் இருந்து ஒரு நம்பகமான செயல்த்திட்டம் உள்ள பதிலைப் பெற்றுக்கொடுத்து அதன்பின்னர் என்னைக் கேளுங்கள் (வெறும் தினகரன் அல்லது ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அல்லது அமைச்சர் கவனிப்பதாக வாக்குறுதி ஸ்ரைல் பதில் வேண்டாம்)

    Reply
  • thuai
    thuai

    //இதன் மூலம் நீங்கள் சகோதர முஸ்லிம் என வாய்க்கு வாய் அழைக்கும் முஸ்லிமைன் பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள். இவ்வாறே இங்கு உங்களை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் உங்களின் பதில் சொல்லும் பாணி இருக்கிறது.//சாந்தன்

    இங்கு எழுதியும், வாயால் பேசியும் யாருடனும் சகோதரத்துவம் ஏற்படப் போவதில்லை. நடைமுறையில் மட்டும்தான் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். இதனை சகல இனத்தவரிடையேயும் காணலாம். உருமை, விடுதலை,தமிழினம்,சிங்கள இனம்,முஸ்லிம்கள் என கூறி அரசியல் லாபம் தேடுவோராலெயே இலங்கையில் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை உலகெங்கும் ஏற்றுமதி செய்து பிளைப்பவர்கள் கொலைகார, பயங்கரவாதப் புலிகள். -துரை

    Reply
  • karu
    karu

    இன்று யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் தமது உடைமைகள் உரிமைகள் என்று பேசுவதைவிட தமது மதம் என்றே ஆரம்பிக்கிறார்கள் இவர்களில் பலர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் உண்டு என பல இராணுவத்தினர் பேசுகின்றார்கள். இவர்களில் பலருக்கு சவுதி ஈரான் போன்ற நாடுகளுடன் தொடர்பு உள்ளது என்றும் இவர்களில் பலர் புலிகளின் ஆதரவாளர்கள் போன்றே தமது சுய நலத்திற்காக முஸ்லீம்களை பலிக்கடா ஆக்க தயாராகுகின்றார்கள் என்பது வெகு விரைவில் வெளிவரும்.

    இவர்களின் முஸ்லீம் மத அடையானளத்தின் நெருடலை இப்போது யாழ்ப்பாணம் உணரத் தொடங்கியுள்ளது. முன்னர் எப்போதும் இல்லாதவாறு இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து ஆடைகள் அணிவதை ஆரம்பித்துள்ளனர்.

    தமிழர்களுடன் வியாபார போட்டியின் வெளிப்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் இவைகள் பின்னர் மதப்பிரச்சினை என காரணம் வைத்து குழப்பத்தை விளைவிப்பார்கள் என இப்போது யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்படுகின்றது.

    முஸ்லீம்களால் கிழக்கு மாகாணத்தமிழர்க்கு நடைபெற்ற நிலைமைகள் கொலைகள் தாக்குதல்கள் நில பறிப்புக்கள் வியாபாரத் தாக்குதல்கள் பற்றியும் இப்போ யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்படுகின்றது;– karu jaffna

    Reply
  • palli
    palli

    31.10 2010 ரிபிசியின் விசேட அரசியல் கலந்துரையாடல்

    வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம் வெளியேற்ற பட்ட தொடர்பாக 20 வருடத்தை முன்னிட்டு கலந்துரையாடல்
    பாசில் கபூர் செயலாளர் யாழ் முஸ்லிம் ஒன்றியம் – பிரித்தானியா
    அஜீத் இக்பால் -முன்னால் யங் ஏசியா தொலைகாட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்
    ரமேஸ் மூசின் அமைப்பாளர்- பிரித்தானியா
    முகமட் பலில் – பிரித்தானியா
    மொலவி சுப்பியான் யாழ் மாநகர சபை உறுப்பினர்
    ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்;
    த ஜெயபாலன தேசம் இணையத்தள பிரதம ஆசிரியர்
    வை. லோகநாதன் ரிபிசியின் அறுவை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
    ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர்
    மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்
    தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…. நடைமுறையில் மட்டும்தான் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். இதனை சகல இனத்தவரிடையேயும் காணலாம். உருமை, விடுதலை,தமிழினம்,சிங்கள இனம்,முஸ்லிம்கள் என கூறி அரசியல் லாபம் தேடுவோராலெயே இலங்கையில் பிரச்சினை……//

    அதைத்தானே ஏன் செயற்படுத்தவில்லை என ரிஸ்வி அஹமட் கேட்கிறார்? முஸ்லிம்களுமா சிங்களவரை ‘சகோதரத்துவத்துடன்’ நடத்தவில்லை? ஆச்சரியமாக இருக்கிறதே. நீங்கள் தானே பலதடவை முஸ்லிம்கள் ‘நடைமுறையில்’ நம்பிக்கை வைத்து சிங்கலவருடன் சகோதரத்துவம் வளர்த்துள்ளனர் என பலதடவை சொல்லி இருக்கிறீர்கள். இப்போ என்னடா என்றால் கேள்விகேட்ட முஸ்லிமுக்கு பதில் அளிக்காமல், என்னைடம் வந்து தமிழன் என்ன திறமோ எனக்கேட்கிறீர்களே?

    Reply
  • thurai
    thurai

    //முஸ்லிம்களுமா சிங்களவரை ‘சகோதரத்துவத்துடன்’ நடத்தவில்லை? ஆச்சரியமாக இருக்கிறதே//சாந்தன்

    சிங்களவரிற்கும், முஸ்லிம்களிற்குமிடையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலேயே கலவரம் ஏற்பட்டு அதற்கு தமிழர்களே முன்னின்று தீர்த்தாக் வரலாறு உண்டு. எல்லாம் புலத்தில் பிறந்த தமிழ் பிள்ளைகளிற்கு தமிழரின் தலைவர் பிரபாகரன் மட்டுமே என்று தமிழாலயங்களில் சொல்லிக்கொடுக்க அங்கு படிதவர் மாதிரி சொல்கின்ரீரே. நாட்டின் பிரச்சினை என்பது எமது வாழ்வில் வரும் பிரச்சினை போல்தான். வாழ்ந்துகொண்டேதான் தீர்வும்காண வேண்டும். தீர்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க ஏன் இந்த புலம்பெயர் தமிழர் சிலர் இலங்கை அரசுடன் முண்டி அங்கு வாழும் தமிழரின் வாழ்வோடு விளையாடுகின்றார்களோ தெரியவில்லை.– துரை

    Reply
  • rizviahmed
    rizviahmed

    Brother santhan pls read this article “அறிவென்றொன்று: கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள்” at -www.thenee.com

    Br karu you also read it, Br karu Muslims are identifying them on basis of they religion not in language or color or country, are you know Muslims use every language in every country?, he would speak Chinese or Malayalam who believe Allah and Islamic priciple he is Muslim.

    when a tamil leader (i foget him name may be amirta/ponnamp/selva) called or identify the Muslims as Tamil why rejected that?

    //இவர்களின் முஸ்லீம் மத அடையானளத்தின் நெருடலை இப்போது யாழ்ப்பாணம் உணரத் தொடங்கியுள்ளது.//
    Br. karu Jaffna is Muslim’s mother land, you know well how LTTE fascism forcibly evicted them within 24 hours, world and Mulims never forget this frenzy of tamil tigers.

    Muslims gets total rights to business activities, another cultural and religious activities as they home land.

    Be justice man, don’t have bias and enmity. Accept pluralism its natural phenomenon of universe, dignity other community and religion. Don’t defamate other community on basis jealousy, Muslim community like to live with peace every second, Islam guide us for this, if you have doubt please study Islam its open for all.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    karu,
    முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்துவது இஸ்லாமிய நம்பிக்கையில் வாழ்பவனின் உரிமை. நாட்டில் எங்கே வாழ்ந்தாலும் எங்களை இணைப்பது மதம் எனவே தான் மதத்தைக் கொண்டு முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. எமது மார்க்கக் கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதும் இல்லாததும் கூட அவரவர் உரிமை. இஸ்லாமிய பெண்கள் பர்தாவை அணிவதென்பது எதற்காக என்று அவர்கள் தெரிந்திருந்தால் போதுமே, அதில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன கஷ்டம்?

    தமிழன் எல்லாம் புலி என்று சிங்களவன் சொல்லும் போது உங்களுக்கு வேதனை இருந்திருந்தால் இப்போது முஸ்லிம் எல்லாம் பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வதின் வேதனையும் உங்களுக்குப் புரிய வேண்டும். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை எங்கேயும் வியாபாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ளவர்கள். முஸ்லிம் ஹோட்டல் இல்லாத முக்கிய ஊர்கள் இலங்கையில் எங்காவது இருக்கிறதா கூறுங்கள் பார்க்கலாம்? அதைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர்களுக்குத்தான் இது பிரச்சினையாக இருக்கும்.

    Reply
  • BC
    BC

    Karu (jaffna), தெரிவிக்கபட வேண்டிய விடயங்களை சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள். நன்றி.

    Reply
  • மாயா
    மாயா

    //இஸ்லாமிய பெண்கள் பர்தாவை அணிவதென்பது எதற்காக என்று அவர்கள் தெரிந்திருந்தால் போதுமே, அதில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன கஷ்டம்?//

    பல காலங்களாக இல்லாத ஒன்றை பார்க்கும் போது ; இவ்வாறான எண்ணங்கள் பலருக்கு தோன்றலாம். தமிழர்கள் அல்லது இந்தியர்கள் சாறி அணிவது யாருக்கும் பிரச்சனை என > யாராவது நினைக்கிறீர்களா?

    முன்னரெல்லாம் இலங்கையில் தமிழ் பெண்கள் மட்டுமே பொட்டு வைத்தார்கள். இப்போது தமிழ் பெண்களை விட சிங்கள இளம் பெண்கள்தான் அதிகமாக பொட்டு வைக்கிறார்கள். அவர்களும் புலிகளாகி விட்டனரா? இதற்காக ஈரான் – சவுது போன்ற நாடுகளுடன் தொடர்பு உள்ளதென பேசுவதெல்லாம் படு பிற்போக்குத்தனம்.

    யாழ்பாணத்தில் இருந்து துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்கள் புத்தளம் – நுரைச்சோலை – ஆலங்குடா – ஏத்தாளை – கல்பிட்டி போன்ற இடங்களில் வாழ்ந்தார்கள். இந்தப் பகுதியில் தமிழர் – சிங்களவர் – இஸ்லாமியர் என அனைத்து மக்களும் வாழ்கிறார்கள். புத்தளம் போன்ற பகுதியில் வாழும் அநேகமான இஸ்லாமிய பெண்கள் பர்தாவோடு வாழ்வதை இயல்பாக்கிக் கொண்டுள்ளனர். இதை மதத்தின் பேரால் என்பதை விட ; ஒரு பாஸனாகவே கருதுவதை கடந்த முறை போன போது பல இஸ்லாமிய சகோதரிகள் சொன்னார்கள். (நான் பல காலமாக அங்கு வாழ்ந்ததால் . அவர்களோடு பழகுவது என் வீட்டில் பழகுவது போன்றது. 1983ல் கலவர காலத்தில் என் சகோதரியின் குடும்பத்தினர் அவர்களது வீடுகளில்தான் இருந்தார்கள்.) இஸ்லாமிய பெண்கள் முன்னர் சாறி கட்டி முட்டாக்கு போடுவதை விட வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பர்தாவில் பல நண்மைகள் ; இலகுவானது என்றனர். உள்ளே ஒரு பஞ்சாபியை உடுத்தி பர்தாவை போடுவது ஒரு விதத்தில் செளகரியமானது. அடுத்து செலவும் குறைவு என்றார்கள். சில ஏழைகள் கிழிந்த உடையோடு வெளியில் போகும் போது மனசு சங்கடமாக இருக்கும். பர்தாவால் அவை மறைக்கப்படுகின்றன என்ற போது மனம் நோகவே செய்தது.

    எதற்கெடுத்தாலும் எதையாவது சொல்லி ; மக்களை அந்நியமாக்கும் நிலை இனியும் தொடர வேண்டாம். அதை கற்றோராவது சிந்திக்க வேண்டும்.

    இவற்றை Youtube பாருங்கள். இவை எம்மோடு வாழ்ந்த ஒரு இனத்துக்கு நமது காலத்தில் செய்த பெரும் கொடுமை. நரகம் – சுவர்க்கம் எல்லாமே இங்குதான். இது எனது நம்பிக்கை. நாம் செய்தது; நமக்கே வந்தன. இதை பாருங்கள். இனியும் இந்த குரோங்கள் வேண்டாம். அன்பால் செய்ய முடியாததை ; ஆயுதத்தால் ஒரு போதும் சாதிக்க முடியாது.

    -http://www.youtube.com/watch?v=9QHnHZXgtow&feature=related

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்பான karu,
    முஸ்லிம்கள் தம்மை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்த விரும்புவது தமிழர் தம்மை மொழி அல்லது இன ரீதியாக அடையாளப்படுத்த விரும்புவதை ஒத்தது. நான் பல முறை பலரிடம் கேட்டும் பதில் வராத விடயம் ஏன் மதம் முன்னிலை படுத்தப் படக்கூடாது அல்லது ஏன் மொழி அல்லது இனம் முதன்மை பெற வேண்டும்? karu நீங்களாவது விடை தாருங்கள்.

    மேலும், karu இலங்கை முஸ்லிம்கள் யாருடனும் சண்டைபிடிக்க இன்னும் வெளிக்கிடவில்லை. அப்படி நடக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. நம்பிக்கை தகர்க்கப்படுமானால், அதை தடுத்து நிறுத்த இங்கு ஆயிரமாயிரம் இஸ்லாமியர் தயாராயிருக்கிறார்கள். அதற்காக கூடியிருந்து கெடுக்கும் நடவடிக்கைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உங்கள் போன்ற சமாதான விரும்பிகளின் கடமையும் கூட.

    Reply
  • K. மாறன்
    K. மாறன்

    i agree with maya.

    கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !
    -http://arivudan.wordpress.com/2010/10/31/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/

    Thank you.

    Reply
  • நந்தா
    நந்தா

    அரசியல் என்பதுநடை முறை வாழ்வில் மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டினைக் கொடுக்க வல்லது. அரசியலுடன் மதம், மொழி என்பன கலக்கப்படும் பொழுது அது “ஒரு சாராரின்” அரசியல் என்ற அந்தஸ்தைப் பெற்று விடுகிறது.

    மொழி என்பது கண்டிப்பாக தேவையானது. படிக்கவும், பேசவும், தொடர்பு கொள்ளவும் தேவைப்படுவது மொழியாகும். எனவே மொழிக்குக் கொடுக்கும் அந்தஸ்தை மதங்களுக்குக் கொடுக்க முடியாது.

    ஜனநாயக அரசியலில் மதம், மொழி மூலம் மக்களை குழுக்களாக்கி ‘அரசியல் அதிகாரத்தை’ அடைபவர்கள் “மற்றையவர்களை” மதிக்கவில்லை என்பது இலங்கயின் அரசியல் வரலாறு.

    மதங்களை தங்கள் வீட்டுடன் வைத்துக் கொள்வது மனித நாகரீகத்துக்கு நல்லது செய்யும் என்பது பலரின் எதிர்பார்ப்பு!

    Reply
  • ashroffali
    ashroffali

    நந்தா….
    தமிழர்களுக்குப் பூவும் பொட்டும் போன்றதுதான் முஸ்லிம் பெண்களின் பர்தாவும். தமிழ்ப் பெண்கள் பூவும்பொட்டும் இட்டு வெளியில் செல்வதற்குள்ள உரிமை பர்தா அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்ணுக்கும் உண்டு.அதை நீங்கள் மறுக்க முடியாது.

    மதங்களை வீட்டுக்குள் மட்டும் பூட்டி வைத்ததன் விளைவுதான் இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களின் அடிப்படையாக இருக்கின்றது. இளம் வயதுக் கர்ப்பங்களும் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகளும் அதைத் தான் நமக்குச் சொல்கின்றன. நமது கலாசாரம் பேணி நடந்திருந்தால் அதெல்லாம் நடந்திருக்காதே. கலாசாரத்தை மீறி கண்டபடி நடப்பதுதான் அதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.தயவு செய்து அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

    கடந்த காலங்களில் நாம் மொழியால் ஒன்றுபட்டிருந்த போதும் உங்களைப் போன்ற சிந்தனை கொண்ட சிலரால் தான் பிரிக்கப்பட்டோம். அந்தப் பிரிவினையானது பெர்லின் சுவர் போன்று உறுதியாய் நிற்கின்றது. அதனைத் தகர்த்தெறிய முற்படும் வேளையில் நீங்கள் சீனப்பெருஞ்சுவர் கட்ட முற்பட வேண்டாம்.

    உங்களுக்கு முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி என்றால் அதனை தனிப்பட்ட விடயமாக வைத்துக் கொள்ளுங்கள். அதனை வெளிக்காட்ட வேண்டாம். சகிப்புத் தன்மை நமக்குள் அத்தியாவசியப்படும் காலம் இது.

    உங்களைப் போன்று மற்றவர்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் எதிர்த்து எழுத வெளிக்கிட்டால் நமக்கிடையிலான ஒற்றுமை என்றைக்கும் வரவே வராது. அதுதான் உங்கள் விருப்பமா?

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    நந்தாவின் கருத்து ஏற்புடையது, ஆனால் எதார்த்தத்தில் இயக்கமற்றது.

    இலங்கையின் வரலாறு தமிழர் யார்? முஸ்லிம்கள் யார்? சிங்களவர் யார்? என பிரித்தெழுதி வைத்த வரலாற்றை தமிழர் சிங்களர் எனும் இரண்டு பிரிவுக்குள் அடக்குவதற்கு இது வரை வரலாறு எதுவும் செய்யவும் இல்லை, இனியும் செய்யப்போவதும் இல்லை.

    எனவே, முஸ்லிம்கள் தமது அடையாளத்தை நிறுவுவதற்கு தம் மொழி சாராத பிணைப்பை ஒருமுகப்படுத்துவதும் தமக்கான அடையாளத்தை பேணிப் பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும். அதை மதம் என்று வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது மதமாக இருக்கும், இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம் எனும் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அது மார்க்கமாகவும் அதன் மூலம் தம்மை முஸ்லிம்களாக அடையாளப் படுத்திக்கொள்வது எங்களுக்குப் பெருமைக்குரியதாகவும் இருக்கும்.

    ஜனநாயக உரிமை என்று வரும் போது, ஒவ்வொரு இலங்கையருக்கும் இருக்கும் உரிமை, ஒரு இலங்கைப் பிரஜையாக எங்களுக்கும் இருக்க வேண்டும், அதற்கான நடைமுறை அரசியல் மற்றும் சமூக நீரோட்டத்தில் கலந்து கொள்வது தான் சமூகத்தின் தேவை என்பதை முஸ்லிம் சமூகம், உணர்ந்து, செயற்பட்டு, அதன் மூலம் தம்மை இதுவரை எப்படித் தனித்துவத்துடன் பேணி வந்திருக்கிறதோ அதை அவ்வாறே பேணிப்பாதுகாத்தல் போதும், அதை யாருக்கும் பயந்தோ அல்லது யாருக்காகவும் விட்டு விலகியோ வாழ வேண்டிய தேவை கடந்த காலத்தைப் போன்று வராமல் தமது சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்வதும் முஸ்லிம்களின் கடமை.

    Reply
  • BC
    BC

    //மதங்களை வீட்டுக்குள் மட்டும் பூட்டி வைத்ததன் விளைவுதான் இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களின் அடிப்படையாக இருக்கின்றது.//
    இது உண்மையே அல்ல. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே மதத்தை தலைமேல் தூக்கி வைத்து போற்றுகிறார்கள். இதே மாதிரி மதத்தை தலைமேல் தூக்கி வைத்து போற்றும் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் முஸ்லிம் நாடுகளிலும் தான் பாலியல் அக்கிரமங்கள் நடக்கின்றன. மதத்தை விரும்புவோர் மதங்களை தங்கள் வீட்டுடன் வைத்துக் கொள்ளும் மேலை நாடுகளில் பெண்கள் நடு இரவிலும் ரெயினில் தனியாக செல்லமுடிகிறது. தமிழ் பெண்களும் செல்கிறார்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    அஷ்ரொப் அலி:
    கொக்கரல்ல மசூதியில் 17 வயது இளம் முச்லிம் பெண்ணுக்கு ஆண்கள் மட்டையடி கொடுத்து வக்கிர புத்தியை காட்டியது சரியென்று வாதிக்கிறார். முஸ்லிம்கள் இலங்கைச் சட்டத்தை மதிக்க போவதில்லை என்பதுதான் அந்த மசூதி மட்டையடியின் நோக்கம்.

    இந்துக்கள் பொட்டு இடுவதற்கும், முஸ்லிம் பெண்கள் முகமூடி மொட்டாக்கு உடுத்துவதற்கும் என்ன சம்பந்தம்?

    என்னமோ யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் பாலியல் அக்கிரமம் என்று குதிக்கும் நீங்கள் பாகிஸ்தானில் ஒரு பெண்ணை பலரும் கற்பழிக்க வேண்டும் என்று ஷரியா கோர்ட் தீர்ப்பளித்தது எப்படி என்றும் உங்கள் இஸ்லாம் அப்படியான சட்டங்களை இலங்கயிலும் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதங்கப்படுகிறீர்களா?

    அதாவது உங்கள் இஸ்லாமில் பெண்களைக் கற்பழிக்கலாம் என்பது நாகரீகம். அதனை மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்!

    நீங்கள் ஒரு பாகிஸ்தானை இலங்கயில் உற்பத்தி செய்ய தவிப்பது புரிகிறது!

    இலங்கை முஸ்லிம்களுக்கு கேடுகெட்ட பாக்கிஸ்தான் “உதாரண”, சொர்க்க பூமி என்பதும் தமிழில் இருந்து முதலில் பிரிவினை கேட்டு ஓடியவர்கள் முஸ்லிம்கள் என்பதும் வரலாறு.

    50 வருடத்துக்கு முன்னைய படங்களில் இந்த அரேபியன் முகமூடி உடுப்புக்களை நாங்கள் பார்த்தது கிடையாது.

    இஸ்லாம் என்பது மதம் மாத்திரமே. முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் அல்லது மதம் மாற்ற வேண்டும் என்று கோரும் ஒரு மத அடையாளத்தை மதிக்க வேண்டும் என்று இலங்கயில் எதிர்பார்க்க வேண்டாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    பிசி:
    உங்கள் கருத்து உண்மையே! மதம் என்று குதிப்பவர்கள் முதலில் “கைவைப்பது” பெண்களின் மீது என்பது உண்மை.

    கனடாவில் முஸ்லிம் பெண்கள் உட்பட பலர் இரவு வேலைக்குப் போகிறார்கள். ஆனால் சவுதி அறெபியாவில் ஆண் துணையில்லாது பெண்கள் காரோட்டக் கூடாது என்பது சட்டம்.

    இலங்கையில் “மதம்” பொது வாழ்வில் தடை செய்யப்பட வேண்டும்! வீட்டுக்குள்ளே மத வழிபாடுகளை வைத்துக் கொள்வதுநல்ல விஷயமே!

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    நந்தா அவர்கட்கு, உங்கள் கருத்து நாகரீகம் என்பது காழ்ப்புணர்ச்சியாக வெளிப்படுவது கண்டு வருத்தம். எனினும் அதுதான் நீங்கள் என்று இருந்தால் உங்களிடம் நாகரீகத்தை எதிர்பார்த்ததுதான் பிழை, எனவே உங்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் இடையில் இருப்பது இடைவெளியில்லை அது வெறும் காழ்ப்புணர்ச்சி என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    முதலில் இஸ்லாமிய சட்டங்களை இலங்கை சனநாயகக் குடியரசு எவ்வாறு பிணைத்துள்ளது என்பதை நீங்கள் “அ” விலிருந்து கற்றுத் தெளிவுறும் தேவையிருக்கிறது.இலங்கைச் சட்டப்பிரிவினில் இஸ்லாமிய கல்விச்சட்டம்,திருமணச்சட்டம் முதல் வெவ்வேறு விதமான சட்டங்கள் நாட்டின் பிரதான சட்டதிட்டங்களுடன் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் கற்றுத் தெளிந்துவிட்டு வாருங்கள். அப்படித் தெளிவுறும் பட்சத்தில் இலங்கையின் பிரதான சட்டதிட்டங்களுடன் இஸ்லாமியர்கள் ஒன்றிப்போகிறார்களா இல்லையா என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

    அடுத்ததாக, சமூக நடைமுறைகளின் பிற்போக்கையும் முற்போக்கையும் பிரித்தறிய முடியாமல் அதை ஒரு மதத்தின் மீது பழி சுமத்தும் உங்கள் போக்கைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. புலியும் தான் பன மட்டையால் அடித்தது, கம்பத்தில் கட்டித் தூக்கியது, பின்னால் சூடு வைத்தது, ஜே.வி.பி உதட்டை வெட்டினான், முண்டத்தை வெட்டினான், அவர்களும் புலியும் சேர்ந்து உயிரோடு மனிதர்களை எரித்தார்கள். இவர்கள் எல்லாம் எந்த மதத்தைச சேர்ந்தவர்கள் என்று கூறுவீர்கள்? வேலிபாய்வோர், காமக்களியாட்டம், சமூகச் சீர்குலைப்பில் ஈடுபட்டோருக்கெல்லாம் அவ்வளவு ஏன் யாழ்ப்பாணத்தில் நம் முன்னோர் என்ன தண்டனை கொடுத்தார்கள் என்று மறந்து விட்டீர்களா?

    இஸ்லாமிய சட்டத்தில் மட்டையடி “ஹத்” என்பது எவ்வாறான சூழ்நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது சட்டமாக இருக்கின்ற போதிலும், அதைச் செயற்படுத்துவதாயின் அதற்கு எவ்வாறான நடைமுறைகள் அவசியம், செய்யத்தகுதியானவர் யார் முதல் பல தகைமைகள் இருக்கின்றன. அவ்வளவு ஏன் பிச்சைப் பாத்திரம் ஏந்துவதற்கே இஸ்லாத்தில் தகைமை இருக்கிறது. நீங்கள் அரசுக்கு வரிசெலுத்துவீர்களோ இல்லையோ இஸ்லாமியர் ஆண்டுக்கு ஒரு தடவை தம் கையிருப்பில் இருக்கும் சொத்தில் ஒரு பங்கை “அளந்து” கொடுத்துவிடுவார்கள்.

    உங்கள் குறையானது, சட்டங்கள் அல்ல அதைச் செயற்படுத்தும் சமூகத்தின் தான்தோன்றித்தனம் என்பதை நிரூபித்தால் அதைச் செய்தவருக்கு என்ன தண்டனை என்பதையும் அதே இஸ்லாம் எடுத்துக் கூறியிருக்கிறது, எனவே அதை அணுகித் தெளிவாக்கும் பட்சத்தில் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும். எனவே சமூக நிலைப்பாடுகளை காழ்ப்புணர்வுடனான மத அளவுகோலில் வைத்து அளந்து பார்க்க முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆடு நனைந்த கதைபோல பாகிஸ்தானிய பெண்ணின் கதையை நீங்கள் காட்டியிருப்பது உச்ச வேடிக்கை, தெரியாமல் தான் கேட்கிறேன் அதற்குப் பிறகு அந்த வழக்கு என்னானது குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா? அங்கே இடம்பெற்றது உள்ளூர் சாதிப்பிரச்சினை அதன் அடித்தளம் எங்கிருந்து வந்தது? எந்தெந்த நாடுகளில் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியாதா இல்லை தெரிந்து கொள்ள நீங்கள் விருப்பிமில்லையா சகோதரரே?

    இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமிக்கவர்கள், பாகிஸ்தானிய க்ளோனிங்கோ, ஈரானிய க்ளோனிங்கோ எங்களுக்குத் தேவையில்லை, நீங்கள் சுட்டிக்காட்டிய மட்டையடி முதல் வேறு பல சமூகச்சிக்கல்களிலிருந்தும் விடுபட எங்களுக்குத் தேவை பண்டைகால இந்திய கலாச்சார ஆளுமையிலிருந்து விடுதலைதான் தவிர வேறு எதுவும் இல்லை, இந்த மண்ணில் கல்வித்துறையில் கொடிகட்டிப்பறக்க முடியாத கசப்பான வரலாற்றிலிருந்து விடுபட்டு இந்த சமூகம் சுபீட்சம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை, அதற்காக இப்போது எந்த சம்பந்தமும் இல்லாமல் உலகின் அனைத்து திசையிலும் வாழும் முஸ்லிம்களும் தனித்தனியாகப் போராடுகிறார்கள், விளைச்சலில் பயன் பெறும் நோக்கத்தில் அல்ல, விதைப்பதற்காக மட்டும்.

    இலங்கை முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் பிணைப்பு வரக்கூடாது என்பதை விட பாகிஸ்தானிய முஸ்லிம் அரசாங்கம் இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கு உதவி செய்துவிடக்கூடாது என்கிற பயம் அன்று புலியால் விதைக்கப்பட்ட ஒரு விதை, இன்று நீங்கள் அதையே அறுவடை செய்து கொண்டிருக்கிறீர்கள், அன்றைய சியாவுல் ஹக்கின் இலங்கை முஸ்லிம் சமூகம் மீதான அக்கறை புலியையும் வேறு இயக்கங்களையும் அன்று அப்படி சிந்திக்க வைத்தது, அதை நீங்கள் இன்று வளர்த்துவிடப் பார்ப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை. ஏனெனில் நடைமுறையில் பாகிஸ்தான் என்பது கலாச்சார ரீதியாக இலங்கை முஸ்லிம்களோடு தொடர்பற்ற நாடு.

    அரேபிய கலாச்சாரத்தையும் அதற்குள் பயணம் சென்ற சாதரண விபரணப்படமும் கூட 60 வருடத்துக்கு முதலும் அரேபியாவை அப்படித்தான் சித்தரித்துக் காட்டியது, என்ன அதிகமான படங்களில் படுக்கையறைக் காட்சியில் மட்டும் அதுவும் எகிப்திய நாகரீகத்தை மட்டும் நீங்கள் பார்த்து மகிழ்ந்ததால் அவர்கள் முகத்தை மூடிய மெல்லிய துணியை மட்டும் கடைசியாகப் பார்த்திருப்பீர்கள், நீங்கள் பார்க்க வில்லையென்பதற்காக உலகம் என்ன இருண்டா இருந்தது சகோதரரே?

    முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு அவர்களுக்கென்று ஒரு ஆத்மார்த்தமான நோக்கம் இருக்கிறது, எனவே அது குறித்து அணிந்து கொள்பவர்கள் மனத்தெளிவடைந்து கொண்டால் அது போதுமானது. அதன் வடிவத்தை மாற்றி மொட்டாக்குப் போட்டுக்கொள்வதும் கூட அவர்களது உரிமை, அவை கலாச்சாரப் பின்தோன்றல்கள், தழுவல்கள்.

    உங்களுக்கு இஸ்லாத்தின் மீது அப்படியென்ன காழ்ப்புணர்ச்சி என்று அறிந்து கொள்ளலாமா? முடிந்தால் தெளிவாக்கலாம், நேரடியாகவே பேசிக்கோள்வோம், தேசம்நெட் இணையத்தார் அனுமதித்தால் அதை புதியதோர் தலைப்பாக்கி வேண்டுமானாலும் பண்போடு உரையாடிக்கொள்ள நான் தயார்.

    Reply
  • Rohan
    Rohan

    //இங்கு எழுதியும், வாயால் பேசியும் யாருடனும் சகோதரத்துவம் ஏற்படப் போவதில்லை. நடைமுறையில் மட்டும்தான் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். இதனை சகல இனத்தவரிடையேயும் காணலாம். உருமை, விடுதலை,தமிழினம்,சிங்கள இனம்,முஸ்லிம்கள் என கூறி அரசியல் லாபம் தேடுவோராலெயே இலங்கையில் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை உலகெங்கும் ஏற்றுமதி செய்து பிளைப்பவர்கள் கொலைகார, பயங்கரவாதப் புலிகள். -துரை//
    யார் என்ன கேட்டலும், யார் என்ன பதில் சொன்னாலும் புலி புலி புலி என்று புலிப்பரணி பாடுவது பலர் வழக்கமாக இருக்கிறது! புலி விசுவாசிகளே புலியை விட்டு பல காலமாகி விட்டது. ஆனால்….

    Reply
  • நந்தா
    நந்தா

    பாகிஸ்தானில் முஸ்லிம் சட்டப்படி ஒரு பெண் பலரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் அந்தத் தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது என்பது அதைவிட மோசமான வெளிப்பாடு! கற்பழிப்பு என்பது இஸ்லாமில் அனுமதிக்கப்படுகிறது. இதனைப் பற்றி வாய் திறவாது அல்லது பதில் சொல்லாது “காழ்ப்பு” என்று பழி போடுவதில் என்ன பயன்?

    பாலியல் வக்கிரம் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான “சிவில்” சட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    முஸ்லிம் சட்டப்படி “கற்பழிப்பு” என்பதை சம்பந்தப்பட்ட பெண் 4 கண்கண்ட சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அவள் மீது “விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டுக் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுவாள். இந்த “மோசமான” நடைமுறையை முஸ்லிம்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை. தவிர நாலு “கண் கண்ட” சாட்சிகள் என்பது நடக்கக் கூடிய காரியமா? இவை கடவுளின் பெயரால் செய்யப்படும் மோசடிகள்.

    பாகிஸ்தான் இலங்கைக்கு உதவி என்பது வேறு! முஸ்லிகளுக்கு உதவி என்பது வேறு விடயம்.

    இஸ்லாம் “பிற்போக்கு” என்று கருதப்படும் விடயங்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழ்ங்கியுள்ளது. அதனை மதிக்க வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்கள் கருதினால் இலங்கயிலுள்ள மற்றைய சமூகங்கள் வாய் மூடி மவுனம் காக்க முடியாது.

    இலங்கை முஸ்லிம்கள் “பாகிஸ்தானிய” இந்து எதிர்ப்பை, பவுத்த எதிர்ப்பை அனுசரித்துக்கொண்டு இலங்கயில் இந்துக்களோடும், பவுத்தர்களோடும் “சமாதானமாக” இருக்கிறோம் என்பது படு பொய் மாத்திரமல்ல மற்றைய மதத்தவர்களை கீழ்த்தரமானவர்கள் என்ற மனத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமயம் கிடைத்தவுடன் அவர்களது “வெறி” எத்தனை கொலைகளை செய்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

    இந்துக்கள் என்ற காரணத்துக்காகவே முஸ்லிம் ஊர் காவல் படையினர் புலிகளோடு சம்பந்தமில்லாத பல இந்து தமிழர்களைக் கொலை செய்திருக்கிறார்கள். “ஜிகாத்” என்று அவர்கள் நாமகரணம் செய்து கொலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    புலிகளும், ஜேவீபியினரும் கடவுளின் பெயரால் மட்டையடி கொடுக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் “மட்டையடியை” நியாயாயப்படுத்துவது கேவலமான விஷயம்!

    முச்லிம்கள் “ஸக்காத்” கொடுக்கிறார்களோ இல்லையோ அரசுக்கு அளந்து கொடுக்கிறார்கள் என்பது இலங்கயில்நடை பெறுவதில்லை! ஒழுங்காக வருமான வரி கட்டுகிறார்களா என்பதே பெரும் பிரச்சனை!

    ஸியா உல் கஃக் காலத்து தலிபான் இன்றும் குண்டு வைத்து யாரைக் கொன்று கடவுளைக் காண அலைகிறார்கள்? பாகிஸ்தானியர்கள் எதற்காக தாங்கள் செல்லும் இடமெல்லாம் குண்டு வைக்க அலைகிறார்கள்? முஸ்லிம் அல்லாதவர்களை அழிப்பது என்பதுதானே இஸ்லாமில் கூறப்பட்டுள்ள “ஜிகாத்”.

    முஸ்லிம் அல்லாதவர்கள் “கீழானவர்கள்” என்றும் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதைநம்பும் இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பது மற்றவர்களின் நல்ல காலம்.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    முன்னூறு கிலோ பூசனிக்காயை அரைப் பிளேட் பிரியாணிக்குள் மறைப்பதற்கு உங்களைக் கேட்டுத்தான் போல் சகோதரரே.

    எங்கோ போகிற போக்கில் இந்தக் கதையை கேட்டுவிட்டு இங்கே வந்து கொட்டித்தள்ளுகிறீர்கள் என்று நினைக்கிறேன், உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்திருந்தால் ஏற்கனவே முன் வைத்திருப்பீர்கள், அது உங்களிடம் இல்லை என்பதால் இனியாவது நீங்கள் போய்த் தேடி தெளிவுறும் நோக்கத்தில் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

    நீங்கள் பாகிஸ்தான் பெண், பாகிஸ்தான் பெண் என்று கூறுவது பாகிஸ்தானின் மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்களில் ஒன்றான மீர்வாலா கிராமத்தைச் சேர்ந்த முக்தரன் பீபி என்பவர் சகோதரரே.இந்தப் பெண்மணிக்கு நடந்த கொடுமைக்கு தீர்ப்பளித்தது ஷரியா கோர்ட் இல்லை அவர்களது கிராமத்துப் பஞ்சாயத்தார்.

    இந்தியாவில் மரத்தடியில் அமர்ந்து பஞ்சாயத்தார் செய்யும் வீர தீரங்களைச் சாடிச் சாடியே நடிகர் விவேக்குக்கு வாய் வலித்துப் பார்த்துவிட்டது, ஆனால் எத்தனை தடவை பார்த்தும் உங்கள் பேரறிவுக்குள் பஞ்சாயத்து என்ற சம்பிரதாயக் குழறுபடி என்ன செய்கின்றது என்று தெரியாமல் போனது மகா வேடிக்கை.

    உங்களை அறிவாளி என்று நினைத்ததால் உங்கள் குற்றச்சாட்டை காழ்ப்புணர்ச்சி என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது நீங்கள் முன் வைத்தது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று நீங்கள் வாதிடுவதால் உங்கள் பற்றிய எண்ணத்தை நான் மாற்றிக்கொள்கிறேன், அதாவது தற்போதைக்கு வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

    முக்தரன் பீபியின் பருவ வயது சகோதரன் சகூர் மாஸ்தோய் எனும் பிரிவினரைச் சேர்ந்த இளம்பெண்ணான சல்மாவுடன் தகாத உறவு கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆரம்பித்தது தான் இந்தப் பிரச்சனை. அதன் பிறகு பொலிஸ் வரை சென்ற இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக சல்மாவை சகூருக்கே கட்டி வைப்பதாகவும், இரண்டு பிரிவினருக்குமிடையில் பகைமையை குறைத்துக்கொள்ள மாத்சோயி பிரிவைச் சேர்ந்த ஒரு ஆணை முக்தரன் பீபி மணமுடிப்பதாகவும் முக்தரன் பீபி குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட தீர்வை ஏற்றுக்கொண்டு இரு பிரிவும் சமாதானத்திற்கு வந்த பிறகு மாத்சோயி பிரிவில் இருந்த வெறி பிடித்த இருவரினால் ஏறத்தாழ தமிழ் படத்தில் நல்லவர் பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிராக வருவார்களே வில்லனின் மகன்கள் ? அதுவும் சமாதானத்துக்காக அழைக்கப்பட்டு பின்னர் துப்பாக்கி முனையில் இழுத்துச் சென்று பலவந்தப்படுத்து அவமானப்படுத்தப்பட்டவர்தான் இந்தப் பெண்மணி.

    இந்தப் பலசாலிகளுக்கு முன்னால் மெளனித்துப் போன மாத்சோயிகளின் பஞ்சாயத்தும் நடைபெற்ற இந்தக் கேவலமும், இந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் உலகுக்குத் தெரியவேண்டும், அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை குத்பாவில் வைத்து பகிரங்கமாக இதைக் கண்டித்து, அதன் பின்னால் பத்திரிகையாளர் முரீத் அப்பாஸ் என்பவரை அழைத்து வந்து இன்று உலகமே வியக்கும் அளவுக்கு இந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடியவர் யார் என்று நினைக்கிறீர்கள்? அந்த ஊர் பள்ளியின் இமாம் அப்துல் ரசாக் என்பார் சகோதரரே.

    அவர் கற்றுத் தெளிந்திருந்த மார்க்கம் அவரை இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தது, இங்கே இஸ்லாம் எங்கே தவறிழைத்தது? தவறிழைத்தது பிற்போக்குத்தனமான சம்பிரதாயமும் சமூகமும் அவர்களது காட்டு மிராண்டித்தனமும்.

    கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தைக் குற்றம் கூறுபவர்களுக்கும் மாத்சோயி பிரிவின் பிற்போக்கு காட்டு மிராண்டிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக எனது சிற்றறிவுக்குப் படவில்லை.

    நீதிமன்றம் என்று வந்ததன் பின்னர் அதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற பின்னர் இதை ஊதிப் பெருப்பித்து தமது நாட்டின் கெளரவத்தைப் பாதிக்கும் அளவுக்கு விடக்கூடாது என்று மேலும் தவறிழைத்த நபர்களின் முதன்மையானவர் அப்போதைய பாகிஸ்தானிய அதிபர் முஷாரப். அதே போன்று சட்டம் , சட்ட மன்றத்தில் நிரூபிக்கப்பட சாட்சிகள் வேண்டும் என்று வாதாடி, சர்வதேச சட்ட விதிகளுக்குட்பட்ட நீதி மன்றத்தை சாட்சிகள் கோரி பேச வைத்தது “வக்கீல்” எனும் தொழிலைச் செய்த இன்னொருவர்.

    இப்படி இந்தக் கதைக்குப் பின்னால் இன்னொரு பூலான் தேவி இருக்கிறார் சகோதரரே. ஆனாலும் இது பாகிஸ்தானில் நடந்தது என்பதற்காக இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டுவதும், பூலான் தேவிக்கு நடந்த கொடுமைகள் இந்தியாவில் நடந்தது என்பதற்காக இந்து மதத்தைக் குற்றஞ்சாட்டுவதும், தகுமா? அல்லது முறையா? என்பதை அன்புச் சகோதரர் சிந்தித்துத் தெளிவுற எல்லாம் வல்ல அல்லாஹ் (கடவுள்) உங்களுக்கு நல்லருள் புரிவானாக, ஆமீன் !

    அடுத்து நம் சகோதரர், பாகிஸ்தானின் இலங்கைக்கான உதவியையும், முஸ்லிம்களுக்கான உதவியையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சகோதரரே, நமது பிராந்தியத்தில் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுக்கு சும்மா வாரிக்கொடுக்கவில்லை, அரசியல் சகோதரரே அரசியல். அது பாகிஸ்தான் செய்தாலும் அரசியல் தான், அதற்காக அவர்கள் முஸ்லிம் சமூகத்தைத் தேர்ந்தெடுத்தால் அதுவும் அரசியல், அரசியலை அரசியலால் வெல்லும் ஒரு சமுதாயம் நம் மத்தியில் உருவாகும் என்பதால் யாரும் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை அவ்வளவு தான். கோடபாயாவைத் தாண்டி நீங்கள் சொல்வதெல்லாம் நடக்குமா சகோதரரே? கொஞ்சம் யதார்த்தமாகவும் சிந்தியுங்கள்.

    மீண்டும் ஆயுதக்குழுக்களின் அடாவடியை அலசச்செல்வது ஏறத்தாழ முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா எனும் ஆயிரங்காலக் கேள்வி என்பது உங்களுக்குத் தெரியாமலா முஸ்லிம் ஊர்காவல் படை அட்டூழியம் செய்தது என்று குற்றம் சாடுகிறீர்கள்? ஊர் காவல் என்று சொல்லும் போதே அந்த ஊருக்கு ஆபத்து வந்ததனால் அல்லது இருப்பதனால் தானே அங்கு ஒரு ஊர் காவல் படை தேவைப்பட்டது? அப்படியானால் அந்த ஆபத்தைத் தோற்றுவித்தது யார்? அதற்காக முஸ்லிம் ஊர்காவற்படை முழுப் புனிதர்களாக இருந்தார்கள் என்று நான் வாதாட வரவில்லை, அவர்களும் நாளடைவில் கட்சி அரசியலுக்குள் சின்னாபின்னமாக்கப் பட்டார்கள் என்பது உலகறிந்த வரலாறு.

    தமிழீழம் காணப்புறப்பட்ட தெய்வங்கள் எப்படி குறுக்குவழியில் நியாயங்களை உருவாக்கப் பார்த்தார்களோ அதில் சிறு அளவை உள்ளூர் சிற்றரசர்களான அரசியல் வாதிகளும் செய்தார்கள். நீங்கள் 21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு அதுவும் வரலாறும் தெரிந்து கொண்டு அதற்கு மதச் சாயம் பூசுகிறீர்கள். வேடிக்கையாக இல்லையா?

    என்னதான் தெளிவாக எழுதியிருந்தாலும் குழப்பறது தான் ப்ளானா? அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறார்களோ இல்லையோ “ஸக்காத்தை” ஒழுங்காகக் கொடுக்கிறார்கள் என்றுதான் நானும் கூறியிருக்கிறேன், மீள வாசித்துப் பயன்பெறுக.

    அடுத்ததாக நம் சகோதரர் சியாவுல் ஹக், தலிபான், குண்டு வைத்தல், கடவுள் என்றெல்லாம் கூறுகிறார். சூரியதேவனின் அடியார்கள் நாட்டில் குண்டு வைத்தது, மத்திய வங்கியைத் தகர்க்கப் பார்த்தது, கட்டுநாயக்காவை சீர்குலைத்தது எல்லாம் எந்தக் கடவுளைக் காண சகோதரரே? ஒரு வேளை தமக்குச் சொந்தமான பூமித் தாய் எனும் கடவுளுக்காக என்று ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொள்வோமா? அப்படியானால் தாலிபான்களுக்கும் இதே பிரச்சனையோ என்னமோ கொஞ்சம் தேடிப்பாருங்களேன்.

    சகோதரரே, மாற்று மத நம்பிக்கைகள் மற்றும் அதைப் பின்பற்றுவோர் தொடர்பில் குர்ஆனின் வழிகாட்டல் “லகும் தீனுக்கும் வலியதீன் [109:06]” ஆங்கிலத்தில் “To you be your religion, and to me my religion”, தமிழில் “உங்கள் சமயம் உங்களுக்கு, எனது சமயம் எனக்கு”. இஸ்லாமிய ஜிகாத்தின் அடிப்படை என்பது ஒவ்வொரு மனிதரும் தம் உள்ளத்தோடு போராடுவது. இன்றைய உலகில் நீங்கள் பார்க்கும் ஜிகாத்தின் வடிவமானது உரிமையும், அடக்கு முறைக்கு எதிருமான போராட்டம்.

    உரிமையும், அடக்கு முறைக்கும் எதிரான கிளர்ச்சிக்காக ஆயுதம் தூக்கிய எல்லோரும் எதைச் செய்தார்களோ அதையே இவர்கள் செய்கிறார்கள்.

    எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தின் படி உலகில் எந்த வடிவிலும் வன்முறை இருக்கக்கூடாது என்பது என்னுடைய பேராசை.

    மற்றவர் உரிமைகள் மதிக்கப்படுவதன் மூலம் ஆயுதம் ஏந்தும் நிலையே எந்த சமூகத்திலும் உருவாகக் கூடாது என்பதை நான் விரும்புகிறேன். ஆனால் அதற்காக உலகம் மாறி விடுமா?

    கல்தோன்றா மண் தோன்றாக் காலம் தொட்டு சண்டையும் சச்சரவும் தானே மனிதனின் இயல்பாக இருக்கிறது? நம்மை ஊட்டி வளர்த்த இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லாம் இதைத்தானே சொல்லித்தந்திருக்கிறது? எதிர்காலத்தில் சைபர் யுத்தங்களும் வரும் என்று இப்போதிருந்தே திட்டமிட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் தற்காக உலக சமுதாயத்திற்கு நீங்களும் நானும் கூட பொறுப்புள்ளவர்கள் தானே? பிறகேன் சகோதரரே சும்மா சும்மா தொட்டதற்கெல்லாம் முஸ்லிம்களைச் சாடிக்கொண்டிருக்கிறீர்கள்?

    யாவரும் சமம் என்பதுதான் இஸ்லாத்தின் கோட்பாடு, கீழானவர் மேலானவர் எல்லாம் உங்கள் கற்பனைகள் சகோதரரே.

    மேலும் நான் “ஹத்தடித்தல்” என்பதை நியாயப்படுத்தவில்லை, ஹத்தடித்தல் என்பது இஸ்லாமிய சட்டத்தில் எடுத்த எடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமில்லை,எல்லாக் குற்றங்களுக்குமான தண்டனையும் அல்ல. ஒரு நபர் ஹத்தடிக்கப்பட வேண்டும் என்றால் அவர் அதற்கு முதல் தாண்டி வர வேண்டிய பல நிலைகள் இருக்கின்றன. அந்த எல்லா நிலையையும் தாண்டி வந்ததன் பின்னர் தான் இப்படியொன்று இடம் பெறும். அவ்வாறு ஒரு சமூக சீரழிவு வரக்கூடாது எனும் நோக்கத்தில் தான் ஹத்தடிக்கும் உங்கள் பாசையில் மட்டையடிக்கும் தண்டனை இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. அதையும் தாண்டி நான் அடி வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்தால் ஒரு தரம் வாங்கிப் பார்க்கட்டும். அப்படியொரு நிலை வராமலிருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமும். நீங்கள் கூறிய சம்பவத்தில் அந்தப் பிள்ளையை பிடித்த எடுத்த எடுப்பில் அடித்தார்கள் என்று நீங்கள் நிரூபித்தால் அடித்தவர்களை கம்பத்தில் கட்டிவைத்து அவர்களுக்கு பிரம்பால் அடிக்க உங்களோடு சேர்ந்து எத்தனையோ பேர் வருவார்கள். நீங்கள் அடி நுனி தெரியாமல் இடையில் இருந்து எதையாவது ஒன்றை எடுத்து வந்து இங்கே போட்டு பிரியாணியாக்க வேண்டாம்.

    சமூகத்தில் நடக்கும் சில குற்றச் செயல்களை நீதி மன்றங்கள் வரை கொண்டு செல்ல சிலர் விரும்புவதில்லை, அவற்றை விட சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குள்ளேயே அவற்றைத் தீர்த்துக்கொள்கிறார்கள். ஏனெனில் சமுதாயத்தில் தலை காட்டுவதற்கான வெட்கம்,நாணம் அதன் அடிப்படைக்காரணம்.இவர்கள் ஏன் குற்றச்செயல்களை மறைக்கிறார்களோ? அதற்கு நேரெதிரான காரணத்திற்காகவே சில வேளைகளில் இப்படியான சமூகத் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுவும் எடுத்த எடுப்பில் நிறைவேற்றுவதற்காக அல்ல பல படிமுறைகள் தாண்டியதன் பின், இதுவெல்லம் நமது சமூகத்துக்கு ஏன் தேவைப்பட்டது என்பதை தனியாக ரூம் போட்டு யோசிக்கத்தேவையில்லை, நாமும் அந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்ற ரீதியில் என் நமக்கு முன்னவர்கள் ஆடியும் பாடியும் கறந்தார்கள் என்பதை மீள ஆராய்ந்தாலே உங்களுக்கு அதற்கான விடை தெளிவாகக் கிடைக்கும்.

    எழுந்த மானமாக விமர்சிப்பதற்கும், ஒரு விடயத்தை ஆழமாக அறிந்து விமர்சிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது சகோதரரே, அறிவதற்கே விருப்பமில்லாமல் எங்கேயோ எல்லாம் காற்றில் வாங்கிய செய்திகளை எழுதுவதை காழ்ப்புணர்ச்சி என்று தான் தமிழில் சொல்வார்கள். உங்களுக்கு அது இல்லை என்றால், உங்கள் இஸ்லாமிய முரண்பாடுகளை வெறும் ஊக ரீதியில் இல்லாமல், நியாயபூர்வமான விமர்சனமாக அல்லது, ஏதாவது ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினால் அதனை நீங்கள் கேள்வியாக முன் வையுங்களேன், ஏன் குற்றச்சாட்டாக எழுதுகிறீர்கள்?

    அப்படி கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் கேள்விகள் முன் வைக்கப்பட்டால் அவற்றில் பங்கெடுக்கவும், நியாயமான உங்கள் விமர்சனங்களில் உங்களோடு தோளோடு தோள் நிற்கவும் நான் தயார்.

    “இறைவனுக்கே எல்லாப்புகழும்”.

    Reply
  • நந்தா
    நந்தா

    இஸ்லாம் என்ற காரணத்துக்காக பிரிவினை கோரிய பாகிஸ்தானியர்கள் கட்டைப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்று நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்! அந்த கட்டைப் பஞ்சாயத்தும் ஷரியா கோர்ட்டும் ஒன்றுதான்!

    ஆயினும் அந்த தீர்ப்பை பஞ்சாப் உயர்னீதிமன்றம் இஸ்லாமிய அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று எப்படி அறிவித்தது? அதன் பின்னரே உலகுக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது.

    முழுப்பூசணியை மறைப்பது நீங்களா அல்லது நானா?

    மட்டையடி கொடுக்கப்பட்டது ஒரு மசூதியில் எந்த இலங்கை சட்டத்தின்படி என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

    Reply
  • Mohamed Shareef Asees
    Mohamed Shareef Asees

    Dear Nirmala Rajasingam,
    I do agree with your statment above. However, i would like to emphasis the plight of Muslim IDPs who live in the puttalam district in the past 20 years without any durable solution except the World Bank housing project. In my openion The Sri Lankan government and international organizations should consider their repatriation soon
    Dr. Asees

    Reply
  • ashroffali
    ashroffali

    //மற்றும் முஸ்லிம் நாடுகளிலும் தான் பாலியல் அக்கிரமங்கள் நடக்கின்றன. மதத்தை விரும்புவோர் மதங்களை தங்கள் வீட்டுடன் வைத்துக் கொள்ளும் மேலை நாடுகளில் பெண்கள் நடு இரவிலும் ரெயினில் தனியாக செல்லமுடிகிறது. தமிழ் பெண்களும் செல்கிறார்கள்.//

    எந்தெந்த முஸ்லிம் நாடுகளில் எப்படியான பாலியல் அக்கிரமங்கள் நடைபெறுகின்றன என்று உங்களால் பட்டியலிட முடியுமா நண்பரே… ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் அந்த நாடுகளில் தான் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரங்கள் குறைந்த அளவில் நடப்பதாக நான் அறிந்துள்ளேன். அதற்கான காரணம் பர்தா தான். பெண்கள் தங்கள் அழகை மறைத்துக் கொள்ளும் போது அங்கே ஆண்களின் வக்கிர உணர்வுகள் தூண்டப்படுவதில்லை. மனம் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதுவும் கூட ஒரு யோகா தான். கலாசாரம் என்பது மனிதர்களை மென்மேலும் பண்படுத்த வேண்டுமே தவிர மற்றவார்களின் உடல் அழகை அணுஅணுவாய் ரசிக்கும் வக்கிர புத்தியைக் கொடுக்கக் கூடாது. அப்படி ரசிக்க முடியாதவாறான தடைகளுக்காய் அடுத்தவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வைக்கக்கூடாது.

    //கொக்கரல்ல மசூதியில் 17 வயது இளம் முச்லிம் பெண்ணுக்கு ஆண்கள் மட்டையடி கொடுத்து வக்கிர புத்தியை காட்டியது சரியென்று வாதிக்கிறார். முஸ்லிம்கள் இலங்கைச் சட்டத்தை மதிக்க போவதில்லை என்பதுதான் அந்த மசூதி மட்டையடியின் நோக்கம்.

    இந்துக்கள் பொட்டு இடுவதற்கும்இ முஸ்லிம் பெண்கள் முகமூடி மொட்டாக்கு உடுத்துவதற்கும் என்ன சம்பந்தம்?//

    அது சரி.. முஸ்லிம் பெண்களின் பர்தா பற்றி நீங்களும் நீங்களும் (நந்தாவும்) கருணா மற்றும் பீசியும் இவ்வளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கான காரணம் யாது…? அப்படியெனில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளும் அதே போன்றதொரு தலைக்கவசம் அணிவதை நீங்கள் கண்டதில்லையா? இந்தியாவின் குஜராத்திப் பெண்கள் தலைக்கு முட்டாக்கு போடுவதைக் கண்டதில்லையா? அதையெல்லாம் கலாசாரம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமாயின் முஸ்லிம் பெண்களின் பர்தாவும் அவர்களின் கலாசாரத்தின் ஒரு அம்சம்தான்.

    மற்றது இலங்கையில் இதுவரை முஸ்லிம்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்தே நடந்துள்ளார்கள். இனியும் நடப்பார்கள். மிக நீண்ட காலமாக நீங்கள் (நந்தா) தான் அதை மதியாமல் நடந்து விட்டு தற்போது அரசாங்கத்துக்கு பின்னால் ஜால்ரா போட முற்படுகின்றீர்கள். உங்கள் கடந்த கால தவறுகளை மறைக்க முற்படுகின்றீர்கள். வேண்டாம் நந்தா.. குளவிக்கூட்டுக்குக் கல்லடிக்கப் போன கதையாகி விடும்.

    //இஸ்லாம் அப்படியான சட்டங்களை இலங்கயிலும் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதங்கப்படுகிறீர்களா?

    அதாவது உங்கள் இஸ்லாமில் பெண்களைக் கற்பழிக்கலாம் என்பது நாகரீகம். அதனை மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்!

    நீங்கள் ஒரு பாகிஸ்தானை இலங்கயில் உற்பத்தி செய்ய தவிப்பது புரிகிறது! //

    நண்பரே…. பாக்கிஸ்தான் சம்பவம் பற்றி இன்னொரு சகோதரர் தெளிவான விளக்கங்களை முன் வைத்தும் நீங்கள் மூன்று கால் முயலைக் கண்டு கொண்டிருப்பது உங்கள் காழ்ப்புணர்ச்சியின் அளவை நன்றாக புலப்படுத்துகின்றது. தயவு செய்து உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    அடுத்தது இஸ்லாத்தில் யாரையும் கற்பழிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அப்படி ஏதாவது ஒரு ஆதாரத்தை உங்களால் முன் வைக்க முடியுமா?

    பாக்கிஸ்தானுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு பெரும் இடைவெளியைக் கொண்டது. ஒருபோதும் நட்பான சூழல் நிலவியது கிடையாது.

    குறைந்த பட்சம் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுடன் கொண்டிருக்கும் நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பவற்றை பாக்கிஸ்தான் மீது கொண்டதில்லை. அதுதான் உண்மை.

    தவிரவும் பாக்கிஸ்தான் இலங்கை உட்பட வேறு நாடுகளுடன் கொண்டிருக்கும் தொடர்பானது அரசியல் காரணம் கொண்டது. முஸ்லிம்களின் நலன் நோக்கியது அல்ல. அப்படியெனில் உய்குர் இன முஸ்லிம்கள் மீது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்துவிட்ட சீனாவுடன் பாக்கிஸ்தான் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்க முடியாது. ஏன் இலங்கையிலும் கூட முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுதல் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் என்பவற்றில் இந்தியா காட்டும் கரிசனையின் ஆயிரத்தில் ஒரு பங்கயாவது பாக்கிஸ்தான் வெளிப்படுத்தியதாக உங்களால் ஆதாரங்களை முன் வைக்க முடியுமா ?

    //இலங்கை முஸ்லிம்களுக்கு கேடுகெட்ட பாக்கிஸ்தான் “உதாரண”இ சொர்க்க பூமி என்பதும் தமிழில் இருந்து முதலில் பிரிவினை கேட்டு ஓடியவர்கள் முஸ்லிம்கள் என்பதும் வரலாறு.//

    நண்பரே.. 1984ம் ஆண்டு நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களைப் புறந்தள்ளியது யார்.. அதுதான் முஸ்லிம்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க அடித்தளமாக அமைந்தது. போகட்டும். . 1987ம் ஆண்டு உடன்படிக்கை… 2002ம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தம்… எதிலாவது முஸ்லிம்களின் நலன் உள்ளடக்கப்பட்டதா? இல்லையே…. அப்படியிருக்க தொடர்ந்தும் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது தான் உங்கள் எதிர்பார்ப்பா? அதனால் தான் முஸ்லிம் பெண்களின் பர்தாவைக் கூட உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதா?

    ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் கடைசி வரை முஸ்லிம்கள் பங்களித்தே இருக்கின்றார்கள். மேஜர் அன்பு என்ற பெயரில் வீரமரணம் அடைந்த ஒரு முஸ்லிம் வீரமங்கையும் புலிகள் அமைப்பில் இருந்திருந்தாள். அதற்கு மேல் புலிகளுக்கும் அரச படைகளுக்குமான கடைசி உக்கிரப் போரின் போது புலிகளின் தலைவர் அரச படைகளின் வியூகத்துக்குள் மாட்டிக் கொண்ட நிலையில் அவரை மீட்டெடுக்க நடைபெற்ற ஆனந்தபுரம் கடும் சமரின்போது பிரபாகரனுக்காய் ஒரு முஸ்லிம் புலியும் தன்னுயிரை இழக்கவில்லையா? உங்களுக்குத் தெரியா விட்டால் கேட்டுப்பாருங்கள். புலிகள் இயக்கத்துடனான உங்கள் தொடர்பு எப்படியானது என்பதை மற்றவர்களை விட நான் நன்கறிவேன்.

    அது மட்டுமல்ல.. தமிழர் விடுதலைக்கான அகிம்சை வழி மற்றும் ஆயுதப் போர் முறை என அனைத்துக் கட்டங்களிலும் முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்தே இருந்தார்கள். அது தான் அன்றைய யதார்த்தம்.

    //50 வருடத்துக்கு முன்னைய படங்களில் இந்த அரேபியன் முகமூடி உடுப்புக்களை நாங்கள் பார்த்தது கிடையாது.//

    வைல்ட் சிறிலங்கா புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்டது. அதில் முஸ்லிம் பெண்களின் உடை பற்றி புகைப்படம் இடம்பெற்றிருக்கும். பாருங்கள். நீங்கள் படித்த காலத்து இலங்கை அரசாங்க பாடப் புத்தகங்களில் முஸ்லிம் பெண்கள் பற்றிய உருவங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தன என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள் நண்பரே.. உண்மை விளங்கும்….

    //இஸ்லாம் என்பது மதம் மாத்திரமே. முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் அல்லது மதம் மாற்ற வேண்டும் என்று கோரும் ஒரு மத அடையாளத்தை மதிக்க வேண்டும் என்று இலங்கயில் எதிர்பார்க்க வேண்டாம்.//

    உங்கள் கருத்துக்களின் உச்ச கட்ட அபாண்டம் இது. தற்போதைக்கு குர்ஆன் அனைத்து மொழிகளிலும் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குர்ஆனுக்கு அடுத்த படியாக நாங்கள் மதிக்கும் ஹதீஸ்களும் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை வாசித்து விட்டு அதிலிருந்து நீங்கள் கூறியவற்றுக்கான ஏதாவது ஒரு ஆதாரத்தை முன் வையுங்கள்… வெறுமனே அபாண்டம் கூடாது.

    உங்களைப் போன்றோரின் விதண்டாவாதங்கள் தான் இன்றைக்கு பழையபடி நெருங்கி வர முயற்சிக்கும் இலங்கை தமிழ்-முஸ்லிம்களுக்கிடையிலான நட்புறவை மீண்டும் தூரத்தள்ளி விட முயல்கின்றன.. அதை நான் அடியோடு வெறுக்கின்றேன். தயவு செய்து யதார்த்தம் மற்றும் உண்மைகளைப் புரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பதிலாக விதண்டாவாதம் வேண்டாம்.

    நமக்கிடையிலான முன்னைய சகோதரத்துவம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இனங்களுக்கிடையிலான நல்லுறவு மீண்டும் கட்டியெழுப்பப்படும்போது தான் இலங்கை அரசாங்கம் எமது உரிமைகளை வேண்டாவெறுப்புடன் ஆயினும் தர வேண்டிய ஓரு சூழ்நிலை ஏற்படும். அதனை விட்டு விட்டு சின்னச்சின்ன விடயங்களில் நாம் கசப்புணர்வுகளை வளர்துக் கொள்ளலாகாது. அடுத்தவர் மதங்களை மதிப்பது சகிப்புத் தன்மையின் பிரதிபலிப்பாகும். சகிப்புத் தன்மை நாகரீகத்தின் உச்சகட்டம். அது உங்களிடம் இருப்பதாக எனக்குப் படவில்லையே நந்தா.. உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் அது பிரதிபலிக்கின்றது.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் அலாவுதீனுக்கு,
    மிக நீண்ட அறிவுபூர்னவமான விளக்கம்.நன்றிகள் பல, இருந்தும் என்ன பலன். இலங்கையில் சஷரியா சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ள விடயங்கள் மூன்று. திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவுனை இதை பலமுறை சகோததரர் நந்தாவுக்கு தெரிவித்தாகிவிட்டது. அவர் மீண்டும் மீண்டும் இலங்கையின் மட்டையடி விவகாரம் சஷரியா சட்டத்துக்கு உட்பட்டதாகவும், அதற்காக இலங்கை முஸ்லீம்கள் பதில் சொல்லியேயாக வேண்டும் என்கிறர் என்று. அவரின் இஸ்லாம் சம்பந்தமான தேடகம் பொலிடிகலிஸ்லாம் டிவி செனல். இது அமெரிகாவில் உள்ள இஸ்லாத்துக்கு எதிரான 1600 டிவி செனலில் ஒன்று. நந்தா அறிவு பூர்வமானதாக அவர் நினைக்கும் விடயங்களுக்கு இஸ்லாம் செனல் என்ற யூகே டிவியை சற்று தொட்டு பார்க்கலாம். ஆனால் அவர் செய்யமாட்டார். காரணம் நந்தாவுக்கே வெளிச்சம்.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    சகோதரர் புவியியலையே மாற்றி, புதுக் கதை எழுத வேண்டாம்.

    மீர்வாலா கிராமம் என்பது பாரதிராஜாவின் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட அந்த நாள் கிராமங்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் கிராமம், இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முசப்பரா மாவட்டத்தின் ஜாதோயி உள்ளூராட்சிப் பிரிவுக்குள் அடங்கிய மிகவும் பின் தங்கிய பிரதேசம். இந்த ஊருக்கு மிக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையம் 18 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது, குறிப்பிட்ட சம்பவ காலத்தில் மின்சாரம் என்பதே கனவாகத்தான் இந்தக் கிராமத்துக்கு இருந்திருக்கிறது.

    Tribal Council அல்லது ஊர்ப்பஞ்சாயத்து என்பதெல்லாம் வெள்ளைக்காரன் பின்தங்கிய கிராமங்களுக்கான நிர்வாக முறைகளைக் கவனிப்பதற்காக தமக்குக் கட்டுப்படக்கூடியவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து கட்டியமைத்த நிர்வாக முறை.

    இந்தியாவில் இப்போதுதான் இதற்கு தேர்தல் வைத்து பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள், பல பகுதிகளில் குடும்பம் குடும்பமாக வாரிசுகளே இதை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.உலகின் பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவாலேயே இன்னும் இதிலிருந்து விடுபட முடியவில்லை.

    இப்படியான பின் தங்கிய கிராமங்களில் ஊர்த்தலைவர்கள் சொல்வதுதான் சட்டம் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஊரை விட்டு விலக்கி வைத்தல் முதல் படுத்தெழும்பி வந்து நாட்டாமை தீர்ப்பை மாற்றிச்சொல்வதெல்லாம் பத்திரிகைகளிலும் சினிமாவிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடயம். இந்தப் பஞ்சாயத்தும் ஷரியா நீதிமன்றமும் ஒன்று என்று நீங்கள் சோப்பது இருக்கட்டும். முக்தரன் பீபியின் வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது, அதனை உள்ளூரில் அதுவும் பாகிஸ்தானில் மட்டும் நடைமுறையில் இருக்கும் ஹுதுத் சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ப்பந்தத்தைத் தகர்த்தெறிந்து, உயர் நீதிமன்றத்தில் சட்டங்களுக்கமைய இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஆணையிட்டது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம்.

    உங்களுக்கு அதுவும் தெரியாது, நிக்கலஸ் கிரிஸ்டோப் முக்தரன் பீபியின் அநீதியை நியு யோர்க் டைம்சுக்காக பதிவு செய்து, அந்தப் பெண்மணியின் விடயங்கள் மேற்குலகை அடைய உதவி செய்தவர். அவர் என்ன மீர்வாலா கிராமத்திலா பிறந்து வளர்ந்தார்? அவருக்கு அந்த செய்தி கிடைத்தது என்பது அது பாகிஸ்தானிய உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்ட பின்னர் தான். நிக்கலசுக்கு முன்னதாக இந்த செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர்கள் பிபிசியினர். ஆனால் நிக்கலசின் விடா முயற்சியினால் இந்த விடயம் முழுமையாக நியுயோர்க் டைம்சின் வசம் போய்ச் சேர்ந்தது என்பதுதான் வரலாறு சகோதரரே.

    பாகிஸ்தானிய உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வருவதற்குக் காரணமாக இருந்தவர் இந்த நிக்கலசோ அல்லது பிபிசியோ அல்ல, உள்ளூர் பத்திரிகையாளர் முரீத் அப்பாஸ், அவர் மூலம் அந்த செய்தியை வெளியே கொண்டு வர உதவி செய்தவர், உள்ளூர் பள்ளிவாயலின் இமாம் அப்துல் ரசாக். இப்படி உண்மைகளையெல்லாம் மறைத்து ஏதோ பக்கத்தில் இருந்து செய்தி எழுதியது போல் கட்டுக்கதையை நீங்கள் அளப்பதைத்தான் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது என்பது.

    சம காலத்தில், இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தின் அதுவும் பேர் போன, போபாலில் இரண்டு கிறிஸ்தவ பெண்மணிகள் கற்பழிக்கப்பட்ட செய்தியும் உலாவியது, அதை நீங்கள் பார்த்தீர்களோ தெரியவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குற்றத்திற்காக உள்ளூர் இந்துத் தீவிரவாதப் பிற்போக்கு சங்கமான பஜரங் தால் சங்கத்தினரால் இந்த இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டார்கள். ஆனால் அந்தக் கொடுமையை ஒரு முறைப்பாடாக ஏற்கவே உள்ளூர் பொலிஸ் மறுத்துவிட்டது, மாவட்ட ஆட்சியாளர், மாநில முதலமைச்சர் என்று எங்கு சென்றும் அந்தப் பெண்களுக்கு இறுதி வரை நியாயம் கிடைக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்காது, ஏனெனில் மனிதநேய செய்திகளை விட இஸ்லாத்துக்கு சேறு பூச நீங்களும் தேடி அலைவதே அதற்கான காரணம்.

    இந்தக் கற்பழிப்புக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பஜரங் தால் சமூகத் தலைவர், உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புகள் கணக்குவழக்கில்லாமல் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் அதைத் தடுத்து நிறுத்த இவ்வாறான நடவடிக்கைகள் வேண்டும் எனும் தொனியில் பேட்டியும் கொடுத்துக் கலக்கியிருந்தார்.

    இதை நாங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வது? இந்துக்கள் செய்தார்கள் என்றா? இந்துத் தீவிரவாதம் என்றா? அல்லது இந்துமதம் தான் என்ற காரணத்திற்காக இந்தியா வேண்டும் என்று நின்றவர்கள் என்றா? பஞ்சாயத்து மோசடியென்றா? கட்டாயப் பஞ்சாயத்து என்றா? இல்லை வேறு என்ன என்று எடுத்துக்கொள்வது?

    நீங்கள் எப்படி எடுக்கிறீர்களோ இல்லையோ என்னைப் பொறுத்தவரை இவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள் என்பது முன் நிறுத்தப்பட வேண்டிய விடயம் இல்லை, அவர்களது காட்டு மிராண்டித்தனம் தான் முன் நிறுத்தப்படவேண்டியது எனவே தான் போபாலில் கற்பழிக்கப்பட்ட ரேகா பாயின் சம்பவத்திற்கோ அல்லது உலகே அறிந்த பூலான் தேவிக்காகவோ, குற்றவாளிகளை நாங்கள் மதத்தோடு தொடர்பு வைத்துப் பார்க்கவில்லை.

    முக்தரன் பீபிக்காவது இந்த அக்கிரமம் ஒரு தடவை நடந்தது, பூலான் தேவியை பசி வரும் போதெல்லாம் பதம் பார்த்தார்களே சகோதரரே, ஏன் வாய் மூடி நிற்கிறீர்கள்? அதைச் செய்தவர்கள் எல்லாம் பற்றி அவர்களது மதம் சார்ந்து நீங்கள் விமர்சிக்கலாமே?

    சரி அதை விடுங்கள், முக்தரன் பீபியின் விடயத்தில் நியாயம் என்று ஒன்று கதைக்கப்பட வேண்டும் என்றால் அது முதலில் 12 வயதே ஆகியிருந்த குற்றஞ்சாட்டப்பட்ட அவரது சகோதரன் சகூரிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் சகோதரரரே, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் அவர் அம்மா அப்பா விளையாடினார் என்பது, அப்படி சொன்னால் தான் உங்களுக்கும் உங்கள் பருவ வயது ஞாபகத்துக்கு வரும் என்று நினைக்கிறேன். ஊர் கூடியதன் பின் இந்தச் சிறுவன் மீது இந்தக் குற்றத்தை சுமத்துவதற்கு முன்னதாக இவனுக்கு ஒரு அக்கிரமம் நடந்தது அதை நீங்களும் கதைப்பதாயில்லை.

    ஆனால் அடி நுனி தெரியாமல் அல்லது உப கண்டத்தின் இயல்பு நிலையை மறைத்து எப்படியாவது முஸ்லிம்களுக்கு சேறு பூசியாக வேண்டும் என்பதிலேயே நீங்கள் குறிக்கோளுடன் செயற்படுவதால் உங்களால் இவற்றையெல்லாம் நியாயமாகப் பேச முடியாது. இதைத்தான் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வது. இதற்கு மேலும் முக்தரன் பீபியின் விடயத்தைப் பற்றிப் பேசுவதாயின் அதற்கு முதல் ஆங்கிலம், பிரெஞ்ச்,டொச் என்று எல்லா மொழிகளிலும் கிடைக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் கற்றுத் தேர்ந்த ஏதாவது ஒரு மொழியில் படித்து விட்டு வந்து இங்கே முன் வையுங்கள், அதை விடுத்து இந்த ஆட்டுக்காக நீங்கள் அழவேண்டாம்.

    சகோதரர் அடுத்ததாக முக்தரன் பீபியின் பாகிஸ்தான்,மீர்வாலா கிராமத்திலிருந்து இலங்கையின் இப்பாகமுவக்கு வருகிறார். அதற்கு உங்களுக்கு விடையளிக்கு முன் குருணாகல, இப்பாகமுவ, கொகரல்ல பிரதேசத்தில் நடந்தது என்ன என்று நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விடயத்தை நான் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    எங்கிருந்தாவது செய்தி மூலங்களைப் பெற்றீர்களா என்பதையும், இல்லாவிட்டால் கூட அந்த சம்பவம் தான் என்ன? என்று உங்கள் கருத்தையும் முன் வைப்பீர்களா? மட்டையால் அடித்தார்கள் என்ற உப்பு சப்பில்லாத கதை வேண்டாம், எதற்காக அடித்தார்கள் என்பதிலிருந்து ஒரு விபரமாக அந்த சம்பவத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று இங்கே விளக்குவீர்களா?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அசுரப் அலி!
    இரவுநேரத்தில் பெண்கள் பயணிப்பதைப்பற்றி பறையும் நீர் பலம் பெயர் நாடுகளில் பட்டப்பகலில் முஸ்லீம்களால் காடைத்தனமாகக் கற்பளிக்கும் நிகழ்சிகள் பெருமளில் நடந்திருக்கின்றன. பலர் சிலஇடத்தில் 8முஸ்லீம்கள் பெண்பிள்ளைகளைக் கற்பழித்த விசயம் பட்டியல் போட்டாலும் முடிவிடும். முஸ்லீம்நாடுகளில் போத்துக்கட்டி விட்டாலும் போர்வைக்குள்ளே பெரும்பாடு அதே பாடுதான். இதையெல்லாம் விடுவம்.

    புலியை ஒழிப்பதில் முக்கியமாக அரசுடன் முன்னின்ற அசுரப் அலியே, இப்போ அரசைக்குற்றம் கூறுகிறீர்கள். சரி இனியாவது அரசாங்கம் செய்த அக்கிரமங்களை எழுதிபபோடலாமே. செய்யமாட்டீர்கள் என்று தெரிந்துதான் எழுதுகிறேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் “சம்பந்தமில்லை” என்று கூறுபவர்களுக்கு மீர்வாலா விவகாரங்கள் அத்துப்படியாக தெரிந்துள்ளன ஆனால் கொக்கரல்ல மட்டையடி சம்பவம் மாத்திரம் என்னவென்று தெரியாமல் “அது என்ன” என்கிறார்கள்.

    உபகண்டத்தின் வரலாறு தெரிந்துதான் எழுதுகிறேன். உபகண்டத்தில் முஸ்லிம் மதத்தின் “ஜிகாத்” எப்படி பாகிஸ்தானை உருவாக்கியது என்பதையும் இந்துக்கள் எப்படி முஸ்லிம்களாக மாற்றப்பட்டார்கள் என்பதும் உலகத்துக்கே தெரியும்.

    தற்பொழுது நந்தாவும் புலி என்று குற்றம் சாட்டுவதில் இறங்கியுள்ள இந்த முஸ்லிம்கள் புலியுடன் சம்பந்தமில்லாத இந்து தமிழர்களை கொலை செய்தது நியாயம் என்று வாதிக்கிறார்கள்.

    இஸ்லாம் என்று பிரிவினை கோருபவர்கள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அநாகரீகமான செயல்பட்டுகளையும் அங்கீகரிக்கிறார்கள்.

    பாகிஸ்தானின் சட்டப்புத்ததகத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகள்தான் இறுதி முடிவை தீர்மானிக்கின்றன. இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்களை விட “நாகரீகமான” முஸ்லிம்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது. அதனால்த்தான் பலரும் பெண்ணைக் கற்பழித்தது சரியானது என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்தியாவில்நடந்த பஜ்ராங் தால் பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களை இந்திய அரசு கைது செய்துள்ள விஷயங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட இந்தியா “இந்து” மத அடிப்படையில் சட்டங்களை பரிபாலிப்பதில்லை.

    இலங்கயில் தமிழ் பேசிக் கொண்டே தமிழர் இல்லை என்று கூறும் முஸ்லிம்கள் அரேபியாவின் பாலவனத்துக் சட்டங்களை இலங்கயில் பரிபாலிக்க அலைவது புரிகிறது.

    கொக்கரல்ல மட்டையடி பற்றிய கேள்விகளுக்கு பதில் தராது ஓடியநிஸ்தார் இப்போது என்ன சொல்ல வருகிறார்?

    வெள்ளைக்காரன் முஸ்லிம்களுக்கு கொடுத்த சலுகைகள் இப்பொழுதும் கொடுக்கும் குண்டுகள் முஸ்லிம்களின் கொலை வெறிகளுக்கு காரணம்!
    குரானில் முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல வேண்டும் என்பது தெட்டத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள விஷயம். இனி அதுவும் “பொய்” என்று வாதிடக் கூடும்!

    Reply
  • Ajith
    Ajith

    “நீண்டதொரு போரின் பின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீக்கவோ துருவப்பட்டுள்ள சமூகங்களின் முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவோ அரசு மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் போதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இன்னிலையில் சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் என்ன பாத்திரம் வகிக்கலாம்.?” – கட்டுரையாளர்

    இந்த கருத்து மிக உண்மையானது. ஆனால் இங்கு சமூக உறவுகளை கட்டியெழுப்ப செயகூடிய காத்திரமான பங்கை வகிக்க வேண்டிய அரசும், அரச நிர்வாகமும் , அரசியல் வாதிகளும் , சமய தலைவர்களும் தான் முக்கிய தடைகற்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும். மத, இன, மொழி, நிற, ஜாதி வெறி என்பன மாற்ற முடியாத புற்று நோயாக வளந்ததற்கு இந்த தலைவர்களும் அமைப்புகளும் தான் காரணமே ஒழிய சாதாரண மக்கள் அல்ல. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இது இந்த முப்பது வருட போராட்டத்துடன்
    ஆரம்பிகபட்டதல்ல. இலங்கையில் வன்முறை கலந்த இன, மத ரீதியான அழிப்புகள் கடந்த நூரண்டுகுள் பல நடந்துள்ளன.

    1915 இல் சின்ஹல பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சொனகர்களுகும் இடையில் நடந்தற்கு மத ரீதியான தலைவர்களாலேயே ஏற்பட்டது. 1958 இல் ஏற்பட்ட இன அழிப்பு அரசியல், மத தலைவர்களாலேயே ஏற்பட்டது. இங்கு அரச நிர்வாகமான பாதுகாப்பு துறை இன் அழிப்புக்கு பாதுகாப்பாக இருந்த வெட்ககேடான செயலும் நடைபெற்றது. இந்த நாட்டில் சுதத்திரம் அடைந்த நாள்முதல் அரசியல் தலைவர்களின் இனரீதியான பலவந்த குடியேற்றங்கள், இனவாத நடவடிக்கைகள், மதத்தலைவர்களின் நடவடிக்கைகளால் ஆயிரகணக்கான மக்கள் உயிர்களை பறித்து, மக்களின், நாட்டின் உடமைகளை அழித்த சம்பவங்கள் எல்லாம் மாறாக முடியாத நிகழ்வுகள். இன்றும் இந்த நிலைமையில் மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்ற உண்மையை மறைத்து ஏதோ எம்மால் சாதித்துவிடலாம் என சிலர் நம்பினால் அது ஏமாற்று நாடகமாகும்.

    இன்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்குளை பெற இன, மொழி, மத அடையாளங்கள் அவசியமானவை. இன, மத, மொழி வேறுபாடு காட்டாத ஒரு அரசியல் தலைவனை சொல்லுங்கள். உதாரணமாக இங்கு கருத்து கூறும் அன்பர்களை எடுத்துகொள்ளுங்கள். இங்கு ஒருவர் ஆவது இன்வதமில்லாமல், அரசியல் கலபில்லாமல் நாம் மனித இனம் என்பதை ஏற்க மறுகிறாக்கள் ஒவொருவரும் தாங்கள் சார்ந்த அடையாளங்களை நிலை நிறுத்தி ஒருவரை ஒருவர் குறை கூறி மற்றவர்களை பழி வாங்க நினைகிரர்களே ஒழிய உருப்படியான ஒரு வழியை சொல்கிறர்களா என்றால் இல்லை.

    இந்த கட்டுரையாளரிடம் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு துணிவு இருந்தால் இலங்கை என்ற தீவில் சமூகங்களின் முரண்பாடுகளை களைந்து ஒரு நிலையான நீதியான அரசியல் பொருளாதார ரீதியான தீர்வனை தரக்கூடிய அடிப்படை மாற்றங்கள் எங்கே, யாருக்கு, எப்படி ஏற்பட வேண்டும் என்ற அறிவியல் ரீதியான சிந்தனைகளை வழங்க முடியுமா?

    Reply
  • BC
    BC

    அஷ்ரொப்அலி, முஸ்லிம் நாடுகளில் எப்படியான பாலியல் அக்கிரமங்கள் நடைபெறுகின்றன என்று பட்டியலிடுவது சாத்தியமற்ற அளவுக்கு அதிகம். அது உங்களுக்கும் தெரியும். பர்தாவால் பெண்கள் தங்களை மூடி மறைக்காவிட்டால் ஆண்களுக்கு வக்கிர உணர்வுகள் வந்துவிடும் என்று உங்களை போன்றவர்களை வைத்து எல்லா ஆண்களையும் கேவலப்படுத்தியுள்ளீர்கள். பர்தா போடாத முஸ்லிம் பெண்களுடனும் பழகியிருக்கிறோம், வக்கிர உணர்வுகள் வரவில்லை. நீங்கள் உங்கள் மனதை பண்படுத்த பழகுவது தான் சரியானது. மனதில் தவறை வைத்து கொண்டு பெண்களை பர்தாவால் மூடு என்று நிர்பந்திப்பது நியாயம் அல்ல.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    மீர்வாலா,கொக்கரல்ல,போபால் மட்டும் இல்லை சகோதரரே இன்னும் நீங்கள் கனவிலும் நினைத்துப்பார்க்காத அத்துமீறல்களில் தகவற்தொகுப்புகள் எனது கணணியில் பாதுகாப்பாக இருக்கின்றது. இங்கே உங்களிடம் கேட்கப்பட்டது அந்த சம்பவத்தைப் பற்றி மட்டையால் அடித்தார்கள் என்று பல தடவை கூறும் உங்களுக்கு அந்த சம்பவத்தின் பின்னணி பற்றி என்ன தெரியும் என்பது தான்,? மீர்வாலாவைப்பற்றியது போல் கொக்கரல்லயிலும் உங்கள் குட்டு வெளிப்படும் என்றா? அப்படியில்லையென்றால் எங்கே கொக்கரல்ல சம்பவம் தொடர்பான பின்னணி பற்றி நீங்கள் அறிந்ததை முன் வையுங்கள் பார்க்கலாம்.

    பஜ்ராங் தாலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா? 2010ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை இதுதான். ஏதாவது ஒரு சிறு ஆதாரம் காட்ட முடியுமா உங்களால்? கொகரல்ல சம்பவத்தின் பின்னணி தொடர்பாக நீங்கள் முன் வைக்கும் வாதம் என்ன? முதலில் இந்தக் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கயில் உள்ள சட்டக் கோவை என்பது உங்கள் அராபிய பாலைவனத்து சித்தாந்தத்திலிருந்து வந்தது அல்ல. எனவே இலங்கைச் சட்டங்களை முஸ்லிம்கள் கடைபிடிக்கப் போகிறிர்களா அல்லது இல்லையா என்பதுவே இப்போதைய கேள்வி!

    மசூதி மட்டயடியின் பின்னணி, முன்னணி பற்றி கதைக்காமல் அந்த மட்டையடி இலங்கயின் எந்த குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் செய்தார்கள் எனபதையும் அது சட்ட விரோதமா இல்லையா என்பதற்கும் ஒரு வரியில் பதில் சொன்னால் போதும்!

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிந்து தகுந்த செயற்பாட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் இருக்கிறது, எந்த ஒரு விடயத்தையும் அடி நுனி தெரியாமல் இடையில் இருந்து எடுத்து வந்து, அதை முஸ்லிம்களின் தலையில் போடும் உங்கள் போன்றவர்களுக்கேன் அதில் இத்தனை சிரமம்? எந்த ஒரு குற்றம் தொடர்பாக பகிரங்கமாக பேசுவதற்கும் முதல் அதன் அடிப்படை புரிந்திருக்க வேண்டும்,

    உங்களிடம் இதுவரைக்கும் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் நீங்கள் விடையளிக்கவில்லை, காரணம் அதில் அனைத்து விடயங்களும் நீங்கள் அறியாதது, ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை சரியோ பிழையோ கேள்விப்பட்ட எதையாவது வைத்து முஸ்லிம்களுக்கு சேறு பூசலாமா என்பது மட்டுந்தான் உங்கள் நோக்கம்.

    நியாயமாக, தெரியவில்லை என்றால் தெரியவில்லை நான் எங்கேயோ கேள்விப் பட்டதை அடிப்படையாக வைத்துத்தான் இத்தனை காலமும் இதைப்பற்றிக் கதைக்கிறேன், உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள், இந்த சம்பவத்தில் முழு விபரத்தையும், பெயர் விபரங்களோடும், அங்கு இடம்பெற்றது என்ன? யார் யார் பாதிக்கப்பட்டார்கள்? என்ன வகையான அநியாயம் நடந்தது? குற்றவாளிகள் யார்? அது தொடர்பில் எடுக்கப்பட்ட மேலதிக நடவடிக்கைகள் என்ன? போன்ற விபரங்களையும் இது தொடர்பில் ஒரு முஸ்லிமாக என்னுடைய தனிப்பட்ட பார்வை என்ன? அதற்காக ஒரு பொறுப்புள்ள முஸ்லிமாக நான் என்ன பிரதி நடவடிக்கைகள், முயற்சிகள் செய்தேன் என்பதை அ முதல் ஃ வரை விபரமாகக் கூறுகிறேன்.

    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தெரிந்தால் தெரியும் என்று அதன் விபரத்தைக் கூறுவது, தெரியாவிட்டால் நேர்மையாகத் தெரியாது என்று கூறுவது. அதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் உங்களுக்கு? இங்கே முன் வைக்கப்பட்ட எந்தக் கேள்விக்காவது உங்களால் பதில் சொல்ல முடிந்ததா?
    இதற்கு முன்னைய பதிவிலேயே வாதிக்கப்படும் விடயங்களைத் திசை திருப்பாதீர்கள் என்பதை எழுதியிருந்தேன், இப்போதும் அராபிய பாலைவனம், சித்தார்ந்தம் என்ற புதிதாக ஒரு விடயத்தைக் கொண்டு வருகிறீர்கள்.

    முதலில் எடுக்கப்பட்ட விடயத்தை முடியுங்கள், அதன் பிறகு உங்களுக்கு அரபியாவின் சித்தார்ந்தம் பற்றி உங்கள் எந்தக் கேள்விக்கும் விடையளிக்கிறேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    அலாவுதீனுக்கு பதில் சொல்லக் கஷ்டம் என்பது தெளிவு. கேள்வி கேட்டது நான்! பதிலளிக்காதது முஸ்லிம்கள்.

    ஆயினும் “நீட்டி முழக்கி” பதிலை தராது ஓடுவது முஸ்லிம்களுக்கு கை வந்த கலை!

    மீண்டும் கேள்வியை படித்துவிட்டு பதில் எழுதவும்!

    Reply
  • K. மாறன்
    K. மாறன்

    Mr. Nanda, i completely disagree with your comments about muslims even after mr. அலாவுதீன் has made a lot of effort to answer those un reliable allegations put forward by you time to time and expect you to be honest to yourself and answer the question.

    Dear Muslim brothers, we are one society and we need to live in harmony and peace to build a better future. All Communities have social issues that needs to be addressed to build a better society and i hope these brothers take this as constructive and work towards the best.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    குறைந்தபட்ச கருத்தாடல் நேர்மை கூட இல்லாத ஒரு நபர் முஸ்லிம்கள் ஓடி ஒளித்துவிட்டார்கள் என்று துவேசத்தையும் பிரிவினைவாதத்தையும் கக்குகிறீர்கள். உங்கள் நிலைமையில் இருந்து வேறு ஒரு ஆப்தீன் கேள்வி கேட்டிருந்தால் கூட அவரிடமும் தான் கொண்டுவரும் விடயம் தொடர்பான நேர்மையான நிலைப்பாட்டை நிச்சயமாக எதிர்பார்த்திருப்பேன். அது நந்தா என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வியல்ல.

    உணர்ச்சியூட்டல்,குத்தல் கும்மாளங்கள் மூலம் மக்களை மடையர்களாக்கும் யுக்தியை சுதந்திரத்தின் பின்னாலான இலங்கையில் யார் பாவித்தார்கள் என்பது கடந்த ஒரு வருடத்திற்குள் பிறக்காத அனைத்து இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும். அதே பாணியில் தமது குறைகளை மறைக்க மற்றவர்களை அதுவும் மத ரீதியான நையாண்டிகள் மூலம் நீங்கள் முனைவது எதை நிரூபிக்கிறது என்பதை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    இருபது வருடத்திற்கு பிறகு தமிழ்-முஸ்லிம் உறவு எப்படியிருக்கிறது அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையின் கீழ், மீர்வாலாவிலிருந்து இப்பாகமுவவரை எழுதியது யார் என்பது பார்ப்பவர்களுக்கு தெரியாதா என்ன?

    இடையில் எத்தனை சம்பவங்கள் மூலம் நாகரீமாக எந்த முஸ்லிமும் ஒருக்காலமும் இன்னொரு மதத்தை சம்பந்தப்படுத்தி உங்களைப் போன்று காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதில்லை என்பதை எவ்வளவு தெளிவாக்கினாலும் நீங்கள் வெறும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறீர்கள்.இதைக் கண்ணுற்றவர்கள் உங்கள் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்டிருப்பார்கள்.

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு உரக்கக் கூறிக்கொள்ள விரும்பும் விடயம் என்னவென்றால் எந்த முஸ்லிமும் உங்களைப் பார்த்து ஓட மாட்டான், இந்த முஸ்லிம் உங்களுக்குப் பதிலளிப்பதனால் மற்றவர்கள் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் அவ்வளவே. இப்போது, நீங்கள் இந்த சவாலுக்கு முகம் கொடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தெரிந்தால் தெரியும் என்று கொகரல்ல சம்பவத்தின் விபரத்தைக் கூறுவது, தெரியாவிட்டால் நேர்மையாகத் தெரியாது என்று கூறுவது. இன்ஷா அல்லாஹ், நேர்மையாக பதிலளிப்பின் இந்த முஸ்லிம் உங்களுக்கு மிக நேர்மையான “உண்மைகளை” முன் வைக்கத் தயங்கமாட்டான் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன். சவாலை முன்னெடுத்து, மழுப்பாமல் தெரிந்தால் விபரத்தைக் கூறுங்கள், தெரியாவிட்டால் ஆங்காங்கே எடுத்துவந்து முஸ்லிம்களுக்கு சேறு பூசும் வேலையைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அப்படியும் இல்லையாயின் இந்த சம்பவத்தை அலசி ஆராய உங்களுக்கு கால அவகாசம் தேவையாயின் அதை இங்கே பகிரங்கமாக அறிவித்து விட்டு, முடிந்தால் உங்கள் தகவலைக் கொண்டு வந்து இங்கெ இணையுங்கள்.

    Reply
  • saleem
    saleem

    அதுதான் பச்சை மட்டையடியில் மட்டைக்கும் நோகாமல் பொண்ணுக்கும் நோகாமல் அடிப்பார்கள் என்று சகாத்தீன் நாநா பதில் எழுதியிருந்தாரே. இந்த பச்சைமட்டையடி கல் எறிந்து கொல்லுதல் ஆண்களுக்கும் செய்பவர்களா?? இல்லையாயின் அவர்களுக்கு வேறு தண்டனையா கொடுப்பார்கள்?

    Reply
  • நந்தா
    நந்தா

    அலாவுதீனுக்கு கேள்வி புரியவில்லை என்பதல்ல. முஸ்லிம்கள் மசூதியில் வைத்து கொலையும் செய்வார்கள் அதைக் கேள்வி கேட்க நீ யார் என்பதுதான் அவரது பிரச்சனை. உனக்கு என்ன தெரியும் என்று அவர்நீட்டி முழக்குவதும் அதற்ககாகத்தான்!

    மூன்று மாதக் குழந்தையின் தாய்க்கு கட்டிய கணவன் முன்னால் வைத்து தென்னம் மட்டையினால் விளாசியதை “அது எங்களுடைய விஷயம்” என்று மூடி மறைக்க முயலுவதைத்தான் இந்த அலாவுதீன் செய்கிறார்.

    இலங்கையில் பெண்கள் பல ஆண்களோடு உறவு கொள்ளுதல் சட்ட விரோதம் அல்ல என்பது அலாவுதீனுக்குத் தெரியவில்லையா? முஸ்லிம் ஆண்கள் பல பெண்களுடனும் உறவு கொள்ளலாம் என்பது முஸ்லிம் சட்டம்.

    இலங்கை சட்டத்தை மதிப்பதாக கூறுபவர் மட்டையடி இலங்கைநாட்டின் சட்டத்துக்கு விரோதமானது என்பதையும் அது முஸ்லிம் ஷரியா சட்டத்தின்படியே கொடுக்கப்பட்டது என்பதையும் ஒப்புக் கொள்வதற்கும் தவிப்பது புரிகிறது.

    தமிழ் முஸ்லிம் உறவுகள் என்பது ஒரு வேடிக்கையான கருத்து. முஸ்லிம்கள் “ஒரு சாதி” யாகி உள்ளனர். அவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள் அரேபியாவிலிருந்து அமுல் படுத்தப்படுகிறது. அதன்படி முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை விடக் கீழானவர்கள் என்பது அவர்களுக்கு போதிக்கப்படுகிறது.

    யுத்தம் முடிவடைந்தவுடன் அரச தொழில்களிலும் மற்றும் துறைகளிலும் தமிழர்களின் படையெடுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இதுவரையில் “தமிழ்” என்ற இடங்களிலெல்லாம் இருந்த முஸ்லிம்கள் அல்லல்படுவது தெரிந்த உண்மை. முன்னர் தமிழர்களைப் புலி என்று போட்டுக் கொடுத்தே பல முஸ்லிம்கள் அரச பதவிகளில் காலம் தள்ளியுள்ளனர். ஹக்கீம் அரசுடன் போய் ஒட்டிக் கொண்டுள்ளதும் அதன் வெளிப்பாடே ஆகும்!

    தமிழர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று முஸ்லிம் என்று “தனிச்சாதி”யாகி உள்ள முஸ்லிம்கள் இப்பொழுது ஒற்றுமை என்று கதைப்பது வெறும் சவடால்!

    இந்துக்களும், பவுத்தர்களும் “காபிர்கள்” அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மதம் மாற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. காபிர்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு சொத்து சுகம் என்பன இருக்கக் கூடாது என்பதும் அராபிய சித்தாந்தம். இந்த அரேபிய சித்தாந்தங்களை நம்பும் முஸ்லிம்கள் “மற்றவர்களுடன்” ஒற்றுமை பற்றிப் பேசுவது அந்த மற்றவர்களை ஏமாற்றவே ஆகும்!

    மனிதனோடு மனிதனாக வாழ “மத” அடையாளங்கள் தேவையில்லை!

    Reply
  • ashroffali
    ashroffali

    நந்தா…
    நீங்கள் கூறுவதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்க வேண்டுமே… அதை முன் வையுங்கள் என்றுதான் நான் கேட்கின்றேன். மற்றவர்களும் அதைத் தான் கேட்கின்றார்கள். அதை விட்டுவிட்டு தயவு செய்து உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு கண்டபடி எழுத வேண்டாம்.

    இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களைப் புலி என்று காட்டிக் கொடுத்ததில்லை. அதை உங்களால் நிரூபிக்க முடியுமா? நான் அரசாங்கத்தின் அதி உச்ச அதிகாரம் மிக்க பதவியில் இருந்தவன். இலங்கையின் புலனாய்வுத்துறையுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவன். அப்பாவித் தமிழர்களை காட்டிக் கொடுத்தது யார் என்று எனக்குத் தெரியும்.

    Reply
  • Prof Soman
    Prof Soman

    .. சிறுபான்மை மதத்தினரைப் பொருத்தவரை தொடக்கம் முதலே அவர்களிடம் ஊசலாட்டம் இருந்து வந்துள்ளது. மொழி வழி தேசிய இன உணர்வு என்பது மிகவும் முக்கியம். இயக்கத்தைப் பொருத்தவரை இந்தக் கண்ணோட்டத்தில்தான் அணுகி அணைத்து வந்துள்ளது. சில நேரங்களில் இது அவர்களுக்கு ஒவ்வாமல் போயிருக்கலாம். அவர்களின் தலைமை எப்போதுமே ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. சிங்களப் பேரினவாத ஆதரவாளர்களாகவும், சிங்கள ஆட்சியில் பங்கேற்பவர்களாகவும் உள்ளனர். இயக்கத்தைப் பொருத்தவரை ஈழ விடுதலை என்ற இலக்கில் அவர்கள் எப்போதுமே நீக்கி வைக்கப்படவில்லை. பெண் சமத்துவத்தைப் பொருத்தவரையில் பாலினப் பாகுபாடு அகற்றுதல் இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது.

    தீராநதி: புஷ்பராஜன் முதல் ஷோபா சக்தி வரை விடுதலைப்புலிகள் மீது நேர்மையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனரே?

    புதுவை இரத்தினதுரையின் இடத்தை குறிவைத்திருந்த இலண்டன் ரி.பி.சி. புகழ் இரவி அருணாசலம் தீரா நதி சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டியில் உள்ள பல சுவாரசியமான பகுதிகளுள் ஒன்று மேலே உள்ளது. இதில் இந்தப் பெருமகன் முஸ்லீம் சகோதராகளைப்பற்றிக் கூறுவதைக் கவனியுங்கள்.

    யாழ்டொட்.கொம் இணையத்தளத்தில் முழுச் சுத்துமாத்தையும் படித்துச் சுவைக்கலாம்.

    இது தவிர செல்லக்கிளியின் சகோதரன் கனகரத்தினம் தற்போது ஒரு எம்.பி. என கூறியிருக்கிறார் இவர்.

    பேட்டி முழுவதையும் படித்துப் பாருங்கள். சோக்காய் இருக்கு. தேசிய தலைவருக்குத்தான் எல்லாம் சமர்ப்பணம். கே.பி.யின் காலையும் பிடிக்கும் முயற்சி தெரிகிறது. வருவாய்க்கு வழிபார்க்கும் வேலையாக இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்பின் அஸ்ரப் அலி, அலாவுத்தீன்!

    நீங்கள் எனக்கு முத்தவரோ, இளையவரோ தெரியாது ஆனால் நான் சொல்வதை சற்று செவிமடுத்தால் ஆகக் குறைந்தது நமக்காவது அது நன்மை பயக்கும்.

    நீங்கள் இருவரும் ஆதாரங்கள் தாருங்கள் என கேட்க முன்னமே நான் கேட்டு அலுத்துவிட்டேன். ஆரியவதி செய்தி தொடர்பாக “நிஸ்த்தார் என்ன சொல்கிறார்” என்று தான் முதல் பின்னோட்டம் நந்தா விடமிருந்து வந்தது. அதற்கான விளக்கமாக “ஆரியவதி எதிர் அறபுப் பெண்” என்று நாடக பாணியில் பதில் கொடுத்து, அவரின் அறியாமையை விளங்கப்படுத்தியதோடு, அவரின் இந்த கொரகொல்ல விடயமாக ஆதாரங்கள் கேட்டேன். அவரின் பதில் எனது நாடக விளக்கம் ஒரு அலட்டல் அவ்வளவே. இப்போது மீண்டும் உங்கள் இருவரிடமும் அதே படத்தை காண்பிக்கிறார்.

    சயமத்தால் முஸ்லிமாகவிருக்கும் இஸ்லாமியர், இனத்தால் “சோனகர்” என்றும் நாம் தமிழர் அல்லவென்றும் அவருக்கும், அவர் போன்ற கருத்துடையோருக்கும் பல கட்டுரைகள் மூலம் விளக்கமளித்தாகிவிட்டது. இப்போது நாம் ஏதோ புது “சாதி” யாக உருவெடுத்துள்ளோம் என்ற மாதிரி கதை திரிக்கின்றார். பொறுத்திருந்து பாருங்கள் நீங்கள் புலணாய்வு துறையுடன் நெருங்கிய தொடர்பு என்று கூறி பயமுறுத்த முயற்சிகின்றீர்களா என்று ஒரு கேள்வியை வேண்டுமென்றே கேட்பார். ஆகவே நந்தாவை அப்படியே விட்டுவிடுவது நல்லது. விழலுக்கு நீர் இனறத்து யாருக்கு லாபம்.

    முக்காடு, முகமூடி என்று கூக்குரலிட்ட முன்னைய யூ.கே பிரதமரின் பாரியார் 05.11.2010 பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சியில் ” முஸ்லிம் பெண்களின் தலை மறைதல் முறையை, நாம் அவர்கள் மேல் விதிக்கப்பட்டுள்ள அடக்குமுறை” என பார்த்தால் அது நம்மில் ஏதோ பிழை இருக்கவேண்டும் என்றார். அதே தினம் காலை 9.00 மனிக்கு எல்.பீ.சி(97.3 எப்.எம்)நிக் பெராரி ஷோவில் கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட அண்மையில் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட ஒரு யூ.கே பெண் ஊடகவியளாளர், செல்வி. லொரன்ஸ் பீ, தான் தலை மறைப்பதாகவும் அது எவ்வாறு ஒரு பெண்ணை பெண் என்ற பெருமையுடன் வாழச் செய்கிறது என்றும், மேற்குலகம் எப்படி பெண்ணை ஒரு விலை பொருளாக சித்தரிக்கிறது என்றும், இது மேற்கின் முட்டாள் தனம் மாத்திரமல்ல இது இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் தோல்வி என்ற பொருள்பட விலாசி வாங்கினார். பெண்கள் விவகாரத்தில் ஒரு பெண், அதுவும் ஆங்கில பெண் இப்படிக் கூற,நந்தாவின் கருத்து எமக்கோ அல்லது யாருக்கும் ஏதாவது செய்யமுடியுமா. பிறகேன் அவர் பற்றி நாம் அலட்டிக்கொள்ள.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    நந்தா அவர்கட்கு, உங்கள் இறுதிப்பதிவில் ஐந்தாவது பந்தியிலிருந்து வெளிப்படையாக நீங்கள் இஸ்லாத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லிம்கள் தொடர்பாக உங்களது அரசியல் பார்வை என்ன? என்பதை பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    இதை, நந்தா எனும் தனிமனிதரின் பார்வை என்று மட்டுமே பார்க்கத்தெரிந்த எங்கள் “அறிவிலிருந்து” தான் உங்களுக்கும் என் போன்ற முஸ்லிம்களுக்குமான வேறுபாடு ஆரம்பிக்கிறது. நாங்கள் அதைத் தனிமனிதப் பார்வை என்று எடுத்துக்கொண்டாலும் நீங்களும் உங்கள் போன்றோரும் அவ்வாறு பார்ப்பதில்லை.இது ஒவ்வொருவருடைய சொந்த அறிவு சம்பந்தப்பட்ட விடயம், எனவே உங்கள் உரிமையையும் மதிக்கக் கற்றுத்தந்த எனது சித்தார்ந்தத்தின் பலனால் நான் உங்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்பட்டிருக்கிறேன்.

    முஸ்லிம்கள் என்று நீங்கள் அறிந்தவர்கள் ஒரு சாதியல்ல, ஒரு இனம் ! பிற இனங்களைப் போலவே இஸ்லாமியர்களுக்கு என்று வரலாற்று ரீதியில் தொன்மை மிக்க ஒரு இனம் இருக்கிறது.அந்த இனத்தாரைத்தான் நீங்கள் முஸ்லிம்கள் என்று இலங்கையில் அழைக்கிறீர்கள். எனவே முஸ்லிம்கள் என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும்.

    இலங்கை நாட்டின் சட்டங்கள் முஸ்லிம்களுக்குக் கொடுத்திருக்கும் சலுகைகள் மீதும், உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்களின் பிணைப்பின் மீதும் காழ்ப்புணர்வில் தான் நீங்கள் பெரும்பாலான விடயங்களைக் கொட்டித்தள்ளுகிறீர்கள் என்பது தற்போது உங்கள் பதிவிலிருந்தே தெளிவாக்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் இதற்குப் பிறகு நேரடியாக உங்கள் காழ்ப்புணர்வின் அடிப்படைக் கேள்விகளை வைத்தே முன்னெடுத்துச் செல்லலாம், அதைவிடுத்து ஆடு நனைகிறது என்ற உப்புச்சப்பில்லாத கதைகளை இங்கே கொண்டுவர வேண்டாமே.

    இஸ்லாமியச் சட்டம் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விடயம் நாட்டில் ஒரு பாகத்தில் அமுல் படுத்தப்பட்டது என்பது தொடர்பாக உங்களுக்கொரு ஆதங்கம் இருந்தால் அதை நீங்கள் அரசாங்கத்திடமல்லவா நேரடியாகக் கேள்வி கேட்க வேண்டும்? ஏன் இவ்வாறான ஒரு சட்டத்தை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று? அதற்கு அரசு உங்களுக்குப் பதில் தந்தாலும் சரி இல்லை அப்படியொரு சட்டம் இருக்கக்கூடாது என்று நடவடிக்கை எடுத்தாலும் சரி, அது தொடர்பில் நாட்டின் சட்ட திட்டத்துக்கு உடன்பட்டவர்கள் எனும் வகையில் முஸ்லிம்கள் எதிர்த்துக் கலவரம் செய்யப்போவதில்லை.

    குறிப்பிட்ட சம்பவத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அடி நுனி தெரியாது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுந்தான் என்னுடைய எதிர்பார்ப்பு, இத்தோடு மூன்று தடவைகளுக்கு மேல் சொல்லிய ஒரு விடயமே திரும்பவும் கூறுகிறேன், ஒத்துக்கொள்ளுங்கள் அந்த விபரம் தொடர்பான அனைத்து விடயங்களையும் இங்கே விபரமாக இணைத்துக்கொள்கிறேன். இதே விடயத்தை திருப்பித் திருப்பி எழுதி எனக்கு அலுத்துவிட்டது. ஆனாலும் நீங்கள் பதில் எழுதுவதாய் இல்லை, அதிலிருந்து உங்களால் ஒருக்காலமும் இது முடியாது என்பது தெட்டத்தெளிவாகிறது, ஏனெனில் அங்கும் இங்கும் இருந்து ஏதாவது விடயங்களை எடுத்து, அதற்கு இஸ்லாமிய முடிச்சு போட்டு, முஸ்லிம்கள் மீது சேறு பூசுவதோடு நீங்கள் திருப்திப் பட்டுக்கொள்கிறீர்கள்.

    எனவே, நந்தாவுக்காக இல்லையாகினும், இங்கு வரக்கூடிய மற்றவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விளங்கிக் கொள்ள சில விடயங்களை முன் வைக்கிறேன். முதலில் “ஹத்” அடிப்பதற்காகப் பாவிக்கும் மட்டை பற்றி கூறுகிறேன்,

    ஹத்துக்காகப் பயன்படுத்தும் மட்டையானது சுமார் 1 முதல் 1.5 அடி நீளமானதும், கூடியது 2 அங்குலம் வரை அகலமானதுமான சிறு துண்டு, இதைத்தான் நந்தா மட்டை என்கிறார்.

    அடுத்தது, “ஹத்” அடிக்கும் முறை என்பது குறிப்பிட்ட நபர் மல்லாக்காக இருக்கும் போது அவரது முதுகில் முழங்கையை வைத்து உயர்த்தப்படும் கையை எந்த வித வலுவும் இன்றி அப்படியே விழச் செய்வது, இந்த விழுதலின் போது இயற்கையாக அதற்கிருக்கும் விசையைத் தவிர மேலதிக வலு அதில் பிரயோகிக்கப்படுவதில்லை. இதுதான் நந்தா இத்தனை காலமும் பிரச்சாரம் செய்துதிரிந்த இஸ்லாமிய மட்டையாலடிக்கும் முறை.

    கம்பத்தில் கட்டி வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடிப்பதல்ல “ஹத்தடிப்பது”. நந்தாவைத் தவிர வேறு யாருக்கும் இதில் சந்தேகம் இருந்தால், உங்கள் அருகில் உங்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக்கூடிய யாராவது ஒரு இஸ்லாமிய மார்க்கம் தெரிந்த அறிஞர்கள் “மெளலவிகள்” இருந்தால் அவர்களிடம் கேட்டு இதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.

    இப்போது அந்த கொக்கரல்ல சம்பவத்திற்கு வந்தோமானால், கொக்கரல்லயில் நந்தா கூறும் தென்னை மட்டையால் விளாசிய மட்டையடி நடைபெற்றதா? இல்லை அப்படி நடைபெறவில்லை, மேலே விளக்கப்பட்ட “ஹத்” நிறைவேற்றப்பட்டதா? ஆம் நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் எத்தனை பேருக்கு நிறைவேற்றப்பட்டது? இரண்டு பேருக்கு நிறைவேற்றப்பட்டது. அந்த இருவரில் ஒருவர் அந்தப் பெண்மணி, மற்றையவர் நந்தா சுழியோடித் தகவல் பெற்றுவரும் இணையத்தில் இருக்கும் ஒலிக்குரிய அந்தப் பெண்ணின் கணவனா? இல்லை அவருக்கு அப்படியெதுவும் நடைபெறவில்லை. நந்தா கூறித்திரிவது போன்று மசூதியில் வைத்து “ஹத்” நிறைவேற்றப்பட்டதா? அதுவும் இல்லை, அந்த ஊரின் மதரசாக் கட்டிடத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

    அப்படியானால், அந்த இரண்டாவது நபர் யார்? அவருக்கு ஏன் “ஹத்” நிறைவேற்றப்பட்டது? ஹத் நிறைவேற்றப்படுவதற்காக ஊர்ப் பள்ளியை நாடியவர்கள் யார் யார்? ஹத் நிறைவேற்றப்படுதலே தமக்கும் தம் எதிர்காலத்திற்கும் நல்லது என்று முடிவெடுத்தவர்கள் யார்? அதுவெல்லாம் நந்தாவுக்குத் தெரியுமா? தெரியாது. ஏறத்தாழ 25 வருடங்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரைக் கொண்ட பள்ளி நிர்வாகம் இதில் ஏன் தலையிட்டது? அது நந்தாவுக்கும் தெரியாது நந்தா சுட்டிக்காட்டக்கூடிய அந்த இணையத்துக்கும் தெரியாது.

    ஹத் நிறைவேற்றப்பட சில காலத்திற்கு முன்னர், இப்போது அந்த இணையத்தில் இருக்கும் ஒலிக்குச் சொந்தக்காரரான அதே கணவர் இந்தப் பெண்ணைக் கொண்டு வந்து பெற்றோரின் வீட்டிலேயே விட்டுச் சென்றாரே, அது ஏன்? அதுவும் நந்தாவுக்குத் தெரியாது நந்தாவின் இணையத்துக்கும் தெரியாது. எந்த உரிமையில் அந்தப் பெண்ணை இந்த மணவாளன் அழைத்துச் சென்றார்? ஏன் திரும்பவும் கொண்டு வந்து விட்டார்? அதன் பிறகு நடந்ததென்ன? அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா, இல்லையா? குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பெண்ணுக்கு இருந்ததாகக்கூறிய 2 மாதக் கைக்குழந்தை எங்கே? அதன் பிறப்பத்தாட்சிப் பத்திரம் தொடர்பான சமஸ்த மண்டலவின் வழக்கு ஏன்? எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி இரு சாராரும் பிரசன்னமாகும் வேறு ஒரு வழக்கு ஏன் நடக்கிறது? இதுவெல்லாம் முஸ்லிம்கள் மீது சேறு பூச அலையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பாத உண்மைகள்.

    இத்தனைக்கும் பின்னால், அருகில் இருக்கும் ஊர்களில் இடம்பெறும் பெளத்தர்களின் “தஹம் பாசல்” ஞாயிறு பள்ளிகளைக் குழப்புவதும், சுற்றுக் கிராமங்களிலிருக்கும் இந்து மதத்தாரின் வழிபாட்டு உரிமையை மறுப்பவரும், குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணியில் பைனான்ஸ் ஸ்பொன்சருமாக இருக்கும் “பாதிரியார்” யார்? அதுவெல்லாம் நந்தா தெரிந்து கொள்ள விரும்பாத விடயங்கள்.

    ஆக, இத்தனை விடயங்களையும் தாண்டி நந்தாவுக்குத் தேவை அவரது கற்பனை மட்டை விளாசலை நியாயப்படுத்தல், இப்போது அதற்கான முழுமையான விடை மேலே விளக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. முடிந்தால் இப்போதாவது உங்கள் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு விடை கூறுங்கள், ஆகக்குறைந்த நேர்மையுடன், மனித நேயத்துடன் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் மனமாவது உங்களுக்கு இருக்கிறதா என்று கூறுங்கள். உங்களால் முடிந்தால் குறிப்பிட்ட அந்தக் கணவனையே தொடர்பு கொண்டு இவ்வாறான விபரங்கள் தரப்பட்டிருக்கிறது, அது உண்மையா என்று கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

    இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருடைய பெயர் விபரங்கள், தொலைபேசி விளக்கங்கள், அவர்கள் கை பட எழுதிய ஆவணங்கள், எங்களிடம் அவர்கள் குரல்களிலேயே வழங்கிய சாட்சியங்கள், அவர்களது சம்பவத்தின் பின்னாலான புரிந்துணர்வுகள்,தவறுகள், ஊர்க்காரர்களின் சாட்சியங்கள் என்று நான் முன்னரே உங்களிடம் பொருந்திய படி, இது தொடர்பிலான “அ முதல் ஃ” வரை அத்தனையையும் என் முன்னால் வைத்துக்கொண்டுதான் இதைப் பேசுகிறேன், இதை என் சகோதர முஸ்லிம்கள் அனைவர் சார்பிலும், அவ்வளவு ஏன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட அனைவர் சார்பிலும் சேர்த்துத் தான் கூறுகிறேன்.

    இப்பேற்பட்ட ஒரு விடயத்தை சாதாரணமாக தன்னிடம் இருக்கும் காழ்ப்புணர்ச்சியைப் பலப்படுத்தக்கூடிய “மசூதி”,”மட்டையடி”, “கற்பழிப்பு” எனும் வார்த்தைகளை உப்பு சப்பில்லாமல் சேர்த்து, அதைக் கொண்டு நியாயங் கேட்பார் என்று வந்து நின்று ஆதாரமே இல்லாமல் நையாண்டி இன்பம் காணும் ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கில் இல்லாமல் குத்தலாக குதறித்திரியலாமா என்றால்? நிச்சயமாக அதை அனுமதிக்க முடியாது,

    தேசம்நெட்டில் திரு சோதிலிங்கம், தமிழ் ஊடகங்களின் மெத்தனப் போக்கைப் பற்றி எழுதிய அண்மைய ஆக்கத்தில் சமூகச் சீரழிவையும் கட்டுமானத்தையும் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதியிருக்கிறார், அதன் நியாயத்தையும் நந்தாவின் உடலுறவு நியாயத்தையும் ஒப்பிட்டு மற்றவர்கள் நன்மையையும் தீமையையும் பிரித்தறிந்து கொள்ள இறைவன் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக !

    Reply
  • BC
    BC

    எனக்கு பாக்கி மதத்தால் முஸ்லிம் நண்பர் இருக்கிறார். அவர் தனது மொழி உருது என்றும் பஞ்சாபி கதைத்தால் விளங்கி கொள்ள முடியும் என்றார்.
    //பிற இனங்களைப் போலவே இஸ்லாமியர்களுக்கு என்று வரலாற்று ரீதியில் தொன்மை மிக்க ஒரு இனம் இருக்கிறது. //
    இலங்கையில் உள்ள அந்த தொன்மை மிக்க இனத்தின் மொழி என்ன என்று யாராவது தெரிவியுங்கோ.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஆதாரங்கள் ஏற்கனவே தேசத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.நிஸ்தார் அது பற்றிப் பதிலளிக்காமல் ஓடி ஒளிந்தது எல்லோருக்கும் தெரியும். வேண்டுமானால் எனது பதிவுகளை மீட்டுப் பார்ப்பதுநல்லது.

    காபிர்கள் என்பவர்கள் யார் என்பதற்கு நிஸ்தார் பதில் எழுதாமல் ஓட்டம் பிடித்தவர். முகம்மதுவுக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்பது பற்றியெல்லாம் கேட்ட பொழுது பதில் தராது ஓடிய நிஸ்தார் இப்பொழுது அலட்டுவது எதற்காக?

    நந்தாவுக்கு மறதி கிடையாது. மட்டையடி கொடுக்க இலங்கையில் எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இலங்கை அரசால் கொடுக்கப்படவில்லை.

    Reply
  • நந்தா
    நந்தா

    பி சி
    உருது என்பது இஸ்லாமிய படையெடுப்பின் பின்னர் உருவான மொழி. அதற்குத் தொன்மை எதுவும் கிடையாது. சுருக்கமாகக் கூறினால் “பஞ்சாபி” மொழியை அரபு எழுத்துக்களில் சில மாற்றங்களோடு எழுதுகிறார்கள். பாகிஸ்தானில் மிகவும் சிறுபான்மையினரே உருதுவை தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். அதுவே “அரசகரும” மொழி.

    “பஞ்சாபி” என்பதுதான் பாகிஸ்தானில் பெரும்பானமையினர் பேசும் மொழி.பஞ்சாபி பாகிஸ்தானியர்களிடம்தான் அரசியல் அதிகாரம் உள்ளது. முஜிபர் ரகுமானை பஞ்சாபி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தமைக்கு மொழிதான் காரணம். மத அடிப்படயில் பிரிந்தவர்கள் பின்னர் மொழி அடிப்படையில் பிரிந்தார்கள். வங்காள தேசத்து முஸ்லிம்கள் அதற்கு கொடுத்த விலை மிக அதிகம். லட்சக்கணக்கான வங்காளத்து முஸ்லிம் பெண்கள் பஞ்சாபி முஸ்லிம் படயினரால் கற்பழிக்கப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    அமெரிக்காவின் சகல உதவிகளுடனும் பாகிஸ்தானிகள் மண்ணைக் கவ்வியதுதான் வரலாறு!

    மொழி மதத்தை விட வலிமையானது என்பதற்கு இது ஒரு உதாரணம்!

    Reply
  • ashroffali
    ashroffali

    //இலங்கையில் உள்ள அந்த தொன்மை மிக்க இனத்தின் மொழி என்ன என்று யாராவது தெரிவியுங்கோ//

    இதுதான் குதர்க்க வாதம் என்பது. முஸ்லிம்கள் எப்போதும் மதத்தால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனரே தவிர மொழியால் அல்ல. அதைப் பலரும் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியாயிற்று. அதைக்கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் நீங்கள் இன்னும் பின்னூட்டம் இடுகின்றீர்கள்.

    இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படும்போது இந்தி மொழி பேசுபவர்களும் நேபாள மொழி பேசுபவர்களும் தாய் மற்றும் திவேகி மொழி பேசுபவர்களும் இந்துக்கள் தான். பெளத்தம் என்று வரும்போதும் அதுதான் யதார்த்தம். ஆக இப்போது நீங்கள் கேட்டது எவ்வளவு குதர்க்கமானது என்று உங்களுக்கு புரிகின்றதா?

    ஆனால் முஸ்லிம்கள் எப்போதும் தாம் வாழும் பிரதேசம் மற்றும் நாட்டின் சூழலில் ஒன்றித்துப் போய் வாழவே விரும்புவார்கள். அதன் காரணமாக அந்தந்த பிரதேச மற்றும் நாட்டு மொழிகளை தங்கள் மொழியாக்கிக் கொள்வார்கள்.

    இவ்வளவு ஏன்… இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பலர் தம்மை தமிழர்களாக இனங்காட்டிக் கொள்கின்ற போதும் அவர்களின் இரண்டாம் தலைமுறையில் பலருக்குத் தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். அதற்காக யாரும் அவர்களிடம் நீங்கள் தமிழர்கள் இல்லையென்று கூற முடியுமா?

    குதர்க்கவாதம் என்பதற்கும் ஒரு அளவுண்டு சகோதரரே.

    அடுத்தது நீங்களும் நந்தாவும் கருணாவும் சொல்வது போல் மதத்தை வீட்டிலேயே வைத்துக்கொள்ள நீங்கள்தான் முதலில் பழக வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நீங்கள் இப்படியொரு ஊடகத்தில் வந்து இன்னொரு இனத்திற்கு எதிராக விசம் கக்கியிருக்க மாட்டீர்கள். நையாண்டி செய்ய மாட்டீர்கள்.

    இது உங்கள் அனைவருக்கும் மட்டுமன்றி நம் அனைவருக்குமானது…

    குறள் : பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற. (குறள் எண் : 95)

    அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

    Reply
  • ashroffali
    ashroffali

    //மத அடிப்படயில் பிரிந்தவர்கள் பின்னர் மொழி அடிப்படையில் பிரிந்தார்கள். வங்காள தேசத்து முஸ்லிம்கள் அதற்கு கொடுத்த விலை மிக அதிகம். லட்சக்கணக்கான வங்காளத்து முஸ்லிம் பெண்கள் பஞ்சாபி முஸ்லிம் படயினரால் கற்பழிக்கப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.//

    நந்தா.. 2009ம் ஆண்டிலேயே வங்காளதேசத்தின் சனத்தொகை ஒருகோடியே ஐம்பத்தியாறு இலட்சம் தான். அப்படியிருக்க 1970ம் ஆண்டுகளில் எப்படி ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம்..?

    இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பஞ்சாபி படையினரால் கற்பழிக்கப்பட்டதாக வங்காளதேச அரசு கூட குற்றம் சாட்டவில்லை. ஏன் வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்த இந்தியா கூட அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அப்படியிருக்க நந்தாவுக்கு மட்டும் எப்படி அத்தகவல் கிடைத்தது..? .

    நந்தா.. காபிர்கள் என்போர் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் தான். அதற்காக அல்லாஹ் எந்த இடத்திலும் காபிர்கள் என்போரைக் கொலை செய்யுமாறு தூண்டவில்லை. மாறாக நான் மன்னிப்போனும் மிக்க கருணையுடையோனுமாக இருக்கின்றேன் (15வது அத்தியாயம்:49வது வசனம்) என்றுதான் கூறுகின்றான்.

    எங்களுடைய திருத்தூதார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தான் இவ்வுலகுக்கு அனுப்பபட்ட நோக்கம் பற்றிக் குறிப்பிடுகையில் நான் அல்லாஹ்வை வணங்குமாறு மக்களை அறிவுறுத்தவும் நல்லதை ஏவி தீமையைத் தடுக்கவுமே அனுப்பப்பட்டுள்ளேன். (அத்தியாயம்-39: வசனம் 11) என்றுதான் குறிப்பிடுகின்றார்களே தவிர எந்த இடத்திலும் காபிர்கள் என்போரைக் கொல்லுங்கள் என்பதாக குறிப்பிடவில்லை.

    மற்றது அல்லாஹ் குர்ஆனில் உலக மாந்தரை விளிக்கும் போதெல்லாம் ஆதமுடைய (ஆதாமுடைய) மக்களே என்று பொதுவாக விளிக்கின்றானே தவிர முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதவர்களையும் வேறுபடுத்தி விளிக்கவில்லை.

    தவிரவும் காபிர் என்பது ஒரு அரபுப் பதம். முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம். அதைவிட அதில் ஒன்றும் தப்பான அர்த்தமோ கீழ்த்தரமான அர்த்தமோ இல்லை. நாம் எப்படி மாற்றுமத சகோதரர்கள் என்கின்றோமோ அது போலத் தான் இதுவும்.

    இது பகவத்கீதை…

    யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
    அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
    பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (அஹம்) ஸம்பவாமி யுகே யுகே ||

    (பகவத் கீதை அத்தியாயம் 4இ பாடல் 7).

    தர்மத்தை நிலைநாட்ட கடவுள் அவதரிக்கிறார். கடவுள் தம் கடமையை முடித்ததும் தீயவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றி தர்ம ஸ்தாபனம் செய்வதற்காகவே தான் அவதரிப்பதாக கடவுள் கூறுவதாக அது கூறுகின்றது.

    தீயவர்களை தண்டிப்பது தப்பென்றால் தர்மம் நிலைநாட்டப்பட முடியாது.

    அதற்காக யாரையோ தண்டிக்க மட்டுமே கடவுள் அவதரிப்பதாக கூறுவதாக எடுத்துக் கொண்டால் நாங்கள் முட்டாள்களாக மட்டுமே இருக்க முடியும்.

    அப்படித்தான் அல்குர்ஆனும் சில இடங்களில் அக்கிரமக்காரர்களுடன் யுத்தம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது உண்மையே. நன்றாகக் கவனிக்கவும். யுத்தம் என்பது அக்கிரமக்காரர்களுடன் மட்டும் தான்.
    அதற்காக கண்டபடி யுத்தம் செய்ய முடியாது. பெண்கள் சிறுவர்கள் வயோதிகர்கள் மற்றும் மாற்றுமதப் பெரியார்கள் எவரும் தாக்கப்பட முடியாது. மரங்கள் வெட்டப்பட முடியாது. கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்க முடியாது. பயிர்கள் நாசம் செய்யப்பட முடியாது என்று அதற்கும் ஆயிரம் கட்டுப்பாடுகள் இருக்கின்றது. ஜெனீவா சாசனத்துக்கு ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மனித உரிமை சாசனம் தான் அல்குர்ஆன்.

    பகவத் கீதையில் கடவுளாக அவதரித்து தீமைகளை அழிப்பதை இங்கே மனிதர்களிடம் பாரம் சாட்டப்பட்டுள்ளது. காரணம் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான். அதனை தப்பு என்றால் நல்லவர்கள் வாழ முடியாது. தண்டனை என்ற பயம் இருக்கும் போது தான் சமூக கட்டமைப்பு குலையாமல் பேணப்படும்.

    அதே நேரம் தீயவர்கள் திருந்தி நல்லவர்களாக முற்படும்போது அவர்களது முன்னைய தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதைத் தான் இன்று நாம் சீர்திருத்தம் என்கின்றோம்.

    இப்படித் தான் அல்குர்ஆன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மனித நேயத்தை போதிக்கின்றது. அதன்படி வாழ்ந்து காட்டி ஒரு காட்டுமிராண்டி சமூகத்தை நாகரீகப் பாதையில் அழைத்து வந்தமைக்காகத் தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகின் மிகச்சிறந்த 100 நபர்களில் முதன்மையானவர் என மேற்கத்தேய கிறித்தவ அறிஞர் ஒருவர் (என் ஞாபகம் சரியாக இருந்தால் பிலிப் ஹிட்டி என்பதாக இருக்கும்) சான்று கொடுத்துள்ளார்.

    இஸ்லாம் என்றைக்கும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம். அதன் காரணமாகத்தான் அதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் “நீங்கள் ஏனைய மனிதர்களுடன் (மு ஸ்லிமல்லாதவர்களையும் சேர்த்துத்தான் நந்தா…) சகோதரத்துவத்தைப் பேணிக் கொள்ளுங்கள் (அத்தியாயம்-23 வசனம்-52) என்று குறிப்பிட்டு விட்டு என்னைப் பயந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடுகின்றான். அதாவது உண்மையான முஸ்லிம் என்பவன் அடுத்தவர்களுடன் சகோதர உறவைப் பேணுபவனாக இருக்க வேண்டும். அதில் அவன் வெளிக்கு நடிக்க முடியாது. உண்மையானவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளிடத்தில் பொய்யன் ஆவான். என்று ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளான்.

    அதன் காரணமாகத்தான் கறுப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் தொடக்கம் வெள்ளையர்கள் வரை தோளோடு தோள் உரசி ஹஜ் செய்கின்றார்கள். ஒன்றாகத் தொழுகின்றார்கள்.(இறைவனை வணங்குகின்றார்கள்). ஆறு பேர் ஒன்றாக உட்கார்ந்து ஸஹானில் சாப்பிடுகின்றார்கள்

    மற்றது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவிமார்களின் எண்ணிக்கை.

    அந்தக் காலத்தில் தங்கள் தலைவர்கள் தமக்குள்ளிருந்து ஒரு பெண்ணை மனம்முடிப்பதை பெரும் கெளரவமாக கருதும் வழக்கம் இருந்தது. அன்றைய அரேபியா பல கோத்திரங்களாக பிரிந்து காணப்பட்டது. அனைத்தையும் ஒற்றுமைப்படுத்தவும் அவ்வாறான பலதார திருமணம் அன்றைக்கு பயன்பட்டது. அதற்கு மேலதிகமாக விதவை மறுமணம் அடிமைப் பெண்களை உரிமை விட்டு திருமணம் மூலம் சமூக அந்தஸ்தை அளித்தல் என்பனவும் அங்கே இருந்த நோக்கங்களிற் சிலவாகும். அதனை அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும்.

    ஏன்… அண்மைக்கால மன்னர் ஆட்சிகளின் போது கூட அயல் தேசங்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள அந்த தேசங்களின் இளவரசிகளை மன்னர்கள் மணக்கும் சம்பிரதாயம் இருந்ததே. அவர்கள் ஏற்கெனவே திருமணமாகி இருக்கும் நிலையில் தான் பெரும்பாலும் அப்படியான திருமணங்கள நடந்திருந்தன. அவையெல்லாம் ராஜதந்திர நகர்வுகள். மக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான அடித்தளங்கள். அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை நாம் அவற்றை குறை கூற முடியாது.

    நீங்கள் கேட்ட அனைத்துக்கும் போதுமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சகோதரர் நிஸ்தார், நானும் சகோதரர் அலாவுதீனும் எங்களால் முடிந்த மட்டில் முயற்சி செய்து விளக்கமளித்துள்ளோம்.

    இதற்கு மேலும் நீங்கள் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக இருந்தால் ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். அங்கே சொன்னார்கள் இங்கே சொன்னார்கள் என வேண்டாம்.

    இதைத்தான் பெளத்த மதத்தில் காலாம சூத்திரய என்றொரு போதனை மூலம் புத்தபெருமான் தெளிவாக போதித்துள்ளார். அடுத்தவரைப் பற்றி குறை கூற முன் அதுபற்றிய அனைத்து விடயங்களையும் முதலில் அலசி ஆராய வேண்டும். நன்றாகத் தெளிந்த பின்பே அது பற்றி கதைக்க வேண்டும்.

    வெறுமனே வதந்திகளைப் பரப்புவதால் உங்களுடைய நேரம் மட்டுமல்ல.. எங்கள் பொன்னான நேரமும் தான் வீணடிக்கப்படுகின்றது.

    சகோதரர் நிஸ்தார் அவர்களே.. என்னை விளித்திருந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் ஆக்கங்கள் படித்திருக்கின்றேன். உங்களைப் பற்றி அறிந்துள்ளேன். உங்கள் அறிமுகம் எனக்குக் கிடைப்பின் பெரும் சந்தோசமாக இருக்கும். வயதில் நான் உங்களை விட மிகவும் இளையவன் தான்.

    நன்றி அனைவருக்கும்….

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    பி.சி அவர்கட்கு, உங்கள் குறிப்பில் உள்ளவாறு “பாக்கி” என்று ஒருமதம் இருக்கிறதா என்று எனக்கு இதுவரை தெரியாது, ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தொன்மையான மொழி இலங்கையில் இருக்கிறது !!

    இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் காணக்கிடைக்கும் மிகப்பழைமை வாய்ந்த தகவல்களில், இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் இனத்தவர் அரபையே எழுதியும் பேசியும் வந்தார்கள் என்பது பதிவாகியிருக்கிறது. காலப்போக்கில் பிராந்திய வர்த்தகக் கலாச்சாரங்களின் பின்னான தலைமுறையினர் “அர்வி” எனும் மொழியை எழுதியும்,பேசியும் வந்தார்கள். 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீயரினால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தொன்மையான மொழி “அர்வி”. அதன் பின்னான தலைமுறையினர் தாம் வாழும் பிராந்தியங்களின் மொழியான சிங்களத்தை அர்வி கலந்தும், வட – கிழக்கு இலங்கையில் காணப்பட்ட பிராந்தியத் தமிழினை அர்வி கலந்தும் பேசி வந்தார்கள்,எழுத்தளவில் பிராந்திய மொழிகளையே உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

    தற்கால இலங்கை முஸ்லிம்களும் இதைத்தான் செய்கிறார்கள், தமது பிராந்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டும், கற்கும் மொழியாகக் கொண்டும் வாழ்ந்தாலும், இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தான் “பேசும்” 10 வார்த்தையில் ஆகக்குறைந்தது இரண்டு முறையாவது அர்விச் சொற்களை இன்னும் உபயோகித்துக்கொண்டிருக்கிறான் !

    என்னதான் பக்கத்து வீட்டில் இருந்தாலும் கூட, யாழ்ப்பாணமோ வேறு இடமோ இன்னாரை முஸ்லிம் என்று உங்களால் அவரது பேச்சை வைத்து அடையாளங் கண்டுகொள்ள முடிவதற்கான காரணம் இன்னும் அர்வி மொழியின் Accent தாக்கம் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இருப்பதுதான்.

    கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் எங்கள் இனம் எதைச் சந்தித்ததோ அதைத்தான் இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் இந்துக்களும், கிறித்தவர்களும் தற்காலத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நாளடைவில் சகோதரர் அஷ்ரப் அலி சுட்டிக்காட்டியுள்ளபடி புலம் பெயர்ந்து தமிழை மறந்து கொண்டிருக்கும் இலங்கையில் தமிழ் மொழியை பேசிய இந்துக்களும், கிறித்தவர்களுக்கும் தாம் வாழும் நாட்டின் மொழியில் தமிழைக் கலந்து பேசுவார்களே தவிர தமிழ் அவர்களுக்குத் தாய்மொழியாக இருக்காது.

    இலங்கையில் சராசரி நிலையை விட சற்று உயர்வான வாழ்க்கை வாழ வேண்டும் எனின் சிங்கள மொழியே அவசியம் என்று காணப்படும் தற்போதைய சூழ்நிலை மேலும் விருத்தியடைந்து சராசரி வாழ்க்கையையும் தொடும் நிலை வரும் போது, அங்கும் கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முதல் எங்கள் முன்னோர் விரும்பாமலே தொலைத்த “மொழி” அடையாளம் போன்று இலங்கையிலும் தமிழ் மொழியின் உரிமை குறித்த அடையாளங்கள் மருகிப்போகும். அந்த நேரத்தில் தற்போது ஆறு நூற்றாண்டுகளின் பின்னர் நாங்கள் இருக்கும் நிலை என்ன என்பது எதிர்காலத்தில் தமிழைத் தொலைத்து விட்டுத் தேடும் சந்ததியினரால் உணரப்படும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //நந்தா.. 2009ம் ஆண்டிலேயே வங்காளதேசத்தின் சனத்தொகை ஒருகோடியே ஐம்பத்தியாறு இலட்சம் தான். அப்படியிருக்க 1970ம் ஆண்டுகளில் எப்படி ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம்..?

    இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பஞ்சாபி படையினரால் கற்பழிக்கப்பட்டதாக வங்காளதேச அரசு கூட குற்றம் சாட்டவில்லை. ஏன் வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்த இந்தியா கூட அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அப்படியிருக்க நந்தாவுக்கு மட்டும் எப்படி அத்தகவல் கிடைத்தது..? .//

    இதுதான் தமாஷ். இந்த முஸ்லிம் நினைப்பது என்னவென்றால் தன்னைத் தவிர மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். குரானின் போதனையே “காபிர்கள்” முட்டாள்கள் என்பதுதான். வங்காள தேசத்தின் சனத்தொகை பற்றியே அறியாமல் கதை விடும் இவர் எந்த லோகத்தில் வசிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வது நல்லது.

    வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவின் சனத்தொகையே ஒரு கோடிக்கும் அதிகம். 2002 இல் அந்த நாட்டின் சனத்தொகை 133,376,684. அதாவது 13 கோடிக்கும் அதிகம்.

    சில வேளைகளில் காபிர்கள் பற்றி அரேபிய முகம்மது கூறிய வார்த்தைகளை தீவிரமாக நம்பும் பொளுது “உண்மைகள்” என்பது புரிவதில்லை! என்ன இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் “ஆதர்ச” பூமியான பாகிஸ்தானை குற்றம் சொல்ல முடியுமா?

    காபிர்களை “ஏமாற்றலாம்” என்பதுவும் இஸ்லாத்தில் முகம்மது உபதேசித்துள்ள விடயம். அலாவுதீன் ஒரு உதாரணம் மட்டுமே!

    Reply
  • நந்தா
    நந்தா

    வங்காள தேசத்தின் பிறப்புக்கு மொழிதான் காரணம் என்ற உண்மையை ஜீரணிக்க கஷ்டப்படும் இந்த முஸ்லிம்கள் இப்பொழுது “தாங்கள்” தமிழே பேசவில்லை என்று கதையளக்கிறார்கள்.

    போர்த்துக்கீசர்கள் அராபியர்களின் இந்து சமுத்திர ஆதிக்கத்தைத் தகர்த்தார்களே ஒழிய “இவர்களின்” மொழியை இல்லாமல் பண்ணினார்கள் என்பது சுத்தப் பொய்!

    அப்படி மொழி வாரியாக அவர்கள் சிந்தனை செய்திருந்தால் இந்த முஸ்லிம்கள் இன்று போர்த்துக்கீச பாஷையைப் பேசியிருப்பார்கள்.

    கேரளாவிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் வந்த இலங்கை முஸ்லிம்கள் இன்று தங்களுக்கும் அரேபியாவுக்கும் மட்டும்தான் தொடர்பு என்று கதை விடுவது அவர்களின் புரட்டுக்கு ஒரு உதாரணம்!

    இவர்களின் உம்மாவுக்கு சிங்களத்திலோ, அரபியிலோ பேசினால் புரியாது. தமிழில் பேசினால் புரியும். ஏனென்றால் “தாய் மொழி” தமிழ்.

    மொழிப் பிரச்சனையில் சிக்கியுள்ள இலங்கயில் இவர்கள் தமிழுடன் அடையாளம் காட்ட மறுப்பது வெறும் சந்தர்ப்ப வாதம் மட்டும்தான்!

    ஒரு சில அரபு வார்த்தைகளை பாவித்துக் கொண்டு அரபு என்ற அடையாளத்துள் புகுந்து மறைத்துக் கொள்ளலாம் என்பது தப்புக் கணக்கு. அந்த அரபு வார்த்தைகளின் அர்த்தங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் புரியும்!

    இலங்கையர்களில் பலர் ஆங்கில வார்த்தைகளைப் பாவிக்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்கள் ஆங்கிலேயர்களின் வாரிசுகள் என்பதல்ல!

    Reply
  • ashroffali
    ashroffali

    நந்தா தவறொன்று நிகழ்ந்துள்ளது. பங்களாதேஷ் சனத்தொகை பற்றிய என் தகவல் பிழையானது தான். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். தற்போதைக்கு அதன் சனத்தொகை பதினைந்து கோடியே அறுபது இலட்சத்திற்கும் மேல் என்பதுதான் உண்மையான புள்ளிவிபரம். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

    //குரானின் போதனையே “காபிர்கள்” முட்டாள்கள் என்பதுதான்//

    குர்ஆனில் எந்த இடத்தில் இருக்கின்றது…? கூறுவீர்களா?

    சீனா தேசம் சென்றாயினும் சீர்கல்வியைத் தேடு என்பது இஸ்லாத்தின் கல்விக் கொள்கை. அன்றைய காலகட்டத்தில் சீனாவில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது. அப்படியிருக்க உங்கள் பாஷையில் “காபிர்கள்” இருந்த சீனாவுக்குப் போயேனும் படிக்கச் சொன்னது எதற்காக? நீங்கள் கூறுவது போன்று அங்கிருப்பவர்கள் முட்டாள்கள் என்பதனாலா?

    //காபிர்களை “ஏமாற்றலாம்” என்பதுவும் இஸ்லாத்தில் முகம்மது உபதேசித்துள்ள விடயம். //

    எந்த இடத்தில் அதற்கான ஆதாரம் இருக்கின்றது என்று கூறுவீர்களா?

    இப்படியெல்லாம் வெறுமனே வாய் கூசாமல் பொய் பேச உங்களுக்கு கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லையா நந்தா? தயவு செய்து வீண் அபாண்டம் வேண்டாம். ஆதாரங்களை முன் வையுங்கள்.

    இலங்கை முஸ்லிம்கள் பாக்கிஸ்தானை ஒரு போதும் ஆதர்சமாகக் கொள்வதில்லை என்று எத்தனையோ தடவைகள் கூறியாகிற்று. அதற்குப் பின்பும் அதை நீங்கள் கூறுவது ஏன்தானோ தெரியாது.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    போர்த்துக்கீயர் அர்வி மொழியை அழித்தது பொய் என்றால், அர்வி என்ற ஒரு மொழி இருந்ததும் பொய், அந்த மொழியை திராவிட வர்த்தகக் கலவையில் இலங்கைக்குள் கொண்டு வந்த தென்னிந்தியாவின் முஸ்லிம்களின் வர்த்தகம் பொய், அந்த வர்த்தகம் பொய் என்றால் இலங்கை முஸ்லிம்களுக்கும் தென்னிந்திய கீழக்கரைக்கும் உள்ள தொடர்பும் பொய்யாகி, முஸ்லிம்கள் நேரடியாக அராபியாவிலிருந்து வந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் குடியேறியவர்கள் என்று நீங்கள் கூறுவதாகிவிடுமே, அதை ஒத்துக்கொள்ளப் போகிறீர்களா? அதாவது இலங்கை முஸ்லிம்களுக்கு அரேபியாவும் அரபும் தான் எல்லாம் என்று நீங்களே ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? அப்படி ஏற்றுக்கொள்வதற்குத் தானா இந்தப் பாடு?

    Reply
  • ashroffali
    ashroffali

    நந்தா ….

    தயவு செய்து வீண் வாதம் செய்வதை நிறுத்துங்கள். இது பண்பானவர்களுக்கு அழகல்ல. நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்க நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் முன் வைத்தாகிற்று. அதன் பின்னும் நாங்கள் கேட்கும் ஆதாரங்களை நீங்கள் முன் வைக்காது நழுவிச் சென்று வேறு கோணத்திலிருந்து சேறடிக்க முற்படுவது உங்கள் மீதான மதிப்பைக் குறைத்து விடும்.

    வெறும் வாதங்கள் என்பதை விட ஆதாரங்கள் தான் உண்மையை நிரூபிக்கும் சாட்சியங்களாகும். அதனை முன் வையுங்கள். அல்லது உங்கள் கருத்துக்களை வாபஸ் பெறுங்கள். தயவு செய்து வீண் வாதம் வேண்டாம்.

    Reply
  • saleem
    saleem

    மட்டையடிக்கு சகாப்தின் நானா கொடுத்த விளக்கம் இது.

    காதிக் கோட்டுக்கு, நந்தா சொல்வதுபோல், வெட்டித்தள்ளும், சுட்டுப்பொசுக்கும் எந்த அதிகாரமும் சிறிலங்காவில் கிடையாது. பள்ளி வாசலில் மட்டையடி கொடுத்தார்களே என்கின்றார் நந்தா. ஆம் சில கிராமப்புற பள்ளிவாசலில் மட்டுமல்ல நகர்ப்புற பள்ளிவாசல்களிலும் இந்த மட்டையடி சிறிலங்காவில் நடக்கின்றது. நடந்தது. இதை நாம் எமது கண்ணால் கண்டிருக்கின்றோம். சகோதரர் நந்தா இப்போது சந்தோஷமா.
    எப்படி, மட்டையடி கொடுக்கின்றார்கள். ஒருவரின் மனைவி, கணவருக்கு தெரியாமல், அல்லது திருமணமாகாத ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருட்டுத்தனமாக, உடலுறவு கொண்டால், இது வெளியே தெரிய வந்தால், அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து, விசாரித்துவிட்டு, ஊர் பெரியார்களின் மத்தியில் புத்தி சொல்லிவிட்டு, தென்னை மட்டையொன்றை எடுத்து, கையை நீட்டச்சொல்லி, ஒண்ணாம் வகுப்பு பிள்ளையை பயம் காட்டுவதற்காக ரீச்சர் அடிப்பது போல் நாற்பது அல்லது அறுபது அடி அடிப்பார்கள். ஆம் மட்டைக்கும் நோகாமல், அடிவாங்கும் கைக்கும் நோகாமல் அடிப்பார்கள். அடித்துவிட்டு அப்பாடா இஸ்லாமிய சட்டத்தை நாம் நிறைவேற்றி விட்டோம் என திருப்தி பட்டுக் கொள்வார்கள்….

    Reply
  • K. மாறன்
    K. மாறன்

    what i understand from the explanations about the punishment from mr. அலாவுதீன் and mr. saleem is, it’s a type of tradition that being followed and not to hurt anyone. I think mr. nanda should stop disrespecting other religions now, it’s enough.

    Reply
  • BC
    BC

    நந்தா, உங்கள் விளக்கமான பதிலுக்குக்கு நன்றி.
    அஷ்ரொப்அலி, இனம் மொழி என்றாலே உங்களுக்கு குதர்க்கமாக தெரிகிறது.வங்காளதேஷ்காரர் தனது இனத்தால் மொழியால் தன்னை அடையாளபடுத்துகிறார். அதே மாதிரி தான் மொரொக்கொகாரரும் தான் மொரொக்கொவை சேர்ந்த அரபு இனத்தவன், தனது மொழி அரபு என்கிறார்.எல்லோரும் அப்படி தான்.ஆனால் இனம்,மொழி பற்றி கேட்டால் உலகத்திலேயே இலங்கையில் உள்ள நீங்களே முஸ்லிம் என்ற மதத்தால் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்.
    //இவ்வளவு ஏன்… இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பலர் தம்மை தமிழர்களாக இனங்காட்டிக் கொள்கின்ற போதும் அவர்களின் இரண்டாம் தலைமுறையில் பலருக்குத் தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். //
    உண்மைகளை ஏற்று கொள்வதற்க்கு எந்த தயக்கமும் இல்லை.நீங்கள் கவனிக்க வேண்டியது இரண்டாம் தலைமுறை தமிழர் தாம் வாழும் நாட்டில், உதாரணத்துக்கு நோர்வேயில் நோர்வேகாரர்ராகவும் அவர் பேசும் மொழி நோர்வேகியனாகவும் இருக்கும்.அந்த உண்மையை தயக்கம் இல்லாமல் அவரும் தெரிவிப்பார். நெருங்கிய நண்பர்களுக்கே அவர் இலங்கைவம்சாவளி நோர்வேகாரர் என்பது தெரிந்து இருக்கும்.
    //நீங்களும் நந்தாவும் கருணாவும் சொல்வது போல் மதத்தை வீட்டிலேயே வைத்துக்கொள்ள நீங்கள்தான் முதலில் பழக வேண்டும். //
    நந்தா,கருவின் கருத்துக்கள் சிறந்தவை.
    இந்து மதத்தில் இப்படி தான் ஆடை அணிய வேண்டும் என்று உள்ளது,ஆகவே அது தான் சிறந்தது என்று பிரசாரம் செய்தேனா!

    //உங்கள் குறிப்பில் உள்ளவாறு பாக்கி என்று ஒருமதம் இருக்கிறதா என்று எனக்கு இதுவரை தெரியாது//
    “எனக்கு பாக்கி மதத்தால் முஸ்லிம் நண்பர் இருக்கிறார்”.
    இப்படி தான் குறிப்பிட்டேன். பாகிஸ்தான்காரர்களுக்கு தங்களை இலங்கையர் பாக்கி என்று சொல்வது தெரியும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    மட்டையடி வாங்கிய பெண் ஆசிய மனித உரிமை அமைப்பிடம் புகார் செய்யும் அளவுக்கு மட்டையடி இருந்துள்ளது.

    மட்டையடியே நடக்கவில்லை என்று சாதிக்கும் நோக்கம் என்ன?

    தலிபான் குண்டு வைப்பது குரானின் அடிப்படையில் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்தியாவில் கோயம்புத்தூரில் கூட குண்டு வைத்துள்ளனர்.

    காபிர்களை என்ன செய்ய வேண்டும் என்று முகம்மது கூறியுள்ளார் என்று சொல்லி உண்மையை நிலை நாட்ட முடியாமல் இவர்கள் தவிப்பது எதற்காக?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..அடித்துவிட்டு அப்பாடா இஸ்லாமிய சட்டத்தை நாம் நிறைவேற்றி விட்டோம் என திருப்தி பட்டுக் கொள்வார்கள்…..// sahabdeen nana

    ஆஹா…அல்லாவை இப்படியும் ஏமாற்ரலாமா? அல்லாவுக்கே அடுக்குமா இது? புனித யுத்தம் செய்யப்படவேண்டிய ஒரு செயல்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    திரு.மாறன் அவர்களே,
    நந்தா கிறிஸ்தவ பாதிரிகளைப்பற்றி எழுதியபோது எங்கே இருந்தீர்கள்? இவ்வளவு நாளும் இல்லாத கரிசனை இன்று வந்தது ஏன்?
    இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப்பட்ட சமயம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை. அதனை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு பணிப்பாளர் ”பழக்கதோஷத்தால்” கூட மறுக்க முடியாது. முழுப்பூசனிக்காயை சோற்றால் மறைப்பது ஸ்ரீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கைவந்த கலை ஆனால் அவர்களே வெட்கப்படும் அளவுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஊடகதொடர்பு பிரிவு உள்ளது. அதன் பணிப்பாளர் என்றால் சொல்லவும் வேண்டுமா?

    Reply
  • ashroffali
    ashroffali

    சாந்தன்… இது போன்ற தேவையற்ற விவாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்-முஸ்லிம் உறவுகளைக் கட்டியெழுப்புவது எப்படி என்பதுதான் தலைப்பு. தமிழ்-முஸ்லிம் உறவுகளை மீண்டும் சீரழிப்பதல்ல.

    நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் வாதிடுவோம். அதை விட்டு நமக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டாம். ப்ளீஸ்..

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    BC!
    அமெரிக்கர்கள் தம் அடிமையாக வைத்திருந்தவர்களை “நீக்குரோ” என்பார்கள்.அதே போல் பிரிட்டிஷ்காரர் தம் எடுபிடிகளாக கொண்டு போன இந்திய முஸ்லீம்கலை “பாக்கி” என்றழைப்பார்கள்.”நீக்குரோ”,”பாக்கி” என்பன இனத்துவேஷ பாவிப்புகள்

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    முதலில் நந்தாவுக்கு, நீங்கள் எப்போது வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒரு விடயத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்திற்குச் செல்வீர்கள்? 09ம் திகதிய உங்கள் வாதமென்னவோ இலங்கை முஸ்லிம்களுக்கு தொன்மையான மொழி இருக்கவில்லை என்பதாகும். அந்த மொழியை நீங்கள் மறுப்பின் உப கண்டத்தின் திராவிட கலாச்சாரத்துடன் கலந்த அரபிய வர்த்தகமும்,அதன் விளைவாக இலங்கையில் பரந்த நீங்கள் கூறிய திராவிடக் குழுமங்களின் மூலமான இஸ்லாமும் இலங்கைக்கு வரவே இல்லையென்றாகிவிடும். இப்போது அதற்கு பதில் சொல்ல முடியாத காரணத்தினால் தப்பியோடி, திரும்பவும் 08ம் திகதி உங்கள் முன் நிலையில் வைக்கப்பட்ட மறுப்பு ஆதாரங்களைக் கண்டு திகிலடைந்து ஓடி ஒளித்து விட்டு, இப்போது அதை மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு “நினைவாற்றல்” மிக்கவராக மீண்டெழுந்து வந்து இன்னொரு “புதுக் கதை” அதுவும், ஆசிய மனித உரிமைக் கழகத்திடன் அடிபட்ட பெண் சென்று முறையிட்டாராம் என்று.

    யாரை மடையராக்குவதற்கு இத்தனை உத்தேசம்? இதனால் நீங்கள் என்னதான் அடையப்போகிறீர்கள்? இது வரை காலமும் ஆதாரமாக நீங்கள் முன் வைத்திருந்த ஆசிய மனித உரிமைக்கழகத்தின் ஒலிப்பதிவில் இன்றும் இருப்பது “ஆணின்” குரல் தானே? எப்போது இதற்குள் அந்தப் பெண் வந்து முறையிட்டாள்? அந்த ஆண் வைக்கும் முறைப்பாடு என்ன என்பதை நன்கு கவனிப்போர் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்வார்கள், அதாவது அவர் முன் வைக்கும் தன்னுடைய முறைப்பாடானது, தானே மனமுவந்து ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னை மதிக்காமல் அவமானப்படுத்தியதாக என்பது தானே தவிர தன் மனையாளுக்கு இவ்வாறான கடமை நிறைவேற்றப்பட்டதாக அல்ல. சந்தேகமிருப்பவர்கள் மீண்டும் அந்த ஒலிப்பதிவை கேட்டுப் பலன் பெற, இதோ அதற்கான இணைப்பு.
    -http://material.ahrchk.net/audio/AHRC-AUD-002-2010-SriLanka.mp3

    அவரது இந்த வார்த்தைகளை மேலோட்டமாக முதற் தடவை கேட்டபோது, உங்களை விட எனக்குத்தான் கோபம் அதிகம் வந்திருக்க வேண்டும், ஒரு அப்பாவி மனிதனின் இரக்க மனதைக் கூட மதிக்கத்தெரியாத அரக்கர்களா? என்று என்னைத் தூண்டியதே இந்த வார்த்தைகள் தான். ஆனால் விசாரணையில் முதலில் சாட்சியமளித்த பெண்ணின் தகப்பனார் தந்த தகவலில் இவரது இந்த முறைப்பாடனது உண்மைக்குப் புறம்பானது எனும் சந்தேகத்தையும், பின்னர் செய்யப்பட்ட முழு விசாரணையில் அது நிரூபனமாகவும் மாறிய அதே வெளை, இவரைப் பின்னால் இருந்து தூண்டியதும், தூண்டுவதும் ஏற்கனவே எனது குறிப்பில் கூறப்பட்டுள்ள நபர் என்பதும், இந்த ஊரைச் சுற்றிய அயல் ஊர்களில் இருக்கும் சிங்கள மக்களின் சாட்சியங்களும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

    மற்றும்படி, இந்த விடயத்தில் ஏற்கனவே நான் உறுதியாக முன் வைத்துள்ள கேள்விகளுக்கு முடிந்தால் இவரையே தொடர்பு கொண்டு உங்கள் விளக்கத்தை முன் வையுங்கள், அதன் பின்பு இந்த விடயத்தைப் பற்றி வருடக்கணக்கில் மீண்டும் நீங்கள் கேள்வி கேட்கலாம், நாங்கள் பதிலளிக்கலாம். அது வரைக்கும் இந்த விடயத்தை உங்களவிட்டு அகற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

    தலிபான் குண்டு வைப்பது தலிபானின் கொள்கையில், அதற்கு அவர்கள் குர் ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்தால் அவர்களிடமே போய் இதை ஏன் செய்தீர்கள் என்று கேளுங்கள். விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட பின்னர் மாலை தீவைக் கைப்பற்ற எந்த மதத்தின் அடிப்படையில் சென்றீர்கள் என்று கூற முடியுமா? அங்கே ஆயுதத்தோடு சென்றவர்களை நாங்கள் உங்களோடு பேசும் போது மட்டுமாவது “தமிழர்கள்” என்று கூற வேண்டுமா? அல்லது இல்லை ஒரு “ஆயுதக் குழு” என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா எனும் நியாயத்தையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்.

    இலங்கையில் விடுதலைப் போர் புரிவதாகக் கூறிக்கொண்டு இந்தியாவில் போய் “பெண்” பிரச்சினைக்கெல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் திரிந்தவர்களை நாங்கள் “தமிழர்கள்” என்று சொல்ல வேண்டுமா அல்லது இன்னும் ஆயுதக்குழுக்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா என்றும் நீங்களே சொல்லுங்களேன்.

    மத்தியில் அமர்ந்து கொண்டு தனது ஆதிக்கத்துக்காக இந்தியாவும், தமது ஆதிக்கத்துக்காக பாகிஸ்தானும் செய்யும் உப கண்ட அரசியலை அரசியலாக விளங்கிக்கொள்ள முடியாத உங்கள் அறிவையும் அனுபவத்தையும் குறித்து எல்லோரும் நன்கு விளங்கிக்கொள்ளும்படி, உப கண்டத்தின் பனிப்போரில் சீன வல்லரசுக்கும், ரஷ்ய வல்லரசுக்கும் என்ன தேவையிருக்கிறது என்பதையும் சேர்த்து ஆராய்ந்து விட்டு இங்கே வந்து உப கண்ட அரசியலைப் பற்றிக் கருத்தெழுதுங்கள். அப்பொழுது உங்களுக்கு அதற்கான விடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

    முன் வைக்கப்பட்ட ஒரு கேள்விக்கேனும் பதில் சொல்ல முடியாத நீங்கள் கேள்வி கேட்பதன் மூலம் உங்களை ஏதோ புனிதனாக சித்தரிக்க சலிக்காமல் முயன்று கொண்டிருக்கிறீர்கள்,அதற்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் இனிப்பாக இஸ்லாமும், முஸ்லிம்களும் இருக்கிறார்கள். முடிந்தால் எடுத்த விடயத்தில் நின்று வாதித்து அதை முடிவு செய்யுங்கள் சகோதரரே, இந்தப் பூச்சாண்டிகளால் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?

    பி.சி அவர்கட்கு, இலங்கை முஸ்லிம்கள் தமது மொழி அடையாளத்தை இழந்து ஐந்து நூற்றாண்டுகளாகி விட்டது, எனவே எங்கள் இனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு எமது “நம்பிக்கை” அதாவது எங்கள் “இஸ்லாமிய” மார்க்க நம்பிக்கை மாத்திரம் தான் இப்போது மிஞ்சியிருக்கிறது. தற்கால சூழ்நிலை தொடருமானால் இந்த நிலையை எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் பேசி வாழ்ந்த இந்துக்களின் சந்ததியினரும் அடைவது திண்ணம். அப்போது அதன் வலி எல்லோருக்கும் புரியும். அந்த நேரத்தில் ஒரு வேளை “இந்து மதம்” என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியா நிலை வரும். பல மொழிகள் பேசினாலும், மதத்தாலும், பழக்க வழக்கங்களாலும் மட்டுமே “இந்துக்களாக” அல்லது “தமிழர்களாக” அவர்கள் ஒன்று படுவார்கள். அந்த நிலைதான் இப்போது இலங்கை முஸ்லிம்களின் நிலை.

    சாந்தன் அவர்கட்கு, உங்கள் அக்கறையின் “வேகம்” நன்றாகப் புரிகிறது. எனினும் துரதிஷ்டவசமாக அல்லாஹ்வை (கடவுளை) ஏமாற்றுவது அங்கே நோக்கமல்ல, மக்களின் நம்பிக்கை மீதான அணுகு முறை அவ்வளவே. அதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் “திறந்த” மனது இருக்க வேண்டும்.

    Reply
  • thurai
    thurai

    //அதை விட்டு நமக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டாம். ப்ளீஸ்..//

    சிங்களவ்ர்களையும், பெளவுத்த பிக்குகளையும், சிங்கள அரசையும் தமிழர்களிற்குப் பகைமையாக்குவது. தமிழநாட்டில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ரவாறு தி.மு.க் வை அல்லது அ.தி.மு.கவை பகைமையாக்குவது. இலங்கையில் முஸ்லிம்களையும், மற்றும் உண்மைகளைக் கூறும் தமிழர்களையும் துரோகிகளாக பட்டம் சூட்டுதல் இவையாவும் தமிழ்தேசியவாதிகள், புலிகள், புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கைத் தமிழர்களிற்காக புலம்பெயர்
    நாடுகளில் அரசியல் பேசுவோரிற்கு கைவந்த கலைகளில் ஒன்று. இதனை கை விட்டால் வாழ்வே இல்லை.– துரை

    Reply
  • ashroffali
    ashroffali

    //அஷ்ரொப்அலிஇ இனம் மொழி என்றாலே உங்களுக்கு குதர்க்கமாக தெரிகிறது.வங்காளதேஷ்காரர் தனது இனத்தால் மொழியால் தன்னை அடையாளபடுத்துகிறார். அதே மாதிரி தான் மொரொக்கொகாரரும் தான் மொரொக்கொவை சேர்ந்த அரபு இனத்தவன் தனது மொழி அரபு என்கிறார்.எல்லோரும் அப்படி தான்.ஆனால் இனம்இமொழி பற்றி கேட்டால் உலகத்திலேயே இலங்கையில் உள்ள நீங்களே முஸ்லிம் என்ற மதத்தால் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்//

    நாங்களும் எங்களை தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதனை நாங்கள் பல தடவைகள் வலியுறுத்தியாகிற்று. நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை.

    நந்தா….
    ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கான ஆதாரங்கள் வேண்டும். யதார்த்தம் எதுவென்பதை விளங்கிக் கொண்ட பின் தான் கருத்துப் பரிமாற வர வேண்டும். குற்றச்சாட்டுகளை அள்ளி வைக்கும் நீங்கள் அதற்கான ஆதாரங்களை முன் வைக்கத் தவறுவது ஏன்?

    நீங்கள் கூறும் விடயங்கள் குர்ஆன் அல்லது ஹதீஸில் எந்த இடத்தில் இருக்கின்றது? அதனை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களா? அல்லது நான் நினைப்பது போன்று கிளிப்பிள்ளை பாடம் ஒப்புவிப்பவரா நீங்கள்?

    நான் எப்போதும் என் வாசிப்பிற்குட்பட்டதையே தர்க்கங்களின் போது முன் வைப்பேன். பிழையென சுட்டிக்காட்டுமிடத்து திருத்திக் கொள்வேன். அதற்காக தவறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். அடுத்தவர் மதத்தை தரக்குறைவாக விமர்சிக்கவும் மாட்டேன்.

    நந்தா….. தயவு செய்து ஆதாரங்களுடன் வாதம் புரியுங்கள். அதை விட்டு ஒரு தவறை ஏற்றுக் கொள்ளும் தயக்கத்திற்காக ஆயிரம் தவறுகளை விடவேண்டாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கை, இந்தியாவில் இந்த முஸ்லிம்கள் யாரை “காபிர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்? காபிர்களை கட்டியணைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறதா அல்லது கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறதா?

    மட்டையடி முதலில். பின்னர் கல்லால் அடித்துக் கொலை. இது இஸ்லாமிய முறை என்று “ஈரானில்” ஒரு பெண் கொல்லப்பட இருக்கிறார்! காரணம்: இன்னொருத்தருடன் உறவு கொண்டது.

    கொக்கரல்ல மசூதியில் அடி வாங்கிய பெண் கல்லால் அடித்துக் கொல்லப்படுவாளா அல்லது காரால் மோதிக் கொல்லப்படுவாளா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    தமிழ் இயக்கங்களில் எது “கடவுள்” அல்லது “அல்லா” என்று சொல்லிக் கொண்டு பயங்கர வாதத்தில் ஈடுபட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தலிபான் “அல்லாவின்” ஆணைகளை நிறைவேற்றவே குண்டுகள் வைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
    தலிபான்களுக்கு வேறு “அல்லா” இருக்கிராரோ தெரியவில்லை!

    “ஜிகாத்” என்பது முஸ்லிம் அல்லாதவர்களை அழிப்பது. சிலவேளைகளில் இங்கு எழுதும் முஸ்லிம்கள் அது கதிர்காமத்துக்கு காவடி எடுப்பது போல ஒரு விஷயம் என்று தஙளுடைய அல்லாவுக்கே கடுக்காய் கொடுப்பார்கள்!

    Reply
  • ashroffali
    ashroffali

    நந்தா…

    உங்களுடன் வாதிட்டு எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் நீங்கள் வெறும் இனத்துவேசத்தை மட்டும் தான் கக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். எந்தவித அடிப்படையும் ஆதாரமும் உங்கள் வாதங்களில் இல்லை

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    இந்த நாலைந்து கதைகள்தவிர உங்களிடம் வேறு ஒன்றும் இல்லை, இதை வைத்தே வருடக்கணக்கில் தேசம்நெட்டில் முஸ்லிம் எதிர்ப்பாளராக இருக்கிறீர்கள் போல, ஆனாலும் ஒரு கேள்விக்கேனும் நேருக்கு நேராய் நின்று பதில் எழுத முடியாது.

    தலிபான் என்ன கூறினாலும் எங்களுக்கென்ன நந்தா,உங்கள் பிரச்சினையை அவர்களோடு போய் தீர்த்துக் கொள்ளுங்கள். பூர்வீகம் தொப்புள் கொடி என்று என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் மரபு ரீதியாக சிங்களவனுக்குத்தான் நீங்கள் உறவினர்கள் என்று உங்களை இந்தியா கைவிடவில்லையா? பக்கத்தில் இருக்கும் இந்தியா, அதுவும் தமிழின் தாயகமும் உங்களை கை விட்ட போது, எங்கேயோ இருக்கிற தாலிபானை நாங்கள் கணக்கில் எடுக்காமல் இருப்பது நியாயம் தானே?

    ஆகக்குறைந்தது, உங்கள் தமிழ் இயக்கங்களுக்கு கடவுளே இருக்கவில்லை என்று எடுத்துக்கொண்டாலும் கூட, நாத்திகனுக்கு நாத்திகன் எனும் ரீதியிலாவதி பக்கத்தில் வாழும் தமிழர்கள் அதுவும் மொழியால் அடையாளங் காணப்பட்ட இனத்தவர் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை தானே நந்தா? அப்படியிருக்க எங்களுக்கென்ன வீண் சொரிச்சல் தலிபானைப் பற்றி, அதை விடுங்கள். உங்கள் கதைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாய் இங்கே நிரூபிக்கப்பட்ட பழைய கதைகள், ஏதாவது புதிதாக இருந்தால் கொண்டு வாருங்கள்.

    Reply
  • BC
    BC

    //பிரிட்டிஷ்காரர் தம் எடுபிடிகளாக கொண்டு போன இந்திய முஸ்லீம்கலை பாக்கி என்றழைப்பார்கள். நீக்குரோ பாக்கி என்பன இனத்துவேஷ பாவிப்புகள்//
    விளங்காமுடி, இதுவும் வேறா! பாக்கி என்ற சொல்லை பாவித்ததில் எனக்கு எந்த துவேஷ நோக்கமும் கிடையாது. இதை எனக்கு அறிமுக படுத்தியதே ஒரு தமிழர் தான். பாக்கிஸ்தானுக்கு சுருக்கம் பாக்கி என்றே நினைத்தேன். எழுதுவதற்க்கும் இலகுவாக இருந்தது. எனக்கு தெரிந்த பாக்கிஸ்தான்காரர் பழக அருமையானவர். பாக்கி என்பது எப்படி துவேஷமான சொல்லாக முடியும் என்பதை விளங்கி கொள்ள முடிவில்லை. தெரியபடுத்தியதிற்க்கு நன்றி.

    //நாங்களும் எங்களை தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம் .//
    அஷ்ரொப்அலியிடம் இருந்து இப்படி வருவது சந்தோசமாக உள்ளது.

    //தற்கால சூழ்நிலை தொடருமானால் இந்த நிலையை எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் பேசி வாழ்ந்த இந்துக்களின் சந்ததியினரும் அடைவது திண்ணம். //
    அலாவுதீன், இந்தியா தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆங்கிலம் கலந்து பேசினால் தான் பெருமை, தமிழ் மொழியில் கல்வி கற்பது வெட்கம் என்ற நிலை இலங்கையிலும் தோன்றினால் மட்டுமே நீங்கள் கூறிய நிலை உருவாகலாம். தற்போதைய நிலையினால் பாதிப்பு இல்லை. மதத்தை சொல்ல வேண்டிய தேவையே வராது.வெளிநாட்டில் எல்லாம் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று தான் கேட்பார்கள். பழகிய பின்பு இனம் மொழி பற்றி கேட்பார்கள். நன்றாக பழகிய பின்பு (எல்லோரும் அல்ல) மதம் என்ன என்று கேட்பார்கள்.
    மதம் சொன்னது என்ற காரணத்திற்காக இந்த நவீன யுகத்திலும் மட்டையடியை தொடர்ந்து தக்கவைத்துள்ளீர்கள். ஆனால் மொழியை இழந்துவிட்டு வருத்தபடுகிறீர்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் “திறந்த” மனது இருக்க வேண்டும்…..//

    திறந்த மனதைப்பற்றி நீங்கள் சொல்லி நான் கேட்கவேண்டி இருக்கிறது. திறந்த மனதுக்கும் முஸ்லிம் சட்டங்களுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாத பொருத்தம் என்பது உலகம் அறிந்தது! ’திறந்த மனதுடன்’ அச்சட்டங்கள் தேவையில்லை (மட்டையடி என அல்லாவையே ஏமாற்றும் வேலை) என விட்டுவிட வேண்டியது தானே? ஏன் கெட்டியாகப் பிடித்திருக்கவேண்டும்?

    //…மக்களின் நம்பிக்கை மீதான அணுகு முறை அவ்வளவே…..//

    கடவுளையும் ஏமாற்றி தானும் ஏமாற்றி மற்றவனையும் ஏமாற்றல் (சட்டம், நீதிபதி, குற்றவாளி) ’மக்களின்’ நம்பிகை மீதான அணுகுமுறை என்றால் நான் என்ன செய்வது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சாந்தன்… இது போன்ற தேவையற்ற விவாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்-முஸ்லிம் உறவுகளைக் கட்டியெழுப்புவது எப்படி என்பதுதான் தலைப்பு. தமிழ்-முஸ்லிம் உறவுகளை மீண்டும் சீரழிப்பதல்ல….//ashroffali

    சரி..மிகவும் நல்லது!
    அதற்குமுன்னர் நீங்கள் பணிப்பாளராக இருந்தபோது தமிழ்-முஸ்லிம் உறவுகளை எவ்வாறு ‘கட்டி எழுப்பினீர்கள்’ எனச் சொல்ல முடியுமா? புலிகளை திட்டித்தீர்த்தல், காட்டிக்கொடுத்தல், வயோதிபர், சிறார் பெண்கள் கொலை கொள்ளை கற்பழிப்புகள் நடந்தபொது நீங்கள் பணீப்பாளராக இருந்து எப்போது அவற்றை ஏற்ருக்கொண்டு ஒரு அறிக்கையாதல் விட்டீர்கள். உங்கள் எல்லாம் வல்ல அல்லாவின் மீது ஆணையாக நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! ஸ்ரீலங்காவில் தமிழர்க்கு ஒரு நீதி சிங்களவர்க்கு ஒரு நீதி என்கின்ற நிலையை நீங்கள் வக்காலத்து வாங்கவில்லையா? அவ்வாறு வாங்காதவிடத்து அவற்றை வெளிக்கொணர கடவுளின் பெயரால் என்ன செய்தீர்கள்? கொழும்பில் தமிழர்கள் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் கொண்டிருக்கும்போது நீங்கள் என்ன வகையான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? உலகின் தலைசிறந்த மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியபோதெல்லாம் ஸ்ரீலங்கா ஊதுகுழல் அமைப்புகளின் பணிப்பாளர்கள் தமது ‘உண்மையான’ செய்திகளை உலகுக்கு உணர்த்திக்கொண்டு இருந்தனர் என்பதுதான் உண்மை.

    இன்று உங்களுக்கும் மகிந்தாவுக்கும் ஏதோ தகராறு வந்துவிட்டது போல் இருக்கிறது. இப்போது விழித்தெழுந்து இன உறவு பற்றிப்பேசுகிறீரகள். ஸ்ரீலங்கா அரசு மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்கிக்கொண்டிருந்த போது நீங்கள் மூன்றடுக்கு மாளிகையில் அலுமாரி நிரம்பி வழியும் எஸ்.எம்.ஏ பால்மாவில் உங்கள் குழந்தைகளை குளிபாட்டிக் கொண்டிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறான செயலை நான் செய்ய மாட்டேன். ஈழத்தமிழர் அவலத்தை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தவர்களை ‘வெள்ளைப் புலி’ ‘கொள்ளைப்புலி’ என அழைத்து மகிழ்ந்தது தான் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஊடகத்துறை ! அதன் பணிப்பாளர் நீங்கள்!

    /….நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் வாதிடுவோம். அதை விட்டு நமக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டாம். ப்ளீஸ்….//

    அதைச் செய்தது நானல்ல. யார் அவற்றைச் செய்தனர் என்பது நீங்கள் அறியாததுமல்ல. என்றுமில்லாத வகையில் கருத்துமுரண்களை தீவிரப்படுத்தியது யார்? எப்போது பார்த்தாலும் தனித்தரப்பு, தனித்துவ இன அடையாலம் என சந்தர்ப்பம் பார்த்து விளையாடியது யார்?
    அந்தோ பரிதாபம் தனித்தரப்பும் கோவிந்தா, தனித்துவ இனமும் கோவிந்தா? இனிமேல் நோர்வேக்கும் அரசதரப்பிலும் ஆள் தனித்தரப்பிலும் ஆள் என டபிள் கேம் விளையாட முடியாது!
    இப்போது தனித்தரப்பு தனித்துவம் எல்லாம் ஸ்ரீலங்காவின் அரசியல் அகராதியில் இருந்து தூக்கிஎறியப்பட்டு விட்டதனை தங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

    எனக்கும் சிங்கள நண்பர்களும் விரோதிகளும் உள்ளனர். அவர்களுடன் எனக்கு கருத்து முரண்பாடுகள் நிறையவே உணடு. அவர்களுக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் உண்டு. ஆனால் தமிழர் சிங்களவரின் இனமுரண்பாடுகளில் கலங்கிய குட்டையில் மீன்பிடித்தவர்கள், கொழுந்துவிட்டெரிந்த தீயில் குளிர்காய்ந்தவர்கள யார் என்பதில் சிங்களவர்கள் ‘தெளிவாகவே’ இருக்கிறார்கள் என அவர்களின் கருத்துகள் காட்டி நிற்கின்றன!
    ஸ்ரீலங்கா அரசு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது விளையாட்டை. கொஞ்சம் பொறுங்கள் எல்லோருக்கும் அல்வாவும் அவலும் உண்டு!

    Reply
  • நந்தா
    நந்தா

    காபிர்கள் என்பவர்கள் இலங்கயில் யார் என்பதற்குப் பதிலையே காணோம். ஜிகாத் என்பதற்கும் பதிலைக் காணவில்லை. பித்தலாட்டங்கள் என்பதும் அல்லாவின் கிருபையோ தெரியவில்லை. இலங்கை முஸ்லிம்கள்(பெரும்பாலும் படித்தவர்கள்) முஸ்லிம் அல்லாதவர்களை “நக்கலாகவும்”, கீழானவர்கள் என்றும் பேசிக் கொள்வது சர்வ சாதாரணம்.

    முஸ்லிம்களுக்கு இப்பொழுது இலங்கயில் வந்துள்ள பிரச்சனை என்னவென்றால் “தமிழர்கள்” அரசுடன் நெருங்கி வந்துள்ளதுதான். தமிழின் இருப்பிடங்கள் எல்லாவற்றிலும் இந்த முஸ்லிம்கள் கடந்த 30 வருடங்களாக இருந்து “தமிழர்” விரோதத்தையே சிங்களவர் மத்தியில் விதைத்துள்ளனர்.

    இப்பொழுது “காலம் மாறி விட்டது”. முஸ்லிம் பெருமையை நிலை நாட்ட இனி காபிர்களுக்கு எதிராக ஜிகாத் தொடங்கலாம்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நாங்களும் எங்களை தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்…./
    ஆனால் ஸ்ரீலங்காவின் ‘அதிகாரத்துக்கு’ நெருக்கமான முஸ்லிம்கள் அவ்வாறு சொல்வதனை விரும்புவதில்லை என்பது நீங்கள் அறியாததல்ல.

    //…அதனை நாங்கள் பல தடவைகள் வலியுறுத்தியாகிற்று. நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. …//

    எங்கே வலியுறுத்தினீர்கள் எனச் சொல்லலாமே? நீங்கள் உங்களுக்கு இருந்த அதிகாரம் பற்றிப் பல இடங்களில் சொல்லி இருக்கிறீர்கள். அப்பதவிகளில் இருந்தபோது எப்போதாவது சொல்லி இருக்கிறீர்களா? உங்கள் பணிப்பாளர் அதிகாரத்தை அதுவும் ஸ்ரீலங்காவின் அதி உயர்பதவியில் இருக்கும் ஒருவரின் செய்தித்தொடர்பு பணிப்பாளராக இருந்தநிலையை பயன்படுத்தி ஒரு சொல் ஆவது சொல்லி இருக்கிறீர்களா, உங்களைத் தமிழர் என அடையாளப்படுத்தவே விருப்பம் என்று? அல்லது ஸ்ரீலங்காவின் உயர் அமைச்சுகளில் வீற்றிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவராவது சொல்லி இருப்பாரா? மஹிந்தராஜபக்ச ஸ்ரீலங்காவில் சிறுபான்மை இனமே இல்லை என அண்மையில் திருவாய் மலர்ந்த போது தமிழர்கள் அக்கூற்றை எதிர்த்து கருத்தாடியபோது தமிழருக்கு இனவாதிகள் எனப்பட்டம் சூட்டி மகிழ்ந்தனர் பலர். அப்போதாவது இல்லை இல்லை மஹிந்தாவின் கூற்று தவறு என எந்த ஒரு முஸ்லிம் (உங்களைப்போன்று அதிகாரத்தில் இருப்பவர்) சொல்லி இருக்கிறாரா? சொல்லுங்கள் அஷ்ரஃப் அலி அவர்களே! நானும் நீங்கள் சொல்வதுபோல முஸ்லிம்கள் தமிழர்களாக அடையாளப்படுத்துவதனையே மனதார விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தம்மை ‘தனித்துவம்’ ‘தனித்தரப்பு’ என அழைப்பதை தடுக்க மாட்டேன். அவ்வாறு தம்மை அழைக்கும் உரிமையை அவர்கள் தனித்தரப்பாக தனித்துவமான போராட்டங்களின் மூலம் அடையாமைல் மற்றவர்களின் போராட்டத்தில் பெறமுயல்வது மேலும் அவநம்பிக்கையையே ஏற்படுத்தும்.

    //…..நந்தா…. ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கான ஆதாரங்கள் வேண்டும்……//
    இவர் எப்போதாவது வைத்திருக்கிறாரா? கனடாவில் பாதிரி ஏடுதொடக்கினார் எனப்போராடப் புறப்பட்டவர் இப்போது முஸ்லிம்களுடன் வந்து நிற்கிறார். இவரால் ஒரு சின்ன போராட்டத்தைக்கூட அக்கோவிலின் முன்னாலோ அன்றி அப்பாதிரியின் அலுவலகத்தின் முன்னாலோ நடத்த முடியவில்லை. ஆனாலும் அஷ்ரஃப் அலியின் குறிக்கோளும் நந்தாவின் குறிக்கோளும் ஸ்ரீலங்கா அரசின் குறிக்கோள்களும் ஒன்றாகவே இருந்தன. அதாவது தமிழர் போராட்டத்தை கேவலப்படுத்துவது. நந்தா முதல் பாதிரி மாங்காய் அடித்து முடிந்தது இப்போது முஸ்லிம் மாங்காய் அடிக்கிறார். அவருக்கே அடுத்த ஆப்பு என அஷ்ரஃப் அலியின் ‘நிலைமை’ பார்த்தாலாவது புரியும் என நினைக்கிறேன்.

    Reply
  • thurai
    thurai

    //ஸ்ரீலங்கா அரசு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது விளையாட்டை. கொஞ்சம் பொறுங்கள் எல்லோருக்கும் அல்வாவும் அவலும் உண்டு!//சாந்தன்

    சரியாகச் சொன்னீர்கள் உலகமெங்கும் தமிழர்கள் சிலர் பெரும் பணக்கரர்களாக திடீரெனெ தோன்றி புலிகளை நம்பி பணம் கொடுத்தவர்களிற்கெல்லாம் அல்வாவும் அவலும் கொடுக்கின்றார்கள். முஸ்லிம்கழுடன் விவாதிக்கு முன் உங்கள் தோழமைகழுடன் விவாதித்தால் மிகவும் நலலது.– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    சாந்தன்!
    பாதிரிகள் ஓட்டம் பிடித்துப் பலநாள்களாகி விட்டது. தெரியாமல் எழுத வேண்டாம்!
    பாதிரிகளை கண்டிக்காவிடில் இனி அதுநடக்கும்!

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    //அலாவுதீன், இந்தியா தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆங்கிலம் கலந்து பேசினால் தான் பெருமை, தமிழ் மொழியில் கல்வி கற்பது வெட்கம் என்ற நிலை இலங்கையிலும் தோன்றினால் மட்டுமே நீங்கள் கூறிய நிலை உருவாகலாம். தற்போதைய நிலையினால் பாதிப்பு இல்லை.//

    பி.சி உங்கள் நம்பிக்கையில் எந்த ஆட்சேபனையும் இல்லை, மாறாக அதில் மகிழ்ச்சியே.அது தொடர்பான எனது கணிப்பு எமது சரித்திர அனுபவத்தின் மூலம் வந்த வெறும் “கணிப்பு” மாத்திரமே

    //கடவுளையும் ஏமாற்றி தானும் ஏமாற்றி மற்றவனையும் ஏமாற்றல் (சட்டம், நீதிபதி, குற்றவாளி) ’மக்களின்’ நம்பிகை மீதான அணுகுமுறை என்றால் நான் என்ன செய்வது?//

    சாந்தன், உங்கள் கேள்வியின் நாகரீகத்தையும், அணுகுமுறையையும் வரவேற்கிறேன். இந்த நாகரீகம் நம்மிடையே தொடரும் எனும் நம்பிக்கையில் உங்களிருவரோடும் (B.C & சாந்தன்) ஒரு சில விடயங்களை நாகரீகமாக கேள்வி பதிலாக, நீங்களும் விரும்பினால், சமூகக் கண்ணோட்டத்துடன் உரையாடிக்கொள்ள விரும்புகிறேன்

    அந்த வகையில் பி.சி அவர்களிடமான முதலில் ஒரு கேள்வி, ரி.சோதிலிங்கம் அவர்களின் “சமூக சீரழிவு” தொடர்பான கட்டுரையை ஆதரித்த முதன்மை நபரான நீங்கள் இறுதியில் வந்து நந்தா “மேர்வின்” போன்ற ஒருவர் வந்தால் விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றதை எதிர்க்கவில்லை, எனவே ஆதரித்தீர்களா இல்லையா? என்பதை அறிய விரும்புகிறேன், அதேநேரம் ஆதரிக்கவில்லை என்றால் ஏன் எதிர்க்கவில்லை என்னும் உங்கள் விளக்கமும் இருந்தால் உங்களைப் பற்றி நான் தவறாக விளங்கிக்கொள்ளாமல் இருக்க உதவியாக இருக்கும்.

    சாந்தன், “நம்பிக்கை” மற்றும் “அணுகுமுறை”, “திறந்த மனது” போன்ற நான் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து மேலதிக விளக்கங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், ஒரு வேளை நான் தவறாக இருந்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன், சமூகக் கண்ணோட்டத்திலும், யதார்த்தமான நீரோட்டத்தின் அடிப்படையிலும், நீங்களும் விரும்பினால், உங்களுக்கும் உரையாடலைத் தொடரக்கூடிய நம்பிக்கை இருந்தால், உங்களோடு சில விடயங்களை உரையாடுவதில் எனக்கு விருப்பமிருக்கிறது.

    இப்போது உங்கள் இருவரிடமும் முன்வைக்கும் இன்னுமொரு வேண்டுகோள், தயவு செய்து எடுத்த எடுப்பில் தவறாக விளங்கிக்கொள்ளாமல், இங்கு காணப்படும் வீடியோ லிங்கில் இருக்கும் “விடயம்” தொடர்பான உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
    -http://www.youtube.com/watch?v=do-OoNr6QDc

    Reply
  • ashroffali
    ashroffali

    //முஸ்லிம்களுக்கு இப்பொழுது இலங்கயில் வந்துள்ள பிரச்சனை என்னவென்றால் “தமிழர்கள்” அரசுடன் நெருங்கி வந்துள்ளதுதான். தமிழின் இருப்பிடங்கள் எல்லாவற்றிலும் இந்த முஸ்லிம்கள் கடந்த 30 வருடங்களாக இருந்து “தமிழர்” விரோதத்தையே சிங்களவர் மத்தியில் விதைத்துள்ளனர்.//

    தமிழர்கள் அரசாங்கத்துடன் நெருங்கி வர வேண்டும் என்பதில் எந்த முஸ்லிமும் குழி பறித்ததில்லை.. எங்கு அப்படி நடந்தது.. உங்களால் கூற முடியுமா? ஆனால் பல முஸ்லிம்கள் தான் தமிழர்களுக்கு அரசாங்க முக்கியஸ்தர்களின் அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இன்றைக்கு ஜனாதிபதியின் முக்கிய நண்பர்களில் ஒருவரான நொயெல் செல்வநாயகம் என்பவரை அவருக்கு அறிமுகப்படுத்தியதே அஜ்மல் மௌஜுத் எனும் முஸ்லிம் ஒருவர் தான். ஸ்ரீ ரங்காவை ஜனாதிபதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அறிமுகப்படுத்தியதே றியாஸ் முஹம்மத் எனும் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளன் தான். பின்னாளில் அவர்கள் இருவருமாக சக்தி டீவியில் ஒன்றாக பணிபுரிந்திருந்தார்கள்.

    கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சருக்கும் ஆளுனருக்குமிடையிலான பனிப்போரின் போது முதலமைச்சருக்கு சார்பாக அமைச்சர் விமலவீர திசாநாயக்க உள்ளிட்டோரின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்ததும் ஹிஸ்புல்லா என்றொரு முஸ்லிம் தான். ஏனெனில் ஹிஸ்புல்லாஹ்வும் விமலவீர திசாநாயக்கவும் ஒரு காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியில் ஒன்றாக இருந்த நட்பு அதற்குப் பயன்பட்டது.

    சந்திரகாந்தன் முதலமைச்சராகத் தேவையான பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொடுத்ததும் இன்னொரு முஸ்லிமான அமைச்சர் அதாவுல்லாஹ் தான். இல்லாவிட்டால் அன்றைய கள நிலவரப்படி ஹிஸ்புல்லாஹ்வை முதலமைச்சர் ஆக்குவதில் தான் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் பலர் விருப்பம் கொண்டிருந்தார்கள்.

    வடக்கில் அங்கஜனை அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தி, அவரை வேட்பாளராக்கி, மாவட்ட அமைப்பாளர் வரை உயர உதவி செய்தது அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தான்.

    யுத்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட காரணத்திற்காக யாழ் அரச அதிபராக இருக்கும் இமெல்டா, முல்லைத்தீவின் வேதநாயகம் போன்றோரின் பதவிகளை பறிக்க அரசாங்கம் முயன்ற போது அதனை தடுத்து, அவர்கள் எதிர்கொண்டிருக்கும் நிர்ப்பந்தம் குறித்து விளக்கமளித்தது அமைச்சர்களான அமீர் அலீயும், றிசாத் பதியுத்தீனும் தான்.

    இப்படி எத்தனையோ விடயங்களை தொட்டுக்காட்டலாம். அவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது வெறும் இனத்துவேச உணர்வுடனான வெற்று வார்த்தைகள் மட்டுமே. அதனை நிரூபிக்க ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்களேன் பார்க்கலாம்..?

    நந்தாவின் எந்தக் கருத்துக்கும் ஆதாரம் இருக்காது. அப்படித் தான் நீங்களுமா…?

    //ஆனால் ஸ்ரீலங்காவின் ‘அதிகாரத்துக்கு’ நெருக்கமான முஸ்லிம்கள் அவ்வாறு சொல்வதனை விரும்புவதில்லை என்பது நீங்கள் அறியாததல்லஃ//
    சாந்தன்.. அவ்வாறான ஒருத்தரையாவது சுட்டிக் காட்டுங்கள்… வெறுமனே குற்றச்சாட்டு வேண்டாம்..

    //அப்பதவிகளில் இருந்தபோது எப்போதாவது சொல்லி இருக்கிறீர்களா? //
    என்னுடைய தேசம் நெட் பின்னூட்டங்கள் மற்றும் இணையத்தள ஆக்கங்களை தேடி வாசித்துப் பாருங்கள் புரியும்.

    //தனித்தரப்பாக தனித்துவமான போராட்டங்களின் மூலம் அடையாமைல் மற்றவர்களின் போராட்டத்தில் பெறமுயல்வது மேலும் அவநம்பிக்கையையே ஏற்படுத்தும்.//
    ஒரு இனம் ஆயுதமேந்திப் போராடவில்லை என்பதற்காக அந்த இனத்துக்கு எந்த உரிமைகளையும் கேட்கும் தார்மீக உரிமை இல்லை என்று எந்த நாட்டுச் சட்டம் சொல்கின்றது நண்பரே..? முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் தமிழரின் ஆயுதப் போராட்டங்களிலும் பங்கு கொண்டு தான் இருந்தார்கள். அதை நான் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் தமிழரின் போராட்டத்தின் பங்காக இருந்தாலும் முஸ்லிம்கள் குறைந்த பட்ச உரிமை குறித்துக்கூட எதிர்பார்க்கக் கூடாது என்ற நிலை வந்த பின் தான் தனித்தரப்பு என்ற கருத்து வலுத்தது. அதனை நீங்கள் மறுப்பதாயின்… போராட்டத்தின் முக்கிய கட்டங்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளில் ஏதாவதொன்றில் முஸ்லிம்களின் உரிமைகள் மதிக்கப்பட்டிருப்பது பற்றிச் சுட்டிக்காட்ட முடியுமா?

    அடுத்தது சாந்தன்.. முஸ்லிம்கள் போராடவில்லை என்பதற்காக அவர்களின் உரிமையை மறுப்பதாயின் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடுமே… அதற்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா நண்பரே..?

    Reply
  • ashroffali
    ashroffali

    //அதற்குமுன்னர் நீங்கள் பணிப்பாளராக இருந்தபோது தமிழ்-முஸ்லிம் உறவுகளை எவ்வாறு ‘கட்டி எழுப்பினீர்கள்’ எனச் சொல்ல முடியுமா? புலிகளை திட்டித்தீர்த்தல்இ காட்டிக்கொடுத்தல்இ வயோதிபர்இ சிறார் பெண்கள் கொலை கொள்ளை கற்பழிப்புகள் நடந்தபொது நீங்கள் பணீப்பாளராக இருந்து எப்போது அவற்றை ஏற்ருக்கொண்டு ஒரு அறிக்கையாதல் விட்டீர்கள். உங்கள் எல்லாம் வல்ல அல்லாவின் மீது ஆணையாக நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! ஸ்ரீலங்காவில் தமிழர்க்கு ஒரு நீதி சிங்களவர்க்கு ஒரு நீதி என்கின்ற நிலையை நீங்கள் வக்காலத்து வாங்கவில்லையா? அவ்வாறு வாங்காதவிடத்து அவற்றை வெளிக்கொணர கடவுளின் பெயரால் என்ன செய்தீர்கள்? கொழும்பில் தமிழர்கள் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் கொண்டிருக்கும்போது நீங்கள் என்ன வகையான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? உலகின் தலைசிறந்த மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியபோதெல்லாம் ஸ்ரீலங்கா ஊதுகுழல் அமைப்புகளின் பணிப்பாளர்கள் தமது ‘உண்மையான’ செய்திகளை உலகுக்கு உணர்த்திக்கொண்டு இருந்தனர் என்பதுதான் உண்மை.//

    சாந்தன்..

    நீங்கள் குறிப்பிட்டது போன்று நான் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவில் கடமையாற்றியது உண்மையே.. அதற்காக நான் ஒருபோதும் அநியாயங்களை நியாயப்படுத்த முனையவில்லை நண்பரே.. எப்போதும் நியாயத்தையும் தர்மத்தையும் அனுசரித்தே எழுதியிருக்கின்றேன்.

    வங்காலை மார்ட்டின் குடும்பத்தார் படுகொலை செய்யப்பட்ட போது அதனைச் செய்தது அரச படைகள் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டது. அன்றைய நிலையில் நான் அன்று உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தேன். அதற்கும் மேலாக மார்ட்டின் என்னுடனும் தொடர்பில் இருந்ததுடன், இலங்கைப் புலனாய்வுத்துறையின் சம்பளத்தையும் பெற்று வந்தவர். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட என்னுடன் முக்கியமான விடயம் ஒன்று பற்றிக் கதைத்திருந்தார். ஆக அந்த விடயத்தில் அரச படைகளின் மறைகரம் இல்லை என்பதை மட்டும் தான் நான் மறுத்திருக்கின்றேன். அது ஒன்றுதான் நான் நியாயப்படுத்திய விடயம;மற்றபடி பொதுமக்களின் மரணங்களின் போது எனக்குத் தெரியாமல் நான் யாரையும் நியாயவாதிகளாக சித்தரித்தது கிடையாது.

    அதற்கடுத்தது நான் ஒரு போதும் சிங்களவர்க்கு ஒரு நீதி, தமிழர்க்கு ஒரு நீதி என்று வக்காலத்து வாங்கியதில்லை. அப்படி நடந்திருந்தால் வாகரை, வெருகல், கதிரவெளி, மற்றும் வடக்கின் பாலமோட்டை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் பொதுமக்களுக்கான நிவாரணப் பணிகளில் நானாக விரும்பி என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க மாட்டேன். அதே நேரம் யுத்தம் தீவிரமாக நிலவிய காலத்திலும் இனத்துவேசம் கக்கிய பல சிங்கள அதிகாரிகளைத் தாக்கியும், தாக்க முயன்றும் உள்ளேன். அவ்வளவு ஏன்.. ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவின் பணிப்பாளரான மூத்த ஊடகவியலாளர் லூஷன் ராஜகருணாநாயக்க இனத்துவேசம் பேசியதற்காக அவரது சேர்ட் கொலரைப் பிடித்து இழுத்து அறைந்துள்ளேன். அதற்காக ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் விசாரணை வரை எதிர்கொண்டுள்ளேன்.

    என்னைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் யாரையும் மதரீதியாக பிரித்துப் பார்த்ததில்லை. இனரீதியான பாகுபாடும் என்னிடமில்லை. நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக வருவதற்கு உதவியவர்கள் மறைந்த ரேலங்கி செல்வராஜா,எஸ். கணேஷ்வரன் போன்றோர். அந்த விடயத்தில் என்னை ஊக்குவித்தவர்கள் நந்திராஜன் (கனடாவில் என்று நினைக்கின்றேன்). மற்றும் சக்தியில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கஜமுகன் போன்றோர் தான்.

    எனது சிங்களத் திறமை முழுக்க முழுக்க சிங்கள சகோதரர்கள் மூலமாகக் கிடைத்தது. அதன் பின் வீரகேசரி ,தினகரன் உள்ளிட்ட தமிழ் ஊடகத்துறையில் நான் பணியாற்றியபோதும் சில தமிழ் சகோதரர்கள் தான் என்னுடன் அனுசரணையாக செயற்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே நான் ஜனாதிபதியின் ஊடகத் தொடர்புத்துறை வரை உயர முடிந்தது. அதனை நான் என் வாழ்வில் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

    புலிகள் என்பதற்காக நான் யாரையும் வெறுத்தது கிடையாது. நிவாரண முகாம்களில் மட்டுமல்ல படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கூட மனிதாபிமான அடிப்படையில் பலருக்கு நான் உதவியுள்ளேன். அவர்கள் எல்லோரும் உலகத்தின் எங்காவது ஓரு மூலையில் இருந்து கொண்டிருப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் பெற்றுக் கொள்ளவும் கூட நான் உதவி செய்துள்ளேன்.

    எனவே நான் என்றைக்கும் மனிதாபிமானியாக நடந்து கொண்டுள்ளேனே தவிர அதற்கப்பால் சென்றதில்லை. அவ்வளவு தான்.

    ஜனாதிபதியிடம் இருந்த போதும் அதிகாரப் பரவலாக்ககல் விடயத்தில் அநீதி நடந்தால் அவரை விட்டு விலகிவிடுவதாக சொன்னது போல விலகி வந்துள்ளேன். மற்றபடி அவருடன் தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. என் தனிப்பட்ட நலன்களுக்காக அவரைப்பகைத்துக் கொள்ளவும் இல்லை. அவ்வளவுதான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இங்கு காணப்படும் வீடியோ லிங்கில் இருக்கும் “விடயம்” தொடர்பான உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
    -http://www.youtube.com/watch?v=do-OoNr6QDc….//

    இதில் உள்ளது அவனவன் விரும்பிச் செய்வது. தீக்குளித்தல், அலகுகுத்தி ஆடுதல் போன்றவற்றை யாரும் திணிப்பதில்லையே? இதற்கும் வலிந்து திணிக்கப்படும் இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்களுக்கும் என்ன தொடர்பு அலாவுதீன் நண்பா? புரியவில்லயே?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஆனால் பல முஸ்லிம்கள் தான் தமிழர்களுக்கு அரசாங்க முக்கியஸ்தர்களின் அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது…..//
    ஆஹா…உங்களின் லிஸ்ற் அட்டகாசம். தமிழர் பிரச்சினையில் காட்டிக்கொடுப்பவர்களை ”அந்தப்பக்கம்” கொண்டுபோய்ச் சேர்ப்பது முஸ்லிம்கள்தான் என்கின்ற பொதுப்படையான நம்பிக்கையை ஆணித்தரமாகவே நிரூபித்துள்ளீர்கள். நன்றி. அப்படியே கருணாவை அரசாங்கத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தது நான்தான் என முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சொன்னாரே அவரை ஏன் லிஸ்ற்ரில் தவறவிட்டீர்கள்.

    அவர் அரசிடமிருந்து அவ்வளவாக பெயரவில்லை என அறிந்தோ என்னவோ அமெரிக்காவுக்கு ஓடித்தப்பினார். பின்னர் அமெரிக்காவில் என்ன செய்யலாம் என கனடா பாயமுயன்றார். சகலதும் தோல்வியில் முடிய அமெரிக்காவில் அசைலம் அடித்தார். அமெரிக்காவும் பரிசீலனை செய்கிறோம் எனச் சொல்லி வேலை அனுமதிப்பத்திரம் கொடுத்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் உலகில் எங்குமே நடக்காதது. வோஷிங்ரனில் இருக்கும் எம்பசியில் வேலை எடுத்துவிட்டார். அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் திகைத்துவிட்டது. என்னடா ஸ்ரீலங்காவில் பாதுகாப்பில்லை என அசைலம் கேட்டார். இப்போ அந்த எம்பசியிலேயே வேலை எடுக்குமளவுக்கு கில்லாடியாக இருக்கிறாரே என. தாம் இவ்வாறான அதிசயத்தைக் காணவே இல்லை எனச் சொன்னார்கள் அதிகாரிகள். அதற்கு அவர் சொன்ன பதிலால் ராஜாங்க அதிகாரிகள் கப்சிப். அதாவது எனக்கு ஸ்ரீலங்காவில்தான் பாதுகாப்பில்லை எனச் சொன்னேன் அமெரிகாவில் அல்லவே என!

    இதை எனக்கு முதலில் சொன்னவர் எம்பசியில் வேலை பார்க்கும் ஒரு சிங்களவரின் சகோதரர். அவர் சொன்னார் பாருங்கள் தம்பி தமிழரைச் சாட்டியே அலுவல் பார்த்துவிட்டு இப்போ நம் மானத்தை கப்பலேற்றுகிறார்கள் என.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஆக அந்த விடயத்தில் அரச படைகளின் மறைகரம் இல்லை என்பதை மட்டும் தான் நான் மறுத்திருக்கின்றேன். …//

    “மறைகரம் இல்லை” என்பதை மறுத்ததன்மூலம், அரசின் கரங்கள் இருந்தன என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? அதனை மட்டுமே மறுத்ததன்மூலம் மற்றைய கொலைகளில் அரசின் கரங்கள் இல்லை என நியாயப்படுத்தினீர்களா? தெளிவற்றி இருக்கிறதே?
    என்ன என்றாலும் உங்களின் தொழிலை நன்றாகத்தான் செய்திருக்கிறீர்கள்? அதிலென்ன மனிதாபிமானம்.
    நான் கேட்ட கேள்வி பணிப்பாளராக இருந்த நீங்கள் எவ்வாறு பொய்யான ஊடக அறிக்கைகள் வர அனுமதித்திருந்தீர்கள் என்பதே? பணிப்பாளர் என்பது பெரிய பதவி அன்பரே?

    //…இனத்துவேசம் கக்கிய பல சிங்கள அதிகாரிகளைத் தாக்கியும், தாக்க முயன்றும் உள்ளேன். அவ்வளவு ஏன்.. ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவின் பணிப்பாளரான மூத்த ஊடகவியலாளர் லூஷன் ராஜகருணாநாயக்க இனத்துவேசம் பேசியதற்காக அவரது சேர்ட் கொலரைப் பிடித்து இழுத்து அறைந்துள்ளேன்….//

    அப்படியா? எனக்கும் ஒரு நன்பர் இருக்கிறார். அவர் ஒரு சிங்களவருடன் சண்டையிட்டு (ரோட்டில் கட்டிப்புரண்டு பொலிஸ்வரை போனது) எனக்குச் சொன்னார் அவன் இனத்துவேசம் பேசினான் என. நான் சிங்களவரைக் கேட்க அவர்சொன்ன பதில் ‘அவர் தமிழரைப்பற்றி என்னுடன் சேர்ந்து சொன்ன கதைகளைக் கேட்டால்…’. அதோடு விட்டுவிட்டேன்.
    எவ்வாறாயினும் நீங்கள் அவ்வகை நல்லவராக இருந்தால் பாராட்டத்தான் வேண்டும்!

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    சாந்தன், நான் அந்த “விடயம்” தொடர்பான உங்கள் கருத்தைத்தான் கேட்டேன் நண்பா..நீங்கள் அதுவும் அதற்கு மேல் ஒரு படியுமாக மேலேயும் சென்றுவிட்டீர்கள். பரவாயில்லை, இப்போதைக்கு நம் நண்பர் பி.சி என்ன சொல்கிறார் என்பதையும் அவதானிக்க சற்றுக் காத்திருந்து விட்டு உங்களோடு உரையாடிக்கொள்கிறேன்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் பி.சி, வயிற்றில் பால் வார்த்து விட்டிர்கள். நன்றிகள் பல. ஏன் தெரியமா “எனக்கு தெரிந்த பாக்கிஸ்தான் காரர் பழக அருமையானவர்” என்று நீங்கள் 10ம் திகதி பின் ஊட்டம் இட்டுள்ளதால். (அந்த நபர் முஸ்லிமாக இருந்தால்) நந்தாவுடன் சேர்ந்து மாற்று மதத்தாரை இஸ்லாம் கொல்ல சொல்வதாக நீங்கள் ஏற்கனவே பலதடவை சொன்ன விடயம் பொய் என்று நிருபித்துவிட்டீர்கள்.

    அன்புடன் சாந்தனுக்கு,

    “ஆனால் தமிழர், சிங்களவரின் இன முரண்பாடுகளில் கலங்கிய குட்டையில் மீன் பிடித்தவர், கொழுந்துவிட்டெரிந்த தீயில் குளிர் காய்ந்தவர் யார் என்பதில் சிங்களவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்” என்று 10ம் திகதி பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். தமிழர்கள் தான் இந்த உலகத்தின் அறிவாளர்களாச்சே எப்படி இதை அனுமதித்தீர்கள்? இதற்கான பழிவாங்கள் தானா சிங்களவர், சோனவருக்கு கொடுக்க இருக்கும் உங்கள் “அல்வா” கதை. இலங்கை சோனகர் நாட்டு பற்றுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க துணை புரிந்ததாகவல்லவா சிங்களவர் கூறுவதாக கதை அடிபடுகிறது. சரி கவலையை விடுங்கள் அல்வா இனிப்பானால் வங்கிக் கொள்வோம், கசப்பான அல்வா என்றால் பிறகு யோசிப்போமே. எனினும் துப்புக்கு நன்றிகள்.

    அமெரிக்க இலங்கை தூதரக சிங்கள சகோதரரை இனங்கண்ட சாந்தனுக்கு அவர் போன்ற ஒரே ஒரு நல்லா முஸ்லிமை தேடுவதில் கஸ்டம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

    அன்புடன் நந்தாவுக்கு,
    அஸ்ரப் அலியும், அலாவுதினும் களத்தில் குதித்ததினால் பலதும் பத்தும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், “காபிர்,ஜிகாத்” என்ற அறபு பதங்களுக்கு ஏற்கனவே பல வடிவில் பதில் தந்தும் புதிதாக வருவோரிடமெல்லாம் அதற்கான விளக்கம் கேட்க மாட்டீர்கள்.

    எனவே உங்கள் சம்மதத்துடன், மீண்டும் புதிதாக ஆரம்பிப்போம். அந்த வகையில் உங்கள் இரண்டு கேள்விகளுக்கு விளக்கம் தர முயற்சிக்கிறேன்.
    1. காபிர்= ஆபிரகாமின் வழி வந்த ஏகத்துவ கொள்கையையும், ஏக இறைவனுக்கு இணைனவக்காமல் இருப்பதையும் ஏற்காத ஒருவர். இதில் ஆண், பெண், இலங்கை, ஈரானியர், ஆஜந்தீனியர், ரஸ்யர், வெள்ளையர், கறுப்பர், ஜனநாயகவாதி, முதலாளித்துவவாதி, படித்தவர், பாமரர் என்று பேதம் இல்லை.

    2. ஜிகாத்= போராட்டம். இது மனப் போராட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. உ+ம், எதிர் பால் கவர்ச்சி என்பது இயற்கையான ஒரு அம்சம். ஆனால் அது ஒருக்கத்தின் பால்பட்டது. உங்களுக்கு முன்னால் ஒரு அழகான பெண் வருகிறாள் என வைத்து கொள்வோம் அவள் மீதான பார்வை பலவித்தில் அமைய வாய்ப்புண்டு. அந்த சிக்கலில் இருந்து உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மனத்துடன் சின்ன போராட்டம் செய்து அவவை பார்க்காமலே உங்கள் பார்வையை திருப்பிக் கொள்வது. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை போராட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. அத்தனையிலும் தீமையை விலக்கி நன்னமயை செய்வதே இந்த ஜிகாத். அது உங்கள் கொயுனிஸ உலகுக்கான ஆயுத போராட்டம் போன்ற ஆயுத போராட்டம் வரையும் வளர்ந்து செல்கிறது. அதற்காக “அல்லாகு அக்பர்” என்ற கோஷத்துடன் நடக்கும் குண்டுவைப்பு, கழுத்து வெட்டு, ஆணி அடிப்பு என்று உங்களுக்கு தெரிந்த எல்லா அழுக்குகளையும் இதற்குள் போட்டு மீண்டும் மீண்டும் குழப்பாதிர்கள்.

    Reply
  • BC
    BC

    //நந்தா மேர்வின் போன்ற ஒருவர் வந்தால் விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றதை எதிர்க்கவில்லை, எனவே ஆதரித்தீர்களா இல்லையா? என்பதை அறிய விரும்புகிறேன் //
    அலாவுதீன், மேர்வின் நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை. ஆயுத இயக்கங்கள் தொடங்குவதற்கு முன்பென்றால் ஆதரித்து இப்படியல்லவா நடவடிக்கை இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பேன். இதை எல்லாம் ஆதரித்தால் என்னவாகும் என்று ஆயுத இயக்கங்கள் பாடம் படிப்பித்துள்ளன.
    யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தில் வேலை செய்பவர்களின் ஊழல்கள், மோசமான செயற்பாடுகள் இவற்றினால் நந்தா வெறுத்து போய் மேர்வின் மாதிரி ஒருவர் வேண்டும் என்பதாக உணர்ந்தேன்.

    நீங்கள் தந்த வீடியோவில் உள்ள செயல்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    முதற்கண் எனது கோரிக்கைக்கு மதிப்பளித்த சகோதரர்கள் சாந்தனுக்கும், பி.சி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அத்துடன் உங்கள் கருத்து நேர்மைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துவிட்டு, இப்போது ஒரு சிறு விடயத்தைப் பற்றி இனங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு உங்களோடு ஒரு சமூகக் கண்ணோட்டத்தில் அளவளாவ விரும்புகிறேன்.

    குறிப்பிட்ட வீடியோ இணைப்பைப் பார்த்த பின்பு சாந்தன் அவர்களது கருத்தானது தீக்குளித்தல், அலகுகுத்தி ஆடுதல் போன்றவற்றைச் செய்வது அவரவர் விருப்பச் செயல் என்றும் அதன் மூலம் குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் தலையில் தேங்காயை உடைத்தல் என்பதும் அதே வகைக்குள் அடங்கும், அதாவது அது அவர்கள் விரும்பி, தாங்களாக ஏற்றுச் செய்யும் செயல், எனவே அது தொடர்பில் அவர்களைத் தவிர்ந்த மற்றவர்கள் கவலைப்படத்தேவையில்லை எனும் தொனியில் அமைந்திருக்கிறது.

    ஏனெனில் குறிப்பிட்ட வீடியோவில் தீக்குத்தலோ,அலகு குத்தலோ இல்லை,மாறாக தலையில் தேங்காய் உடைக்கும் “விடயம்” தான் இருக்கிறது.

    நல்லது, இப்போது இந்தப் பழக்கத்தை ஒரு மதம் சார்ந்த பழக்கமாகப் பார்க்காமல் ஒரு சமூகம் சார்ந்த பழக்கமாக எடுத்து நோக்கின்,இந்தப் பழக்கம் குறிப்பிட்ட சமூகத்தாரிடம் எப்படி வந்தது? என்று ஒரு கேள்வி எழும். ஒரு வேளை அதற்கு மதம் தான் காரணம் என்று இருந்தாலும் கூட, நாளடைவில் இது தமக்கு “சரி” யெனப்பட்டதாலும், இதன் மூலம் தமது பாவத்துக்கான பிராயச்சித்தம் கிடைக்கிறது என்று அவர்கள் நம்புவதாலும் இதைச் செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோம்.

    ஒரு காலத்தில் இது அவர்களது சமூகத்தின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளில் ஒன்றாகவும் கூட இருந்திருக்க முடியும், உதாரணமாக உடன்கட்டை ஏறுதலை எடுத்துக்கொள்ளலாம். உடன்கட்டை ஏறுதல் என்பது ஆரம்ப காலத்தில் ஒரு கணவன் – மனைவிக்கான பிணைப்பின் மிக உயர்ந்த கட்டமாக ஒரு சமூகத்தாரால் விரும்பப்பட்டிருந்தாலும் அல்லது ஒழுக்க நெறியாகப் பின்பற்றப்பட்டாலும், அது நாளடைவில் கணவனை இழக்கும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு ஒழுக்க நெறியாக மாறியிருந்தமையையும் நாங்கள் எமது காலத்திலேயே கண்ணுற்றிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம்.

    எனினும், தனது பண்டைய சமுதாயத்தினரின் நம்பிக்கையை மதித்து, தன் உயிரை மாய்ப்பதன் மூலம் அந்நாளின் ஒழுக்க நெறியைப் பின்பற்றி தான் சார்ந்த நம்பிக்கைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் ஒரு பெண், இக்காலத்தில் உடன் கட்டையேறினால்?? அதை குறிப்பிட்ட பெண்ணின் சுய விருப்பம் எனவே அதில் நாங்கள் தலையிடும் தேவையில்லை என்பதன் முடிவு தான் ஏற்கனவே நாம் பார்த்த வீடியோவில் இருந்த “விடயம்” தொடர்பான நண்பர் சாந்தன் அவர்களின் நிலைப்பாடும்.

    அடுத்தது, மேர்வின் போன்ற ஒரு நபர், அதாவது சட்டம் என்பது எழுத்தோடு இருக்கட்டும், சமூகத்தின் பிரச்சினைகளை சில வேளைகளில் பிறர் கண்களுக்கு அடாவடியாகத் தெரிந்தாலும், அதை அதிகார வலுவால் செய்து முடிக்கக்கூடிய தைரியமானவர்கள், அல்லது பிறர் பார்த்து பயப்படக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள், கிட்டத்தட்ட அனுமதியுள்ள சண்டியர்கள் போன்றவர்கள் இருந்தால்…?? கவனிக்கவும், இருந்தால் ?? நமது சமூகத்தை ஆட்டிப் படைக்கும் சீரழிவுகளுக்கு விமோசனம் கிடைக்கலாம்?? என்பது அதாவது அப்படியொருவரின் “தேவை” இருக்கிறது என்று ஒத்துக்கொள்வதாக அமைந்ததாக நண்பர் கருதும் நந்தாவின் கூற்றைப் பொறுத்தவரை, அவர் சமூக சீரழிவுகளை “விரைவாக” கட்டுப்படுத்த வேண்டுமே எனும் ஆதங்கத்தில் ஒரு வேளை கூறியிருப்பாரோ என்று எண்ணியதாலும், நம்மைக் கடந்து சென்ற 30 வருட ஆயுதப் போராட்ட வரலாறு சொல்லித்தந்த பாடத்தின் மூலமும் இக்கூற்றை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை என்பது சகோதரர் பி.சி அவர்களின் நிலைப்பாடு.

    உங்கள் இருவரது சமூகக் கண்ணோட்டத்தையும் எனது தனிப்பட்ட பார்வையில் உங்கள் இருவரது தனிப்பட்ட அபிப்பிராயமாகவே கருத்திற்கொண்டு, பின்வரும் கேள்விக்கு உங்கள் தீர்வு என்ன என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

    ஒரு ஊரில் இருக்கும் சமுதாயம், கிட்டத்தட்ட அந்த வீடியோவில் காணப்படுவோர் போன்றே என்று வைத்துக்கொள்வோமே, தம்மிடம் இருக்கும் “நம்பிக்கை”யின் பிரகாரம் தமது வாழ்வின் சில பாரிய ஒழுக்க மீறல்கள் என்று அவர்கள் கருதும் சில விடயங்களைக் கட்டுப்படுத்த, தமது முன்னோர்கள் கடைப்பிடித்த சம்பிரதாயங்களையும் ஓழுக்கச் சட்டங்களையும் “விரும்பி”, கவனிக்கவும் “வலிந்து திணித்து” அல்ல, “விரும்பிக்” கடைப்பிடிப்பார்களாயின், அந்த மக்களின் பிரதிநிதிகளாக, அந்த சமூகத்தின் தலைவர்களாக, உதாரணமாக குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் வணக்கஸ்தலத்தைப் பரிபாலிப்பவர்கள் என்றே வைத்துக் கொள்வோமே, அந்தத் தலைவர்களிடம் வந்து தம்மால் அல்லது தமது குடும்பத்தில் உள்ள ஒருவரால் இப்படியான ஒரு ஒழுக்க மீறல் நடைபெற்று விட்டது. எனவே, நமது சம்பிரதாய “நம்பிக்கை” யின் படி நீங்கள் “குறிப்பிட்ட” ஒழுக்க மீறலுக்கெதிரான “நாமறிந்த சட்டத்தினை” நிறைவேற்றித் தரவே வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால்..

    அதே சமூகத்தின் பிரதிநிதிகளாக, அந்தத் தலைவர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் அவர்களது “நம்பிக்கை” மீதான அணுகுமுறையை அவர்கள் விருப்பப்படியே நிறைவேற்றுவது, சரியா? அல்லது பிழையா? என்று சகோதரர்கள் இருவருடைய கருத்துக்களையும் அறியத்தர முடியுமா? ஏறக்குறைய நீங்கள் வீடியோவில் பார்த்த விடயத்தில் இந்த “நிகழ்வை” அனுமதித்த தேவஸ்தான பரிபாலன சபையின் தலைவரே நீங்கள் தான் என்று இருந்தால் உங்கள் முடிவு எப்படியாக இருந்திருக்கும்? என்று அறிய முடியுமா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…என்று 10ம் திகதி பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். தமிழர்கள் தான் இந்த உலகத்தின் அறிவாளர்களாச்சே எப்படி இதை அனுமதித்தீர்கள்?….//

    அப்படி நான் சொன்னேனா? இல்லையே!

    //…இதற்கான பழிவாங்கள் தானா சிங்களவர், சோனவருக்கு கொடுக்க இருக்கும் உங்கள் “அல்வா” கதை….//

    எனது கதையல்ல. அஷ்ரஃப் அலியின் கதை!

    //….இலங்கை சோனகர் நாட்டு பற்றுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க துணை புரிந்ததாகவல்லவா சிங்களவர் கூறுவதாக கதை அடிபடுகிறது……//

    கதைதான் அடிபடுகிறது. ஆனால் உண்மையான அடி விழுவது தெரியுமா? புலிகள் துரத்திய முஸ்லிம்களைக் குடியேற்ற அரசிடம் காசில்லையாம், ஆனால் சிங்களவர்களை குடியேற்ர அலுவல் நடைபெறுகிறது கவனிக்கவில்லையே. அதைத்தான் விடுங்கள் கடந்த 31ம் திகது கண்டகாடு கிராமத்தில் 54 முஸ்லிம் குடும்பங்களை அரச அதிபரின் உத்தரவின் பெயரில் அவர்களின் வீடுகளைத் தீயிட்டு துரத்தி இருக்கிறது. நான் சொல்லவில்லை. சிங்கள இணையத்தளம் சொல்கிறது. படங்கள் வேறு போட்டிருக்கிறார்கள்.

    -http://www.lankaenews.com/English/news.php?id=10233

    //…சரி கவலையை விடுங்கள் அல்வா இனிப்பானால் வங்கிக் கொள்வோம், கசப்பான அல்வா என்றால் பிறகு யோசிப்போமே….//
    54 குடும்பங்களின் வீடுகளைக் கொழுத்திய கசப்பானதா இனிப்பானதா என அக்குடும்பங்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் ஆற அமர யோசியுங்கள்.

    //….அமெரிக்க இலங்கை தூதரக சிங்கள சகோதரரை இனங்கண்ட சாந்தனுக்கு அவர் போன்ற ஒரே ஒரு நல்லா முஸ்லிமை தேடுவதில் கஸ்டம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை…..//
    இல்லை நானும் நினைக்கவில்லையே! ஆனால் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் அனியாயம் அக்கிரமம் என மனிதாபிமானக் கதை அளப்பவர்கள் பற்றித்தான் இங்கே பேசினேன்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///….ஆனால் தமிழரின் போராட்டத்தின் பங்காக இருந்தாலும் முஸ்லிம்கள் குறைந்த பட்ச உரிமை குறித்துக்கூட எதிர்பார்க்கக் கூடாது என்ற நிலை வந்த பின் தான் தனித்தரப்பு என்ற கருத்து வலுத்தது. அதனை நீங்கள் மறுப்பதாயின்… போராட்டத்தின் முக்கிய கட்டங்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளில் ஏதாவதொன்றில் முஸ்லிம்களின் உரிமைகள் மதிக்கப்பட்டிருப்பது பற்றிச் சுட்டிக்காட்ட முடியுமா? ….//

    சரி நல்லது. ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது தமிழீழம் வேண்டி அன்றி அல்லாமல் இந்து ஈழமோ அன்றி கிறிஸ்தவ ஈழமோ இஸ்லாமிய ஈழம் வேண்டியோ அல்ல. புலிகள் தமது இடைக்கால நிர்வாக சபை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதனைப்படித்துப்பாருங்கள். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தனித்தரப்புக்கோரியிருப்பின் அதைப்பற்றி எனக்கு எதிர்க்கருத்தில்லை. ஆனால் மாறாக ஸ்ரீலங்கா போல் பெளத்த சிங்கள அரசில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையில் பங்கும் பின்னர் தனித்தரப்பாக இன்னொரு பங்கும் கேட்பது என்ன நியாயம் நண்பர் அஷ்ரஃப் அலி அவர்களே? சொல்லுங்கள்.
    ஃப்ரியல் அஷ்ரப் அரசதரப்பில் வருகிறார், அங்கே சென்று தம்பி தமிழ்ச்செல்வனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். பின்னர் தனித்துவம் தனித்தரப்பாகவும் வருவோம் என்கிறார் இது சரி என்கிறீர்களா?

    //…அடுத்தது சாந்தன்.. முஸ்லிம்கள் போராடவில்லை என்பதற்காக அவர்களின் உரிமையை மறுப்பதாயின் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடுமே… அதற்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா நண்பரே..?…/

    அவர்களுக்கு உரிமையை யார் மறுத்தது? அவ்வாறாயின் உங்கள் தனித்தரப்புக் கோரிக்கை எங்கே போயிற்று? புலிகள் இருக்கும் போது தனித்தரப்பு அவர்கள் இல்லை என்கின்றபோது ஏன் இந்த மெளனம்? சொல்லுங்கள் அஷ்ரஃப் அலி அவர்களே?
    இதை அமெரிக்காவின் ட்ரெக்சல் பல்கலைக்கழக பேராசிரியர் திரு.இம்தியாஸ் குறிப்பிட்டு முஸ்லிம்களுக்கு இது அழகல்ல என சாடி இருந்தார். இதனை Running with the hare and hunting with the hounds” எனச் சொல்வார்கள். அதாவது முயலுடன் சேர்ந்து ஓடி நாயுடன் சேர்ந்து அம்முயல்களை வேட்டையாடுவது என!

    Reply
  • நந்தா
    நந்தா

    //1. காபிர்= ஆபிரகாமின் வழி வந்த ஏகத்துவ கொள்கையையும், ஏக இறைவனுக்கு இணைனவக்காமல் இருப்பதையும் ஏற்காத ஒருவர். இதில் ஆண், பெண், இலங்கை, ஈரானியர், ஆஜந்தீனியர், ரஸ்யர், வெள்ளையர், கறுப்பர், ஜனநாயகவாதி, முதலாளித்துவவாதி, படித்தவர், பாமரர் என்று பேதம் இல்லை//

    அதாவது நான் சொன்ன விஷயத்தை இப்படி இழுத்தடித்துச் சொல்ல வேண்டியதில்லை.

    “முஸ்லிம்” அல்லாதவன் காபிர்!

    “ஜிகாத்”.
    முஸ்லிம் படையெடுப்புக்கள் அனைத்தும் “ஜிகாத்” என்று குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் “அது காபிர்களை” அழிப்பதற்கான போராட்டம்.

    தலிபான்களும், பாகிஸ்தானிகளும் “சரியாகவே” அதனைத் தொடர்கின்றனர்.

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    சகோதரர் நிஸ்தார் அவர்கட்கு, ஜிகாத் என்றால் போர் அல்ல “போராட்டம்” என்பதையும், “காபிர்கள்” என்றால் முஸ்லிமோ இல்லையோ “ஏகத்துவத்தை மறுப்பவர்களுக்கான” அரபுப் பதம் என்பதையும் விளங்கிக் கொள்ளக்கூடியவர்கள் ஏற்கனவே விளங்கியிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….வடக்கில் அங்கஜனை அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தி, அவரை வேட்பாளராக்கி, மாவட்ட அமைப்பாளர் வரை உயர உதவி செய்தது அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தான். …//

    இந்த அங்கஜன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? இவர் மாவட்ட அமைப்பாளராக எப்படி வந்தார். வேட்பாலராக இருக்க என்ன தகுதிகள் உண்டு? இவரைக் களம் இறக்கியதே டக்ளசுக்கு ஆப்பு வைக்கத்தான் அன்றி அன்பில் அல்ல. தேர்தல் காலத்தில் இவர் ஆடிய ஆட்டம் பற்றி பத்திரிகையில் வந்ததே! யாழ் மேயரே தனதௌ தலைமயிரைப் பிடித்து இழுத்தார் என அழுது ஒப்பாரி வைத்தாரே!

    அஷ்ரஃப் அலி அவர்களே எனக்கு அங்கஜனைத் தெரியாது என நினைக்கிறீர்கள் ஆக்கும். அவர்மட்டுமல்ல் அவரின் அப்பா ராமநாதன் சித்தப்பா பத்மநாதன்….போன்றோர் மாவைக்கந்தன் மினிபஸ் ஆரம்பிக்கமுன்னரே அறிவேன். அவர்கள் பின்னர் கொழும்பு வந்து ஏஜன்சி வேலை செய்தது….அதில் செய்த அட்டகாசங்கள் அக்கிரமங்கள்.. பின்னர் பிரேமதாசா காலத்தில் சரக்குக்கப்ப வியாபாரம்….உருளைக்கிழங்கு வெண்காயம் ஏற்றி இறக்கலில் விளையாட்டுகள். ஸ்ரீலங்கா அரசில் பெரிய பணிப்பாளராக இருக்கிறீர்கள். கஸ்ரம்ஸ் கோஷ்டியிடம் கேட்டுப்பாருங்கள் ஸ்ரீலஙா அரசுக்கு எவ்வளவு நஷ்டம் இவர்களால் என்று.

    இன்னும் தேவையா சொல்கிறேன் கேளுங்கள். சுவிஸ் வங்கியில் கள்ளமாக காசு எல்லாவற்றையும் தமது கணக்குக்கு மாற்றி எடுக்கப்போன இடத்தில் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு தெரியுமா? தேவை எனில் பழைய பேப்பர்களைத்தேடி எடுத்துப்பாருங்கள். BCCI கொழும்புக்கிளையில் நடந்த இந்தக்கள்ள விளையாட்டை கடைசியில் புலிகள் தலையில் ஸ்ரீலங்கா கட்ட ஊதுகுழல் சன் (தவச குரூப்) பேப்பர் பகீரதப்பிரயர்த்தனம் செய்தது.
    இந்த பலதரப்பட்ட விளையாட்டுகளில் பல அமைச்சர்கள் எம்பிக்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இப்போது முஸ்லிம் ஒருவர் இவரின் மகனை அமைப்பாளர் ஆக்கிவிட்டாராம். அது தமிழ் மக்களுக்குச் செய்யும் சேவையாம். நான் முன்னர் சொன்னது போல சமூகத்தின் திருடர்கள் , காட்டிக்கொடுப்போரை அந்தப்பக்கம் கொண்டுசென்று சேர்ப்பதுதான் முஸ்லிம்களின் வேலைபோல் இருக்கிறது.
    அஷ்ரஃப் அலி இது ஒன்றும் கொசிப் செய்தி அல்ல.
    கட்டாயம் உங்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கேளுங்கள். அஜாங்கன் பின்னணி இது சாம்பிள் மட்டும் தான்! நிறைய இருக்கு. அனால் களம் இதுவல்ல

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தமது முன்னோர்கள் கடைப்பிடித்த சம்பிரதாயங்களையும் ஓழுக்கச் சட்டங்களையும் “விரும்பி”, கவனிக்கவும் “வலிந்து திணித்து” அல்ல, “விரும்பிக்” கடைப்பிடிப்பார்களாயின்,……//

    விரும்பிக் கடைப்பிடிப்பவர்களாயின் ஒன்றும் செய்ய முடியாது. அவரவர் விருப்பத்துக்கு விடவேண்டும். ஆனால் அச்சம்பிரதாயங்களை (அத்தண்டனைகளை) அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது நான் தேங்காயுடைத்தல் தீக்குழித்தலில் நம்பிக்கை வைப்பவனாக இருந்தால் எந்தலையில் நான் தேங்காயுடைக்க வேண்டும் அல்லது நானே தீக்குள் இறங்க வேண்டும். எனது மகனோ அன்றி மகளோ அல்லது மனைவியோ அல்ல!

    //….அந்த மக்களின் பிரதிநிதிகளாக, அந்த சமூகத்தின் தலைவர்களாக, உதாரணமாக குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் வணக்கஸ்தலத்தைப் பரிபாலிப்பவர்கள் என்றே வைத்துக் கொள்வோமே, அந்தத் தலைவர்களிடம் வந்து தம்மால் அல்லது தமது குடும்பத்தில் உள்ள ஒருவரால் இப்படியான ஒரு ஒழுக்க மீறல் நடைபெற்று விட்டது. ….//

    ஒழுக்க மீறல் நடைபெற்றுவிட்டது. எனது மகள் இன்னொருவனுடன் ஓடிவிட்டாள் எனச் சொல்கிறார் என வையுங்கள். அப்பெரியவர் என்ன செய்ய வேண்டும் திருமணம் செய்து வைக்க வேண்டுமல்லவா? நீங்களென்றால் என்ன செய்வீர்கள் அலாவுதீன்? ஆனால் பாகிச்தானில் நடந்ததென்ன? அவ்வூர் கூடி அப்பெண்ணை பல ஆண்கள் கற்பழிக்க வேண்டும் என ஆணையிட்டதே? இதற்கும் தேங்காய்க்கும் என்ன தொடர்பு?
    இதற்கும் உடன்கட்டை ஏறல் (பெண்ணை நெருப்பில் தள்ளிவிடல்)க்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் அண்மையில் (10வருடங்களின் முன்னர் இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்த்தது அறிந்திருப்பீர்கள்.)
    மேலும் இஸ்லாம் இன்னும் கழுவேற்றல் காலத்தில் புதைந்து கிடக்கிறது என்கிறீர்களா? அவ்வாறாயின் உலகம் சரியாகவே ‘இஸ்லாம் புனரமைப்புச் செய்யப்படவேண்டிய மதம்’ என சொல்கிறதென்றே ஏற்கவேண்டும்!

    Reply
  • ashroffali
    ashroffali

    //இலங்கையில் பெண்கள் பல ஆண்களோடு உறவு கொள்ளுதல் சட்ட விரோதம் அல்ல என்பது அலாவுதீனுக்குத் தெரியவில்லையா?//
    ஆமாம் நந்தா.. அதனால் தான் கெஸ்ட் ஹவுஸ்களிலும் மற்றும் லொட்ஜ்களிலும் அந்நிய ஆண்- பெண் தங்கும் போது அவர்களை விபச்சாரக் குற்றத்தின் கீழ் பொலிஸ் கைது செய்கின்றதோ.. அப்படியெனில் இதைக் கொஞ்சம் இலங்கையில் பிரபலப்படுத்த உதவுங்கள் நந்தா.. இனி பொலிசார் கைது செய்யும் போது அடிப்படை உரிமை மீறல் வழக்குப்போட உதவும்..

    //அவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள் அரேபியாவிலிருந்து அமுல் படுத்தப்படுகிறது. அதன்படி முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை விடக் கீழானவர்கள் என்பது அவர்களுக்கு போதிக்கப்படுகிறது//
    அரேபிய சமூக அமைப்புக்கும் இலங்கை முஸ்லிம்களின் சமூக அமைப்புக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்…

    //முன்னர் தமிழர்களைப் புலி என்று போட்டுக் கொடுத்தே பல முஸ்லிம்கள் அரச பதவிகளில் காலம் தள்ளியுள்ளனர். ஹக்கீம் அரசுடன் போய் ஒட்டிக் கொண்டுள்ளதும் அதன் வெளிப்பாடே ஆகும்//
    இதே ஹக்கீம் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு அமைச்சராக இருந்து கொண்டே கண்டனம் தெரிவித்ததும், கிராண்ட்பாஸ் தமிழ்க் கோயில் தாக்கப்பட்ட போது பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் கொடுத்ததும் நந்தாவுக்குத் தெரியாது போலும்….

    //இந்துக்களும், பவுத்தர்களும் “காபிர்கள்” அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மதம் மாற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. //.
    நந்தா… அல்குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது.. லா இஸ்லாஹ பித் தீன்.. அதன் அர்த்தம் இந்த மதத்தில் வற்புறுத்தல் இல்லை… இன்னொரு வசனம் உள்ளது.. லகும் தீனுக்கும் வலியத்தீன்… அதன் அர்த்தம் என்னவென்றால் உங்கள் மதம் உங்களுக்கு.. எங்கள் மதம் எங்களுக்கு.. இதனை சகோதரர் அலாவுதீன் அல்லது சகோதரர் நிஸ்தார் முன்னொரு தடைவ உங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் என்று நினைக்கின்றேன்.

    ஆக எவரையும் எதற்காகவும் வற்புறுத்தாதே என்பதுடன், அடுத்தவர் மதத்தை மதி என்பது தான் இஸ்லாமியப் போதனை நந்தா.. அங்கே யாரையும் மதம் மாற்றும் போதனை இல்லை..

    அப்படி நீங்கள் கூறுவதாக இருந்தால் ஒரு காலத்தில் ஆசியாவின் பெருநிலப்பரப்பை தம் ஆட்சியின் கீழ் வைத்திருந்த முஸ்லிம்கள் அப்பிரதேச மக்களை முற்றுமுழுதாக முஸ்லிம்களாக்கி இருப்பார்களே.. ஆனால் அப்படி நடக்கவில்லையே நந்தா.. பாக்கிஸ்தானில் கூட இந்துக்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு காலத்தில் டானிஸ் கனேரியா என்றொரு இந்து வீரரும் அந்த நாட்டின் கிரிக்கட் அணியில் விளையாடினார்.

    மத்திய ஆசியாவின் பல இடங்களிலும் மாற்று மத சகோதரர்களுடன் முஸ்லிம்கள் அந்நியோன்யமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதுதான் யதார்த்தம்.
    இவைகளுக்குப் பதில் அளிக்கும் வண்ணம் கால அவகாசம் அப்போது எனக்கு இருக்கவில்லை. அதுதான் இன்றைக்கு பதில கொடுத்துள்ளேன்..

    //தமிழ் இயக்கங்களில் எது “கடவுள்” அல்லது “அல்லா” என்று சொல்லிக் கொண்டு பயங்கர வாதத்தில் ஈடுபட்டது என்பது தெரியவில்லை//

    இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் சிவசேனை, பஜ்ரங்தள் என்றெல்லாம் இருப்பது நந்தாவிற்குத் தெரியாதோ.. அவையெல்லாம் கடவுளின் பேரால் தான் மாற்று மதத்தவர்களை உயிருடன் எரிக்கவும் செய்கின்றன. (ஒரிஸ்ஸாவில் தான் ஒரு பாதிரி குடும்பத்தோடு எரிக்கப்பட்டாரே..)

    இலங்கை பற்றிப் பேசிக் கொண்டிருக்க இந்தியாவை இழுப்பானேன் என்று நீங்கள் கேட்கலாம்… இலங்கை முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் போது எங்கோ இருக்கும் பாக்கிஸ்தானையோ அல்லது வேறு நாட்டையோ நீங்கள் இழுக்கும் போது இதுவும் அதுவும் ஒன்றுதான்…

    //நான் கேட்ட கேள்வி பணிப்பாளராக இருந்த நீங்கள் எவ்வாறு பொய்யான ஊடக அறிக்கைகள் வர அனுமதித்திருந்தீர்கள் என்பதே? பணிப்பாளர் என்பது பெரிய பதவி அன்பரே?//
    சாந்தன்.. எனக்கும் அவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. என்சார்பில் அவ்வாறு வெளியிடப்படவில்லை.. அரசாங்கமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தவறு செய்த போது சுட்டிக்காட்டும் மனோதிடம் எனக்கு இருந்தது. அதனைத் தான் இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன். இல்லாவிட்டால் யுத்தம் முடிவடைந்த நிலையில் அரசின் வரப்பிரசாதங்கள் அமோகமாக கிடைக்கவிருந்த நிலையில் அதனை விட்டு ஓடிவருவது இலகுவான விடயமல்ல. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்…

    //எனது கதையல்ல. அஷ்ரஃப் அலியின் கதை!//

    எனக்கு யாரும் அல்வா கொடுக்கவில்லை. நானாகத்தான் விலகி வந்துள்ளேன். பல தடவைகள் சொல்லி விட்டேன் நண்பரே..

    அரசாங்கம் நம் எல்லோருக்கும் தான் கொடுக்கப் போகின்றது… நாவற்குழி ஒரு உதாரணம் மட்டும் தான்..

    நீங்கள் குறிப்பிட்ட கண்டக்காடு விடயமும் அதில் ஒன்றுதான்..

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    சாந்தன், பாகிஸ்தானைக் கொஞ்சம் ஓரங்கட்டுவோம், இஸ்லாம் எனும் மதத்தையும் ஓரங்கட்டுவோம், இப்போதைக்கு நாம் பொதுவான சமூகக்கண்ணோட்டத்துடன் நீங்கள் அந்த பரிபாலன சபையின் தலைவராக உங்களை நாடி வந்த அந்த மக்களின் நம்பிக்கையை எவ்வாறு கையாள்வீர்கள் என்பதை, அவர்கள் விருப்பப்படியே தமது சமூகத்தினால் கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் “கடமையை” நீங்கள் முன் நின்று நடத்தி வைத்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? மறுப்பிறுத்தால் கூறுங்கள், நண்பர் பி.சியினது கருத்தையும் பார்த்து விட்டு தொடர்கிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… அந்த பரிபாலன சபையின் தலைவராக உங்களை நாடி வந்த அந்த மக்களின் நம்பிக்கையை எவ்வாறு கையாள்வீர்கள் ,…..//

    ஆம். அந்த அனுபவம் எனக்கிருக்கிறது. 70களின் பிற்பகுதி அல்லது 80களின் முற்பகுதியில் இந்து கலாச்சார அமைச்சினால் மேற்கொள்லப்பட்ட நடவடிக்கை ஒன்றான மிருகங்கள் பலியிடுதலைத் தடைசெய்யும் சட்டம் பற்றிய நிகழ்வு அது. கோவில்களில் மிருகங்கள் பலியிட முடியாது என சுற்றறிக்கை (சட்டம்) வந்தது. ஆனால் சட்டம் அமுலுக்கு வந்த அடுத்தகிழமை ஒரு கோவிலில் வேள்வி நடக்க இருந்தது. பணத்தைக் குறிக்கோளாகக்கொண்டு கடா கோழி வளர்த்தவர்கள், சமூக நம்பிக்கை எனநிற்பவர்கல், நேர்த்திக்கடன், தெய்வகுற்றம் என நிற்பவர்கள் ஒருபுறம், கோவில் உரிமையாளர் குடும்பம் (எனது நெருங்கிய உறவினர்)ஒருபுறம், இந்த சமூக பாரம்பரியம், தெய்வகுற்றம் எனும் மறைப்புக்குள் ஒளிந்து கடாவெட்டி தண்ணி அடிச்சு வயிறுபுடைக்க உண்ணும் கூட்டம் எல்லாவற்றையும் எதிர்த்து “வாய்பேசாத கடாவை வெட்டுவதை விட்டு உங்கள் தலையை வெட்டவேண்டியதுதானே “ எனக் கேட்டவன் நான்.
    இத்தனைக்கும் அன்றைய அரசுக்கும், கூட்டணியில் போட்டியிட்டு வென்று கட்சி தாவி அமைச்சராக வந்து மிருகப்பலி தடைச்சட்டம் இயற்றிய அமைச்சர் ராசதுரைக்கும் எதிரானவன் கூட.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அரசாங்கம் நம் எல்லோருக்கும் தான் கொடுக்கப் போகின்றது… நாவற்குழி ஒரு உதாரணம் மட்டும் தான்..
    நீங்கள் குறிப்பிட்ட கண்டக்காடு விடயமும் அதில் ஒன்றுதான்……// ashroffali

    இதைத்தானே நாம் தொண்டை கிழியச் சொல்லிப்பார்த்தோம். கேட்டீர்களா? இல்லையே . இனஒற்றுமை, பல்லின பல்கலாச்சார, இனங்களிடையேயான உறவு, சகவாழ்வு என பல சொல்லாடல்களுடன் களம் இறங்கி அப்போது அரசில் பணிப்பாளராக இருந்து ஊதுகுழல் அறிக்கைகள் விட்டீர்களே. இப்போதுதான் புரிகிறதாக்கும்!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா,
    10ம் திகதி நீங்கள் கேட்டது “இலங்கை, இந்தியாவில் இந்த முஸ்லிம்கள் யாரை “காபிர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்” என்பதே. காபிர் என்ற அறபு சொல்லுக்கு அடிப்படை விளக்கம் தெரிந்திருந்திருந்தால் இந்த கேள்வி உங்களிடம் இருந்து வந்திருக்காது. மேலும் இலங்கை, இந்தியா என்று இரண்டு நாடுகளிலும் இந்த வார்த்தைக்கான விளக்கம் வேறு படுகின்றதா என்று நீங்கள் கேற்பதையும் மனதில் வைத்து, மேலும் பலர் உங்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு, அதாவது மீண்டும், மீண்டும் ஒன்றை பலபேரிடம் கேட்டு விடயத்தை திசை திருப்பும் உங்கள் போக்கை எல்லோர் நலன் கருதி முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக ஒவ்வொன்றாக பதிலளிக்க முயன்றேன்.

    ஆனாலும் நீங்கள் 12ல் இப்படி கூறுகிறிர்கள், “அதாவது நான் சொன்ன விஷயத்தை இப்படி இழுத்தடித்து சொல்ல வேண்டியதிலை”. இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது “காபிர்” என்ற வார்த்தைக்கு உங்களுக்கு ஏற்கனவே அர்த்தம் தெரியும் என்பதும், நான் உங்களுக்கு சொன்ன அர்த்தமும் ஒன்றே என்பதுதானே. அப்படியானால் அனேகரின் உங்கள் மிதான குற்றச்சாட்டு இன்று நிரூபனமாகிவிட்டது என்பது மாத்திரமல்லாமல் இனி யாரையும் இந்த வார்த்தைக்கான அர்த்தம் கேட்டு கஸ்டப்படுத்தமாட்டீர்கள் என்பதுமே.

    எனவே இப்போது “ஜிகாத்” என்ற வார்த்தைக்கு வருவோம். இதை போராட்டம் என்றும் இது மனித வாழ்வில் நடக்கும் தினசரி விடயங்கள் தொடர்பானது என்றும் அதன் ஒரு வடிவமே ஆயுத போராட்டம் என்றேன். ஆனால் நீங்களோ இந்த வார்த்தையின் விளக்கம் “முஸ்லீம் அல்லாதோரை அழிப்பது” என்கின்றிர்கள். இதற்கு ஆதாரம் உங்களிடம் இல்லாமல் இருப்பதால், இதை சரியாக புரிந்து கொள்ள என்னால் முடிஉய்மானதை தருகிறேன். முகம்மதும் அவர் தோழர்களும் மக்காவில் இருந்து பலவந்தமாகா துரத்தப்பட அவர்கள் மதினா நகரத்தின் “காபிர்”களிடம் செல்கிறார்கள். அவர்கள் இவர்களை ஏற்று உதவி ஒத்தாசை செய்தது மாத்திரமன்றி முகம்மதின் போதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கு பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு கவலையுடன், மனப் போராட்டத்துடன் ,நீங்கள் இலங்கையை விட்டு கனடா போன மாதிரி என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொள்ளலாம், இங்கே இது ஜிகாத். ஆகவே உங்கள் விளக்கத்தின் படி முஸ்லிம் அல்லாதோரை கட்டித்தான் அணைத்தர்கள், வாள் கொண்டு அழிக்கவில்லை. (ஆனாலும் “கி(H)ஜ்ரா” என்ற வார்த்தை இந்த இடப் பெயர்வுக்கு வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்). இப்படி அடுத்த வெளிப்பெயர்வு “கி(H)ஜ்ரா” எதியோபியாவை நோக்கி அமைந்தது. அப்போதும் மனப் போராடத்துடந்தான், அதாவது, ஜிகா(H)த்” அங்கு நடந்தது. அங்கும் காபிர்களை அழிக்க வில்லை . அந்நாட்டு மன்னன் அன்போடு அழைத்து உபசரித்து, இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டான். இங்கும் வாள் இல்லாத மனிதத்தின் அடிப்படையில் விடயங்கள் நடந்தேறின.

    இப்போது உங்கள் தலபான் கூட்டாளிகளுக்கு வருவோம், அல்லாவின் பெயரிலேயே தலபான் குண்டு வைத்து ஜி(H)காத் செய்வதாக அவர்கள் கூறுவதாக நீங்கள் கூறுகிறிர்கள். இந்த உலகத்தில் இன்று 1.5 பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் இது 14,000 அல் கைடா திவிரவாதிகள் உள்ளடங்கிய கணக்கு என்று சி.ஐ.ஏ சொல்கிறது. தலபான்கள் எத்தனை பேர்? ஒரு 15-20,000 என வைத்துக் கொண்டாலும், மற்றவர் எல்லாம் என்னை போன்ற, அஸ்ரப் அலி, அலாவுதின், சகாப்தின் நானா போன்றோரே. சனநாயக முறைப்படி என்மைப் போன்ற பெரும்பான்மை சொல்வதை அசட்டை செய்துவிட்டு, தலபான் சொல்வதுதான் சரியென்றால் அனேகமாக நீங்களும் அவர்கள் போன்றவரே.

    அத்துடன் இஸ்லாத்தின் போர் தற்பாதுகாப்புக்கானது , இதைத்தானும் 1990ல் யாழ் முஸ்லிம்கள் செய்யவில்லை.நீங்கள் சொல்வது போல் காபிர்களை அழிப்பதுதான் ஜி(H)காத் என்றால் இன்நேரம் நீங்களும் நானும் இங்கு சந்தித்திருக்க மாட்டோம்.

    அல்லாது நீங்கள் சொல்லும் விளக்கம் தான் சரி என்றால் பின்வரும் சின்ன உதாரணத்தின் மூலம் ஏதாவது விளங்க முயற்சியுங்கள். அதாவது. இரட்டை கோபுர அழிவிடத்தில் மஸ்ஜிதுகட்டுதலுக்கு எதிரான ஆர்பாட்டகாரர்களில் ஒரு பொண்ணிடம் பேட்டி கண்டார்கள்.

    கேள்வி: இந்த இடத்தில் மஸ்ஜிது கட்டுவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?
    பதில்: என் சகோதரன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இடம் இது. இங்கு மஸ்ஜிது கட்ட அனுமதிப்பது என்னால் தாங்கமுடியாது. அவர்கள் வேறு எங்காவது கட்டலாம்.

    கேள்வி: உங்கள் சகோதரர் “பெண்டகொன்” கட்டிடத்தில் அல்லவா கொல்லப்பட்டார்.
    பதில்:…….

    கேள்வி: பயங்கரவாதிகளுக்கும் இனி கட்ட போகும் மஸ்ஜிதுக்கும் என்ன தொடர்பு?
    பதில்: தெரியாது.

    Reply
  • BC
    BC

    //இந்தப் பழக்கம் (தலையில் தேங்காய் உடைப்பது போன்ற) குறிப்பிட்ட சமூகத்தாரிடம் எப்படி வந்தது? என்று ஒரு கேள்வி எழும். ஒரு வேளை அதற்கு மதம் தான் காரணம் என்று இருந்தாலும் கூட, நாளடைவில் இது தமக்கு சரி யெனப்பட்டதாலும் இதன் மூலம் தமது பாவத்துக்கான பிராயச்சித்தம் கிடைக்கிறது என்று அவர்கள் நம்புவதாலும் இதைச் செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோம். //
    அலாவுதீன், அப்படி தான் இந்த பழக்கங்கள் வந்திருக்க வேண்டும் என ஏற்று கொள்கிறேன். அப்படிதான் சில பழக்கங்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவோரிடமும் வந்திருக்க வேண்டும் என்பதையும் ஏற்று கொள்கிறேன்.
    வீடியோவில் காணப்படுவோர் போன்றோரை கொண்ட சமுதாயத்திற்க்கு தலைவர் மாதிரி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கடினமான கேள்வி கேட்டுள்ளீர்கள். ஏன் என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை பின்பற்ற விரும்புவோருக்கு அதை நிறைவேற்றி கொடுக்கும் தலைவராக நான் எப்படி வருவது என்பதாகும். இப்படிபட்ட சமூகத்தின் நம்பிக்கையை நிறைவேற்றும் பிரதிநிதிகளாக இருப்பதும் கடினமான விடயம் என்பதை விளங்கி கொள்கிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..அதாவது. இரட்டை கோபுர அழிவிடத்தில் மஸ்ஜிதுகட்டுதலுக்கு எதிரான ஆர்பாட்டகாரர்களில் ஒரு பொண்ணிடம் பேட்டி கண்டார்கள். ….//

    அதுதான் அமெரிக்கா நண்பரே!
    அமெரிக்க ஜனாதிபதி கூட மசூதி கட்ட உரிமை உண்டென்கிறார். நியூயோர்க் நகர மேயர் (ஒரு யூதர்) மசூதிகட்ட அனுமதிப்பேன் என்கிறார். வெறும் சொல்லுடன் நிற்காமல் அதற்கான நடவடிக்கைகான அரசியலமைப்பு, நிதிவிவகாரங்களிலும் ஆக்கபூர்வ முயற்சி எடுத்து வருகிறார். (ஸ்ரீலஙகா ஜனாதிபதிகள் போல் ஊதுகுழல் அறிக்கைகள் விடுபவர்கள் அல்லர்)
    சவூதியில் நடக்குமா? அமெரிக்கா குண்டு போட்ட இடத்தருகே ஒரு சேர்ச் கட்ட அனுமதி உண்டா?
    இல்லை வெளிப்படையாக கிறிஸ்தவ பிரார்த்தனைக்கு ஆவது இடமுண்டா?

    Reply
  • நந்தா
    நந்தா

    //இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் சிவசேனை, பஜ்ரங்தள் என்றெல்லாம் இருப்பது நந்தாவிற்குத் தெரியாதோ.. அவையெல்லாம் கடவுளின் பேரால் தான் மாற்று மதத்தவர்களை உயிருடன் எரிக்கவும் செய்கின்றன. (ஒரிஸ்ஸாவில் தான் ஒரு பாதிரி குடும்பத்தோடு எரிக்கப்பட்டாரே..)//

    இலங்கயில் உள்ள தமிழ் இயக்கங்கள் பற்றிய கேள்விக்கு ஒரு முஸ்லிமின் பதில். தவிர மேல் சொன்ன இந்திய இயக்கங்களினை யாரும் இலங்கயில் பின்பற்றுவது கிடையாது.

    ஆனால் ஷல்மான் ரஷ்டிக்கு இரானிய அயொத்தல்லா மரண தண்டனை விதித்த போது இலங்கை முஸ்லிம்கள் மவுனம் மூலம் சம்மதமே தெரிவித்தனர்.

    அவுஸ்திரேலிய பாதிரிகள் இந்தியாவில் இந்துக்களிடம் உனது மதம் கேவலமானது என்று கூறி மதமாற்றம் செய்ய முயன்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதற்காக இந்திய அரசு அவர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுத்துள்ளது.

    சவுதி அறெபியாவில் மற்றைய மதத்தவர்கள் தங்கள் வழிபாடுத் தலங்களைக் கட்ட முடியுமா? தங்களுடைய மதங்களைக் கூட அனுசரிக்க முடியாது!

    காபிர்களைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கேட்கிறது. அதற்கு ஆதாரம் குரானும், கதீசுகளும்தான். காபிர்களை என்ன செய்ய வேண்டும் எனறு இஸ்லாம் கேட்கிறது என்பதற்கு இந்த முஸ்லிம்கள் பதில் தராது நீட்டி முழக்குவது உண்மையை மறைப்பதற்கே ஆகும்! காபிர்கள் பற்றி இவர்கள் ஆதாரங்களை வெளியிட தயங்குவது எதற்காக?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…என்சார்பில் அவ்வாறு வெளியிடப்படவில்லை.. …///

    நீங்கள் தானே ‘பணிப்பாளர்’ அப்போது வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை அல்லவா? அவற்றை எதிர்த்து ஏன் ராஜினாமச் செய்யவில்லை. செய்ய மாட்டீர்கள் என்பது தெரிந்த்ட்துதானே. அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ தான் உங்கள் குறிக்கோள்!

    ///…இல்லாவிட்டால் யுத்தம் முடிவடைந்த நிலையில் அரசின் வரப்பிரசாதங்கள் அமோகமாக கிடைக்கவிருந்த நிலையில் அதனை விட்டு ஓடிவருவது இலகுவான விடயமல்ல. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்…///

    நிச்சயமாக இலகுவானதல்ல. அதனால்த்தான் சொல்கிறேன் நீஙள் ஓடிவந்தது அதனையும் தாண்டிய ஒன்று. நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள் கொலைகூடச் செய்யப்படலாம் என! உயர் அதிகாரிகள் சேட் கொலரைப்பிடித்து அடித்திருக்கிறீர்கள். ஆனால் அதையும் தாண்டி உங்கலைக் கொலை செய்யும் அளவுக்கு…..

    Reply
  • ashroffali
    ashroffali

    //இலங்கயில் உள்ள தமிழ் இயக்கங்கள் பற்றிய கேள்விக்கு ஒரு முஸ்லிமின் பதில். தவிர மேல் சொன்ன இந்திய இயக்கங்களினை யாரும் இலங்கயில் பின்பற்றுவது கிடையாது.//
    சபாஷ் நந்தா… சரியான சறுக்கல்… இது இன்னொரு சறுக்கல்.. இந்திய இயக்கங்களினை இலங்கையில் யாரும் பின்பற்றுவதில்லை என்று கூறும் நீங்கள் எதற்காக எங்களை மட்டும் எங்கோ ஒரு தேசத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்…? இதைத்தான் நாங்களும் சொல்லி வருகின்றோம். அதனை இனியாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.

    //ஆனால் ஷல்மான் ரஷ்டிக்கு இரானிய அயொத்தல்லா மரண தண்டனை விதித்த போது இலங்கை முஸ்லிம்கள் மவுனம் மூலம் சம்மதமே தெரிவித்தனர்.//
    அது ஆயத்துல்லாஹ்வின் விடயம். எங்களுக்கும் அந்த மரண தண்டனை தீர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. விதித்தது ஈரான் நாட்டில் உள்ளவர். அவ்வளவுதான்.

    அடுத்தது நாங்கள் மெளனம் சாதித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்..? அதற்கு எதிராக கருத்துச் சொல்வதானால் இலங்கையில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களினதும் கருத்துக்களை வெளியிட ஊடகங்கள் தயாராக இருந்தனவா..? இல்லை அது பற்றி யாரிடமாவது கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தனவா? இல்லையே…

    //அவுஸ்திரேலிய பாதிரிகள் இந்தியாவில் இந்துக்களிடம் உனது மதம் கேவலமானது என்று கூறி மதமாற்றம் செய்ய முயன்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதற்காக இந்திய அரசு அவர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுத்துள்ளது.//
    மிகவும் சரியான தண்டனை. முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரையில் மாற்றுமதங்களை விமர்சிக்கும் முஸ்லிம்கள் கசையடிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது வழமை. அந்தளவுக்கு மாற்று மதங்களை இஸ்லாம் மதிக்கின்றது.

    //சவுதி அறெபியாவில் மற்றைய மதத்தவர்கள் தங்கள் வழிபாடுத் தலங்களைக் கட்ட முடியுமா? தங்களுடைய மதங்களைக் கூட அனுசரிக்க முடியாது!//
    அங்குதான் மாற்று மதத்தவர் யாரும் இல்லையே நந்தா.. அதற்குப் பின் வணக்கத்தலம் எதற்காக?

    //காபிர்களைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கேட்கிறது. அதற்கு ஆதாரம் குரானும், கதீசுகளும்தான்//
    நாங்களும் பொதுப்படையாக பகவத்கீதை மீதும் ரிக் மற்றும் யசூர் வேதங்கள் மீதும் பொதுப்படையாக குற்றச்சாட்டுகளை முன் வைக்க முடியும் நந்தா.. ஆனால் நான் அந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போகாமல் என் மதம் தடுக்கின்றது. குர்ஆன் ஹதீஸ் என்றால் அதில் எந்தெந்த இடங்களில் நீங்கள் சொல்வதற்கான ஆதாரம் வருகின்றது என்று தான் கேட்கின்றோம்.

    அப்படியான ஒரு ஆதாரத்தை நீங்கள் அல்ல எவருமே காட்ட முடியாது நந்தா.. அப்படியான கீழ்த்தரமான போதனைகள் அவற்றில் இல்லை.. இஸ்லாம் என்பதே சாந்தி சமாதானம் என்று தான் அர்த்தம். முஸ்லிம் என்றால் சாந்தமானவன் என்றும் கொள்ளலாம். அதனால் தான் இன்னல்லாஹ மஹஸ்ஸாபிரீன் என்றொரு குர்ஆன் வசனம் உண்டு. அதாவது தான் நிந்திக்கப்படும் சமயங்களில் கூட பொறுமையோடிருக்குமாறும் அவ்வாறு பொறுமையோடிருப்பவருடன் அல்லாஹ் இருப்பதாகவும் குர்ஆன் வலியுறுத்துகின்றது.

    //காபிர்களை என்ன செய்ய வேண்டும் எனறு இஸ்லாம் கேட்கிறது என்பதற்கு இந்த முஸ்லிம்கள் பதில் தராது நீட்டி முழக்குவது உண்மையை மறைப்பதற்கே ஆகும்! //
    மாற்று மதத்தவருடன் நல்லிணக்கமாக வாழும் படிதான் போதித்திருக்கின்றது என்று நாங்கள் சொல்கின்றோம். இல்லையென்று நீங்கள் வாதிடுகின்றீர்கள். அதற்கான ஆதாரங்கள் மட்டும் உங்களிடம் இல்லை. கிளிப்பிள்ளை பாடமாயிற்றே.. அதுதான். ஆனால் எங்கள் வாதங்களுக்கான ஆதாரங்களை நாங்கள் எடுத்து வைத்தாயிற்று. அதையெல்லாம் நீங்கள் வாசிக்கவில்லையா… இல்லை வாசிக்காமலேயே தான் கருத்துச் சொல்ல வருகின்றீர்களா..? ஏனெனில் நாங்கள் பதிலளித்த பின்னும் அதே கேள்விகளை நீங்கள் திரும்பத்திரும்ப முன் வைப்பதிலிருந்து அப்படித்தான் யோசிக்க வேண்டியிருக்கின்றது…

    //அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ தான் உங்கள் குறிக்கோள்!//

    சாந்தன்.. அதற்கான வருமானம் எங்கிருந்து கிடைத்தது என்பதை நான் முன்பே உங்களுக்கு விளக்கமாக சொல்லிவிட்டேன். எனவே அது எனக்குப் பொருந்தாது.

    ஜனாதிபதிக்கும் எனக்குமிடையிலான நட்பு சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேற்பட்டது. எனது தந்தையின் நண்பர்களில் ஒருவர் என்ற வகையில் சிறு வயது முதல் அவருடன் நெருக்கமான தொடர்பு எனக்கிருந்தது. அதன் காரணமாக அவரை விட்டு விலகி வருவதை விட சில விடயங்களை நல்ல முறையில் சொல்லிப் புரிய வைக்க முயன்றேன். அது முடியவில்லை. விலகி வந்து விட்டேன். உங்கள் நண்பர் ஒருவர் தவறொன்று செய்தவுடன் அவரை விட்டு விலகுவது நாகரீகம் இல்லை தானே சாந்தன்.. முதலில் அவரது தவறைத் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்;. அதைத் தான் நான் செய்தேன்.

    ஜனாதிபதி அடிப்படையில் நல்லவர். அதனால் தான் அவருடன் பேரபிமானம் கொண்டிருந்தேன். தன் அலுவலகத்தில் தமிழ் ஊடகப் பொறுப்பை என்னிடம் தந்தார். ஏற்றுக் கொண்டேன். தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்குவேன் என்றார். நம்பினேன். தற்போது வழங்காமலிருக்க முயல்கின்றார். வெளியேறி வந்து விட்டேன். என் மனசாட்சிப்படி தான் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவெடுத்தேன்.

    அன்றைய காலகட்டத்தில் மஹிந்தவிற்குப் பதிலாக ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் தமிழ் மக்கள் இதை விட பேரழிவை எதிர்கொண்டிருப்பார்கள். அதை முதலில் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக நான் மஹிந்தவுடன் இணைந்து பணியாற்றினேன். மற்றபடி தனிப்பட்ட லாபம் கருதியல்ல..

    அப்படி தனிப்பட்ட லாபம் தான் நோக்கம் என்றால் நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று தற்போதும் விலகி வந்திருக்க மாட்டேன். எங்காவது ஒரு தூதுவராலயத்தில் உயர் பதவியில் இருந்திருப்பேன்.

    மற்றது உயர் அதிகாரிகளை கை நீட்டி அடித்த விடயம்.. அரசாங்கத்துடன் ஒட்டி இருக்கும் வரையில் எதைச் செய்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியும் தானே சாந்தன்.. பிறகென்ன.. அதெல்லாம் ஒரு பெரிய விடயமா..? நீங்கள் விசாரித்துப் பார்த்தால் தெரியும்..
    ஜனாதிபதி அலுவலகத்தில் நான் ஒரு செல்லப்பிள்ளையாகத் தான் இருந்தேன். யாரும் என்னை எதற்காகவும் விசாரித்ததில்லை. விமர்சித்ததில்லை. ஆனால் என் மேல் பொறாமை கொண்டு கோள் மூட்டியவர்கள் ஏராளம். அது எங்கும் உள்ள இயல்பு தானே…

    //ஆனால் அதையும் தாண்டி உங்கலைக் கொலை செய்யும் அளவுக்கு…..//

    தமது நலன் என்று வரும்போது உயிருக்குயிரான நண்பனைக் கூட கொலைசெய்யத் தயங்காதவர்கள் நம்மத்தியில் இல்லையா? அது போலத் தான் இதுவும். அரசாங்கத்தின் நலன் கருதி நான் பலியாக்கப்பட வேண்டிய நிலை.. அதற்கு அரசாங்கம் தயார்.. பலியாக நான் விரும்பவில்லை.. ஓடி வந்து விட்டேன்..

    இவையெல்லாம் நான் அரசாங்கத்தின் போக்குகளை எதிர்த்த காரணத்தால் தான் அனைத்தும் தலைகீழாக மாறியது. இல்லாவிட்டால் நான் இன்றும் அங்கேதான். அனைத்து வசதிகளுடனும் அமோகமாக வாழ்ந்திருப்பேன்..

    Reply
  • அலாவுதீன்
    அலாவுதீன்

    நண்பர்கள் சாந்தன் மற்றும் பி.சி ஆகியோருக்கு நன்றிகள், இப்பேற்பட்ட ஒரு விடயத்தைக் கையாள்வது எவ்வளவு கடினம் என்பது மாத்திரமன்றி, அவ்வாறான நிலையில் சமூக “நம்பிக்கையின்” மீதான நமது “அணுகுமுறை” தவிர்க்க முடியாத சார்பு நிலையையும், அல்லது தீர்வே சொல்ல முடியாத இக்கட்டான நிலைக்கும் தள்ளப்படுவதால், பெருவாரியான “நம்பிக்கை” எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே நாமும் “இசைந்து” செல்லும் தேவையை நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது சமூகம் நமக்குத் தருகிறது என்பதை இருவரும் ஒரு சேர முன் வைத்திருக்கிறீர்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நிஸ்தார்/முஸ்லிம்கள் தம்மை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்த விரும்புவது தமிழர் தம்மை மொழி அல்லது இன ரீதியாக அடையாளப்படுத்த விரும்புவதை ஒத்தது. நான் பல முறை பலரிடம் கேட்டும் பதில் வராத விடயம் ஏன் மதம் முன்னிலை படுத்தப் படக்கூடாது அல்லது ஏன் மொழி அல்லது இனம் முதன்மை பெற வேண்டும்? karu நீங்களாவது விடை தாருங்கள்/ கரு பதில் தருகிறாரோ இல்லையோ. நான் அதே கேள்வியை உம்மிடமும் கேட்கிறேன் நிஸ்தார்.
    எல்லாவற்றுக்கும் ஒரு வரைவு இலக்கணம் உண்டு. மதம் என்பது நம்பிக்கைக்கு உரியது அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் இனம் என்பது உண்மையாக இருப்பது இனத்துக்கு உயிர்நாடியும் உணர்வாகவும் இருப்பது மொழி. உணர்வுகள் மொழி மூலமே பகிர்ந்து கொள்ளப்படுவதால் அந்த உயிர்நாடியான மொழிவை வைத்தே இனம் வரையறுக்கப்படுகிறது. இதை பலதடவை உம்முடன் வாதிடும் போது கூட எழுதியிருந்தேன். இப்போ இராமன் சீதைக்கு என்ன முறை என்று கருவிடம் கேட்கிறீர்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    துரை முஸ்லீம்களின் பிரச்சனையை தனியப்புலிகளின் தலையில் போடுவது நியாமற்றது. தேசத்தின் பின்நோட்டதாரர்கள் பலர் முஸ்லீங்கள் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறீர்கள். இஸ்லாம் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது. ஐரொப்பாவிலும் சரி உலகில் எந்தக் கண்டத்திலும் சரி எங்கே முஸ்லீம்கள் மற்றய மதம் இனத்துடன் சகோதரத்துவத்துடன் இருந்தார்கள். அதற்கான அடிப்படைக் காரணிகள் எதுவுமே முஸ்லீம்களிடன் இல்லை. அவர்கள் மதத்தை மட்டும் முன்னிறுத்தி மனிதத்தைத் முக்கியமாகப் பெண்களை அவமதிக்கும் பண்பு பண்டைய காலம் தொட்டு வந்திருக்கிறது. சகோதரத்துவம் இன ஒருமைப்பாடு பேசுவது விளலுக்கு இறைத்த நீரே. தமிழ்மக்கள் அனைவருக்கும் நான் தேசத்தினூடாகச் சொல்லும் தகவல் என்ன என்றால் தமிழர்களாகிய நாம் சிங்களவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழமுடியும் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகள் உடன்பட்டால். ஆனால் முஸ்லீங்களுடன் நாம் மட்டுமல்ல எநத இனமுமே சேர்ந்த வாழமுடியாது என்பது எனது அனுபவம் மட்டுமல்ல உலகமே கண்ட உண்மை. அவர்களை தனித்து தனிய அவர்களின் வழியில் வீடுவதே நல்லது. இல்லையேன்றால் ஒட்டகத்துக்கு தலை நுளைய வளிவிட்டதாகி விடும்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் சாந்தன்,

    12ம் திகதிய உங்கள் பின்னூட்டத்தில் “அது தான் அமெரிக்கா நண்பரே”, தொடர்ந்து “சவூதி அரேபியாவில் இது நடக்குமா? அமெரிக்காவில் குண்டு போட்ட இடத்தருகே ஒரு சேர்ச் கட்ட அனுமதியுண்டா? இல்லை வெளிப்படையாக கிறிஸ்தவ பிராத்தனைகள் செய்ய இடம் உண்டா” என்றும் கேட்கிறீர்கள்.

    ஆக அமெரிக்கருக்கு இருக்கும் அதே பார்வையைத்தான் உங்கள் போன்றோரிடமும் எதிர்பார்க்கின்றோம்,அதாவது பயங்கரவாதிகளையும், சாதாரண குற்றமற்ற பிரைஜைகளையும் பிரித்தறியும் திறண். சட்டத்தை மதித்து நடப்பவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் தன்மை மாத்திரமல்ல அதை அவர்கள் அடையவேண்டும் என்பதற்காய் எடுக்கும் நடவடிக்கை. இந்த தேசம்நெற்றில் துணிந்து கருத்து சொல்லும், துரை, மாயா, அக்கு போன்றோரின் புரிந்துணர்வு போன்றது.

    போர்குற்றவாளி ஜோர்ஜ் புஸ் இரட்டை கோபுர அழிவின் கையோடு அமெரிக்க மசூதி ஒன்றில் உரையாற்றினார். அப்போதும் கூட இஸ்லாம் அமைதியை வழியுறுத்தும் மார்க்கம். பயங்கரவாதிகளால் பாதிக்கப்ப்ட்டோர் இதை இஸ்லாத்துடன் சம்பந்தப் படுத்த தேவையில்லை என்றார். அந்தளவுக்கு கூட நியாமில்லாதவர்களிடம் இன ஒற்றுமைகான கை நீட்டலை எவ்வாறு எதிர்பார்ப்பது.

    உங்கள் அடுத்த கேள்வி தெளிவில்லாதது. குண்டு போட்ட இடத்தில் சேர்ச் கட்ட அனுமதியுண்டா என்றால் அதை அமெரிக்க அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். மற்றும் ஏற்கனவே இருக்கும் சேர்ச்சுகள் வெறிச்சோடி கிடக்கும் போது ஏன் பணத்தை வீண்ணடிப்பான்.

    கிறிஸ்தவ பிரார்த்தனை சம்பந்தமான கேள்வி சவூதி அரசாங்கத்திடம் என்றால் எங்களால் எப்படி பதில் கூற முடியும். மற்றும் வேற்று மதத்தார் மக்காவில் எங்களுக்கு கோயில் கட்ட இடம் தாருங்கள் என்றா கேற்கிறார்கள்? மக்கா முஸ்லீம்களுக்கான புண்ணிய பூமி அதில் இலங்கையர் அல்லது இத்தாலிகாரர் போய் எப்படி கோயில் கட்ட அனுமதி கேட்க முடியும்? இந்தியாவின் சைவ திருத்தலங்கள் உள்ள இடங்களில் எல்லாம் போய் நாங்கள் மசூதி கட்ட அனுமதி கோட்பது எவ்வளவு அனாகரிகமானதோ, வத்திக்கான் நகரிலும், அதை சூழவுள்ள பகுதிகளிளும் போய் சைவ கோயிலோ அல்லது சீக்கிய குருதுவாரா அமைக்க அனுமதி கேட்பதற்கு ஒப்பான அனாகரிகமான விடயம்.

    அல்லது இந்த கேள்வி அமெரிக்காவுக்கெனில் அதை அவர்களிடம் கேட்பது நன்று.

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கை இந்தியாவில் காபிர்கள் யார் என்பதற்குப் பதிலைக் காணோம்! இவர்களால் பதில் தர முடியாது. வெறும் பசப்பல்களே எழுதுவார்கள். பாகிஸ்தானியிடம் கேட்டால் உடனேயே “இந்துக்கள்” என்று பதில் சொல்லுகிறான்.

    அடுத்து என்னிடம் ஆதாரம் கேட்கும் இவர்கள், காபிர்களை என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது என்பதற்கு தாங்களாகவே கதீசில் இந்த பிரிவில் அல்லது குரானின் அந்தப் பிரிவில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது அல்லது இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்து விட முடியாமல் வெறுமனே “பொய்” என்று எழுதி புரட்டு செய்வதன் நோக்கம் என்ன?

    மகிந்த ராஜபக்ஷ எதற்காகத் துரத்தினார் என்பது இப்பொளுது புரிகிறது!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன்.. அதற்கான வருமானம் எங்கிருந்து கிடைத்தது என்பதை நான் முன்பே உங்களுக்கு விளக்கமாக சொல்லிவிட்டேன். எனவே அது எனக்குப் பொருந்தாது. ..//

    ஆஹா….எப்படி எல்லாம் கதை விடுகிறீர்கள். முன்னர் ஏதோ இனமானம் கருதி உயர்பதவியை தூக்கி எற்ந்ததாகக்கூறினீர்கள். உயர் அதிகாரிகளை சேட்கொலரைப் பிடித்து பாதுகாப்பை துச்சமாக மதித்து தாக்கினீர்கள் என்றீர்கள். பின்னர் உயிரையே அடமானம் வைத்து மக்களுக்கு உதவினீர்கள் என்றெல்லாம் கதை விட்டீர்கள். அட இவ்வளவு மானஸ்தன், மனிதாபிமானியாக இருக்கிறாரே இந்த அஷ்ரஃப் அலி என்று பார்த்தால் ’ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை’ என உண்மையை போட்டுடைத்து எல்லாவற்ரையும் கவிழ்த்துவிட்டீர்களே?
    இப்போது இன்னும் நிறையப் புரிகிறது. இவ்வளவும் தானா இன்னும் உண்டா நண்பரே?

    //…அவ்வாறே நாமும் “இசைந்து” செல்லும் தேவையை நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது சமூகம் நமக்குத் தருகிறது என்பதை இருவரும் ஒரு சேர முன் வைத்திருக்கிறீர்கள்…//

    என்ன அலாவுதீன் நான் எங்கு அவ்வாறு சொன்னேன்? பல கேள்விகள் கேட்டிருந்தீர்கள் பின்னர் ஒருசேர பலவாக எனக் கதை விடுகிறீர்கள். என்னை நேரடியாகக் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் தந்தேனே. எனது பதில்கள் ச்மூக முறைகளை மறுதலிப்பதாக அல்லவா இருந்தது. மேலும் என்னைத் தலைவராக்கி கேள்வி கேட்டிருந்தீர்கள். பின்னர் ஸ்ரீலங்கா அரசு செய்வதுபோல் ‘அவரே புலி என ஒத்துக்கொண்டு விட்டார்’ என்பது போல என்னைப்பற்ரியே எந்தலையில் எழுதுகிறீர்கள்.

    //…அடுத்தது நாங்கள் மெளனம் சாதித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்..? …//

    மெளனம் சாதித்தீர்களா? அதாவது பரவாயில்லை. கொழும்பு வீதிகளில் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் எனவும் மரணதண்டனை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தும் அல்லவா போராட்டம் நடத்தினீர்கள்? இதன் விளைவாக அப்புத்தகம் ஸ்ரீ லங்காவில் தடை செய்யப்பட்டது. இதுவும் தெரியாமலா ஜனாதிபது உங்களுக்கு ஊடகத்துறைப்பணிப்பாளர் பதவி கொடுத்தார். சொல்லப்போனால் ஸ்ரீலங்காவில் தகுதிக்கு என்ன மதிப்பு. செல்லப்பிள்ளைகளுக்கே பதவி!

    //…அதற்கு எதிராக கருத்துச் சொல்வதானால் இலங்கையில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களினதும் கருத்துக்களை வெளியிட ஊடகங்கள் தயாராக இருந்தனவா..? இல்லை அது பற்றி யாரிடமாவது கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தனவா? இல்லையே….//

    ஊடகங்களே ஊதுகுழல்கள் தானே. ஊடகத்துறை கேட்கவே வேண்டாம். இதில் கருத்துக்கணிப்பாம்? சரி ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை இவ்வளவு மோசம் கருத்துக்களை வெளியிட தயாரில்லாதவை என்கிறீர்கள். நீங்கள் ஜனாதிபதியின் ஊடகத்துறையின் செல்லப்பிள்ளை. உங்கள் ஊடகத்துறை ஸ்ரீலங்கா போரின் போது மக்கள் கருத்தை கவனத்தில் எடுத்ததா? அல்லது மாற்ரத்தைக் கொண்டுவர நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள். அதுதான் ஓடிவந்து விட்டேன் எனச் சொல்ல வேண்டாம். முன்னர் ஒரு முறை கேட்டதற்கு ஏன் தேசத்தில் எழுதினேனே? எனப் பதில் சொல்லி இருந்தீர்கள். ஊடகப்பணிப்பாலர் எஸ்.எம்.ஏ பால்பேணிக்கனவில் தனது ஊடகத்திலேயே எழுதமுடியாமல் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு இணைய ஊடகத்தில் எழுதும் கேவலாமான பணிப்பாளர் பதவியில் இருந்தீர்கள் இல்லையா?

    //ஆக அமெரிக்கருக்கு இருக்கும் அதே பார்வையைத்தான் உங்கள் போன்றோரிடமும் எதிர்பார்க்கின்றோம்,…//

    அதே பார்வையையே அமெரிக்கர்களும் உங்களிடம் கோருகிறார்கள். கொடுக்கிறீர்களா? இல்லையே. காலை எழுந்தவுடன் ஏகாதிபத்தியம் பயங்கரவாதி, உலகமகா கொடுங்கோலன்.என வசைபாடியே துதிக்கிறது இஸ்லாமிய உலகம். அண்மையில் இந்தோனேசியா சென்ற ஒபாமாவின் மனைவிக்கி கலாகுகொடுத்ததற்கே மன்னிப்புக்கோர வேண்டிய வந்தது அமைச்சர். சொல்லப்போனால் அவராகவே மிஷேல் ஒபாமாவின் கையை தனது இருகைகளாலும் பற்றினார். அதேபோல ஒரு முறை (இரட்டைக்கோபுரத்தாக்குதலின் பின்னர்) ஜோர்ஜ் புஷ் தனது ஓய்வுக்குச் செல்லும்போது அவரின் கைகளில் குர் ஆன் இருந்த படம் வெளிவந்தது. அப்போது ஐயையோ சாத்தான் குரானை தீண்டிவிட்டான் அதன் புனிதமே கெட்டுவிட்டது எனக் கத்தினார்கள் ஒரு கூட்டம். இன்னொரு கூட்டமோ அமைதி…….அமைதி….அல்லாவின் மகிமையே மகிமை உலகின் பலமிக்க தலைவனையே தன்பக்கம் திருப்பிவிட்டா்ர் நமது கடவுள் என சொல்லி நமக்கு சிரிப்பை வரவழைத்தனர்.

    //…. இந்த தேசம்நெற்றில் துணிந்து கருத்து சொல்லும், துரை, மாயா, அக்கு போன்றோரின் புரிந்துணர்வு போன்றது….//
    ஏன் எனக்குப் புரிந்துணர்வு இல்லை என்கிறீர்கள். ஆனால் புரிந்துணர்வு என்பது இரட்டை வழிச் சாலை அல்லவா?

    //….போர்குற்றவாளி ஜோர்ஜ் புஸ் இரட்டை கோபுர அழிவின் கையோடு அமெரிக்க மசூதி ஒன்றில் உரையாற்றினார். அப்போதும் கூட இஸ்லாம் அமைதியை வழியுறுத்தும் மார்க்கம். பயங்கரவாதிகளால் பாதிக்கப்ப்ட்டோர் இதை இஸ்லாத்துடன் சம்பந்தப் படுத்த தேவையில்லை என்றார். அந்தளவுக்கு கூட நியாமில்லாதவர்களிடம் இன ஒற்றுமைகான கை நீட்டலை எவ்வாறு எதிர்பார்ப்பது. …//

    மேலே சொன்னதுபோல அமெரிக்கா உங்களின் கைநீட்டலை எதிர்பார்க்கிறது. எப்போது கொடுப்பீர்கள். வலிந்து பிடித்துவிட்டே நான் பிடிக்கவில்லை மிஷேல் ஒபாமாதான் என்னைப்பிடித்தார் என அழவேண்டி இருக்கிறது உலகின் அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் நாட்டில்!

    //….உங்கள் அடுத்த கேள்வி தெளிவில்லாதது. குண்டு போட்ட இடத்தில் சேர்ச் கட்ட அனுமதியுண்டா என்றால் அதை அமெரிக்க அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்…///

    கேள்வி தெளிவற்றி இருந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
    அதாவது இஸ்லாமிய நாடொன்றில் அமெரிகாவால் குண்டுவீசி மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் (2000 பேர் எனவையுங்கள்) சேர்ச் கட்ட அனுமதி உண்டா?

    //..மற்றும் ஏற்கனவே இருக்கும் சேர்ச்சுகள் வெறிச்சோடி கிடக்கும் போது ஏன் பணத்தை வீண்ணடிப்பான்…//

    அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. சேர்ச் காசெல்லாம் இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்காலதேஷ் போன்ற நாடுகளின் வெள்ள நிவாரனத்துக்கும் கென்யா, நைஜீரியா, சோமாலியா போன்ற நாடுகளின் வரட்சி நிவாரனத்துக்கும் கொடுக்கிறார்கள். அவை அங்கே வீனடிக்கப்படுவது தனிக்கதை!

    //…..கிறிஸ்தவ பிரார்த்தனை சம்பந்தமான கேள்வி சவூதி அரசாங்கத்திடம் என்றால் எங்களால் எப்படி பதில் கூற முடியும். மற்றும் வேற்று மதத்தார் மக்காவில் எங்களுக்கு கோயில் கட்ட இடம் தாருங்கள் என்றா கேற்கிறார்கள்? …//

    மக்காவில் என்ன மக்காவில், ச்வூதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டு பணியாலர்கள் (அனேகமானோர் பிலிப்பைன்ஸ் பெண்கள்வெளிப்படையாக தமது மத (கிறிஸ்தவ) பிரார்த்தனை நடத்த முடியாமல் தனிப்பட்ட வீடுகளில் ஒளிந்திருந்து பிரார்த்திக்க வேண்டி இருப்பது நிஸ்தாருக்கு தெரியவில்லைப் போலும். அதற்கே இடமில்லை கோவிலுக்கு இடம் கேட்டால் தருவார்கள் என நினைக்கிறீர்களா?
    இன்னொரு சுவாரசியமான விடயம் அரங்கேற இருக்கிறதாக அறிந்தேன். நியூயோர்க்கில் ம்சூதிகட்ட அனுமதி அளிக்கக்கோரி ஆதரவுப்போராட்ட குழுவிடம் இந்த பிலிப்பைன்ஸ் தொழிலாலர்கள் (ஏறத்தாழ 9.5 லட்சம் பேர்) தமக்கு அதேபோல சவூதி அரசிடம் அமெரிக்க முல்லாக்களின் துணையோடு பேச்சுவார்த்தை நடத்தி வெளிப்படையாக தமது இறவனைப்பிரார்த்திக்க அனுமதி பெற்றுத்தருமாறு கோரி இருக்கிறார்களாம். அமெரிக்க முல்லாக்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள். இதச் சொன்னவர் நியூயொர்க் மசூதிக்குழுவின் நண்பர் ஒருவர்.

    //..மக்கா முஸ்லீம்களுக்கான புண்ணிய பூமி அதில் இலங்கையர் அல்லது இத்தாலிகாரர் போய் எப்படி கோயில் கட்ட அனுமதி கேட்க முடியும்?…//

    அதுதானே? அயோத்தி இந்துக்களின் புண்ணிய பூமி அங்கே இஸ்லாமியர்கள் எபொபடி மசூதி கட்ட முடியும்?

    நிஸ்தார் மக்கா புண்ணிய பூமி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஆனால் ஒட்டு மொத்த ச்வூதி அரேபியாவுமா அப்படி? சவூதி அரேபிய தொழிலாளர்கள் வியர்வைசிந்திய உழைப்பின் பின்னர் தமது கடவுளைப் பணியக்கூட அனுமதி இல்லையா?

    அன்பரே அதுதான் அமெரிக்கா!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் குசும்பு,
    “மதம் ஏன் முதன்மை படுத்தப் படக்கூடாது, ஏன் மொழி அல்லது இனம்தான் முதன்மை பெற வேண்டும்” என்று நான் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் எதிர்பாக்கின்றிர்கள். பதில் மிகஇலகு. அது அவரவர் விருப்பு.

    உங்களுக்கு இனம் முதன்மையாக படலாம் ஏதாவது ஒரு காரணத்தின் அல்லது காரணங்களின் அடிப்படையில். அதில் நானோ என் போன்று கருத்து சொல்லும் அஸ்ரப் அலியோ, அலாவுதீனோ தலையிடவில்லை. அது நாகரிகமான செயல் இல்லை என்பதால். நீங்கள் கூட அதே போக்கை எமது உரிமை சம்பந்தமாக கடைபிடிக்க ஏனோ மனதின்றி இருகிக்றிர்கள். அது மாத்திரமில்லாமல் உங்களுக்கு திருப்தி தரும் வரைவிளக்கங்களுடனும் வருகிறிர்கள். எப்போதாவது உங்களை பலவந்தப்படுத்தி, கஸ்டப்படுத்தி நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடுங்கள், சைவ சமயம் அப்படி, இப்படி பட்டது எம் மதத்தை பின்பறுங்கள் என்றெல்லாம் சொன்னோமா இல்லையே. எனவே உங்களுக்கு இன்னும் மொழியும், எனக்கும் என் போன்றோருக்கும் மதமும் முக்கியம்.

    இன்னும் பாருங்கள் நீங்கள் உங்களனினத்தை முதன்மை படுத்திக்கொண்டு என் இனத்தை பற்றி கதைக்கவும் கூடாது எங்கின்றிகளே. என்ன காரணம்? இது உரிமை மீறலாகா தெரியவில்லையா? மொழி ஒன்று இருந்தால் தான் ஒரு இனம் உருவாக முடியும் என்றிர்கள் இந்த வரைவிளக்கணத்தை விளக்குவீர்களா?

    மொழி இல்லாத இனங்கள் உலகத்தில் ஏறாளகமாக இருக்கின்றனவே. எமக்கு மொழியே இல்லை என்றால் மேற்சொன்ன பிரிவிற்குள் எம்மை அடக்கலாமே.

    அலாவுதீன் சொன்ன “அருவி”(பெயர் சரியோ தெரியாது), நான் இப்போது சொல்லும் “எழு” மொழி பற்றி ஏதாவது கேள்விப்பட்டதுண்டா? அந்த மொழிகளில் ஏதாவதொன்று இலங்கை சோனகரின் மொழி என்றால், உங்கள் வாதப்படி இவர்களுக்கும் மொழி உண்டு எனவே இவர்கள் தமிழர் அல்லர் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருமா?

    குசும்பு, மொழி பற்றி நான் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. அதாவது எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளேன். ஆனால் நான் தமிழன் என்பதை மறுக்கிறேன். நான் இனத்தால் சோனகன் அல்லது சோனகர் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்.

    நான் சோனகனாக இருப்பதால் அல்ல, தமிழனாக இருந்திருந்தாலும், சிங்களவனாக பிறந்திருந்தாலும், இஸ்லாம் மதம் பற்றி அறியக்கிடைத்து அது எனக்கு உண்மையை இலகுவாக்கும் போது அந்த சமயத்தை பின்பற்றியே இருப்பேன். ஆகவே தான் ஒரு முஸ்லிமாக நின்று பயங்கரவாதத்தை ஆகக் குறைந்தது மனத்தளவில் வெறுக்கிறேன். எல்லாரும் இன்புற்றிருக்க ஆசைப்படுகிறேன். புலிகளின் அடாவடித்தனதை கண்டிக்கிறேன். உப்பு சப்பு இல்லாத காழ்ப்புணர்வு(முதன்முததில் இந்த வார்த்தையை பாவிக்கின்றேன், காரணம் அப்படி யாரும் செயல் பட்டதாக சற்று முன் வரை நினைக்காததால்)வினால் களங்கம் கற்பிப்போரை ஆகக்குறைந்து மனதளவில் வெறுக்காமல் இருக்க முயற்சிக்கின்றேன். தயவுசெய்து எம்மை வற்புறுத்தி தமிழர் என்ற ஒரு சொல்லுக்குள் அடக்க முற்படாதீர்கள். ராஜபக்ஷ கூட தமிழர்களே நீங்கள் சிங்களவர்கள், உங்கள் தமிழ் அடையாளத்தை விட்டுவிடுங்கள். பெளத்தரும் சைவ கடவுளரை கும்பிடுகிறார்கள் ஆகவே சைவத்தை விட்டுவிட்டு பொளத்தராகி விடுங்கள் என்றும் கோரவில்லை. அவர் மோசமானவர் என்றும் சொல்லிக் கொண்டு, அதைவிட மோசமாக எம் இனத்தை விட்டுவிட கோரியும், நாம் பின்பற்றும் மதமும் உங்களை ஏதோ செய்வதாகவும் சொல்லும் போது ஏதாவது ஒரு கணம் யோசித்தீர்களா நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறிகள் என்று.

    Reply
  • Mohanathas
    Mohanathas

    During Islamic rule of the Indian sub-continent
    The Muslim conquest of the Indian subcontinent led to widespread carnage because Muslims regarded the Hindus as infidels and therefore slaughtered and converted millions of Hindus. Will Durant argued in his 1935 book “The Story of Civilization: Our Oriental Heritage” (page 459):

    “ The Mohammedan conquest of India is probably the bloodiest story in history. The Islamic historians and scholars have recorded with great glee and pride the slaughters of Hindus, forced conversions, abduction of Hindu women and children to slave markets and the destruction of temples carried out by the warriors of Islam during 800 AD to 1700 AD. Millions of Hindus were converted to Islam by sword during this period. ”

    There is no official estimate of the total death toll of Hindus at the hands of Muslims.

    As Braudel put it: “The levies it had to pay were so crushing that one catastrophic harvest was enough to unleash famines and epidemics capable of killing a million people at a time. Appalling poverty was the constant counterpart of the conquerors’ opulence.”

    The backward castes of Hinduism suffered worst. Monarchs (belonging to backward castes) such as Khusrau Bhangi Khan, Hemchandra and Garha-Katanga were knocked off their throne and executed. Backward caste saints like Namadeva[1] were arrested, while women like Kanhopatra were forced to commit suicide. Ghisadis have an “Urdu” title.[2]

    Prof. K.S. Lal, suggests a calculation in his book Growth of Muslim Population in Medieval India which estimates that between the years 1000 AD and 1500 AD the population of Hindus decreased by 80 million. Even those Hindus who converted to Islam were not immune from persecution, which was illustrated by the Muslim Caste System in India as established by Ziauddin al-Barani in the Fatawa-i Jahandari.[3] where they were regarded as “Ajlaf” caste and subjected to severe discrimination by the “Ashraf” castes.[4]

    By Arabs
    Muslim conquest of the Indian subcontinent began during the early 8th century, when the Umayyad governor of Damascus, Hajjaj responded to a casus belli provided by the kidnapping of Muslim women and treasures by pirates off the coast of Debal,[5] by mobilizing an expedition of 6,000 cavalry under Muhammad bin-Qasim in 712 CE. Records from the campaign recorded in the Chach Nama record temple demolitions, and mass executions of resisting Sindhi forces and the enslavement of their dependents. This action was particularly extensive in Debal, of which Qasim is reported to have been under orders to make an example of while freeing both the captured women and the prisoners of a previous failed expedition. Bin Qasim then enlisted the support of the local Jat, Meds and Bhutto tribes and began the process of subduing and conquering the countryside. The capture of towns was also usually accomplished by means of a treaty with a party from among his “enemy”, who were then extended special privileges and material rewards.[6] However, his superior Hajjaj reportedly objected to his method by saying that it would make him look weak and advocated a more hardline military strategy:[7]

    “ It appears from your letter that all the rules made by you for the comfort and convenience of your men are strictly in accordance with religious law. But the way of granting pardon prescribed by the law is different from the one adopted by you, for you go on giving pardon to everybody, high or low, without any discretion between a friend and a foe. The great God says in the Koran [47.4]: “0 True believers, when you encounter the unbelievers, strike off their heads.” The above command of the Great God is a great command and must be respected and followed. You should not be so fond of showing mercy, as to nullify the virtue of the act. Henceforth grant pardon to no one of the enemy and spare none of them, or else all will consider you a weak-minded man. ”

    In a subsequent communication, Hajjaj reiterated that all able-bodied men were to be killed, and that their underage sons and daughters were to be imprisoned and retained as hostages. Qasim obeyed, and on his arrival at the town of Brahminabad massacred between 6,000 and 16,000 of the defending forces.[8] The historian, Upendra Thakur records the persecution of Hindus and Buddhists:

    “ When Muhammad Kasim invaded Sind in 711 AD, Buddhism had no resistance to offer to their fire and steel. The rosary could not be a match for the sword and the terms Love and Peace had no meaning to them. They carried fire and sword wherever they went and obliterated all that came their way. Muhammad triumphantly marched into the country, conquering Debal, Sehwan, Nerun, Brahmanadabad, Alor and Multan one after the other in quick succession, and in less than a year and a half, the far-flung Hindu kingdom was crushed, the great civilization fell back and Sind entered the darkest period of its history. There was a fearful outbreak of religious bigotry in several places and temples were wantonly desecrated. At Debal, the Nairun and Aror temples were demolished and converted into mosques.[Resistors] were put to death and women made captives. The Jizya was exacted with special care.[Hindus] were required to feed Muslim travellers for three days and three nights.[9] ”

    Other historians and archaeologists such as J E Lohuizen-de Leeuw, take the following stance regarding events preceding the sack of Debal:

    “ In fact, we have clear evidence that the Arabs were very tolerant towards both Buddhists and Hindus during the rest of the campaign and throughout the time they ruled Sind…Of course that does not mean that no monuments were ever destroyed, for war always means a certain amount of damage to buildings but it does prove that there was no wanton and systematic destruction of each and every religious center of the Buddhists and Hindus in Sind.[10] ”

    Mahmud of Ghazni
    Mahmud of Ghazni was an Afghan Sultan who invaded the Indian subcontinent during the early 11th century. His campaigns across the gangetic plains are often cited for their iconoclastic plundering and destruction of temples such as those at Mathura and he looked upon their destruction as an act of “jihad”.[11]

    Pradyumna Prasad Karan further describes Mahmud’s invasion as one in which he put “thousands of Hindus to the sword” and made a pastime of “raising pyramids of the skulls of the Hindus”.[12][13] Holt et al. hold an opposing view, that he was “no mere robber or bloody thirsty tyrant” . Mahmud shed no blood “except in the exegencies of war”,[14] and was tolerant in dealings with his own Hindu subjects, some of whom rose to high posts in his administration, such as his Hindu General Tilak[14]

    Mahmud of Ghazni sacked the second Somnath Temple in 1026, and looted it of gems and precious stones and the famous Shiva lingam of the temple was destroyed .[15] Later the temple was demolished by Mughal Emperor Aurangzeb in 1706.[16]

    Muhammad Ghori
    Muhammad Ghori committed genocide against Hindus at Kol (modern Aligarh), Kalinjar and Varanasi, according to Hasan Nizami’s Taj-ul-Maasir, 20,000 Hindu prisoners were slaughtered and their heads offered to crows.[17]

    Timur the Lame’s Campaign against India
    Main article: Timur
    Tīmūr bin Taraghay Barlas (Chagatai Turkic: تیمور – Tēmōr, “iron”) (1336 – February 1405), known in the West as Tamerlane, was a 14th century warlord of Turco-Mongol descent,[18][19][20][21] conqueror of much of western and central Asia, and founder of the Timurid Empire and Timurid dynasty (1370–1405) in Central Asia, which survived in some form until 1857. Perhaps, he is more commonly known by his pejorative Persian name Timur-e Lang (Persian: تیمور لنگ) which translates to Timur the Lame, as he was lame after sustaining an injury to the leg in battle.

    Informed about civil war in India, Timur began a trek starting in 1397 to invade the territory of the reigning Sultan Nasir-u Din Mehmud of the Tughlaq Dynasty in the north Indian city of Delhi.

    Timur crossed the Indus River at Attock on September 24. The capture of towns and villages was often followed by the massacre of their inhabitants and the raping of their women, as well as pillaging to support his massive army. Timur wrote many times in his memoirs of his specific disdain for the ‘idolatrous’ Hindus, although he also waged war against Muslim Indians during his campaign.

    Timur’s invasion did not go unopposed and he did meet some resistance during his march to Delhi, most notably by the Sarv Khap coalition in northern India, and the Governor of Meerut. Although impressed and momentarily stalled by the valour of Ilyaas Awan, Timur was able to continue his relentless approach to Delhi, arriving in 1398 to combat the armies of Sultan Mehmud, already weakened by an internal battle for ascension within the royal family.

    The Sultan’s army was easily defeated on December 17, 1398. Timur entered Delhi and the city was sacked, destroyed, and left in ruins. Before the battle for Delhi, Timur executed more than 100,000 captives.

    Timur himself recorded the invasions in his memoirs, collectively known as Tuzk-i-Timuri.[22] In them, he vividly described the massacre at Delhi:

    In a short space of time all the people in the [Delhi] fort were put to the sword, and in the course of one hour the heads of 10,000 infidels were cut off. The sword of Islam was washed in the blood of the infidels, and all the goods and effects, the treasure and the grain which for many a long year had been stored in the fort became the spoil of my soldiers. They set fire to the houses and reduced them to ashes, and they razed the buildings and the fort to the ground….All these infidel Hindus were slain, their women and children, and their property and goods became the spoil of the victors. I proclaimed throughout the camp that every man who had infidel prisoners should put them to death, and whoever neglected to do so should himself be executed and his property given to the informer. When this order became known to the ghazis of Islam, they drew their swords and put their prisoners to death.

    One hundred thousand infidels, impious idolators, were on that day slain. Maulana Nasiruddin Umar, a counselor and man of learning, who, in all his life, had never killed a sparrow, now, in execution of my order, slew with his sword fifteen idolatrous Hindus, who were his captives….on the great day of battle these 100,000 prisoners could not be left with the baggage, and that it would be entirely opposed to the rules of war to set these idolaters and enemies of Islam at liberty…no other course remained but that of making them all food for the sword.[23]

    According to Malfuzat-i-Timuri,[22] Timur targeted Hindus. In his own words, “Excepting the quarter of the saiyids, the ‘ulama and the other Musalmans [sic], the whole city was sacked”. In his descriptions of the Loni massacre he wrote, “..Next day I gave orders that the Musalman prisoners should be separated and saved.”

    During the ransacking of Delhi, almost all inhabitants not killed were captured and enslaved.

    Timur left Delhi in approximately January 1399. In April he had returned to his own capital beyond the Oxus (Amu Darya). Immense quantities of spoils were taken from India. According to Ruy Gonzáles de Clavijo, 90 captured elephants were employed merely to carry precious stones looted from his conquest, so as to erect a mosque at Samarkand — what historians today believe is the enormous Bibi-Khanym Mosque. Ironically, the mosque was constructed too quickly and suffered greatly from disrepair within a few decades of its construction.

    Qutb-ud-din Aibak
    Historical records compiled by Muslim historian Maulana Hakim Saiyid Abdul Hai attest to the iconoclasm of Qutb-ud-din Aybak. The first mosque built in Delhi, the “Quwwat al-Islam” was built after the demolition of the Hindu temple built previously by Prithvi Raj and certain parts of the temple were left outside the mosque proper.[24] This pattern of iconoclasm was common during his reign, although an argument goes that such iconoclasm was motivated more by politics than by religion.[25]

    Iltutmish
    Another ruler of the sultanate, Shams-ud-din Iltutmish, conquered and subjugated the Hindu pilgrimage site Varanasi in the 11th century and he continued the destruction of Hindu temples and idols that had begun during the first attack in 1194.[26]

    Firuz Shah Tughlaq
    Firuz Shah Tughluq was the third ruler of the Tughlaq dynasty of the Delhi Sultanate. The “Tarikh-i-Firuz Shah” is a historical record written during his reign that attests to the systematic persecution of Hindus under his rule.[27] In particular, it records atrocities committed against Hindu Brahmin priests who refused to convert to Islam:

    “ An order was accordingly given to the Brahman and was brought before Sultan. The true faith was declared to the Brahman and the right course pointed out. but he refused to accept it. A pile was risen on which the Kaffir with his hands and legs tied was thrown into and the wooden tablet on the top. The pile was lit at two places his head and his feet. The fire first reached him in the feet and drew from him a cry and then fire completely enveloped him. Behold Sultan for his strict adherence to law and rectitude.[27] ”

    Under his rule, Hindus who were forced to pay the mandatory Jizya tax were recorded as infidels, their communities monitored and, if they violated Imperial ordinances and built temples, they were destroyed. In particular, an incident in the village of Gohana in Haryana was recorded in the “Insha-i-Mahry” (another historical record written by Amud Din Abdullah bin Mahru) where Hindus had erected a deity and were arrested, brought to the palace and executed en-masse.[27]

    In 1230, the Hindu King of Orissa Anangabhima III consolidated his rule and proclaimed that an attack on Orissa constituted an attack on the king’s god. A sign of Anangabhima’s determination to protect Hindu culture is the fact that he named is new capital in Cuttack “Abhinava Varanasi.” His anxieties about further Muslim advances in Orissa proved to be well founded.

    In the Mughal empire
    The Mughal Empire was marked by periods of tolerance of non-Muslims, such as Hindus and Sikhs, as well as periods of violent oppression and persecution of those people.[28] The reign of Aurangzeb was particularly brutal. No aspect of Aurangzeb’s reign is more cited – or more controversial – than the numerous desecrations and even the destruction of Hindu temples.[28] Aurangzeb banned Diwali, placed a jizya (tax) on non-Muslims and martyred the ninth Sikh guru Tegh Bahadur.[28]

    During his reign, tens of thousands of temples were desecrated: their facades and interiors were defaced and their murtis (divine images) looted.[28] In many cases, temples were destroyed entirely; in numerous instances mosques were built on their foundations, sometimes using the same stones. Among the temples Aurangzeb destroyed were two that are most sacred to Hindus, in Varanasi and Mathura.[29] In both cases, he had large mosques built on the sites.[28]

    The Kesava Deo temple in Mathura, marked the place that Hindus believe was the birth place of Shri Krishna.[29] In 1661 Aurangzeb ordered the demolition of the temple, and constructed the Katra Masjid mosque. Traces of the ancient Hindu temple can be seen from the back of the mosque. Aurangzeb also destroyed what was the most famous temple in Varanasi- the Vishwanath Temple.[29] The temple had changed its location over the years, but in 1585 Akbar had authorized its location at Gyan Vapi. Aurangzeb ordered its demolition in 1669 and constructed a mosque on the site, whose minarets stand 71 metres above the Ganges. Traces of the old temple can be seen behind the mosque. Centuries later, emotional debate about these wanton acts of cultural desecration continues. Aurangzeb also destroyed the Somnath temple in 1706.[29]

    Hindu nationalists claim that Mughals destroyed the Ram Mandir in Ayodhya, located at the birthplace of Rama, and built the Babri Masjid on the holy site, which has since been a source of tension between the Hindu and Muslim communities.

    Writer Fernand Braudel wrote in A History of Civilizations (Penguin 1988/1963, p. 232-236), Islamic rule in India as a “colonial experiment” was “extremely violent”, and “the Muslims could not rule the country except by systematic terror. Cruelty was the norm – burnings, summary executions, crucifixions or impalements, inventive tortures. Hindu temples were destroyed to make way for mosques. On occasion there were forced conversions. If ever there were an uprising, it was instantly and savagely repressed: houses were burned, the countryside was laid waste, men were slaughtered and women were taken as slaves.”

    Haidar Ali and Tipu Sultan
    The attitudes of Muslim ruler Tippu Sultan have been criticized as anti-Hindu. While some Marxist historians claim that he had an egalitarian attitude towards Hindus and was harsh towards them only when politically expedient,[30] In the first part of his reign in particular he appears to have been notably more aggressive and religiously doctrinaire than his father, Haidar Ali.[31] There are some historians[32] who claim that Tippu Sultan was a religious persecutor of Hindus.

    C. K. Kareem also notes that Tippu Sultan issued an edict for the destruction of Hindu temples in Kerala.[33]

    Historian Hayavadana C. Rao wrote about Tippu in his encyclopaedic work on the History of Mysore. He asserted that Tippu’s “religious fanaticism and the excesses committed in the name of religion, both in Mysore and in the provinces, stand condemned for all time. His bigotry, indeed, was so great that it precluded all ideas of toleration”. He further asserts that the acts of Tippu that were constructive towards Hindus were largely political and ostentatious rather than an indication of genuine tolerance.[34]

    Hindu groups revile Tipu Sultan as a bigot who massacred Hindus.[35] He was known to carry out forced conversions of Hindus and Christians.[36][Need quotation to verify]. According to Ramchandra Rao “Punganuri” Tipu converted 500 Hindus in Kodagu (Coorg).[37]

    However this view must be contrasted against evidence that he corresponded with the Sringeri Shankaracharya – expressing grief and indignation at a raid by Maratha horsemen, which killed many and plundered the monastery of its valuable possessions[38]

    B.A. Saletare has described Tipu Sultan as a defender of the Hindu dharma. He is praised for patronizing the Melkote temple , for which he issued a Kannada decree that the Shrivaishnava invocatory verses there should be recited in the traditional form. The temple at Melkote still has gold and silver vessels with inscriptions indicating that they were presented by the Sultan. Tipu Sultan also presented four silver cups to the Lakshmikanta Temple at Kalale.[39] There appears to be some evidence that he presented the Ranganatha temple at Srirangapatana with seven silver cups and a silver camphor burner. This temple was hardly a stone’s throw from his palace from where he would listen to both the ringing of temple bells and the muezzin’s call from the mosque.[40]

    Some historians have argued that these acts happened after the Third Mysore war, where he had to negotiate on the terms of surrender. They claim that these acts could have been motivated by a political desire to get the support of his Hindu subjects.

    In Kashmir
    The Hindu minority in Kashmir has also been historically persecuted by Muslim rulers.[41] While Hindus and Muslims lived in harmony for certain periods of time, several Muslim rulers of Kashmir were intolerant of other religions. Sultãn Sikandar Butshikan of Kashmir (AD 1389-1413) is often considered the worst of these. Historians have recorded many of his atrocities. The Tarikh-i-Firishta records that Sikandar persecuted the Hindus and issued orders proscribing the residency of any other than Muslims in Kashmir. He also ordered the breaking of all “golden and silver images”. The Tarikh-i-Firishta further states: “Many of the Brahmins, rather than abandon their religion or their country, poisoned themselves; some emigrated from their native homes, while a few escaped the evil of banishment by becoming Mahomedans. After the emigration of the Bramins, Sikundur ordered all the temples in Kashmeer to be thrown down. Having broken all the images in Kashmeer, (Sikandar) acquired the title of ‘Destroyer of Idols’”.[41] The 2000 Amarnath pilgrimage massacre was another incident where 30 Hindu pilgrims were killed on route to Amarnath temple.[42] Even now these continue by majority Muslim community there on indigenous Hindus.[43]

    During European rule of the Indian subcontinent
    Goa
    Main article: Goa Inquisition
    The Goa Inquisition, was established in 1560 by Portuguese missionaries. It was aimed primarily at Hindus and wayward new converts and by the time it was suppressed in 1774, the inquisition had had thousands of Hindus tortured and executed by burning. The British East India Company engaged in a covert and well-financed campaign of evangelical conversions in the 19th century. While officially discouraging conversions, officers of the Company routinely converted Sepoys to Christianity, often by force. This was one of the factors that led to the First Indian War of Independence.[44]

    During the era of Nizam state of Hyderabad
    Hindus were severely repressed under the autocratic dictatorial rule of the Nizam nawabs in Hyderabad state. The Hindu majority were denied fundamental rights by the Nizams of Hyderabad state. Hindus were called gaddaar (traitor) by Muslims in the Nizam state of Hyderabad.[45] Many Hindus were murdered, looted and thrown to jail. Construction of temples were declared illegal and Hindu scriptures like Bhagavad Gita, Ramayana were banned.[46]

    Hindus were treated as second class citizens within Hyderabad state and they were severely discriminated against, despite the vast majority of the population being Hindu. The 1941 census estimated the population of Hyderabad to be 16.34 million. Over 85% of the populace were Hindus with Muslims accounting for about 12%. Hyderabad was also a multi-lingual state consisting of peoples speaking Telugu (48.2%), Marathi (26.4%), Kannada (12.3%) and Urdu (10.3%). Nonetheless, the number of Hindus in government positions was disproportionately small. Of 1765 officers, 1268 were Muslims, 421 were Hindus, and 121 were “Others” (presumably British Christians, Parsis and Sikhs). Of the officials drawing pay between Rs.600-1200 pm, 59 were Muslims, 38 were “Others”, and a mere 5 were Hindus. The Nizam and his nobles, who were mostly Muslims, owned 40% of the total land in the kingdom.[47]

    In 1947; Nizam, the ruler of Hyderabad refused to merge his kingdom with India. For the independence of the Islamic state of Hyderabad and to resist Indian integration, All India Majlis-e-Ittehadul Muslimeen, the then dominating political party persecuted Hindus and their 1,50,000 cadre strong militant wing named Razakars killed a number of Hindus under the leadership of Qasim Rizwi.[48]

    Contemporary persecution
    While the vast majority of Hindus live in Hindu-majority areas of India, Hindus in other parts of South Asia and in the diaspora have sometimes faced persecution.

    In the Indian subcontinent
    Republic of India
    Although the Indian government allows for freedom of religion, its constitution provides lesser rights and protection to Hindus vs. non-Hindus paving way for government confiscation of Hindu institutes and places of worship. More-over, Minority institutes also receive government patronage in form of Exemption from 2005 Amendment to the Article 15, 95% grant-in-aid, College Scholarship to pursue higher education.[49][50][51][52]

    What makes matters worse is that ruling political parties often subscribe to ideologies which are inherently hostile or prejudiced towards Hinduism. Thus, Hindu temples and institutes live under constant threat of ideologically motivated government take-over and subsequent destruction. For instance, State of Tamil Nadu is ruled by Dravidian parties for over two decades. Dravidian ideology believes in discredited racial theory of Aryan Invasion. It is openly anti Shri Ram, anti Sanskrit and anti Brahmin. Ruling ideology has a history of publicly issuing threats and has carried out those threats in many instances.[53][54][55] At some junctures, interpretation of the laws has also disadvantaged Hindus[56]

    Many organizations feel that Hindu label is a liability. It exposes them to ideologically inspired attacks, places them at a financial disadvantage and paves way for government confiscation. As a result, several entities like Rama-Krishna Mission, Arya Samaj, etc. have filed law-suits and done intense lobbying to declare them self a non-Hindu minority religion. For Instance, in west Bengal, Rama Krishna Mission whose colleges and schools were in danger of hostile take-over by Marxist government petitioned the courts to have their organization and movement declared a non-Hindu minority religion.[50][51][52][57]

    Hindus from other countries hoping to come to India have also been treated unfavorably by the Indian government[58]

    Recently the issue of Love Jihad created huge controversy in Southern India, although similar incidents were ignored in Northern India.

    Jammu and Kashmir
    Kashmiri militants have engaged in attacks on Hindu pilgrims in both Kashmir and neighboring Jammu. Kashmiri militants have attacked Hindus in the region, as well as moderate Muslims suspected of siding with India. Kashmiri Pandit Hindus, who have been residents of Kashmir for centuries, have been ethnically cleansed from Kashmir by Islamic militants.[59][60] In particular, the Wandhama Massacre in 1998 was an incident in which 24 Kashmiri Hindus were gunned down by Islamists disguised as Indian soldiers. Many Kashmiri Hindus have been killed and thousands of children orphaned over the course of the conflict in Kashmir.

    Northeast India
    In Northeastern India, especially in Nagaland, Hindus are not able to celebrate Durga Puja and other essential festivals due to harassment and killing by Christian terrorist groups. In Tripura,[61] the NLFT, “National Liberation Front of Tripura”, has targeted Swamis and temples for attacks. They are known to have forcefully converted Hindus to Christianity.[62][63] The Baptist Church of Tripura is alleged to have supplied the NLFT with arms and financial support and to have encouraged the murder of Hindus, particularly infants.[64]

    In Assam, members of the primarily Christian Hmar ethnic group have placed bloodstained crosses in temples and forced Hindus to convert at gunpoint.[65]

    Punjab
    Main article: Punjab insurgency
    The period of insurgency in Punjab around Operation Bluestar saw clashes of the Sikh militants with the police, as well as with the Hindu-Nirankari groups resulting in many Hindu deaths. In 1987, 32 Hindus were pulled out of a bus and shot, near Lalru in Punjab by Sikh militants.[66]

    Kerala
    Kerala is a Hindu majority state but with the most slim majority in India.[67] Kerala has witnessed many riots and rebellions against Hindus throughout it history and more so in independent India; notably the Marad Massacre. Many Muslim organizations allegedly supported Love Jihad where Muslim boys targeted non-Muslim young girls, especially Hindu girls to convert them to Islam by feigning love.[68]

    See also: Hinduism in India
    Bangladesh
    The HAF report documents the long history of anti-Hindu atrocities[69] in Bangladesh,[70] a topic that many Indians and Indian governments over the years have preferred not to acknowledge. Such atrocities, including targeted attacks[71] against temples, open theft of Hindu property, and rape of young Hindu women and enticements to convert to Islam, have increased sharply in recent years after the Jamat-e-Islami joined the coalition government led by the Bangladesh National Party.[72][73]

    Bangladesh has had a troublesome history of persecution of Hindus as well. A US-based human rights organisation, Refugees International, has claimed that religious minorities, especially Hindus, still face discrimination in Bangladesh.[74] The government of Bangladesh, a nationalist party openly calls for ‘Talibanisation’ of the state.[75][76][77] However, the prospect of actually “Talibanizing” the state is regarded as a remote possibility, since Bangladeshi Islamic society is generally more progressive than the extremist Taliban of Afghanistan. Political scholars conclude that while the Islamization of Bangladesh is real, the country is not on the brink of being Talibanized.[75] In 1971 at the time of the liberation of Bangladesh from East Pakistan, the Hindu population accounted for 15% of the total population. Thirty years on, it is now estimated at just 10.5%.[78] The ‘Vested Property Act’ previously named the ‘Enemy Property Act’ has seen up to 40% of Hindu land snatched away forcibly. Since this government has come into power, of all the rape crimes registered in Bangladesh, 98% have been registered by Hindu women. Hindu temples in Bangladesh have also been vandalised.[79][80] The United States Congressional Caucus on India has condemned these atrocities.[81]

    Bangladeshi feminist Taslima Nasrin’s 1993 novel Lajja deals with the anti-Hindu riots and anti-secular sentiment in Bangladesh in the wake of the destruction of the Babri Masjid in India. The book was banned in Bangladesh, and helped draw international attention to the situation of the Bangladeshi Hindu minority.

    In October 2006, the United States Commission on International Religious Freedom published a report titled ‘Policy Focus on Bangladesh’, which said that since its last election, ‘Bangladesh has experienced growing violence by religious extremists, intensifying concerns expressed by the countries religious minorities’. The report further stated that Hindus are particularly vulnerable in a period of rising violence and extremism, whether motivated by religious, political or criminal factors, or some combination. The report noted that Hindus had multiple disadvantages against them in Bangladesh, such as perceptions of dual loyalty with respect to India and religious beliefs that are not tolerated by the politically dominant Islamic Fundamentalists of the Bangladesh Nationalist Party. Violence against Hindus has taken place “in order to encourage them to flee in order to seize their property”.The previous reports of the Hindu American Foundation were acknowledged and confirmed by this non-partisan report.[82]

    On November 2, 2006, USCIRF criticized Bangladesh for its continuing persecution of minority Hindus. It also urged the Bush administration to get Dhaka to ensure protection of religious freedom and minority rights before Bangladesh’s next national elections in January 2007.[82]

    On the February 6, 2010, Sonargaon temple in Narayanganj district of Bangladesh was destroyed by Islamic fanatics. Five people were seriously injured during the attack.[83]

    See also: Hinduism in Bangladesh
    Pakistan
    Main article: Hinduism in Pakistan
    There are a number of instances of persecution of Hindus in Pakistan. In 1951, Hindus constituted 22 percentage of the Pakistani population;[84][85] by 1998 the share of Hindus were down to around 1.7 percentage.[86] This huge drop is due to wide forcible conversion and murder of those who resisted it, a situation that is recorded to have continued till date. Minority members of the Pakistan National Assembly have alleged that Hindus were being hounded and humiliated to force them to leave Pakistan.[87]

    1971 Bangladesh atrocities
    Main articles: 1971 Bangladesh atrocities and Operation Searchlight
    During the 1971 Bangladesh atrocities there were widespread killings and acts of ethnic cleansing of civilians in Bangladesh (then East Pakistan, a province of Pakistan), and widespread violations of human rights were carried out by the Pakistan Army, which was supported by political and religious militias during the Bangladesh Liberation War. In Bangladesh, the atrocities are identified as a genocide. Many of the victims were Hindus, and the total death toll was in the millions.[88][89]TIME magazine reported that “The Hindus, who account for three-fourths of the refugees and a majority of the dead, have borne the brunt of the Muslim military’s hatred.”[90]

    Forced Conversions
    Hindu women have also been known to be victims of kidnapping and forced conversion to Islam.[91] Around 20 to 25 Hindu girls are abducted every month and converted to Islam forcibly.[92] Krishan Bheel, a Hindu member of the National Assembly of Pakistan, came into the news recently for manhandling Qari Gul Rehman after being taunted with a religious insult.[93]

    On October 18, 2005, Sanno Amra and Champa, a Hindu couple residing in the Punjab Colony, Karachi, Sindh returned home to find that their three teenage daughters had disappeared. After inquiries to the local police, the couple discovered that their daughters had been taken to a local madrassah, had been converted to Islam, and were denied unsupervised contact with their parents.[94]

    Temple Destruction
    Several Hindu temples have been destroyed in Pakistan. A notable incident was the destruction of the Ramna Kali Mandir in former East Pakistan. The temple was bulldozed by the Pakistan Army on March 27, 1971.The Dhakeshwari Temple was severely damaged during the Indo-Pakistani War of 1971, and over half of the temple’s buildings were destroyed. In a major disrespect of the religion, the main worship hall was taken over by the Pakistan Army and used as an ammunitions storage area. Several of the temple custodians were tortured and killed by the Army though most, including the Head Priest, fled first to their ancestral villages and then to India and therefore escaped death.

    In 2006, the last Hindu temple in Lahore was destroyed to pave the way for construction of a multi-storied commercial building. The temple was demolished after officials of the Evacuee Property Trust Board concealed facts from the board chairman about the nature of the building. When reporters from Pakistan-based newspaper Dawn tried to cover the incident, they were accosted by the henchmen of the property developer, who denied that a Hindu temple existed at the site.[95]

    Several political parties in Pakistan have objected to this move, such as the Pakistan People’s party and the Pakistani Muslim League-N.[96][97] The move has also evoked strong condemnation in India from minority bodies and political parties, including the Bharatiya Janata Party (BJP), the Congress Party, as well as Muslim advocacy political parties such as the All India Muslim Majlis-e-Mushawarat.[98] A firm of lawyers representing the Hindu minority has approached the Lahore High Court seeking a directive to the builders to stop the construction of the commercial plaza and reconstruct the temple at the site. The petitioners maintain that the demolition violates section 295 of the Pakistan Penal Code prohibiting the demolition of places of worship.[99]

    See also: Decline of Hinduism in Pakistan
    2005 unrest in Nowshera
    On June 29, 2005, following the arrest of an illiterate Christian janitor on allegations of allegedly burning Qur’an pages, a mob of between 300 and 500 Muslims destroyed a Hindu temple and houses belonging to Christian and Hindu families in Nowshera. Under the terms of a deal negotiated between Islamic religious leaders and the Hindu/Christian communities, Pakistani police later released all previously arrested perpetrators without charge.[94]

    Discrimination due to the rise of Taliban
    Although Hindus were frequently soft targets in Pakistan,[100][101] the rise of Taliban forces in the political arena has particularly unsettled the already fragile situation for the minority community. Increasing persecution, ostracism from locals and lack of a social support system is forcing more and more Hindus to flee to India.[102][103] This has been observed in the past whenever the conflicts between the two nations escalated[104] but this has been a notable trend in view of the fact the recent developments are due to internal factors almost exclusively. The Taliban have used false lures, as well as the cooperation of zealots within local authorities to perpetrate religious cleansing.[105]

    In other countries
    Afghanistan
    During the Taliban regime, Sumptuary laws were passed in 2001 which forced Hindus to wear yellow badges in public to identify themselves as such. This has been compared to Adolf Hitler’s treatment of Jews in Nazi Germany during World War II.[106][107] Hindu women were forced to dress according to Islamic hijab, ostensibly a measure to “protect” them from harassment. This was part of the Taliban’s plan to segregate “un-Islamic” and “idolatrous” communities from Islamic ones.[108] In addition, Hindus were forced to mark their places of residence identifying them as Hindu homes.

    The decree was condemned by the Indian and United States governments as a violation of religious freedom.[109] Widespread protests against the Taliban regime broke out in Bhopal, India. In the United States, chairman of the Anti-Defamation League Abraham Foxman compared the decree to the practices of Nazi Germany, where Jews were required to wear labels identifying them as such.[110] The comparison was also drawn by California Democrat and holocaust survivor Tom Lantos, and New York Democrat and author of the bipartisan ‘Sense of the Congress’ non-binding resolution against the anti-Hindu decree Eliot L Engel.[111] In the United States, congressmen and several lawmakers.[111] wore yellow badges on the floor of the Senate during the debate as a demonstration of their solidarity with the Hindu minority in Afghanistan.[112]

    Indian analyst Rahul Banerjee said that this was not the first time that Hindus have been singled out for state-sponsored oppression in Afghanistan. Violence against Hindus has caused a rapid depletion in the Hindu population over the years.[112] Since the 1990s many Afghan Hindus have fled the country, seeking asylum in countries such as Germany.[113]

    See also: Hinduism in Afghanistan
    Bhutan
    In 1991-92, Bhutan expelled roughly 100,000 ethnic Nepalis (Lhotshampa), most of whom have been living in seven refugee camps in eastern Nepal ever since. The Lhotshampa are generally classified as Hindus.[114] In March 2008, this population began a multiyear resettlement to third countries including the U.S., Canada, New Zealand, Norway, Denmark, the Netherlands and Australia.[115] At present, the United States is working towards resettling more than 60,000 of these refugees in the US as third country settlement programme.[116]

    Italy
    In Italy, Hinduism is not recognized as a religion, and during Durga Puja celebrations, the Italian police shut down a previously approved Durga Puja celebration in Rome. The affront was seen by some as a statement against alleged persecution of Christians in India.[117]

    Kazakhstan
    In 2005 and 2006 Kazakh officials persistently and repeatedly tried to close down the Hare Krishna farming community near Almaty.

    On November 20, 2006, three buses full of riot police, two ambulances, two empty lorries, and executors of the Karasai district arrived at the community in sub-zero weather and evicted the Hare Krishna followers from thirteen homes, which the police proceeded to demolish.

    The Forum 18 News Service reported, “Riot police who took part in the destruction threw the personal belongings of the Hare Krishna devotees into the snow, and many devotees were left without clothes. Power for lighting and heating systems had been cut off before the demolition began. Furniture and larger household belongings were loaded onto trucks. Officials said these possessions would be destroyed. Two men who tried to prevent the bailiffs from entering a house to destroy it were seized by 15 police officers who twisted their hands and took them away to the police car.”[118]

    The Hare Krishna community had been promised that no action would be taken before the report of a state commission – supposedly set up to resolve the dispute – was made public. On the day the demolition began, the commission’s chairman, Amanbek Mukhashev, told Forum 18, “I know nothing about the demolition of the Hare Krishna homes – I’m on holiday.” He added, “As soon as I return to work at the beginning of December we will officially announce the results of the Commission’s investigation.” Other officials also refused to comment.

    The United States urged Kazakhstan’s authorities to end what it called an “aggressive” campaign against the country’s tiny Hare Krishna community.[119]

    Malaysia
    See also: Hinduism in Malaysia
    See also: Cow head protests
    Approximately nine percent of the population of Malaysia are Tamil Indians, of whom nearly 90 percent are practicing Hindus. Indian settlers came to Malaysia from Tamil Nadu in the late 19th and early 20th centuries. Between April to May 2006, several Hindu temples were demolished by city hall authorities in the country, accompanied by violence against Hindus.[120] On April 21, 2006, the Malaimel Sri Selva Kaliamman Temple in Kuala Lumpur was reduced to rubble after the city hall sent in bulldozers.[121]

    The president of the Consumers Association of Subang and Shah Alam in Selangor State has been helping to organise efforts to stop the local authorities in the Muslim dominated city of Shah Alam from demolishing a 107-year-old Hindu temple. The growing Islamization in Malaysia is a cause for concern to many Malaysians who follow minority religions such as Hinduism.[122] On May 11, 2006, armed city hall officers from Kuala Lumpur forcefully demolished part of a 60-year-old suburban temple that serves more than 1,000 Hindus. The “Hindu Rights Action Force”, a coalition of several NGO’s, have protested these demolitions by lodging complaints with the Malaysian Prime Minister.[123] Many Hindu advocacy groups have protested what they allege is a systematic plan of temple cleansing in Malaysia. The official reason given by the Malaysian government has been that the temples were built “illegally”. However, several of the temples are centuries old.[123] According to a lawyer for the Hindu Rights Action Task Force, a Hindu temple is demolished in Malaysia once every three weeks.[124]

    Malaysian Muslims have also grown more anti-Hindu over the years. In response to the proposed construction of a temple in Selangor, Muslims chopped off the head of a cow to protest, with leaders saying there would be blood if a temple was constructed in Shah Alam.[125]

    Laws in the country, especially those concerning religious identity, are generally slanted towards compulsion into converting to Islam[126]

    Saudi Arabia
    On March 24, 2005, Saudi authorities destroyed religious items found in a raid on a makeshift Hindu shrine found in an apartment in Riyadh.[127]

    Fiji
    Hindus in Fiji constitute approximately 38% of the population. During the late 1990s there were several riots against Hindus by radical elements in Fiji. In the Spring of 2000, the democratically elected Fijian government led by Prime Minister Mahendra Chaudhry was held hostage by a guerilla group, headed by George Speight. They were demanding a segregated state exclusively for the native Fijians, thereby legally abolishing any rights the Hindu inhabitants have now. The majority of Fijian land is reserved for the ethnically Fijian community.[128] Since the practitioners of Hindu faith are predominantly Indians, racist attacks by the extremist Fijian Nationalists too often culminated into violence against the institutions of Hinduism. According to official reports, attacks on Hindu institutions increased by 14% compared to 2004. Hindus and Hinduism, being labeled the “outside others,” especially in the aftermath of the May 2000 coup, have been victimized by Fijian fundamentalist and nationalists who wish to create a theocratic Christian state in Fiji. This intolerance of Hindus has found expression in anti-Hindu speeches and destruction of temples, the two most common forms of immediate and direct violence against Hindus. Between 2001 and April 2005, one hundred cases of temple attacks have been registered with the police. The alarming increase of temple destruction has spread fear and intimidation among the Hindu minorities and has hastened immigration to neighboring Australia and New Zealand. organized religious institutions, such as the Methodist Church of Fiji, have repeatedly called for the creation of a theocratic Christian State and have propagated anti-Hindu sentiment.[129]

    The Methodist church of Fiji repeatedly calls for the creation of a Christian State since a coup d’etat in 1987[128][130] and has stated that those who are not Christian should be “tolerated as long as they obey Christian law”.

    The Methodist Church of Fiji specifically objects to the constitutional protection of minority religious communities such as Hindus and Muslims. State favoritism of Christianity, and systematic attacks on temples, are some of the greatest threats faced by Fijian Hindus. Despite the creation of a human rights commission, the plight of Hindus in Fiji continues to be precarious.[131]

    See also: Hinduism in Fiji and Church involvement in Fiji coups
    Trinidad & Tobago
    During the initial decades of Indian indenture, Indian cultural forms were met with either contempt or indifference by the Christian majority.[132] Hindus have made many contributions to Trinidad history and culture even though the state historically regarded Hindus as second class citizens. Hindus in Trinidad struggled over the granting of adult franchise, the Hindu marriage bill, the divorce bill, cremation ordinance, and others.[132] After Trinidad’s independence from colonial rule, Hindus were marginalized by the African based People’s National Movement. The opposing party, the People’s Democratic party, was portrayed as a “Hindu group”, and Hindus were castigated as a “recalcitrant and hostile minority”.[132] The displacement of PNM from power in 1985 would improve the situation.

    Intensified protests over the course of the 1980s led to an improvement in the state’s attitudes towards Hindus.[132] The divergence of some of the fundamental aspects of local Hindu culture, the segregation of the Hindu community from Trinidad, and the disinclination to risk erasing the more fundamental aspects of what had been constructed as “Trinidad Hinduism” in which the identity of the group had been rooted, would often generate dissension when certain dimensions of Hindu culture came into contact with the State. While the incongruences continue to generate debate, and often conflict, it is now tempered with growing awareness and consideration on the part of the state to the Hindu minority.[132] Hindus have been also been subjected to persistent proselytization by Christian missionaries.[133] Specifically the evangelical and Pentecostal Christians. Such activities reflect racial tensions that at times arise between the Christianized Afro-Trinidadian and Hindu Indo-Trinidadian communities.[133]

    United States of America
    Hindu immigrants, constitute approximately 0.5% of the total population. They are also the second most affluent religious group after the Jews. Hindus in USA enjoy both de jure and de facto legal equality. However, it is widely acknowledged that the Hindu community in USA became more politically active[citation needed] after a series of attacks by a street gang called the “Dotbusters” in the New Jersey area in the year 1987.[134] The lackadaisical attitude of the Police, prompted the South Asian community to arrange small groups all across the state to fight back against the street gang. The perpetrators have been put to trial.

    Reply
  • Rohan
    Rohan

    முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களை இந்த அளவுக்கு விமர்சனம் செய்வதை அனுமதிக்கும் தேசம் ஏன் உடன்கட்டை ஏறுதல் போன்ற இந்து வழக்கங்களுக்கு எதிரான கருத்துக்களை அனுமதிப்பதில்லை?

    Reply
  • mohanathas
    mohanathas

    Hi all must watch this clips. “muharram mourne” mumbai -http://www.youtube.com/watch?v=YCxqow4g9jU&NR=1
    Another muharram festival delhi -http://www.youtube.com/watch?v=eoSqUlenm5I&feature=related

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தேசம்நெற்றை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தேசம் இந்துக்கள் பற்றிய விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளது நன்கு தெரியும்.
    றோகான் நீங்கள் இந்துக்கள் பற்றிய விமர்சனங்களை கட்டுரையாக்குங்கள் தேசத்தில் பிரசுரிக்கலாம்

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நிஸ்தார்! நீங்கள் ஒரு விசயத்தை முற்றாக மறந்துவிடுகிறீர்கள் /எப்போதாவது உங்களை பலவந்தப்படுத்தி, கஸ்டப்படுத்தி நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடுங்கள், சைவ சமயம் அப்படி, இப்படி பட்டது எம் மதத்தை பின்பறுங்கள் என்றெல்லாம் சொன்னோமா இல்லையே./ அதாவது அடிப்படை மட்டுமல்ல வரைவு இலக்கணத்தையே மாற்றும் முயற்சிதான் மதத்தை இனமாகக் கருதுவது. மதம் வேறு இனம் வேறு. உலகிலுள்ள அனைத்து இனமும் மொழியாயே அடையாளப்படுத்தப் படுகின்றனர் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்? உங்களது கருத்துப்படி பார்த்தால் தமிழர் சிங்களவர்கள் என்று ஒன்று கிடையாது இலங்கையில் இந்து கிஸ்தவம் பெளத்தம் முஸ்லீம் என்று இனங்கள் தான் உண்டு என்கிறீர்களா?

    நிஸ்தார் உங்களது உரிமையில் நான் தொடவில்லை நீங்களோ முஸ்லீங்களோ உங்களை எப்படியாகவேனும் அடையளப்படுத்துங்கள். அதற்காக உங்களின் அடையாளங்கள்தான் சரியானது என்று வாதிடாதீர்கள். நீங்கள் இஸ்லாமியரானால் உங்களுக்குரிய மொழி அராப். நாங்கள் இந்துக்கள் இந்து மதத்துக்குரிய மொழி சமஸ்கிருதம் என்று அன்று இருந்தது. நாம் இந்து மதத்தவனாக இருந்தாலும் தமிழ் என்ற இனத்தவன் இதை நான் மட்டுமல்ல பலர் இதை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்கள். ஏன் இலங்கையில் தெருவில்போகும் ஒரு மனிதனைக் கேளுங்கள் நீ எந்த இனத்தவன் என்று. அவன் தன்மொழிவாரியான இனத்தைச் சொல்வான். நீங்கள் லண்டனில் இருக்கிறீர்கள் சும்மா தெருவில் போபவனிடம் கேளுங்கள் சரியான பதில் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன் இஸ்லாம் மதமே தவிர இனமல்ல. சோனகர் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களுக்குரிய மொழி என்ன? மொழியில்லா இனமா?

    /மொழி ஒன்று இருந்தால் தான் ஒரு இனம் உருவாக முடியும் என்றிர்கள் இந்த வரைவிளக்கணத்தை விளக்குவீர்களா/ பக்கம் பக்கமாய் விளக்கியபின்னும் இராமன் சீதைக்கு என்ன முறை என்றால் என்ன சொல்வது? ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழியிருக்கு நாடில்லாவிட்டாலும் மொழியிருக்கு. சோனகருக்குரிய மொழி என்ன என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும். தமிழ் என்று சொல்லிவிடாதீர்கள் அது தமிழர்களுக்குரியது. நாடில்லா குருடிஸ்யருக்கு என தனி மொழியிருக்கிறது. மொழியில்லாதவன் இனமில்லாதன். சுருக்கமானச் சொன்னால் அடையாளமே இல்லாதவன்.

    /குசும்பு, மொழி பற்றி நான் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. அதாவது எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளேன். / மன்னிக்கவும் நீங்கள் யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள். தமிழ் தமிழர்களின் தாய்மொழி என்பதை மறந்துவிடாதீர்கள் அது எமக்குரியது தொன்மையானது. இது எனது உரிமையானதும் கூட. அம்மா என்று என்னுயிராயும் என்னுணர்வாயும் இருக்கும் என்தாய்மொழி முதன் முதலில் உச்சரித்தேனோ அதே மொழியில்தான் நான் பாடையில் ஊரும் போதும் கேட்கவேண்டும். ஒவ்வொரு மிருகசாதிக்கும் அதற்கென்று ஒரு மொழி இருக்கும் போது சோனகன் என்று வரையறுக்கும் மனிதர்களுக்கு சோனகம் என்று ஒரு மொழியல்லாமல் போனதே பாவம் என்று மட்டும்தான் சொல்லமுடியும்.

    நிஸ்தார்! நான் மட்டுமல்ல பலர் உங்களுக்கு எழுதியது உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை என்று புரிகிறது. சிலவேளை உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விசயமாகக் கூட இருக்கலாம். மீண்டும் சொல்கிறேன் நீங்கள் தமிழர் என்று சொல்லாதவரை சந்தோசம்தான். நீங்கள் வேறுமொழியை உங்கள் உணர்வு பூர்வமான மொழியாகப் பின்பற்றினாலும் மிக மிகச் சந்தோசத்தான். நான் பிலாப்பால் போன்ற உறவுகளை விரும்புவதில்லை. உங்கள் பரம்பரை தமிழையே உச்சரிக்காது இருந்தால் நிச்சயம் உம்மை நினைத்துப் பெருமைப்படுவேன்.

    மகிந்த இராஜபக்சவைப்பற்றி எழுதியிருந்தீர்கள் அவர் சொல்லமாட்டார் செய்கிறார் செய்வார். முக்கிய குறிப்பு இன்றை சிங்களவர்களுக்கு முன் தமிழர்களே பெளத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பதையும் தென்: தென்கிழக்கு ஆசியாவில் திராவிடபெளத்தம் என மகாஜன பெளத்தத்தைப் பரப்பியது தமிழ்திராவிடர்கள் என்பதற்கான ஆதராங்கள் பல இருக்கின்றன: நக்கீரா கூட தேசத்தில் ஒரு கட்டுரை எழுதியதாகவும் நினைவிருக்கிறது.

    /அலாவுதீன் சொன்ன “அருவி”(பெயர் சரியோ தெரியாது)இ நான் இப்போது சொல்லும் “எழு” மொழி பற்றி ஏதாவது கேள்விப்பட்டதுண்டா? அந்த மொழிகளில் ஏதாவதொன்று இலங்கை சோனகரின் மொழி என்றால், உங்கள் வாதப்படி இவர்களுக்கும் மொழி உண்டு எனவே இவர்கள் தமிழர் அல்லர் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருமா/
    சரித்திரத்தையும் ஆய்வுகளையும் தலைகீழாக மற்றுவதில் மும்மரமாக உள்ளீர்கள். இந்த எலு எனும் மொழிக்கும் திராவிடரான இயக்கர் நாகர்களால் பேசப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். “எலு”வை “அல்” உடன் இணைக்காதீர். பின் அல்கைடாவையும் எமது மொழியுடன் இணைத்து சரித்திரப்புரட்சி செய்து விடுவீர்கள். நிஸ்தார் நீங்கள் யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள். தமிழர்கள் என்று சொல்லாது எமது மொழியை மறந்து போனாலும் சந்தோசமே. உங்களது பரம்பரையில் இனி ஒருவன் கூடத் தமிழ்பேசாமல் இருந்தால் உம்மை வாழ்த்துவேன். சந்தோசம் தானே நன்றி சோனகனே.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    //இன்னும் பாருங்கள் நீங்கள் உங்களனினத்தை முதன்மை படுத்திக்கொண்டு என் இனத்தை பற்றி கதைக்கவும் கூடாது எங்கின்றிகளே. என்ன காரணம்? இது உரிமை மீறலாகா தெரியவில்லையா? மொழி ஒன்று இருந்தால் தான் ஒரு இனம் உருவாக முடியும் என்றிர்கள் இந்த வரைவிளக்கணத்தை விளக்குவீர்களா?//

    இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் உள்ளவர்கள் ஏன் மொழி மூலம் தம்மை அடையாளப்படத்துகிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் யதார்த்தத்தை இனம் கண்டுகொண்டுள்ளனர் என்பதே உண்மை. இதைவிடுத்து மதங்கள் பிற்போக்கானது. மதத்தை முதன்மைப்படுத்தி இனத்துக்கு அடையாளம் தேடுவதானால் அத தவறேயாகும். இந்த விடயத்தில் கிறீஸ்த்தவர்களும் கத்தோலிக்கர்களும் மிகச்சரியாகவே ஜனநாயகத்துடன் மொழியுடன் அடையாளப்படுத்துவதால் அவர்களும் யதார்த்தத்துடன் இணைவுள்ளவர்களாக உள்ளனர்.

    மொழி தான் மனிதனுக்கு பிரதானம் மொழியன்றி மனிதனை வேறு எதுவும் உருவாக்கவில்லை மதம் பொய்யானது. ஆனால் தனிமனிதன் தனது விருப்புக்காக மன திருப்திக்காக இன்றும் மதத்தில் நம்பிக்கை வைத்து வணங்குகிறான் பரவாயில்லை செய்து விட்டுப்போகலாம் அது மற்றவர்களை துன்புறுத்தாது விட்டால் சரி

    மொழிதான் பிரதானம் மொழி தான் மனிதன் மொழியே மனிதனை உருவாக்கியது மனிததன்மையுடன் இன்று இந்த தேசம் தளத்தில் சிங்களவர்கள் பாக்கிஸ்தானியர்கள் ரஷ்சியர்கள் வந்து எழுதவில்லை யார் எழுதுகிறார்கள் என்றால் தமிழர்கள் தான் எழுதுகிறார்கள். இதுவே இங்கு மிகவும் பலமானதாக இருப்பதை நாம் எமது இந்த தேசத்தில் எழுதும் ஒரு சிறு விடயத்தினால் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    ஆனால் நான் எதிர்பார்க்கிறேன் இனிவரும் காலங்களில் இலங்கையில் இஸ்லாமியர்கள் தமது மொழி அரபிக் என்றும் இலங்கையில் அடுத்த மொழிக்கான ஒரு சண்டையும் நடைபெறலாம் என்பதே. அதையும் இலங்கை மக்கள் ஒரு முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்ய காரணமாகிவிடக்கூடாது என்பதேயாகும்.

    //மொழி இல்லாத இனங்கள் உலகத்தில் ஏறாளகமாக இருக்கின்றனவே. எமக்கு மொழியே இல்லை என்றால் மேற்சொன்ன பிரிவிற்குள் எம்மை அடக்கலாமே.//

    நிஸ்தார் நீங்கள் கூறும் மொழி இல்லாத இனங்கள் பற்றி இங்கே விளக்கமாக கூறுங்கள் மொழி இல்லாமல் மனிதர்கள் இல்லை மொழி இல்லை என்றால் அவர்களைப்பற்றிய தொடர்பு எப்படி உருவானது சிலவேளை நீங்கள் சொல்லலாம் அது ஊமைப்பாசை என்று நான் சொல்லுவேன் அதுவும் மொழியே தான் அதுதான் அந்த அடையாளம் அவர்களடன் பேசும் ஊமைப்பாசைகூட அந்த அவர்கள் பாரம்பரியமாக வாழம் அந்த சூழ்நிலைக்கு ஏற்றால் போல்தான் இருக்கும் அந்த ஊமைப்பாசைக்கும் ஒரு தனித்துவம் இருக்கும்

    //அலாவுதீன் சொன்ன “அருவி”(பெயர் சரியோ தெரியாது), நான் இப்போது சொல்லும் “எழு” மொழி பற்றி ஏதாவது கேள்விப்பட்டதுண்டா? அந்த மொழிகளில் ஏதாவதொன்று இலங்கை சோனகரின் மொழி என்றால், உங்கள் வாதப்படி இவர்களுக்கும் மொழி உண்டு எனவே இவர்கள் தமிழர் அல்லர் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருமா?//

    நண்பர் நிஸ்தார் அவர்கள் குறைந்தது திரு தியாகராஜா அவர்களின் அல்லது டாக்டர் மாகாதேவனின் திராவிட இனத்தின் வரலாறுகளை படித்திருப்பது நல்லது. இந்த எழு மொழியே திராவிட இனத்தின் ஆரம்ப மொழி என்றும் இரு திராவிடத்தின் ஏழு அதாவது ஏழுபேர்களில் இருந்து எழுந்த இனம் என்றும் (இன்றும் சில கிராமங்களில் தமது முதாதையர்கள் என்று கூறம்போது ஏழு பேர்களில்த்தான் ஆரம்பிக்கபட்டதென்ற கருத்து உள்ளது) அதைவிட எழு எழுங்கள் இனமே என்ற கொசத்துடன் எழுந்தது திராலிட இனம் என்றும் எழு, எழுதல், பொட்டு, முறுக்கு,மீன்-வளையல் ஏழு(7) மூன்று என்பன திராவிட கலாச்சார் ஆரம்ப சொற்கள் என்றும் இதில் இருந்தே ஏழு உலகம் என இந்து சைவ லோகய பேச்சுக்கள் வந்தது என்றும் ஏழு பிறப்பு என்று மணிக்கவாசர் திருவாசகமும் இப்படியாக பல விதமான ஆய்வுகள் பல உண்டு. எழு என்ற சொல்லே திராலிடர்களின் தென்எழு தெற்க்கு நொக்கிய பயணம்(ஆரியர் வருகையின் போது)இந்த தென்எழு தேன் எழு என்றும்பின்னர் இது தமிழு என்றும் தமிழ் என்றாகியதாக இவர்களது ஆய்வுகளில் உள்ளதை அவதானிக்கலாம்.

    இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் சோனகர்கள் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் கொண்டு இலங்கையை கட்டியெழுப்ப முயல்வோமாயில் மீண்டும் மீண்டும் முள்ளிவாய்கால்களே உருவாகும்.நாம் கடந்த புலிகளின் தோல்விகளிலிருந்தும் அதன்போது உருவான முள்ளிவாய்காலில் இருந்தும் பெற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

    இனிமேல் இலங்கையில் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் அல்லது அதை நோக்கிய எமதுபயணம் இருக்க வேண்டும் அதைவிடுத்த இஸ்லாமியர்களுக்கு தமிழருக்கு என பிரதேசம் கேட்டால் இங்கே இன்னுமொரு முள்ளிவாய்க்காலையே பெரும்பான்மை இனம் உருவாக்கும்.

    அதைவிட யார் இலங்கைக்கு முதலில் வந்தது இலங்கையர் தமிழர்களா சிங்களவர்களா? முஸ்லீம்களா? என்று ஆராய முற்படுவோமானால் இஸ்லாம் முஸ்லீம்கள் என்ற அடையாளம் காற்றாய்ப்பறக்கும் அதன் பின்னர் இன்றுள்ள தமிழரும் சிங்களவரும் முஸ்லீம்களும் ஒரே இனம் என்று பிடரியில் அடித்து விஞஞானம் நிரூபிக்கும் (மரபணுச்சோதனைகள் நிரூபித்துவிட்டது) பின்னாள்களில் மனிதர்கள் இடம்பெயந்தே இந்தமாற்றங்கள் மிக குறுகிய காலங்களிலேயே வந்தது என்பதை நன்கு தெரிந்த விடயமாகும் இந்திய உப கண்டத்துக்கு இஸ்லாம் ஒரு 500 வருடங்களுக்குள்ளும் கிறீஸ்தவம் ஒரு 300 வருடங்களுக்குள்ளாகவுமே தமது கால்களை பதித்தது என்பதையும் (இந்துக்கள்) சமணர்களும் சைவர்களும் பெளத்தர்களும் இதர இந்து பிரிவுகளும் மிக நீண்டகாலமாக தம்மிடையே அடிபட்டு பின்னர் இந்து என்ற பொது அடையாளத்துக்குள் வந்தனர் அதன்போதே இவர்கள் புத்தரையம் இந்துக்களின் தெய்வமாக்கினர்(புத்தர் தன்னை வணங்க வேண்டாம் நான் கடவுள் இல்லை சொல்லியும் கூட) இவைகள் பின்னர் வந்த இஸ்லாம் கிறீஸ்தவத்துக்கு எதிராக அந்த மதங்களின் சமயத்தை திணிக்கும் நடவடிக்ககைகளக்கு எதிராக- இவர்களை மேலும் பலமாக ஒன்றிணைத்தது என்பதே உண்மையாகும்.

    இலங்கையில் இரண்டு இனங்கள் இரண்டு மொழிபேசும் மக்களே இருந்துள்ளனர் இதில் புலிகள் தமது ஆட்சிக்காலத்தில் ஒரு பிரிவினரை முஸ்லீம்களை அவர்களை வேறு அடையாளம் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் அந்த முழு மக்கள் மீது தமது எதிரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் (இதன்போது முரண்பட்ட முஸ்லீம்களை அல்லது புலிகளை காட்டிக்கொடுத்த முஸ்லீம்களை மட்டும் யாழ்பபாணத்தை விட்டு விரட்டியடித்திருந்தால் அது வேறு விடயமாகி யிருக்கும்) இது முஸ்லீம்களை தம்மை ஒரு தனியான இனமாக அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு தள்ளியுள்ளது இதுவே முஸ்லீம்களை ஒரு தனி இனமாக உருவாக்க காரணமாகியது ஆனால் இன்றும் பல பெருந்தொகையான முஸ்லீம்கள் தம்மை மொழியால் அடையாளப்படுத்துபவர்கள் உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    இதேபோன்று தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லீம்களில் பலர் இந்த மாதிரியான அடையாளப்பிரச்சினைகளை தெரியாமலே உள்ளனர்.

    இந்த முஸ்லீம்கள் ஒரு தனி இனமா என்ற வாதம் இன்றும் நாட்டில் பலமாக நடாத்தப்படவில்லை என்பதையும் இதுவும் தமிழீழம் என்ற முடிவு போன்றதாகவே பல முஸ்லீம்களிடம் அபிப்பிராயம் உள்ளது.

    முஸ்லீம்கள் ஒரு தனி இனமல்ல என்றவாதம் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் புளொட் அமைப்பில் பங்கு பற்றிய பல இஸ்லாமிய தோழர்களிடம் இன்றும் உள்ளது.

    உதாரணமாக ஒரு தமிழர் தான் தனது இளமைக்காலத்தில் அனுபவித்த வறுமையின் காரணமாக இஸ்லாமியனாக மாற வேண்டியதாயிற்று இன்று இவன் பிள்ளை தான் சோனகன் என்றும் முஸ்லீம் என்றும் தமது இனம் அரபிலிருந்து வந்தது என்றும் தனது இஸ்லாத்தை அடையாளமாக தனது வாழ்வின் நடத்தைகளில் முன்வைக்கிறான் இவன்.

    இன்று புலி இயக்கம் இல்லை புலிகளின் பாணியிலான நடத்தைகள் இல்லை ஆகவே முஸ்லிம் தனி இனம் என அடையாள கருத்தை எழுப்புபவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமா?

    முஸ்லீம்கள் தனிஇனமாக கருதும் இந்த வளர்ச்சிப்போக்கு பற்றி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஏற்ப்படுத்தியுள்ள கருத்துப்பரிமாற்ங்கள் என்ன?

    இலங்கையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பொதுவான மொழியை பேசுபவர்களாக இணைந்து கொள்வதும்- இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பொதுவான இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாக இணைந்து கொள்வதும்- இலங்கையில் இந்துக்களும் பெளத்தர்களும் ஒரே அடிப்டையான சமயத்தை கொண்டவர்களாக இணைவதும்- இலங்கையில் தமிழ் சிங்கள கிறீஸ்தவர்கள் ஒரே சமய அடிப்படையில் இணைவதும் காலத்தின் தேவையாக உயர்ந்து நிற்பதை காண்கிறோம். இந்த இணைவுகள் மூலம் இலங்கையர் என்ற பல் இனக்குழும இலங்கையை உருவாக்கத்திற்கான சிந்தனைப்போக்கு அவசியமாகின்றது.

    முஸ்லீம்கள் தாம் ஒரு வேறான இனம் என்ற கருத்தை முன்வைக்கும் உரிமையுண்டு அந்த உரிமையை நான் மதிப்பளிக்கிறேன், முஸ்லீம்கள் தமக்கென பள்ளிவாசல்களை அமைத்து அங்கு அமைதியாக தமது தொழுகைகளை செய்யவும் உரிமையுண்டு இந்த உரிமையை புலிகளினால் முஸ்லீம்களின் வெளியேற்றம் பலப்படுத்தியிருந்தது (இவைபற்றி இன்னும் நியறயவே பேச வேண்டியுள்ளது)!!வாழ்க்கை முறையை இஸலாமிய வாழ்வியல் அடையாளம் அடிப்படையாக கொண்டு இந்த வாதத்தையும் பிரதிவாதங்களையும் எழுப்ப முடியும், ஆனால் மத அடையாளம் பிற்போக்குததனமானது கடவுள் பொய்யானது நிரூபிக்கப்பட்டு 150 வருடங்களாகி விட்டது.

    கடவுளின் துதுவர்கள் என்று யாரும் இங்கு வந்ததில்லை (எங்கிருந்து வர)எல்லாம் எம்முடன் வாழ்ந்தவர்கள் தம்மை தாமே அல்லது பக்கத்தில் இருந்த முட்டாள் (அறிவில் குறைந்தவர் )அவரை கடவுளின தூதுவராக்கினார் அல்லது அவரது உறவினர்கள் அவரின் நினைவுடன் வாழ அல்லது அந்த கதைகளை வைத்த தனத வாழ்க்கைகயை கொண்டு நடத்தத இறந்தவரை கடவுளின் துதாவராக்கினார்.

    முஸ்லீம்கள் யாழ் சென்று குடியேறுவது அவர்களது உரிமை அந்த உரிமையை அவர்கள் இஸ்லாம் என்ற மத அடையாத்தினால் பெற்றவர்கள் அல்ல பல வருட கால வராற்று ரீதியாக வாழ்ந்த இனம் என்ற அடிப்படையில் இந்த உரிமை உருவானது அதுபோல எந்த மொழியை அடிப்படையில் தமது வாழ்வியல் மொழியாக பாவிக்கிறார்களோ அந்த மொழி மூலமே அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்.

    இதைவிட்டு இஸ்லாமிய ரீதியான உரிமைகளை முன்வைத்து யாழில் குடியேற்றம் என்று கூறமுடியமா? இஸலாமிய ரீதியில் இலங்கையில் இஸ்லாமிய அடையா இனக்குழுமத்தின் தோற்றுவாயை உருவாக்க முடியுமா?

    இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம்கள் திராவிட இனத்தவர்கள் இவர்களில் ஆரிய, மத்திய ஜரோப்பிய, பேசிய, இனக்கலப்புக்கள் உள்ளதை மரபணு சோதனைகள் நிரூபித்துவிட்டது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சோதிலிங்கம் அருமையான கட்டுரை ஒன்றையே எழுதிவிட்டீர்கள். நான் குசும்பாய் இருந்து கொண்டு சொல்வதால் கேட்கமாட்னேன் என்று அடம்பிடிக்கிறார்கள்.
    நீங்கள் எழுதியது போல் சோனகர் முஸ்லீம்கள் தமிழர்கள் சிங்களவர்கள் எல்லோரும் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது சரியானதாக இருந்தாலும் எனது சிறு கருத்தையும் இங்கு வைக்க விரும்புகிறேன். முக்கியமாக கிழக்குப் பகுதியில் இருக்கும் முஸ்லீம்கள் ஆதி தமிழர்கள் திராவிடர்கள். இங்கு நடைபெற்ற சமூகக் கலவரம் ஒன்றை வெளியில் இருந்து வியாபாரத்துக்காக வந்த சோனகர்கள் மதம்மாற்றினார்கள். அது இன்று இனமாற்றமாக நிஸ்தார் போன்றவர்களால் நிற்கிறது. இந்த கலவரத்தில் முக்கியமாக மதமாற்றத்துக்கு உள்ளானவர்கள் முக்குவர் ஆவர்.
    சோனகர்கள் உருவத்திலும் திராவிடர்களை விட வித்தியாசமானவர்களே.

    எலு என்பது இலங்கையின் பலபகுதிகளில் வாழ்ந்த ஆதி முற்றுப்பெறா மொழியாகும். முற்றுப்பெறாததற்குக் காரணம் ஆதிமொழி மொழிவளர்ச்சியில் பங்கெடுத்ததே தவிர அது ஒரு தனிமொழியாகவே எழுத்துவடிவமோ பெறவில்லை என்பதை அறிவது அவசியம். இன்றும் தமிழில் இருந்த வந்த துலு போன்ற மொழிகள் எழுத்துவடிவமற்றே இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். இலங்கையர்கள் பலருக்கு துலு என்றால் என்ன என்று தெரியாமால் இருக்கலாம். உலக அழகி ஐஸ்வரியாவின் தாய்மொழி துலு. அதை அவரே தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார்.

    இலங்கையில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் திராவிடர்களே. ஆனால் சோனர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் அவர்கள் உண்மைத் திராவிடர்கள் அல்ல திராவிடர்களுடன் கலந்தவர்கள். சுருங்கச் சொல்லின் அடையாளம் அற்றவர்கள். வியாபாரத்துக்காக வந்த நாடோடிகள் எனலாம். இந்த இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக மதம்மாற்றுவதில் வல்லவராக இருந்தார்கள் உலகில் எப்பகுதியை எழுத்தாலும் பலாற்காரம் பணம் என்பதை வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவதற்குப் பயன்படுத்தினார்கள். சோனகரின் இரத்த உறவுகளான மொறோக்கேவில் இந்துமத நம்பிக்கைகள் உடைய மதம் இருந்தது. இவர்கள் பாபர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். அவர்களை மதம்மாற்ற அராபியர்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் வரிச்சலுகை என்று இப்படிப் பல முறைகளின் மதம் மாற்றினார்கள். இன்றும் மொறோக்கேவில் இஸ்லாத்தைத் தழுவி இருந்தாலும் தம்மை பாபர்கள் என்றே அடையாளப் படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு மொழி இருந்தது. பாபர் மசூதி கூட இந்து சமஸ்கிருத சைவசித்தாந்த கட்டமைப்புக்குள்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை பிபிசி ல் ஒரு ஆதாரபூர்வமான ஆய்வு வெளிவந்தது. இதை சோதிலிங்கம் அறிந்திருப்தற்குச் சாத்தியம் உண்டு. இதை ஏன் சோதிலிங்கம் இங்கே கொடுக்கவில்லை என்பது எனது கேள்வி.

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கயில் “தமிழ்” என்னும் விடயங்களில் முஸ்லிம்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. அவர்கள் தனி இனம் என்று மகிந்த ராஜபக்ஷவுடன் வாதித்து தங்கள் பங்குகளைப் பெறட்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்த முஸ்லிம்கள் தங்களுக்குத் “தனிப் புகையிரதம்” விட வேண்டும் என்றும் இலங்கை அரசே செலவையும் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப் போகிறார்கள். ஜாக்கிரதை!

    தென்னிந்திய மொழிகளின் மூதாதை “எலு” என்பதற்கான சான்றுகள் உண்டு. மொழி மூலம் அரசியல் என்பது ஐரோப்பியர் வருகையின் பின்னர் எங்கள் நாடுகளில் புகுந்த விஷயம்.

    முன்னைய காலங்களில் “அரபிகள்” அல்லது அவர்களின் கலப்பு அல்லது மதம் மாறியவர்கள் அரசியலின் ஈடுபடவில்லை. இன்று “மண்” மீது உரிமை கோரும் அரசியலில் முஸ்லிம்களும் ஈடுபாடு காட்டுவதால் அவர்களுடைய பாரம்பரியம், டீ என் ஏ, என்பனபற்றிய சான்றுகளை அவர்கள் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ள்ளனர்.

    முஸ்லிம்நாடுகளில் “மற்றவர்கள்” எத்தனை காலம் வாழ்ந்தாலும் பிரஜா உரிமை பெற முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நிஸ்தார்! நீங்கள் முக்கியமாக அரபு இஸ்லாம்பற்றி உங்களுக்கு இருக்கும் அறிவு இலங்கை முஸ்லீங்கள் பற்றி இல்லை என்ற கணக்கிலேயே தெரிகிறது நீங்கள் அன்னிய சோனகர்கள் என்று. உங்களது ஆரம்ப கருத்துப் பரிமாற்றங்களிலேயே நான் சோனகரும் எம்மவரான தமிழர்கள் என்று நான் குறிப்பிட்தற்கு இல்லை இல்லை நாங்கள் தனிமரங்கள் என்று மதத்துக்குள் ஒழிந்து கொண்டீர்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் இலங்கையிலுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் சோனர்கள் அல்ல. இலங்கை இஸ்லாமியர்கள் சோனகர்கள் என்ற பொய் ஆதாரங்களைத் தேடாது இஸ்லாம் எப்படி இலங்கையினுள் நுளைந்தது என்று அறிய முயல்வீர்களானால் உமது பூர்வீகம் புலப்படும். இப்பவும் அடிமனதால் உங்களை நாங்கள் பிரித்துப்பார்க்க விரும்பவில்லை. பிரிந்துதான் இருக்க வேண்டும் என்றால் நாம் தடுக்கவும் இல்லை.

    இன்னுமொரு முக்கியமான விசயம் சிங்களப்பகுதிகளில் வாழ்ந்த (நான் நாட்டில் இருந்த வேளை) முஸ்லீங்கள் வெளியில் சிங்களத்தைச் சரளமாகப் பேசினாலும் வீட்டில் தமிழ்மொழியையே பாவித்து வந்த பெருமைப்படும் விடயங்களும் உண்டு.

    /முஸ்லீம்கள் யாழ் சென்று குடியேறுவது அவர்களது உரிமை அந்த உரிமையை அவர்கள் இஸ்லாம் என்ற மத அடையாத்தினால் பெற்றவர்கள் அல்ல பல வருட கால வராற்று ரீதியாக வாழ்ந்த இனம் என்ற அடிப்படையி/ சோதிலிங்கம். குடியேற்றம் என்பது இன்னிச்சையாய் இயல்பாய் தன்வாழ்விடத்தைத் தெரிவு செய்வது. அதை வலுக்கட்டாயமாகச் செய்வது பலாற்காரம். இருந்தார்கள் என்பதற்காக இருந்து கொண்டிருப்பவர்களைக் கலைப்பது இன்று யூதர்களான இஸ்ரேலியர்கள் செய்வதை சரி என நிரூபித்து விடும். இன்றை வடக்குக் கிழக்கில் அரசு செய்யும் குடியேற்றங்கள் தமிழ் முஸ்லீங்களின் அடிமடியில் கைவைப்பது போன்றது. இலங்கையில் உள்ளவர்கள் எங்கும் வாழலாம். ஆனால் தன்னிச்சையாக, அழுத்தப்படுத்தி அல்ல. இன்று அரசு செய்யும் திட்டமிட்ட பலாற்காரக் குடியேற்றங்கள் தனிய தமிழ் முஸ்லீங்களை திட்டமிட்ட அழிப்பது மட்டுமல்ல எங்கோ ஒரு இடத்தில் ஒரு இனத்தவனுக்கு அடிவிழும்போது இலங்கை பூராக கலவரங்களை ஏற்படுத்தி அரசில் நடத்தி வாக்கு வங்கிகளை நிரப்பும் 72: 83 காலப்பகுதிக்கு மக்களை பின்தங்கச் செய்யும் நிகழ்வுகள் என்பதை மறந்தலாகாது. தன்னிச்சையாக புரிந்துணர்வுடன் வந்து குடியேறும்போது மனந்திறந்த வரவேற்பைப் பெறும் நிலை வரும் அடாதாக குடியேறும் போது ஒரு இனமே வெறுக்கும். ஒருவனது முகத்தில் அறைந்துவிட்டு என்னுடன் நண்பனாக இரு என்று வற்புறுத்த முடியுமா. பயத்தில் அவன் நண்பனாக இருந்தாலும் அவனுள் குரோதம் வளர்ந்து கொண்டல்லவா இருக்கும். இன்று ஐக்கிய இலங்கை கட்டிய எழுப்பப்படவில்லை. ஐக்கியம் கெடுக்கும் குழப்பங்களே கட்டி எழுப்பப்படுகின்றன.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என்று அடையாளங்களை தேட ஆரம்பிக்கும்போது நாம் இன்னும் மேலும் பேச வேண்டிய தேவையுள்ளது.

    இலங்கையின் ஆதிவாசிகளான இயக்கர் நாகர் பரம்பரையினர் அதன் பின்னர் இவர்களின் பரம்பரையினரான வேடர்களும் இன்றுள்ள சில குறிப்பிட்ட சாதியினரும் இருந்துள்ளனர் இவர்களின் பின்னர் இந்திய பிராந்தியத்தின் சனத்தொகை பெருக்கத்தின் விளைவாகவும் இந்திய பிராந்தியத்தின் நிலப்பரப்பு புவியியல் மாற்றங்களினாலும் இந்திய பிரதேச மக்கள் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர் தம்மையும் இனம் பெருக்கிக் கொண்டனர் இந்த வளர்ச்சி ஒரு நீண்ட காலப்பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    ஆரம்பத்தில் இந்தியாவில் உருவாகிய பல கோட்பாடகளில் 300 மேற்பட்ட கருத்து தொகுப்புக்கள் எழுந்தது இவைகளில் சில இயற்கையின் பயம் காரணமாகவும் சில இந்த பயங்களில் இருந்து தெளிந்து சிவ வழிமுறைகளையம் கொண்டும் இந்த தொகுப்புக்கள் உருவாகியிருந்தன இவற்றின் பரம்பல்கள் நாளடைவில் இலங்கைக்கும் பரவியது அதே போன்று பல் தேசங்களுக்கும் பரவியிருந்தது இப்படி பரவிய பல் வேறுபட்ட கருத்துத் தொகுப்பின் வளர்சசி நாளடைவில் தனி வளர்ச்சியுடன் மேலும் பலரின் உட்சேர்க்கைகளால் பெரிய தொகுப்புக்களாக வளர்ந்து கொண்டது இந்த உட்சேர்க்கைகளில் பல தனி மனிதர்களின் ஆழமான அறிவிற்க்கு உட்பட்டது என்றோ அல்லது அவை கடவுள் தந்தார் என்று கூறப்படும் நித்திரையால் எழுந்து தமது நினைவில் (பயம் காரணமாகவம்) உருவான நினைவுகளையும் தொகுத்து நாளடைவில் இவைகள் தமது அன்றாட வாழ்வில் தம்முடன் இருந்து வாழ்ந்து மரணமடைந்தவர்களின் நினைவின் பெயராலும் அதற்க்கு ஒரு தியறி என்று பெயரிட்டும் தமது இனத்தவர்கள்என்று இன்று கூறப்படும் தம்முமன் இணைந்து வாழ்ந்தவர்களுக்கு கதைகளாக கூறப்பட்டும் கடமைகள் என்று சொல்லி நாளாந்த நடத்தைகளடன் இணைத்தும் பரம்பரையினருக்கு கடத்தப்பட்டு வந்துள்ளன இவைகளின் எச்ச சொச்சங்களே நாளடைவில் இந்திய பிராந்தியத்தில் 300 மேற்ப்பட்ட சமயங்களாக இருந்துள்ளது.

    இதில் ஒரு கிளை சீனா நோக்கியும் இன்னொரு கிளை இன்று சொல்லப்படும் அரபு நோக்கியும் தனது பரம்பல் பயணத்தை தொடர்ந்தது (இவைகளையே இன்று கீழைத்தேச நாகரீக பரம்பல்கள் என்றும் இவைகள் நாளடைவில் எழுத்துக்கள இலக்கங்களை உருவாக்கிக்கொண்டும் உள்ளன.

    இதில் முக்கியமான ஒரு சமயப்பிரவாக இருந்தது கடவுள் என்றோ அல்லது இறந்தவர்கள் எம்மீது ஆளுமை செலுத்துவதில்லை என்ற கோட்பாடும் உருவாக ஆரம்பித்தது இங்கிருந்து சமயத்தவர்களிடையே வாக்குவாதங்கள் சண்டைகள் உருவாக ஆரம்பித்துக் கொண்டன இப்படியான சண்டைகளில் வெற்றி கொண்டவர்களும் இப்படியான கருத்துருவாக்கங்களினால் தமது இனக் குழுமத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதுமான தந்திரோபாயங்களை கண்டுகொண்டவர்களும் தமக்கு தமக்கொன புதிய புதிய கோட்பாடுகளை உருவாக்கி தமது இனத்தின் அடையாளமாகவும் வளர்த்தெடுத்தனர்.

    இப்படி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சமயமாக சைவத்தை பார்க்கலாம் சைவம் சைபர் என்ற கருத்து உருவாக்கத்துடன் ஒன்றுமில்லை கடவுளுமில்லை இறந்தவர்கள் எம்மீது ஆளுமை செலுத்துவதில்லை அவர்கள் எம்மிடம் திரும்பி வரப்போவதுமில்லை இறந்த உடல்களை தம்முன்னே எரித்துவிடலாம் அல்லது மண்ணில் புதைத்து விடலாம் என்றும் நம்பினர் ( இந்தக்காலத்திற்க்கு சற்று முன்னர் இறந்த உடல்களை பாதுகாப்பாக வைத்திருந்தும் அந்த உடல்களுக்கு பக்கத்தே தினமும் உணவுகளையும் வைத்தும் இவற்றின் பயனாக ஏதுவும் நடைபெறுவதில்லை என்ற அனுபத்தின் பின்னர்) இறந்தவர்கள் கடவுள் என்ற கோட்பாட்டில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என் கோட்பாட்டிலிருந்தும் மாற்றங்கள் சமூகத்தில் எழுந்துவிட்டது.

    சைபர் என்பது தொடங்கிய இடத்திலே முடியும் என்பதாகும் இதன் கருத்திலிருந்தே சைபர் இந்தியாவில் உருவானது என்றும் இது பின்னாளில் கணிதத்தில் இன்ற நவீன தொழில்நுட்பத்தின் முலமாகவும் இருப்பதையும் காணலாம்.

    இது மனிதன் பிறப்புக்கு முன்பு என்று ஒன்றுமில்லை அதேபோல இறப்பின் பின் ஒன்றுமில்லை என்ற அர்த்தத்திலே உருவானதாகும் என்கிறார் அப்துல் கலாம் பிறப்புக்கு முன்பு என்று ஒன்றுமில்லை அதேபோல இறப்பின் பின் ஒன்றுமில்லை என்ற கருத்தின் அடுத்த வடிவமே பெளத்தம் ஆகும் பெளத்தம் இன்று இப்போது வாழ்கின்ற வாழ்வே பிரதாதனம் என்பதையும் பிறப்புக்கு மன்பும் பின்னும் ஒன்றுமில்லை கடவுள் என்று யாரும் பயப்பிட அங்கு இங்கு எங்கும் ஒன்றுமில்லை இதுவே நிஜம் என்ற யதார்த்தத்தை முன்வைத்தது.

    இப்போது சமூகமும் தனக்குரிய அனுபவங்களில் இருந்து பெளத்தம் உதித்தது எனலாம். பெளத்தம் தனக்குரிய பாணியிலான வளர்ச்சியில் இருக்கும் அதேவேளை மற்றய கிளை பரப்புக்களை கொண்ட கோட்பாடுகளும் தொடரச்சியாக தமது வளர்ச்சியில் கேவலங்களையம் மூடநம்பிக்கைகளையும் உள்வாங்கி வியாபித்துக்கொண்டன.

    இந்த வளர்ச்சியில் உருவான சமயங்களே இன்றும் மிக நவீன முறையில் அயோக்கியத்தனங்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
    இதில் இந்துகள் தம்முடன் வாழ்ந்தவர்களே தமது கடவுள் என்றும் எல்லாம் கடவுளின் வடிவம் என்றும் கடவுளை எங்கும் காணலாம் என்றும் கோட்பாடுகளிலும் கிறீஸ்தவம் இஸ்லாம் கடவுள் என்றும் எங்கேயோ இருக்கிறார் என்றும் அவரை நினைந்து வாழ்வதற்காகவும் கோட்பாடுகளையும் பெளத்தம் கடவுள் இல்லை என்ற நம்பிக்கை நிலைநிறுத்தியும் சமூகத்தில மக்கள் மத்தியில் பல இன்னோரன்ன சீரழிவுகளை செய்து கொண்டிருக்கின்றன.

    மனித குல வளர்ச்சி பயத்தினாலும் ஒரு சிலரின் சில இக் குழுமத்தின் தேவைகளுக்காகவும் மதம் சமயம் கடவுள் கொள்கைகளை வளர்த்து விட்டுள்ளனர் இதுவும் இன்று மனிதகுலம் சந்திக்கும் பாரிய ஆபத்தாகவும் மாறிவிட்டுள்ளது இதற்க்கு நல்ல உதாரணமாக இருப்பது பெளத்த சமயமாகும் கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை தெட்டத்தெளிவாக புத்தர் கூறிய போதும் புத்தருக்கு பூசைகள் செய்யப்படகின்றனவே

    அவரின் பெயரால் ஆக்கிரமிப்புக்களும் நடைபெறுகின்றன இந்த சமயத்தில் எல்லோரும் கடவுளின் படைப்புக்ள என்று கூறிவிட்டு வெட்கம் கெட்ட சாதிய வேறுபாடுகளை அங்கீகரித்து வளர்ந்து நிற்கிறது இஸ்லாம் கல்லெறிந்த கொல்லுவதும் கைமுறித்தவனின் கையை எடுத்தல் கொலைக்க கொலை என்ற பாதகத்திலும் இன்று எம்முன் நிற்கின்றது.

    Reply
  • BC
    BC

    சோதிலிங்கம், உண்மைகளை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
    மத அடிப்படைவாத கருத்துக்களுக்கு சேர்ந்து தாளம் போடுவது, வாய் மூடி இருப்பது இது தான் நடுநிலமை, முற்போக்கு, புரட்சிகரம் என்ற நிலையில் உண்மைகளை எடுத்து கூறிய உங்களை மனதார பாராட்டுகிறேன்.
    நான் முதலிலும் குறிப்பிட்டது தான், வெளிநாட்டில் முஸ்லிம் மதத்தை பின்னற்றுவோர் சிலரிடம் பழகியுள்ளேன். அவர்கள் தப்பி தவறி தங்கள் மதத்தால் தங்களை அறிமுகபடுத்தியது கிடையாது. ஒரு முறை ஒருவர் துர்க்கி (Turkey ) நாட்டவர் என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு பின்பு சொன்னார். ஆனால் அங்கேயுள்ள குர்டிஸ் இனத்தை சேர்ந்தவன் என்று.
    சவூதி அரேபியாவில் முன்பு வேலை பார்த்த நண்பர் கூறினார். அங்கேயிருந்த இலங்கையர் அரேபியர் விசாரிக்கும் போது தங்களை இலங்கையர்(சிறி லங்கா)என்றே சொல்வார். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மதத்தை பின் பற்றுவோர் மட்டும் தங்களை முஸ்லீம் பின்பு தான் இலங்கையர் என்று சொல்வார்களாம். ஆனால் இவர்கள் என்ன தான் முஸ்லிம் என்று முதலில் சொன்னாலும் அரேபியர்கள் அதை கணக்கெடுப்பதில்லையாம்.
    றோகான், உடன்கட்டை ஏறுதல் போன்ற விடயம் ஏதாவது நடந்தால் Mohamed Nisthar தேம்நெற்றில் மனித உரிமை அதை மதிக்க வேண்டிய அவசியம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதுவார். கவலையை விடுங்கள்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் குசும்பு, சோதிலிங்கம்.
    நாம் தொடர்ந்து ஆரோக்கியமான வாதங்கள் “இனம்” தொடர்பாக செய்யவேண்டுமானால் உங்கள் அடிப்படை தவறை திருத்திய பிறகே அது சாத்தியமாகும்.

    அந்த அடிப்படை தவறு என்ன வென்றால் உங்களை அறியாமலேயே மதத்தையும், இனத்தையும் போட்டு குழப்புவது. மீண்டும் நன்றாக கேளுங்கள் நான் இனத்தால் “சோனவன்”. நான் முஸ்லிமாக இருப்பது நானாக விரும்பி ஏற்றுக் கொண்ட சமயத்தால்.

    ஒரு விவாதத்துக்காக நான் சைவ சமயத்தை பின்பற்ற தீர்மாணித்து இன்றூ சைவனாகிவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள், இருப்பினும் நான் இனத்தால் சோனகனே. அதே போல் நீங்கள் இருவரும் பெளத்தர்களாகவோ, அல்லது சீக்கிய சமயத்தை பின்பற்றுவர்களாக இருக்கலாம் ஆனால் இன அடிப்படையில் என்றும் நீங்கள் தமிழரே.

    இந்த அடிப்படை விடயத்தில் உங்களுக்கு விளக்கமும், அதன் வித்தியாசங்களும் தெரியாவிட்டால் நாம் தொடர்வதில் எந்த பயனும் யாருக்கும் இல்லை. நான் என் இனத்தை இதுவென்று சொல்வது ஒரு விடயம். நான் இஸ்லாம் என்ற சமயத்தை பின்பற்றி முஸ்லிமாகா இருப்பது இன்னொரு விடயம்.

    நான் என்றும், எங்கும் “முஸ்லிம்” ஒரு தனியான இனம் என்று சொல்லவில்லை.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்களுக்கு அல்லது முஸ்லிமாக மாறியவர்களுக்கு முதலில் தரப்படும் உபதேசம் “காபிர்களின்” வரலாறுகள் “பொய்” என்பதும் அவற்றை அழிக்க வேண்டும் என்பதுவும்தான்.

    சோதிலிங்கமும் மற்றவர்களும் “இயக்கர்நாகர்” கதைகள் எல்லாம் எழுதி எதுவித பயனும் கிடையாது. இந்த முஸ்லிம்களின் கதை எப்பொழுதும் அரேபிய முகம்மதுவுடன் மாத்திரமே ஆரம்பிக்கும்.

    தமிழ் ஏன் பேசுகிறார்கள் என்பதற்கு இந்த முஸ்லிம்கள் எந்த வித சரித்திர ஆதாரத்தையும் வைக்கப் போவதில்லை. இப்பொழுதுள்ள “தமிழ்” பிரச்சனையில் தங்களுக்கு என்ன “லாபம்” என்பதுதான் அவர்களது பிரச்சனை.

    சரித்திரம் விஞ்ஞானம் என்பன முஸ்லிம்களுக்கு “ஹராம்” என்பது இந்த தமிழ் மக்களுக்கு இன்னமும் புரியவில்லை!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /அந்த அடிப்படை தவறு என்ன வென்றால் உங்களை அறியாமலேயே மதத்தையும், இனத்தையும் போட்டு குழப்புவது. /
    மதத்தையும் இனத்தையும் போட்டுக் குழப்புவது நானல்ல. முக்கியமாக இஸ்லாமியர்கள். நீங்கள் இனத்தால் சோனகராகவே இருங்கள். சோனகர் என்ற இனம் இலங்கையைச் சேர்ந்தது அல்ல என்று ஒத்துக்கொள்ளுங்கள். உங்களது அடிப்படைமொழி தமிழே அல்ல. சுருங்கச்சொல்லின் சோனக இனம் இலங்கையில் சரியன அடையாளம் அற்றே இருக்கிறது. எங்களின் விவாதத்துக்கு முன் மனதளவில் மொழிசார்ந்த எம்மிலொருவராக ஏற்றிருந்தேன். நாம் இணைந்து ஒன்றாக இருக்க எண்ணினாலும் நீங்கள் விடமாட்டீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். சோனகரை யாழ்ப்பாணத்தை விட்டுக் கலைத்தபோது போர்கொடி உயர்த்தியது நான் என்பதை வெட்கத்துடன் சொல்கிறேன். இஸ்லாம் சொல்லும் சகோரத்துவத்துக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டதே என்பது வேதனை தான். இன்றும் நான் சோனகரை வெறுக்கவில்லை பல மனக்கசப்புகளுக்குப் பின்பும். ஆனால் இலங்கை நாட்டில் பலகாலமாக வாழ்ந்தவர்கள் என்பதால் பேகர் இனத்தை போல் சோனரும் ஒரு இனம் என்பதை ஏற்று மதிப்பழிக்கிறேன்.
    பகிடிக்காவது நீங்கள் இந்துவாக மாறுவது பற்றிச் சொல்லாதீர்கள். உங்கள் மதம் உலகெங்கும் நடத்திய மதமாற்றங்களையும் ஒரு இஸ்லாமியின் மற்றமதத்திற்கு மாறியதால் முக்கியமாக இஸ்லாமியப்பெண்கள் ஏற்பட்ட விழைவுகளை நேரில் கண்டவன் யான். மதங்கள் அனைத்தும் ஆணுக்கொரு சட்டமும் பெண்ணுக்கொரு சட்டமுமாகத்தானே நடைமுறையில் இருக்கிறது.

    நந்தா!/தமிழ் ஏன் பேசுகிறார்கள் என்பதற்கு இந்த முஸ்லிம்கள் எந்த வித சரித்திர ஆதாரத்தையும் வைக்கப் போவதில்லை. இப்பொழுதுள்ள “தமிழ்” பிரச்சனையில் தங்களுக்கு என்ன “லாபம்” என்பதுதான் அவர்களது பிரச்சனை./
    சரித்திரம் இருந்தால்தானே ஆதாரம் வைப்பதற்கு. வியாபாரத்துக்காக நாடோடிகளாக வந்த சோனக இனம் வந்த இடத்தில் தங்கினார்கள். தமிழ்தாய் மொழியாம் தமிழ்மொழி அழிப்பு நடைபெறும்போது அவர்கள் சோனகர்கள் இஸ்லாமியர்கள். திட்டமிட்டு தமிழ் அழிக்கப்பட்டது படுகிறது சோனகர் என்ன செய்தார்கள்.

    Reply
  • MOHAN
    MOHAN

    //வடக்கில் அங்கஜனை அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தி, அவரை வேட்பாளராக்கி, மாவட்ட அமைப்பாளர் வரை உயர உதவி செய்தது அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தான்.

    யுத்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட காரணத்திற்காக யாழ் அரச அதிபராக இருக்கும் இமெல்டா, முல்லைத்தீவின் வேதநாயகம் போன்றோரின் பதவிகளை பறிக்க அரசாங்கம் முயன்ற போது அதனை தடுத்து, அவர்கள் எதிர்கொண்டிருக்கும் நிர்ப்பந்தம் குறித்து விளக்கமளித்தது அமைச்சர்களான அமீர் அலீயும், றிசாத் பதியுத்தீனும் தான்.

    இப்படி எத்தனையோ விடயங்களை தொட்டுக்காட்டலாம். அவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது வெறும் இனத்துவேச உணர்வுடனான வெற்று வார்த்தைகள் மட்டுமே. அதனை நிரூபிக்க ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்களேன் பார்க்கலாம்..?//

    அஸ்ரப் அலி அவர்களே! ராமனாதன்/(கொழும்பு சிங்கப்பூர்) காலம்சென்ற பத்மனாதன் (அவுஸ்திரேலியா) தனிகசபாபதி(லன்டன்) பற்றியவிபரம் ஏற்கனவே சாந்தன் எழுதியிருந்தார். சந்திரிகா பதவிக்கு வந்தபின்னர் தேடப்பட்ட குற்றவாளிதான் இந்த ராமனாதன். சிங்கப்பூரிலும் அஸ்த்திரேலியாவிலும் தலைமறைவாக இருந்தவர். பின்னாளில் அங்கஜன் நம்மல் +ராஜபக்சவின் பாடசாலை தோழமையால் இலங்கையில் காலடி வைத்தார். கொழும்பில் கப்பிட்டல் அப்பாட்மெண்ஸ், பத்மா கண்ரக்சன், ராமபுரம் என பல கோடி வர்த்தகம் ஆரம்பித்தனர். மே பதினெட்டுக்கு பின்னர் கொழும்பில் பல மாடி வீடுகட்டுவதில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் யாழில் முதலீடு செய்வதற்காகவெ தனது பாலியநண்பனும் ஜனாதிபதியின் மகனுமாகிய நம்மல் ராஜபக்ச மூலம் அரசியலுக்கு வந்த்தவர்தான் ராமனாதன் அங்கஜன். வல்வெட்டி+அளவெட்டியின் உற்பத்தியான இவர்கள் ஆரப்பத்தில் சங்கக்கடை(கூப்பன்)யில் மோசடிசெய்ததற்காக ஊர் மக்களால் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். பின்னர் மாவைக்கந்தன்… கொழும்பு…பிரேமதாச…எனநிறய விடங்கள் உள்ளன. அஸ்ரப் அலி அவர்களே முஸ்லீம்கள் தமிழருக்கு அரசு மூலம் பல உதவி செய்ததாக மேலே ஒரு பெரும் பட்டியல் போட்டிருந்தீர்கள். தயவுபன்னி தமிழனுக்கு காது குத்திறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் குசும்பு,

    உங்கள் 15.11.10 பின்னூட்டம் தொடர்பாக,
    முதலில் என்னை சோனகர் என்று ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி. நிற்க,
    1. “சோனகர் என்ற இனம் இலங்கையை சேர்ந்தது அல்ல என்று ஒத்துக் கொள்ளுங்கள்”. அப்படி முடியாது. காரணம் அந்த இனம் இலங்கையையும் சேர்ந்தது. அந்த இனம் இந்தியாவிலும் உள்ளது, பிலிப்பைன்ஸ்சிலும் உள்ளது, மொரோக்கோவிலும் உள்ளது.

    2.”நாம் ஒன்றாக இருக்க எண்ணியதையும் நீங்கள் விடமாட்டீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்” உங்கள் புரிதலில் ஏதோ தப்பிதம் உள்ளது தெரிகிறது. நாம் ஒன்றாக வாழாவிட்டால் அனவருக்கும் அழிவு நிச்சயம் என்பது உறுதி. ஆகவேதான் சொல்லிறேன் நாம் யார் என்பது நமக்கு தெரியாத போது நாம் ஒன்றாக இருந்தும் பிரயோசனம் இல்லை. நாம் ஒன்றாக செயல் பட எதுவுமே தடைகள் அல்ல. ஆனால் அடையாலம் இல்லாமல் சேர்ந்திருப்பது கேளிக்கையானது.

    3. “சோனகரை யாழ்பாணத்தைவிட்டு கலைத்த போது போர் கொடி உயர்த்தியது நான் என்பதை வெக்கத்துடன் சொல்கிறேன்” இதில் என்ன வெட்கம் இருக்கிறது. சரியானதை சரியான நேரத்தில் செய்து விட்டு இப்போது அது தவறு என்று சொல்வது உங்கள் மேல் சந்தேகத்தை ஏற்படுதுகிறது. இந்த நேரத்தில் எப்படி உங்கள் பின்னால் கொடிபிடிப்பது. சரியானதை கூட ஏதோ ஒன்றுக்காய் பிழை என்கின்றிர்கள்.

    4. “மதங்கள் அனனத்தும் ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டமுமாகவே நடைமுனறயில் உள்ளது” பாத்தீர்களா திடிரென்று சமயத்துக்கு மாறுகின்றிர்கள். முதலில் இனம் பற்றி கதைத்து முடிவு கண்டு பிற்பாடு மதத்துக்கு போனால் என்ன?

    5. “சரித்திரம் இருந்தால் தானே ஆதாரம் வைப்பதற்கு, வியாபாரத்துக்குகாக நாடோடிகளாக வந்த சோனகர் இனம் வந்த இடத்தில் தங்கினார்கள்” சரித்திரம் இல்லாமல் பகுடிக்காக நேரத்தை வீண்னடிக்கவில்லை. தமிழர் சோனகர்களை ஒரு இனமாக கருதவில்லையே என்பதனால் சரித்திரம் தந்து எமது நிலைப்பாட்டை நிரூபிக்க முன் சில பல அறிமுகங்களை தந்தோம் அவ்வளவுதான். வரலாறு தேவை என்றால் தாராளமாக வரும் சற்று பொறுமை காருங்கள்.

    6. “… தமிழ் மொழி அழிப்பு நடைபெறும் போது அவர்கள் சோனகர்கள் இஸ்லாமியர்கள்” மீண்டும் இனத்தை ஏனோ மதத்துடன் கலக்க முனைகின்றீர்கள். நிற்க மொழி அழிப்பில் தமிழர் எவ்வளவு கெட்டிக்காரர் என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் சொல்கிறேன் கேளுங்கள்.

    1980களில் யாழ் பல்கலை கழகத்துக்கு அனைத்து தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகளும் வேண்டும் என்று பகிரதபிரயத்தனம். அதில் குறை சொல்ல இடமில்லை. அதற்காக பேராதனை தவிர்ந்த பல்கலைகழகங்களின் தமிழ்மொழி மூலமான கற்கைநெறிகளை மூடப் பண்ணியவர்கள் அவர்கள். நாம் எமது சக்திக்குட்பட்டவாறு முயற்சித்தோம். பறி போயின. தமிழ் மொழி மூலம் பயிலும் சோனக மாணவர் ஒன்றில் யாழ் செல்ல வேண்டும் அல்லது படிப்பை விட வேண்டும். போர் சூழல் பலர் படிப்பை விட்டனர். என் குடும்பத்திலும் நடைபெற்றது. பல மாணவர் ஆங்கில மொழிக்கு மாறினர். இப்போது நல்லாய் இருக்கின்றனர். மீண்டும் சந்திப்போம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இதோ அடுத்த ஆப்பு முஸ்லிம்களுக்கு!!
    -http://www.lankaenews.com/English/news.php?id=10268
    வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாள் முடிவையிட்டு ஆடு பலிகொடுப்பதை தடுக்க மஹிந்தா ராஜபக்சாவின் ஜனாதிபதி ஊடகத்துறை பெளத்த பேரினவாதிகளுக்கு தோள்கொடுக்கிறது.
    ஊடகத்துறை அறிக்கையில் மிருகங்கள் வதை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் ஜனாதிபதி. இது ஒன்றும் மிருகங்களின்பால் கொண்ட அன்பில் விளைந்ததல்ல. மாறாக முஸ்லிம்களின் ”தனித்துவத்துக்கு” விழும் அடுத்த ஆப்பாக இருக்கலாம். இது எனக்கொன்றும் சந்தோசம் தரும் செய்தியல்ல. ஆனால் அரசுடன் ஒத்து ஊதியவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

    Reply
  • நந்தா
    நந்தா

    நிஸ்தார் ஒரு போதும் கடந்த கால வரலாறுகள் பற்றி கதைக்கப் போவதில்லை. ஏனென்றால் அதில் அவர்களுக்கு லாபம் கிடையாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    / இனம் இலங்கையையும் சேர்ந்தது. அந்த இனம் இந்தியாவிலும் உள்ளது, பிலிப்பைன்ஸ்சிலும் உள்ளது, மொரோக்கோவிலும் உள்ளது./ நிஸ்தார்
    அதைத்தான் நானும் சொல்கிறேன். இது இலங்கையைப் பூர்வீகமாகக் கொள்ளாத ஒரு நாடோடிக் கூட்டம் என்று.
    /நாம் ஒன்றாக வாழாவிட்டால் அனவருக்கும் அழிவு நிச்சயம் என்பது உறுதி. ஆகவேதான் / தமிழர்களின் அழிவில் உழைத்துப் பெருத்தவர்கள் நீங்கள் என்பது யாரும் அறிந்ததே. மீண்டும் இதற்குச் சந்ததர்பம் கொடுக்கலாகாது. எவ்வளவு காலத்துக்கு கூட்டிவைத்துக் குழிபறிப்பதாக எண்ணம்.

    Reply
  • Mohan
    Mohan

    அன்பார்ந்த மக்களே! எம்மில் யாரும் அமைச்சர்களாகவோ அரச அதிகாரிகளாகவோ இலங்கையில் அங்கம் வகிக்கவில்லை. போரினால்நாம் இழந்தது சொல்லி மாளா.
    வன்னியிலிருந்து தப்பி யாழ் வந்து அடிப்படை வசதி எதுமின்றியே எமது வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு தண்ணீர் கூட அள்ள முடியாத எழுதா தடாச்சட்டம் விதிக்கப்பட்டிருபதை அறிவீர்களா? நாம் எமக்கென்று எதுவும் தனியா கேட்கவில்லை. நாம் தமிழர் முதலில் நமக்கொரு வழி அமைப்பீர்களா?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    //பாபர்கள் என்றே அடையாளப் படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு மொழி இருந்தது. பாபர் மசூதி கூட இந்து சமஸ்கிருத சைவசித்தாந்த கட்டமைப்புக்குள்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை பிபிசி ல் ஒரு ஆதாரபூர்வமான ஆய்வு வெளிவந்தது. இதை சோதிலிங்கம் அறிந்திருப்தற்குச் சாத்தியம் உண்டு. இதை ஏன் சோதிலிங்கம் இங்கே கொடுக்கவில்லை என்பது எனது கேள்வி//குசும்பு

    பாபர் மசூதி மட்டுமல்ல, அங்கவேற்கன்னி கோயில் இன்று அன்னைவேளாங் கண்ணி கிறிஸ்தவ தேவாலயமாக உள்ளது

    கொழும்பு அந்தோனியார் கோவில் முன்னைய அம்மன்கோவில் என்றும் இன்றும் இதன் பின்புறம் இந்த கோவிலின் அடையாளங்கள் உள்ளது என்று ஒரு பெளத்த துறவி கூறியிருந்தார் இது ஏன் இவ்வளவு காலமாக வெளிவரவில்லை என்று கேட்ட போது துறைமுகம் கட்டி பின்புறத்திற்கும் வெளியாருக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போனதால் என்றார். இந்த அந்தோனியார் கோவிலுக்கு இந்துக்கள் தமது அம்மனின் நினைவாகவே போக ஆரம்பித்து பின்னர் அதுவும் தொடர்ந்தது.

    தாஜ்மகாலின் உட்புற வேலைப்பாடுகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனவே!

    ஒன்றை மறக்க வேண்டாம் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது மனித குலம் பல அனுபவங்களை சந்தித்தும் பரீட்சித்தும் அதில் சிலர் பின்பற்றியும் சிலர் ஒதுங்கியும் சிலர் எதிர்த்தும் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது

    இன்றைய தொழில் நுட்பம் இவற்றை மீள்பரிசீலனைக்கு உதவுகின்றது இதையும் மனித குலம் சண்டைக்கும் யுத்தத்திற்கும் மனிதனை எதிர்க்கவும் பாவிக்காது விட்டால் சரி ஆனால் குசும்பு கேட்கலாம் யுத்தம் மூலம்தானே மற்றைய மதங்கள் எம்மீத திணிக்கப்பட்டது என்று ஆம்! , ஆனால் நாமும் திணிக்க கூடாது அல்லாவா!

    மனிதகுலம் மட்டுமல்ல அண்ட சராசரங்களும் மாற்றங்களை நடாத்திக் கொண்டே இருக்கின்றன. சிலவேளை மழைக்கும் காலநிலை மாற்றத்திற்க்கும் இந்த புவியின் (அசைவு)மாற்றம் மட்டும் காரணம் என்று இன்று நாம் எமது அறிவுக்கு எட்டிய விஞஞானம் சொல்லலாம். ஆனால் சூரிய குடும்பமும் காரணம் என்பதை நிரூபிக்க முடியாமல் எமக்கு தெரிந்தவைகளே!!

    பாபர்களும் எகிப்தியர்களும் தமது கோவில்களின் மூலஸ்தானத்தில் உள்ள விக்கிரகத்தை அமன்(அம்மன்) என்ற பெயர் கொண்டே இன்றும் அழைத்தனர். இவர்களில் எல்லோருமே இஸ்லாமியர்களாக இன்று உள்ள போதும் இந்த பெயரும் மட்டுமல்ல இந்த கோயிலில் பெளர்ணமி தினத்தில்(சந்திர கலண்டர்படியே நிகழ்வுகளை கீழைத்தேயத்தவர்கள் நடந்தனர்)அரசர்கள் கோவில் முன்வந்து திருஉருவத்தை வீதி உலா எடுத்துவருவதும் வழக்கம் இதன் போது திருஉருவத்திற்க்க மக்கள் தெருக்களில் நின்று மலர் தூவுவதும் வழக்கம். இந்த விழா முடிவில் அரசன் தலைமையில் மக்களுக்கு விளையாட்டுக்கள் போட்டிகள் நாடகங்கள் நடாத்தி அதற்காக பரிசுகள் கொடுப்பதும் வழக்கம் (இதை வாசிக்கும்போது 1980 களில் ஊரில் கோவிலில் திருவிழாக்கள் செய்தது போன்று இல்லையா இவற்றிக்கான அடிப்படைகள் ஒன்றாகவே உள்ளதை அவதானிக்கவும்.)

    அதேபோன்று ஈரான் ஈராக்கியர்களில் பலர் இன்றும் தமது இடங்களில் பாரிய நெருப்புக்களை எரித்து அதில் ஒரு சமய சடங்குகளை செய்கிறார்கள் இதை மூட நம்பிக்கை கொண்டவர்கள் என இஸ்லாமியர்கள் கூறவதும் வழக்கம் இது நாம் இந்தியாவில் இலங்கையில் சொக்கப்பானை என்றும் பெரிய தீ வளர்த்து (சரஸ்வதி புஜை முடித்த பின்) செய்யும் வழக்கத்துடன் ஒப்பிடலாம்.

    அதைவிட தீபாராதனை காட்டுவதையும் அவதானிக்கலாம் நான் நினைக்கிறேன் மொரோக்கர்கள் தமது பள்ளி வாசல்களில் தீபாராதனை செய்பவர்கள் (சிலவேனை எல்லோரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்).இஸ்லாம் இப்படியாக உருவ வழிபாடு தவறு என்றும் இப்படியாக இஸ்லாமிய காலங்களில் இருந்த அரசர்களின் உதவியுடன் அன்று இருந்த உலமாக்கள் தமது பிரதேசங்களில் இருந்த சிலைகள் உருவங்கள் பலவற்றை தூக்கிப்போய் நரகத்துக்கு போங்கள் என்று மெக்காவில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில்போட்டு அதை கரீபா என்று அழைக்கிறார்கள் என்று நான் வாசித்ததுண்டு. இந்த கரீபா(தவறாயின் யாரும் திருத்தவும்) இந்த கரிபாவிற்க்கு மெக்காவிற்க்கு போகும் ஒவ்வொரு யாத்திரிகரும் இந்த இடத்திற்கு பொய் தமது பாவங்களை அங்கே அந்த கருங்கல்லுகளில் கழித்துவிடுவது வழக்கம். இந்த கல்லுகளில் ஒன்று இந்துக்களின் சிவலிங்கம் என்று இஸ்லாத்துக்க மாறிக்கொண்ட பெண் ஒருவர் இந்தியாவில் தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தார் அத்துடன் அந்த சிவலிங்கத்தின் பீடத்தில் சமஸ்கிருத குறிகள் இன்றுள்ள இந்தி எழுத்துபோன்றவைகள் உண்டு என்றும் அதில் சொன்னார்

    காலம் இந்த பல சம்பவங்களுடன் மாறிக்கொண்டிருக்கிறது சனத்தொகை பெருகிக்கொண்டிருந்து இந்த மாதிரியான கருத்துக்கள் தகவல்களின் தொடர்புகள் தடைப்பட்டுபோயின. இதனிடையே இஸ்லாம் கிறிஸ்தவம் இன்னம் பல மதங்களும் வளரந்துகொண்டன. அப்படி வளர்ந்த கொண்ட மதங்களும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. அந்த நிலை நிறுத்தத்திற்காக அரசியல் சமூக பொருளாதார பின்னணிகள் ஏற்ப்படுத்தப்பட்டுக் கொண்டன பல மாறிக்கொண்டிருக்கிறது உண்மைத்தகவல்கள் எல்லோருக்கும் சென்றடையவில்லை .

    இன்று தகல் தொழில்நுட்பத்தின் உதவி, இவற்றை எல்லாம் மக்கள் முன்வைக்கிறது. இப்போது எது சரி, எது தேவை என்றெல்லாம் மக்களால் அறிய முடிகிறது இந்துக்களின் சாதி வெறியின் அடிப்படை இன்னமும் சரியாக முன்வைக்கப்படவில்லை ஆனால் சிலர் இதற்கான காரணங்கள் இந்து சமயத்திலிருந்து சிலவற்றை முன்வைக்கிறார்கள் இவைகளில் பல தொழில் சார்நிலைகளே என்றும் இதற்கான அடிப்படையில் பொருளாதாரம் என்றும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள் பொருளாதாரக் காரணிகள் என்றும் மக்களின் வாழ்வில் முக்கியத்துவமான காரணங்களாக இருந்துள்ள போதும் மிளகாய் போன்று இந்திய உப கண்டத்திற்கு தெரியாத ஒரு பொருளை ஸ்பானியர்கள் புகுத்திவிட்டு இன்று ஸ்பானியர்களுக்கு மிளகாய் பரீட்சயம் இல்லாத/மிகவும் குறைந்த பொருளாகவே உள்ளது.

    இதைவிட இன்றும் ஈராக்கியர்கள் ஈரானியர்கள் துருக்கியர்கள் இந்தியாவை மாகாபாரத் என்றும் இந்துஸ்தான் என்றும் கூறுவதை லண்டனில் அவதானிக்கலாம்.

    இதில் உள்ள பலவிடயங்களை ஒரு 175 கேள்விகள் கொண்ட தொகுப்பாக தொகுத்து இலங்கையிலிருந்து வந்த மெளலவி ஒருவரிடம் கையளித்துள்ளேன் அவை வெளிவந்ததும் மேலும் ஆய்வுகளை தொடரலாம் இப்படியான ஆய்வுகள் கட்டாயமாக தேவையானதே. ஆய்வுகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாது.

    “இந்து வேதங்களில் வேற்றுமதத்தின் வருகை பற்றி குறிப்பிட்டும் இந்த வருகையில் இவர்கள் மாமிசத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்காள இருப்பார்கள் என்றும் இந்த ஆர்வலர்கள் தொடர்ந்தும் பெருகி உலகை பாரிய மாற்றத்திற்க்கு இட்டுச்செல்வார்கள் என்றும் இதன் முடிவில் உலகம் அழியும் (ஊழியம்)என்றும் அதன் பின்னர் கடவுள் மீண்டும் வருகை தந்து உலகை மீளவும் படைப்பார் என்பது” அப்படியானால் ஏன் இந்துக்கள் வேற்றுமதத்தின் வருகையை எதிர்பார்த்து தானே இருக்க வேண்டும் அது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்தே தீரும் ஏன் நீ (-குசும்பு) கவலைப்படுகிறாய்.

    குசும்பு ஒன்றை மறந்து விட வேண்டாம் இன்று இஸ்லாமியர்கள் தாம் தமது இஸ்லாமிய கொள்கைகளை உலகின் கொள்கையாக மாற்ற முயற்ச்சிக்கிறார்கள் அது அவர்களின் முயற்ச்சி செய்யட்டும் முடிந்தால் நீரும் உமது சமயத்தை அப்படி உலக மதமாக உருவாக்குவீராயின் முயற்சி செய்யவும்.

    இஸ்லாம் அரபு மொழி மூலம் இஸ்லாத்தை மூலமே இஸ்லாத்தை அறியவைக்கும்படி முகம்மது சொல்லியுள்ளார் இதன் மூலம் முழு இஸ்லாமியர்களையம் ஒரு இனமாக்கிக்கொள்ள முடியும் என்பதேயாகும் இதன் மூலம் ஒரு பொது மொழியாக சர்வதேச மொழியையும் சர்வதேச மதத்தையும் உருவாக்கிக்கொள்ளலாம் என்ற அவர்களின் பயணத்தில் பல தடைக்கல்லுகள் ஏற்படுகின்றன அவர்கள் அது சரி என்றே செயற்படுகின்றனர்.

    இவர்கள் எதிர்பார்க்கும் பாரிய தடைக்கல்லும் பாரிய ஆயதமுமாக இருப்பது இன்றய தொழில் நுட்பம். இது இஸ்லாத்தின் பரம்பலுக்கு உதவி செய்யும் அதேவேளை கடவுள் தத்துவத்தின் பொய்களையும் அம்பலப்படுத்துகின்றதை அதவானிக்க வேண்டும். இதில் அறிவை தேடுகின்றவன் அறிவை தேடும்போது இரண்டையும் தேடுவான் முதலாவதாக கடவுள் இருக்கிறார் என்பவன் பின்னர் தனது நாளாந்த அனுபவத்ததாலும் சுய அறிவு முதிரச்சியாலம் கடவுள் இல்லாமல் வாழலாமா? என்ற கேள்வியும் பின்னர் கடவுள் என்று ஒன்றுமில்லை என்றே வருவான் (என்ன எல்லாவற்றிக்கும் பரிசோதனை செய்பவர்கள் இதற்கு ஏன் பரிசோதனை செய்யக் கூடாது உதாரணத்திற்க்கு 6 மாதங்கள் கோவிலுக்கு போகாமலும் கடவளைப்பற்றி சிந்திக்காமலும் இருப்பாரானால் அவரவருக்கு தெரியும் அதன் பலாபலன் அல்லது 6 மாதம் கடவளையே 100 சதவிகிதம் நினைத்து பூஜை செய்தும் தொழுகை செய்தும் பார்தாரானால் தெரியும் அதன் பலாபலன்) இங்கே அறிவு என்பது என்ன என்ற விடயம் முன்வைக்கப்படுகிறதை அவதானிக்கவும்)

    ஆனால் இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலையில் இஸ்லாம் என்ற வாதத்தை முன்வைக்க முடியாத காரணம் வரலாற்று ரீதியான தொடர்பு பூர்வீகம் என்பதில் இஸ்லாம் அடிபட்டுபோய்விடும் ஆகவே இதை விளங்கியவர்களால் சரியாக சோனகர்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் அதுவே சரியாக இருக்கும் இல்லாவிட்டால் இஸ்லாத்திற்க்கு இடம் இருக்காது என்பதேயாகும் இஸ்லாம் இந்திய பிராந்தியத்திலேயே அடிபடும் உதாரணத்திற்கு பாக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தானுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு என்று ஆராயப் போனால் இஸ்லாம் அடிபட்டுப்போகும். ஆனால் பாக்கிஸ்தானியர்கள் தம்மை முஸ்லீம் இனம் என்று கூறவில்லையே தம்மை அங்குள்ள தமது இனங்களின் பெயரால் அழைப்பதால் அவர்களுக்கு அந்த நிலத்தின் உரிமை கிடைக்கிறது.

    இவைதான் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் தம்மை சோனகர்கள் என்று அழைத்தார் குறைந்தது ஒரு நீண்ட கால வாழ்வியல் உறவு அவர்களை பாதுகாக்கும் இதை விடுத்து இஸ்லாத்தின் பெயரால் மதத்தின் பெயரால் தமது இனத்தை குறிப்பிட்டால் மற்றய மதத்தவரின் எதிர்ப்பினால் இவர்களின் மதத்தின் பெயரால் பெறும் இன அடையாளம் இஸ்லாமிய இனம் அடிபட்டு விடும். இதுதான் இலங்கையில் உள்ள சோனகர்கள் தம்மை சோனகர்கள் என்றே குறிப்பிடுவது சரிஎன்ற வாதம். ஆனால் அரபு நாடுகளின் அலவாங்கை விழுங்கியவர்கள் தம்மை முஸ்லீம்கள் என்று அழைப்பது பற்றி அவர்களே தமது இனத்தினுள்ளே விவாதித்துக் கொள்ளட்டும். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த இலங்கையில் உள்ள இந்த இனம் எப்படி தமது அடையாளத்தை நிரூபிக்கப் போகிறார்கள் என்று!! இந்த இலங்கையர்கள் இலங்கைக்குள் எங்கும் வாழட்டும் இலங்கையராய் இவர்களோடு இணைந்து வாழ்ந்திடலாம்..

    முதலாளித்துவத்தின் சீர்கேடுகளுக்கு எதிராக போரட அதிகாரத்திற்கு எதிராக போராடும் வல்லமையை இஸ்லாம் கொண்டுள்ளது உலகின் சமூகமாற்ற நடவடிக்கைகளில் இஸ்லாமும் பங்காற்றும் என நான் நம்புகிறேன் அதேபோன்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராக( மூட நம்பிக்கைகள் என கடவுளை குறிப்பிடுகிறேன் அதற்கு எதிராக பெளத்தம் சரியான தத்துவார்த்த அணுகு முறைகளையும் கொண்டுள்ளது)நான் மனிதகுலம் மாற்றத்தை (சமவுடைமை) அடைவார்கள் வரலாறு சரியாகவே எழுதப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

    Reply
  • BC
    BC

    //மோகன் – எம்மில் யாரும் அமைச்சர்களாகவோ அரச அதிகாரிகளாகவோ இலங்கையில் அங்கம் வகிக்கவில்லை. //
    இவர் சொல்வது உண்மையா? இலங்கையில் தமிழ்அரச அதிகாரிகள், தமிழ் அமைச்சர்கள் இல்லையா?
    அரச அமைச்சர்கள், அரச அதிகாரிகள், எல்லோரும் தமிழின விரோதிகள் என்றே அன்று ஓதப்பட்டோம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    குசும்பு..
    //ஆனால் இனம் என்பது உண்மையாக இருப்பது இனத்துக்கு உயிர்நாடியும் உணர்வாகவும் இருப்பது மொழி. உணர்வுகள் மொழி மூலமே பகிர்ந்து கொள்ளப்படுவதால் அந்த உயிர்நாடியான மொழிவை வைத்தே இனம் வரையறுக்கப்படுகிறது//
    சரி.. அப்படியானால் இலங்கையில் பறங்கியர் என்றொரு இனம் இருக்கின்றார்களே… அவர்களின் மொழி என்னவென்று யாராவது எனக்குக் கூறுவீர்களா? மாத்தறையில் வாழும் பறங்கியர் சிங்களத்தையும் மட்டக்களப்பில் வாழும் பறங்கியர் தமிழையும் பேசுகின்றனர். அதற்காக அவர்களை மொழிவாரியாக நீ சிங்களம் அல்லது தமிழ் என்று குறிப்பிட முடியுமா? இல்லையே.. நாம் அவர்கள் என்ன மொழி பேசினாலும் பறங்கியர் என்றுதானே அழைக்கின்றோம்..?

    //இஸ்லாம் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது. ஐரொப்பாவிலும் சரி உலகில் எந்தக் கண்டத்திலும் சரி எங்கே முஸ்லீம்கள் மற்றய மதம் இனத்துடன் சகோதரத்துவத்துடன் இருந்தார்கள். அதற்கான அடிப்படைக் காரணிகள் எதுவுமே முஸ்லீம்களிடன் இல்லை. அவர்கள் மதத்தை மட்டும் முன்னிறுத்தி மனிதத்தைத் முக்கியமாகப் பெண்களை அவமதிக்கும் பண்பு பண்டைய காலம் தொட்டு வந்திருக்கிறது//
    வர்ணக்கண்ணாடியை கழற்றி விட்டு நீங்கள் பார்த்தால் உங்களுக்கு விளங்கும். உலகெங்கும் வாழும் ஒரு இனம் பல்வேறு மொழிகள் பேசிய போதும் ஒரே இனமாக இருக்கின்றது என்றால் மாற்றுமதத்தவருடன் சகோதரத்துவம் பேண அந்த இனத்துக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கு இருக்கப் போகின்றது?

    என்றைக்கும் முஸ்லிம்கள் மாற்று மதத்தவருடன் ஒற்றுமையாகத் தான் வாழ்கின்றார்கள். அதன் காரணமாகத் தான் வடக்கில் பல இயக்கங்களில் இருந்த இளைஞர்கள் பின்னாளில் அதிலிருந்து விலகிய பின் அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் தான் வந்து அடைக்கலம் தேடினார்கள். தேவையென்றால் ஊர் பெயர் விபரம் நான் தருவேன். நேரில் போய்ப் பாருங்கள்.அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம் மக்கள் தங்கள் சகோதரர்கள் போன்றே நடத்துகின்றார்கள். அதன் காரணமாக யுத்தம் முடிவடைந்த பின்னும் இன்னும் பலர் சொந்த இடங்களுக்குத் திரும்பாமல் அதே இடங்களிலேயே தொடர்ந்து வாழ விரும்புகின்றார்கள். வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

    நந்தா…
    // கதீசில் இந்த பிரிவில் அல்லது குரானின் அந்தப் பிரிவில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது அல்லது இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்து விட முடியாமல் வெறுமனே “பொய்” என்று எழுதி புரட்டு செய்வதன் நோக்கம் என்ன? மகிந்த ராஜபக்ஷ எதற்காகத் துரத்தினார் என்பது இப்பொளுது புரிகிறது// என் பழைய பதிவுகளை வாசித்துப் பாருங்கள். விளங்கும்.

    /அட இவ்வளவு மானஸ்தன், மனிதாபிமானியாக இருக்கிறாரே இந்த அஷ்ரஃப் அலி என்று பார்த்தால் ’ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை’ என உண்மையை போட்டுடைத்து எல்லாவற்ரையும் கவிழ்த்துவிட்டீர்களே?//

    சாந்தன்.. நான் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காரணத்தால் தான் நான் அதிகாரிகளைப் பகைத்துக் கொண்டு காரியமாற்ற முடிந்தது. அது கூட உங்களுக்கு விளங்கவில்லையா? அவ்வளவு நட்புடன் என்னுடன் பழகியவரையே தமிழ் மக்களுக்கு அநீதி செய்ய முற்படும்போது தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கின்றேன் என்றால் அதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதா?

    //கொழும்பு வீதிகளில் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் எனவும் மரணதண்டனை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தும் அல்லவா போராட்டம் நடத்தினீர்கள்//
    புத்தகத்தை தடைசெய்யும் படிதான் போராட்டம் நடைபெற்றது. அதற்காக மரண தண்டனைக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தவுமில்லை.

    //சொல்லப்போனால் ஸ்ரீலங்காவில் தகுதிக்கு என்ன மதிப்பு. செல்லப்பிள்ளைகளுக்கே பதவி//
    என் தகுதி பற்றி உங்களுக்குப் பட்டியலிட வேண்டுமாயின் கேளுங்கள்.. பட்டியலிடுகின்றேன். நான் தகுதியில்லாமல் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொண்டதில்லை. 1994ம் ஆண்டில் இருந்து நான் ஊடகத்துறையில் இருக்கின்றேன். அவ்வளவுதான்.

    //உங்கள் ஊடகத்துறை ஸ்ரீலங்கா போரின் போது மக்கள் கருத்தை கவனத்தில் எடுத்ததா? அல்லது மாற்ரத்தைக் கொண்டுவர நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்//
    நான் முன்பே குறிப்பிட்டது போன்று அரசாங்கத்தின் அனைத்து செய்திகளும் எங்கள் அனுமதியுடன் வெளியிடப்பட்டவையல்ல. நாங்கள் கொடுத்த அனுமதியைப் பயன்படுத்தி ஆளாளுக்கு வெளியிட்டனர்.எதிராகவும் வெளியிட்டனர். ஆயினும் எந்தவொரு செய்திக்காகவும் – எதிரானதாக இருந்தால் கூட-நான் யாரையும் கடிந்து கொண்டதோ அவர்களின் விடயங்களில் தலையிட்டதோ இல்லை. ஊடகத்துறை சுதந்திரத்தை மதித்துள்ளேன். மிதிக்க முற்பட்டவர்களைத் தான் அடக்கி அதட்டி உள்ளேன்.

    //Hajjaj responded to a casus belli provided by the kidnapping of Muslim women and treasures by pirates off the coast of Debal//

    ஆமாம் மோகன் தாஸ் ஏதோ விளக்கம் எல்லாம் கொடுத்து எங்களை மடக்கப் பார்க்கின்றார். பாவம். அவரே ஒத்துக் கொள்கின்றார்.. முஸ்லிம் பெண்ணொருத்தியைக் கடத்தியதற்காய் தான் முஸ்லிம்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தார்களே தவிர வெறுமனே ஆக்கிரமிப்பு நோக்குடன் வரவில்லையென்று. ஆக சீண்டிவிட்டதன் விளைவுதான் இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி. குசும்பு.. நந்தா… சாந்தன் எல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்…?

    Reply
  • ashroffali
    ashroffali

    // மதம் வேறு இனம் வேறு. உலகிலுள்ள அனைத்து இனமும் மொழியாயே அடையாளப்படுத்தப் படுகின்றனர் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்//
    நான் மேலே சொன்னது போன்று பறங்கியர் அப்போ என்ன இனம்..? பொடியப்பு பியசேன தமிழ் மட்டுமே எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஆனால் அவர் சிங்களவர். அது எப்படி? இனிய பாரதியின் மனைவியும் தமிழ் தெரிந்த சிங்களவர். அவர்கள் எல்லோரும் தமிழ் பேசுவதால் தமிழர்களாகாத காரணம் அவர்கள் வேறோர் மதத்தைப் பின்பற்றுவதனால்தான். அப்போ மதம் தான் அங்கு இனத்தை வரையறை செய்கின்றது.

    இனம் என்பதற்கான வரைவிலக்கணம் என்னவென்பதை நான் பின்னொரு பின்னூட்டம் மூலமாக தருவேன்…

    மொழியும் இனத்தினை நிர்ணயிக்கும் ஒரு அம்சம் மட்டுமே. அதற்காக அது மட்டும் தான் என்றில்லை.

    //ஒவ்வொரு மிருகசாதிக்கும் அதற்கென்று ஒரு மொழி இருக்கும் போது/
    மகா கேவலமான இனத்துவேசமான வார்த்தைப் பிரயோகம். உங்களை நினைத்து பரிதாபப்படுகின்றேன்.

    திரு சோதிலிங்கம் அவர்களே…
    //இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் உள்ளவர்கள் ஏன் மொழி மூலம் தம்மை அடையாளப்படத்துகிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். //
    இரான் மக்கள் அரபி பேசியபோதும் அவர்கள் பாரசீக இனமாக வரையறை செய்யப்படுதலை நீங்கள் அறியவில்லையா? உலகெங்கும் பரந்து வாழும் யூதர்கள் அந்தந்த நாடுகளின் மொழிகளையே பேசினாலும் அவர்கள் யூதர்கள் என்று வரையறை செய்யப்படுவது எப்படி?

    இனம் என்பதற்கு மொழி மற்றும் மதங்கள் மற்றும் வரையறை செய்வதில்லை. அதற்கப்பால் கலாசாரம் உள்ளிட்ட பல பண்புகள் கவனிக்கப்படும். அதை நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவாக விளக்குவேன்.

    //முஸ்லீம்கள் தாம் ஒரு வேறான இனம் என்ற கருத்தை முன்வைக்கும் உரிமையுண்டு அந்த உரிமையை நான் மதிப்பளிக்கிறேன்//
    நன்றி. வாழ்த்துகின்றேன்..

    //முஸ்லீம்கள் யாழ் சென்று குடியேறுவது அவர்களது உரிமை அந்த உரிமையை அவர்கள் இஸ்லாம் என்ற மத அடையாத்தினால் பெற்றவர்கள் அல்ல பல வருட கால வராற்று ரீதியாக வாழ்ந்த இனம் என்ற அடிப்படையில் இந்த உரிமை உருவானது //
    யதார்த்தமான உண்மை. ஆனால் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை குடியேற விடாது விசமக்கருத்துக்களைத் தெரிவிப்பது யார்?

    மீண்டும் மற்றவர்களின் கருத்துக்களுக்கான பதில்களுடன் தொடர்வேன்..

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் குசும்பு, சோதிலிங்கம்,
    குசும்புவின் 16ம் திகதிய பின்னூட்டம் பலவிடயங்களை சொல்கிறது.
    1. “… இது இலங்கையில் பூர்வீகம் கொள்ளாத ஒருநாடோடிக் கூட்டம்”
    பூர்விகம் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது குசும்பு அவர்களே? இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் இந்தியாவில் இருந்து வந்ததாகவே பல வரலாறுகள் கூறுகின்றன. ஆக இலங்கை சோனகருக்கு முன்பாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடீர்கள் என்பதற்காக பூர்வீக குடியாகிவிட்டீர்களா? சிங்களவர் நேர்மையாகவே ஏற்று கொள்கின்றனர் அவர்களும் உங்களைப் போலவே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று. நீஙகள்மகா வம்சமும் பிழை என்று முன்னர் சொன்னதாக தெரிகிறது. உங்கள் வாதத்தை “கல் தோன்றி மண் தோன்றா…” என்ற அடித்தளத்தில் இருந்து தொடங்குகிறிகளோ?. சரி அப்படியே வைதுக் கொண்டாலும் சோனகரை எப்படி “நாடோடிகள்” என்பீர்கள்? சரி அப்படியும் வைத்துக் கொள்வோமே, இப்போது பின்வரும் உங்கள் சொற்பிரயோகங்களை சற்று உற்று நோக்குங்கள் ” தமிழர்களின் அழிவில் உழைத்துப் பெருத்தவர்கள் நீங்கள் என்பது யாரும் அறிந்ததே” இந்த விடயத்தை எப்போது கண்டுபிடித்தீர்கள்? இரண்டு நாட்களுக்கு முன்னான உங்கள் பின்னுட்டங்களில் “சேர்ந்து வாழ முயற்சித்ததாகவும் “சோனகர்கள்” அதை கெடுத்துவிட்டது மாதிரியும் சொன்னீர்கள். இலங்கையில் உரிமையற்றிருக்கும் ஒருநாடோடி கூட்டத்துடன் சேர்ந்து வாழ்வதில் அப்படி என்ன அலாதி பிரியம்? உங்கள் பின்னூட்டத்தை தொடர்ந்தும் வாசியுங்கள் ” மீண்டும் இதற்கு சந்தர்ப்பம் கொடுத்தலாகாது, எவ்வளவு காலத்துக்கு கூட்டிவைத்து குழி பறிக்க எண்ணம்” இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு இருந்து கொண்டு இந்த தமிழ், சோனக இனங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று உண்மையில் ஆசைப் பட்டீர்களா? இங்குதான் எனக்கு சந்தேகம் அதிகரிக்கின்றது.

    ராஜபக்ஸ முஸ்லிம்களின் தியாகத்திருநாள் தினத்தில் ஆடு வெட்ட தடைவிதித்து விட்டதாக வீடியோ படம் வேறு காட்டுகிறிகள். ஆடு விடயம் முஸ்லிம்களின் தலை போகும் விடயமுமல்ல. அதை விடவும் நாடோடிக் கூட்டத்தினருக்கு இலங்கையில் உரிமையே இல்லை என்று எந்தவித அதிகாரமும் இல்லாத நீங்களே சொல்லும் போது இலங்கையின் ஜனாதிபதி எதையாவது சொல்லி விட்டு போகட்டுமே. அதுவேறு “ஆப்பு” என்று சொல்கிறிர்கள் எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை.

    நிற்க, சோதிலிங்கம் பலவிடயங்களை சுட்டிக் காட்டி இருந்தீர்கள். ஒருவிடயத்தை தவிர நீங்கள் சொன்ன பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.அதாவது சோனகர் என்ற விடயத்தை தவிர. ஆனாலும் அவை இந்த பின்னூட்டத்துக்கு சம்பந்தம் இல்லாதபடியால் அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.

    உங்கள் பத்துவிடயங்களோடு பதின்னொன்றாக யாழ் நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தாண விடயத்தையும் தொட்டிருக்கலாம். ஒரு வேளை மறந்திருப்பீர்கள். மேலும் உங்களின் “சோனகர்” சம்பந்தமான விடயம் பலருக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அடித்த சுனாமி போல் இருக்கும், என்றாலும் எமது எதிர்கால இருப்புக்காக இந்த “சோனகர்” என்ற அடையாளம் தேவைப்படுகிறது என்று சொல்லும் போது ஏதோ வசதிகருதி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொல்மாதிரி இது இருந்துவிடக் கூடாது என்பதில் நீங்கள் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். இலங்கையின் “சோனகர்”கு இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒன்று நீங்கள் சொல்லும் “இயக்கர்”ருடன் தொடர்புபட்டது. இது இன்னும் பலத்த ஆராய்வுக்கு உற்படுத்தப்பட வேண்டியது. மற்றயது சும்மார் 1500-1700 ஆண்டு பழமையானது. 1500 ஆண்டுகள் பழமையா இந்த “பழமை” காணாது ஆகவே நீங்கள் நாடோடிக் கூட்டம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

    Reply
  • gobi
    gobi

    //ஒவ்வொரு மிருகசாதிக்கும் அதற்கென்று ஒரு மொழி இருக்கும் போது/
    மகா கேவலமான இனத்துவேசமான வார்த்தைப் பிரயோகம். உங்களை நினைத்து பரிதாபப்படுகின்றேன்.///அஸ்ரப்அலி

    //….மனிதன் ஏதோ 21ம் நூற்றாண்டில் இருக்கிறானே தவிர பலரின் குணம், அதனால் செயற்படும் முறை எல்லாம் அப்படியே குரங்கு தன்மையில்தானே இருக்கிறது. அதற்காகவே சமயம். அவனை இந்த உலகத்தில் ஆகக் குறைந்து மிருகமாக இல்லாமல் வாழ தூண்டுவது. …..//
    mohamed nisthar on November 13, 2010 7:18 pm

    வாழும் மனிதரையே மனிதன், குரங்கு என நிஸ்தார் பிரிவுபடுத்தும்போது அது உங்கள் கண்ணுக்கு துவேசமாகத தெரியவில்லையே ஏன்? நிஸ்தார் உங்கள் இனம் மதம் மொழி என்பவராலா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///….தவறிழைத்தது பிற்போக்குத்தனமான சம்பிரதாயமும் சமூகமும் அவர்களது காட்டு மிராண்டித்தனமும்….//

    இந்த ‘நொண்டிச்சாட்டைச்’ November 5, 2010 4:23 pm இல் சொன்ன அதே அலாவுதீன் என்னிடம் 10 நாட்களில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

    ”….அலாவுதீன் on November 12, 2010 6:42 pm
    அவர்கள் விருப்பப்படியே தமது சமூகத்தினால் கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் “கடமையை” நீங்கள் முன் நின்று நடத்தி வைத்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? மறுப்பிறுத்தால் கூறுங்கள், ….”

    Reply
  • kamal
    kamal

    நிஸ்தார் நல்லூர் கந்தசாமி கோவில் விடயம் இந்தத் தேசத்தில் முதன்முதலில் எழுதியதே நந்தாதான். வசதியாய் அதை மறைத்துப்போட்ட உங்கடை கண்டுபிடிப்பு மாதிரி விடுகிறீயள்

    Reply
  • BC
    BC

    //மொரோக்கர்கள் தமது பள்ளி வாசல்களில் தீபாராதனை செய்பவர்கள்//
    இவர்களிடம் எனக்கு பழக்கம் உண்டு. பார்ப்பதற்க்கு சிறிது இலங்கையர் மாதிரியே இருப்பார்கள். ஹிந்தி படங்கள் விரும்பி பார்ப்பார்கள். ஹிந்தி பாட்டுக்கள் விரும்பி கேட்பதுடன் CD வைத்தும் இருக்கிறார்கள். இலங்கை பாடல் கேட்டபோது என்னிடம் இருந்த ஹாரிஸ் ஜெயராசின் பாடல்களை இந்திய தமிழ் பாட்டு என்று கொடுத்த போது பிடித்து போய் கொப்பி பண்ணியவர்கள். இவர்களில் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள்(எனக்கு தெரிந்த) பர்த்தா போடுவதே இல்லை. இனம் மொழி இரண்டும் அரபு தான். முஸ்லீம் என்று மதத்தை சொன்னது கிடையாது.

    //முதலாளித்துவத்தின் சீர்கேடுகளுக்கு எதிராக போரட அதிகாரத்திற்கு எதிராக போராடும் வல்லமையை இஸ்லாம் கொண்டுள்ளது உலகின் சமூகமாற்ற நடவடிக்கைகளில் இஸ்லாமும் பங்காற்றும் என நான் நம்புகிறேன் //
    முதலாளித்துவத்தின் சீர்கேடுகள் என்று நம் இலங்கை தமிழ் மாக்ஸியவாதிகள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு எதிராக இஸ்லாம் மதமும் போராட போகிறது என்று நம்புகிறீர்கள். இன்னும் சில வருடங்களின் பின்பு பாருங்கள் தேசம்நெற்றில் மொகமெட் நிஸ்தர் எழுதுவார் இரண்டாவது மசூதி நியூயோர்க் நகரத்தில் கட்டவேண்டிய அவசியம் பற்றி.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் என்பவர்கள் எங்கள் கணக்குப்படி மதம் மாறியவர்களும் அரேபியர்களொடு கலந்த தமிழர்களுமே! அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் அவர்களின் மதம் வெறுக்கும்படி கூறுகிறது.

    இன்னொரு யதார்த்த உண்மை.
    எனது மருமகன் பார்வைக்கு ஒர் எம்ஜிஆர் தோற்றம். கனடவில பர்தாவுடன் திரிந்த பாகிஸ்தானி பெண்ணின் மனதில் இடம் பெற்றது அதனை தொடர்ந்து அவர்கள் பதிவு திருமணம் செய்து எல்லோருக்கும் கடுக்காய் கொடுத்ததும் அவர்களை ஆரம்பத்தில் இருந்து ஆதரித்த “குற்றத்துக்காக” என்னை வேட்டையாட புறப்பட்டவர்களுக்கு என்னுடைய “பாகிஸ்தானி” மருமகள் நீதிமன்றத்தில் கொடுத்த “சூடுகள்” பற்றி நான் விபரிக்க விரும்பவில்லை!

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    முஸ்லீம்கள் சம்பந்தமாக எழுதும் நண்பர்களுக்கு நாம் வடகிழக்கு என்று இருந்ததைப் பிரித்து வடக்கு கிழக்கு என்றாகிவிட்டது. தமிழ்பேசும் முஸ்லீம் சிங்களம் பேசும் முஸ்லீம் என்பதல்ல நீண்ட காலமாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திற்குச் சொந்தக்காரர்களே. நல்லூரில் இருக்கும் முஸ்லீம் சமாதியும் அதற்குச் சான்று.

    எந்த மதத்திலும்தான் காட்டிக் கொடுப்பு வேலை இல்லை; கசாப்புக் கடை வேலை இல்லை. யாழில் ஒரு கலவரம் வந்தால் இவர்களால் சூறையாடப்படுவதுண்டு. இதேபோல ஜரோப்பிய நாடுகளிலும் நடப்பதுண்டு. அதற்காக அந்த முழு இனத்தையும் குறைகூற முடியுமா? இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்தும் இவ்வளவு முஸ்லீம்களும் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள். எனவே இவர்களை பாக்கிஸ்தான் தான் போகச் சொல்கிறீர்களா?

    Reply
  • BC
    BC

    //ashroffali- இரான் மக்கள் அரபி பேசியபோதும் அவர்கள் பாரசீக இனமாக வரையறை செய்யப்படுதலை நீங்கள் அறியவில்லையா?//
    இரான் மக்கள் அரபி பேசுவதில்லை.பாரசீக மொழியே பேசுகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். யூத இனத்தவர்கள் மொழி கீப்ரூ- Hebrew.

    ஜெயராஜ், முஸ்லீம் மதத்தை பின் பற்றும் தமிழ் பேசுவோரும் யாழில் வாழ உரிமை உள்ளவரே. இங்கு உரையாடும் விடயம் அவர்கள் பேசும் மொழியை மறைத்து மதத்தை முன் கொண்டுவருவது பற்றியது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன்.. நான் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காரணத்தால் தான் நான் அதிகாரிகளைப் பகைத்துக் கொண்டு காரியமாற்ற முடிந்தது. அது கூட உங்களுக்கு விளங்கவில்லையா?….//

    விளங்குது இப்ப நன்றாகவே விளங்குது. ஆனால் நீங்கள் முன்னர் விட்ட கதை எல்லாம் ‘உயிரைத் துச்சமென மதித்து’, ‘குண்டடிபட்ட நிலையிலும்’, ‘சேட்டுக்கொலரை பிடிதேன்’ , ‘எச்சரிதேன்’எனும் பாணியில் அல்லாவா இருந்தது. செல்லப்பிள்லையாக இருப்பவர் இப்படி எல்லாம் கதை விடத்தேவையில்லை. எல்லாம் …

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது!
    அதில் அர்த்தம் உள்ளது!

    செல்லப்பிளையாக இருந்தால் கொலரென்ன கொலர் ……… அதனை எல்லாம் வீரப்பிரதாப லெவலுக்கு சொல்லத்தேவை இல்லை!

    //….புத்தகத்தை தடைசெய்யும் படிதான் போராட்டம் நடைபெற்றது….//

    ஏன் உங்கள் செல்ல அப்பனின் நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லையா? (ராஜபக்சாவின் செல்லப்பிளை அல்லவா நீங்கள்) . அமெரிக்காவின் நீதிமன்ற படிக்கட்டுகளில் நின்று முஸ்லிம்கள் கருத்துச் சுதந்திரத்தையும் மதவழிபாட்டுச் சுதந்திரத்தையும் கோருவது போல் ஸ்ரீலங்காவில் செய்ய முடியாதா? ஏன் எனக்கு சல்மான் ருஷ்டியின் எழுத்துக்களைப் படிக்கும் உரிமை இல்லையா? நான் அவற்றைப்படித்து புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் எனக்கில்லையா?

    //…என் தகுதி பற்றி உங்களுக்குப் பட்டியலிட வேண்டுமாயின் கேளுங்கள்.. பட்டியலிடுகின்றேன்…..//
    உங்களின் ‘தகுதி’ களுக்கு மேலாக செல்லப்பிள்ளை தகுதி ஒன்றே போதுமே. அதுதானே நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு தூக்கிக்கொடுத்தார் என. அது சரி உங்கள் தகுதி அவரைப்பற்றி தப்புக்கணக்கில் அல்லவா கொண்டு சென்று நிறுத்தியுள்ளது?

    //….நான் முன்பே குறிப்பிட்டது போன்று அரசாங்கத்தின் அனைத்து செய்திகளும் எங்கள் அனுமதியுடன் வெளியிடப்பட்டவையல்ல. நாங்கள் கொடுத்த அனுமதியைப் பயன்படுத்தி ஆளாளுக்கு வெளியிட்டனர்…..//
    அப்போ பணிப்பாளர் பதவி எதற்கு? சும்மா வேடிக்கை பார்க்கவா? பிழை விட்டால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? மணியான பணிப்பாளர்!

    //…எதிராகவும் வெளியிட்டனர். ஆயினும் எந்தவொரு செய்திக்காகவும் – எதிரானதாக இருந்தால் கூட-நான் யாரையும் கடிந்து கொண்டதோ அவர்களின் விடயங்களில் தலையிட்டதோ இல்லை. ஊடகத்துறை சுதந்திரத்தை மதித்துள்ளேன். மிதிக்க முற்பட்டவர்களைத் தான் அடக்கி அதட்டி உள்ளேன்…..//

    அப்போ என்னையும் உங்கள் ஊடகத்துறையில் சேர்ப்பீர்களா? நானும் உண்மைக்குப் உறம்பான செய்திகளை வெளியிட விரும்புகிறேன் (ஆளாளுக்கு வெளியிட்டனர் என நீங்கள் சொல்வதுபோல). என்னையும் ‘ஊடக சுதந்திரத்தை’ மதித்து காப்பாற்றுங்கள். என்னை கேள்வி கேட்பவர்களை (மிதிப்பவர்களை) உளளே போடுங்கள். ஆஹா….அருமை அருமை!
    ஊடகத்துறையை மதித்து அல்லது மிதித்தா சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்? தெளிவுபடுத்துங்கள் அஷ்ரஃப் அலி அவர்களே!

    Reply
  • நந்தா
    நந்தா

    சவூதி அரேபியாவினால் இப்பொளுது ஜிகாத் முன்னெடுக்கப்படுகிறது. அது புரிந்தால் சரி!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் கமல்,
    நான் ஒருபோதும் சொல்லவில்லை “யாழ் கந்தசாமி” கோயில் விவகாரம் எனது கண்டுபிடிப்பு என்பதாக.

    Reply
  • ashroffali
    ashroffali

    நண்பர் சாந்தன்.. அரசாங்க அதிகாரி ஒருவரை கை நீட்டித்தாக்கவும் அச்சுறுத்தவும் நினைத்த மாத்திரத்தில் முடியாது. அத்துடன் சட்ட விரோதமானதும் கூட. ஜனாதிபதி தவிர்ந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படக் கூடியவர்கள். அப்படியான சூழ்நிலையில் நான் துணிச்சலுடன் செயற்பட்டுள்ளதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் உங்களை நினைக்கையில் கவலைப்படுகின்றேன். மற்றபடி எதுவுமில்லை.

    கருத்துச் சுதந்திரம் என்பது வேறு. கருத்து நிந்தனை என்பது வேறு. சல்மான் ருஷ்தி இரண்டாம் ரகம். அதன் காரணமாகத் தான் புத்தகம் தடைசெய்யப்பட்டது. ஏன் இந்துக்கடவுளரை நிர்வாணமாக வரைந்த உசேன் நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்ததே.. அதை என்னவென்று அழைப்பீர்கள்.. அதுவும் கருத்துச் சுதந்திரமா?

    இப்படியெல்லாம் மதங்கள் அவமானப்படுத்தப்படும்போது அது மக்களின் மன உணர்வுகளினை மதிக்காதனவாகி விடுகின்றன. அவை தடைசெய்யப்படத் தான் வேண்டும்.

    Reply
  • ashroffali
    ashroffali

    இனம் பற்றிய சர்வதேச வரைவிலக்கணங்கள் இவை. பார்த்துவிட்டு இனம் பற்றிய உங்கள் வரையறைகளை மீளாய்வு செய்யுங்கள்.

    // An ethnic group (or ethnicity) is a group of people whose members identify with each other, through a common heritage, consisting of a common language, a common culture (often including a shared religion) and a tradition of common ancestry (corresponding to a history of endogamy). //
    -http://en.wikipedia.org/wiki/Ethnic_groupculture.culture.

    // ethnic group, a social group or category of the population that, in a larger society, is set apart and bound together by common ties of race, language, nationality, or culture. //
    -http://www.britannica.com/EBchecked/topic/194248/ethnic-group

    இரண்டும் சர்வதேசப் புகழ்பெற்ற விக்கீபீடியா மற்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    சவுதியில் இலங்கை முஸ்லிம் பெண் கேட்டுப் போனால் தலை தப்புமா?

    Reply
  • Arasaratnam
    Arasaratnam

    ஜெயராஜ், நீங்கள் கூறும் நல்லூரில் சமாதி, அது எங்கே உள்ளது? உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? அது பற்றி விளக்கமாக சொல்லுவீர்களா?

    காட்டிக்கொடுப்பு வேலை, கசாப்புகடைவேலை எந்தமதத்தில்தான் இல்லை என்று சொன்னீர்கள். இன்று வரைக்கும் முஸ்லீம் மதத்தவர்கள் அது பற்றிய சுய விமர்சனம் செய்தார்களா? மீளக்குடியேற்றம் பற்றி மட்டும்தானே கதைத்துக்கொண்ட இருக்கிறீர்கள் நாங்கள் இயக்கங்களை நோக்கி தங்கள் தங்கள சுய விமர்சனம் செய்ய கேட்கிறோம். தேசத்தில் சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள்?

    முஸ்லீம்களை நோக்கி கேள்வி எழுப்ப ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள்??

    புலிகளிடம் தம்மை தனி இனமாக அங்கீகரிக்க கேட்ட முஸ்லீம்கள் ஏன் ராஜபக்சவிடம் கேட்கிறார்கள் இல்லை?

    Reply
  • ashroffali
    ashroffali

    //புலிகளிடம் தம்மை தனி இனமாக அங்கீகரிக்க கேட்ட முஸ்லீம்கள் ஏன் ராஜபக்சவிடம் கேட்கிறார்கள் இல்லை?//

    சிங்களவார்கள் எப்போதும் முஸ்லிம்களை தனி இனமாக ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆகவே அவார்களிடம் கேட்க வேண்டிய தேவை இல்லை..

    அரபு நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை அல்ல அரபுப் பெண் என்றாலும் சட்டம் ஒன்றுதான். சமூக அந்தஸ்துக்கேற்ப அங்கெல்லாம் சட்டங்கள் மாறுவதில்லை.

    Reply
  • Arasaratnam
    Arasaratnam

    அஸ்ரப்அலி நீங்கள் முஸ்லீமா? சோனகரா?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அசுரப் அலி,
    சிங்களவார்கள் எப்போதும் முஸ்லிம்களை தனி இனமாக ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்./ முஸ்லீம் என்பது மதம் என்பதை புரியாதவர் நீங்கள். உலகமே ஏற்றுக்கொண்ட விசயம் இது. முஸ்லீம் என்பது மதம் என்பதை அறியாமலேயே அதை வழிபடுவதில் இருந்து தெரிகிறது அறிவின் அம்பலம்.
    நிஸ்தார்,
    /பூர்விகம் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது குசும்பு அவர்களே? இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் இந்தியாவில் இருந்து வந்ததாகவே பல வரலாறுகள் கூறுகின்றன. / பூர்வீகம் என்பது என்ன என்பது தெரியாமலா உங்கள் பூர்விகம் கதைக்க வெளிக்கிட்டீர்கள். சரித்திரம்தான் சரியாகத் தெரியாது போனாலும் பறுவாயில்லை பூகோளசாத்திரமாவது தெரியுமா? இலங்கை எனும் இந்தத்தீவு அன்று இந்தியா உபகண்டத்துடன் இணைந்திருந்தது ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்பதையாவது எங்கேயாவது காத்துவாக்கில் கேட்டாவது இருந்தீரா? இலங்கை எனும் தீவு இயற்கையால் பிரக்கப்படுவதற்கு முன்னரே நாங்கள் இயக்கர் நாகர் பரம்பரைப் பூர்வீககுடிகள். கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான் என்று எழுதாதையும்.
    சோனகர் அரேபியர்களிடம் சோரம் போனவர்கள். இதனால் வந்த இனம்தான் இது. இதற்கு சொந்த அடையாளமே ஆணிவேரா கிடையாது. விழுந்தபக்கத்துக்குக் குறி சுட்டுக்கொண்டு திரிகிறார்கள். இனியாவது எமது, உமது பூர்வீகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
    /” பாத்தீர்களா திடிரென்று சமயத்துக்கு மாறுகின்றிர்கள். முதலில் இனம் பற்றி கதைத்து முடிவு கண்டு பிற்பாடு மதத்துக்கு போனால் என்ன?/ நீங்கள் மதத்தால் முஸ்லீம் என்பதால் இஸ்லாம் பற்றியும் இனத்தால் சோனகர் பற்றியும் எழுதினேன். இதில் மாறுவதற்கு என்ன உண்டு- தான் கள்ளன் பிறரை நம்பானாம்.
    / தமிழர் சோனகர்களை ஒரு இனமாக கருதவில்லையே / நீங்கள் இனமாக இருந்தாலும் சரி மதமாக இருந்தாலும் தரி எம்முடன் வேண்டாம். கூட இருந்த அறுத்தது போதும். நான் நேரடியா பிரபாவுக்கு பலவருடங்களுக்கு முன் எழுதினேன். சோனகனுடன் சேர்ந்து வாழ்பது கடினம் அவர்களை தனித்து விட்டுவிட்டு விடுங்கள் என்று காரணம் எந்தநேரமும் பிரட்டுவார்கள் என்பது தெரியும். எனது எண்ணப்படி சிங்களவனுடன் நாம் மதத்தால் இணையத்தயார் ஆனால் சோனகனுடன் மொழியால் கூட இணையத்தயாராக இல்லை.

    நந்தா
    /அவர்களை ஆரம்பத்தில் இருந்து ஆதரித்த “குற்றத்துக்காக” என்னை வேட்டையாட புறப்பட்டவர்களுக்கு என்னுடைய “பாகிஸ்தானி” மருமகள் நீதிமன்றத்தில் கொடுத்த “சூடுகள்” பற்றி நான் விபரிக்க விரும்பவில்லை!/ இப்பபுரிகிறது உங்கள் வேதனை. இப்படியான பல அனுபவங்கள் குறியறுந்தவர்களால் நானும் அனுபவித்திருக்கிளேன். கூட இருந்து குழிபறிப்பது முஸ்லீங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. இதை அறிந்திருந்தும் அவர்களை ஆதரித்தீர்கள் பாருங்கள்.

    பிசி! /ஜெயராஜ், முஸ்லீம் மதத்தை பின் பற்றும் தமிழ் பேசுவோரும் யாழில் வாழ உரிமை உள்ளவரே/ ஒரு சிறு திருத்தம். இவர்கள் யாழ்பாணத்தில் அன்று அடாத்தாகக் குடியேறியவர்கள் என்பதை அறிவதும் முக்கியம். இன்றைய நல்லூர் ஆலயப்பகுதிகளில் இந்துக்கள் போத்துக்கேயர்களுடன் பிரச்சனைப்படும் போது எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல் நல்லூர்பகுதிகளில் அடாத்தாக அமரமுயன்றவர்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்தும் இவ்வளவு முஸ்லீம்களும் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள்./ காரணம் இருக்கிறது ஜெயராஜ். கூட இருந்து அறுப்பதற்கு இடம்தேவையல்லவா? ஜனநாயக உரிமைகளுடன் அமைதியாக வாழும் ஒரு இஸ்லாமிய நாட்டை சொல்லுங்கள் பார்க்கலாம்? இந்த மதம் உண்மையிலேயே இளமையான மதமாகிலும் கற்காலத்தை விட மோசமான நாகரீகமற்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் தான் மற்றைய மதங்களில் இருந்தும் பேறுபட்டு பல எதிர்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி சோனகர்கள் எரிகிறவீட்டில் கொள்ளி பிடுங்கியவர்களே. இலங்கை ஆயுதப் போராட்டத்திலும் அப்படியே. தாய்மொழி தமிழ் என்றார்கள் திட்டமிட்டு தமிழ் அழிக்கப்பட்டபோது, அழிக்கப்படும் போது என்ன செய்தார்கள் நடத்திய போராட்டம் ஒன்றை சுட்டிக்காட்ட முடியுமா? இவர்களைத் தூர வைப்பதே எமக்கு நல்லது.
    அரசரத்தினம்
    /அரபு நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை அல்ல அரபுப் பெண் என்றாலும் சட்டம் ஒன்றுதான். சமூக அந்தஸ்துக்கேற்ப அங்கெல்லாம் சட்டங்கள் மாறுவதில்/ ஒம் உண்மைதான் அங்கையும் வெட்டுத்தான் இங்கையும் வெட்டுத்தான்.

    இன்னமொரு புதியதகவல் இது சவுதியில் அல்ல துபாயில் வேலைக்குச் சென்ற இன்னுமொரு இந்துப்பெண் 14 ஊசிகள் உடம்பில் ஏற்றப்பட்டு இலங்கை வந்துள்ளார். இப்படி பல பெண்கள் வெவ்வேறு இஸ்லாமிய நாடுகளில் சித்திரவதைப்பட்டுத் திரும்புகிறார்கள். இதை எந்தக்கணக்கில் போடுவது. இஸ்லாத்தின் கணக்கில் போடுவதா அல்லது தனிமனிதனின் கணக்கில் போட்டு பூசி மெழுகுவதா?

    /சவுதியில் இலங்கை முஸ்லிம் பெண் கேட்டுப் போனால் தலை தப்புமா?/நந்தா
    இவர்கள் தங்களைத் தனித்துவமானவர்கள் என்று காட்ட முயல்கிறார்கள் நாடற்ற நாடோடிகள். அரபுக்காரன் நல்லாத்தான் சேர்த்தான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அரசாங்க அதிகாரி ஒருவரை கை நீட்டித்தாக்கவும் அச்சுறுத்தவும் நினைத்த மாத்திரத்தில் முடியாது. அத்துடன் சட்ட விரோதமானதும் கூட…..//
    ஸ்ரீலங்காவில் சட்டவிரோத வேலைகள் செய்துவிட்டு தப்பி இருக்க முடியுமா? மன்னிக்கவும் மறந்துவிட்டேன் உங்களுக்கு ’செல்லப்பிள்ளை’ சேட்டிபிக்கேற் இருக்கிறதல்லவா? அதுதானே! பணிப்பாளரின் அறிக்கையை ஆளாளுக்கு திரித்து வெளியிடல் சட்டவிரோதமா, அல்லது ‘ஊடக சுதந்திரமா’? ஸ்ரீலங்காவில் அதற்கொரு பெயருண்டு ‘ஊதுகுழல் சுதந்திரம்’. அதற்கெல்லாம் பணிப்பாளர் தேவையில்லை. மக்கள் அவர்களை வால்பிடிகள் எனச் சொல்வது வழக்கம்!

    //…. அப்படியான சூழ்நிலையில் நான் துணிச்சலுடன் செயற்பட்டுள்ளதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் உங்களை நினைக்கையில் கவலைப்படுகின்றேன். மற்றபடி எதுவுமில்லை…..// நன்றாகப் புரிந்து கொள்கிறேன். செல்லப்பிள்ளை எனத்தெளிவாகச் சொல்லியும் நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி?

    //….கருத்துச் சுதந்திரம் என்பது வேறு. கருத்து நிந்தனை என்பது வேறு. சல்மான் ருஷ்தி இரண்டாம் ரகம். அதன் காரணமாகத் தான் புத்தகம் தடைசெய்யப்பட்டது….//
    அப்படி என்ன ‘கருத்து நிந்தனை’ செய்து விட்டார் ருஷ்டி? அவ்வாறே வைத்துக்கொண்டாலும் ஏன் அவற்ரை வாசிக்க எனக்கு உரிமை இல்லை? உங்களுக்கு வேண்டாம் எனின் நீங்கள் வாசிக்காமல் போங்கள். என்னை ஏன் தடுக்கிறீர்கள்?
    ஆண்களுக்கு பெண்களின் கூந்தலை பார்த்தால் ‘வக்கிர புத்தி’ வந்து விடும் என பெண்களை மூடிக்கட்டுதல் போலவா இது? இத்தனைக்கும் மேலாக அது ஒரு நாவல். ஒருவேளை பல நாவல்கள் 500 அல்லது 1000 வருடங்களின் பின்னர் ‘கடவுளின் குரலாக’ மாறுவதனை கண்ணுற்றவர் என்கின்ற ரீதியில் எதிர்த்தீர்களோ?

    //….ஏன் இந்துக்கடவுளரை நிர்வாணமாக வரைந்த உசேன் நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்ததே.. அதை என்னவென்று அழைப்பீர்கள்.. அதுவும் கருத்துச் சுதந்திரமா?….//
    இல்லை. ஹுசேன் மீதான மனித உரிமை மீறல்! எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக கோவில்களில் நிர்வாணச் சிலைகள் உள்ளன என அறியாத மடைத்தனமான மதஅடிப்படைவாதிகள் அவர்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதம் போன்றதே வித்தியாசம் இல்லை.

    //….இப்படியெல்லாம் மதங்கள் அவமானப்படுத்தப்படும்போது அது மக்களின் மன உணர்வுகளினை மதிக்காதனவாகி விடுகின்றன. அவை தடைசெய்யப்படத் தான் வேண்டும்…..//
    மதத்தில் இருக்கும் மனித விரோதக் கருத்துகளை சாடுதல் மதங்களை ‘அவமானப்படுத்தும்’ என நீங்கள் சொன்னால், அந்த மதம் வெறும் ‘மதம்’ அன்றி வேறில்லை. அவற்றைத்தடை செய்ய வேண்டும் மாறாக ஒரு நாவலைத் தடை செய்தல் உங்கள் வாதம் எனில் உங்களின் மனித உரிமை கதை எல்லாம் பம்மாத்து என நான் எடுத்துக்கொள்ள வேண்டும்!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /“… தமிழ் மொழி அழிப்பு நடைபெறும் போது அவர்கள் சோனகர்கள் இஸ்லாமியர்கள்” மீண்டும் இனத்தை ஏனோ மதத்துடன் கலக்க முனைகின்றீர்கள்/ நிஸ்தார்- / நீங்கள் தானே சொன்னீர்கள் நீங்கள் சோனகன் தாய்மொழி தமிழ் என்று. இதைகேட்டால் மதம்பேசுகிறீர்கள் என்கிறீர்கள்.

    அசுரப்அலி // மதம் வேறு இனம் வேறு. உலகிலுள்ள அனைத்து இனமும் மொழியாயே அடையாளப்படுத்தப் படுகின்றனர் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்//
    நான் மேலே சொன்னது போன்று பறங்கியர் அப்போ என்ன இனம்..? பொடியப்பு பியசேன தமிழ் மட்டுமே எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஆனால் அவர் சிங்களவர். அது எப்படி? இனிய பாரதியின் மனைவியும் தமிழ் தெரிந்த சிங்களவர். அவர்கள் எல்லோரும் தமிழ் பேசுவதால் தமிழர்களாகாத காரணம் அவர்கள் வேறோர் மதத்தைப் பின்பற்றுவதனால்தான். அப்போ மதம் தான் அங்கு இனத்தை வரையறை செய்கின்ற/ /
    இங்கே எவரையும் மதம் வரையறுக்கவில்லையே. நீங்கள்தான் எழுதினீர்கள் உம்மிடமே கேட்கிறேன் எங்கே மதம் வரையறுக்கிறது.

    பறங்கியர்கள் பிற்காலத்தில் இலங்கையிலே தங்கிவிட்ட வெள்ளை இனம். இவர்கள் பின் அங்கேயே திருமணம் செய்து பலகாலம் வாழ்ந்ததால் இடுகுறிப்பெயர் என்று தமிழ் மரபின்படி பறங்கியரானவர்கள். இவர்களும் சோனகனைப்போல் இலங்கையின் பூர்வகுடி அல்ல. ஒத்துக் கொள்கிறீரா?

    உங்களுக்கு கடசி மட்டும் விளங்காதே. சரி பின்னோட்டக்காரர்களாவது விளங்கிக் கொள்ளட்டும். மேலே குறிப்பட்டவர்கள் யார் யாரைக் கட்டினாலும் மதம் இனத்தை நிர்ணகிக்கவில்லை. பியசேனா தமிழ்பேசினாலும் அவரின் தாய்மொழி மட்டுமல்ல பெற்றோர் மொழியும் சிங்களமே. அதனால் அவர் சிங்களவர். இந்துவும் அல்ல பெளத்தரும் அல்ல சிங்களவர். நல்லாகக் குழம்பிப்போய் இருக்கிறீர்கள். கலந்து கல்யாணம் கட்டியவர்களை மதந்தான் இனத்தைத் தீர்மானிக்கும் என்ற புதிய வரைவுலக்கணத்தை எழுதமுயல்கிறீர்கள். உந்தச்சுத்துமாத்து சரிவராத அசுரப்.

    நிஸ்தார்/ /இந்த தமிழ், சோனக இனங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று உண்மையில் ஆசைப் பட்டீர்களா?/
    நான்விட்ட எண்ணத்தின் பிழையை கூறியிருந்தேன் உங்களைப் போன்றவர்களை என்னில் ஒருவனாக நினைத்தது. காலம் நல்லதையே செய்திருக்கிறது. நீர் தமிழனே இல்லை எம்முடன் எமது நாட்டையே சேராதவன் என்று. மேலும் இலங்கையில் இஸ்லாமியர்கள் எல்லாம் சோனகர்கள் இல்லை என்பதை மறந்து போகாதையும். அவர்களை நாம் இன்று தட்டி எழுப்பவேண்டிய நிலையில் உள்ளோம். அடையாளம் அற்றவர்கள் அடையாளத்தைப் பற்றிக் கதைப்பது வேடிக்கையானானதுதான்.

    யதார்த்தமான ஒருகேள்வி. நான் மொழியால் தமிழன்: மதத்தால் இந்து: நான் என்ன இனம்? சொல்லும் பார்க்கலாம். தமிழ் என்று சொன்னால் உமது வரைவு இலக்கணப்படி அது மொழி. இதற்கு சரியான பதில் சொல்லால் நாம் தொடர்வதில் நியாயம் இருக்கும்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் குசும்பு, அரசரத்தினம்,
    குசும்பு ஆரம்பத்திலேயே சறுக்கிவிட்டீர்கள். 17.11.10ல் நீங்கள் அஸ்ரபலிக்காக எழுதிய பின்னூட்டத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளிர்கள் ” முஸ்லிம் என்பது மதம் என்பதை புரியாதவர் நீங்கள்”. “இஸ்லாம்” என்பதுதான் மதம். முஸ்லிம் என்பது அதை பின்பற்றுபவனை குறிக்கும் சொல்.

    நீங்கள் ஒரு நயவஞ்கர் என்பதை இன்று உறுதியாக நிரூபித்து விட்டீர்கள். அதாவது பயங்கரவாத தலைவருக்கு கடிதம் மூலம் சோனகர் பற்றி எச்சரித்ததாகவும், பின்பு அவர்கள் துரத்தப்படும் போது போர் கொடிபிடித்ததாகவும் கூறி இரு பகுதிக்குமே நயவஞ்ஞகமாக நடந்துள்ளிர்கள் என்பது புரிகிறது.

    குசும்பு நீங்கள் எம்மை தமிழினத்துக்குள் எதற்காகவோ அடக்க முற்பட்டீர்கள், நாங்கள் அது பிழை என்றோம். உடனேயே உங்கள் ஆயுத கிடங்கில் உள்ள அத்தனை ஆயுதங்களையும் அது சரியா, பிழையா என்றும் பார்க்காமல் ஆயுதம் இருக்கின்றது என்பதற்காக மாத்திரம் பாவிக்கின்றிர்களே. அடுத்தவர் அதே ஆயுதங்களை பாவித்தால் எங்கே போய் நியாங்கேற்கப் போகுறிர்கள்? இப்படி பேசினால் ஓடிவிடுவார்கள் என்று ஏதும் கற்பனை செய்தீர்களோ? அப்படியெல்லாம் ஓடினால் இன்னும் 10 வருசத்துக்குப் பிறகும் அனேகமாக இதே விதமாகத்தான் கதைத்துக் கொண்டிருப்போம். ஆகவே இப்போதே அமைதியாக கதைத்து ஒரு முடிவுக்கு வருவோமா?

    அரசரத்தினம் அவர்களே! எம்மை தனியினமாக அங்கிகரியுங்கள் என்று எப்போது பயங்கரவாத தலைவரிடம் கேட்டோம். அவர் மறந்தமாதிரி நடித்ததை நினைவுபடுத்தினோம் அவ்வளவுதான். ராஜ பக்ஸவிடம் வேறு கேட்கச்சொல்கிறிர்கள். அவருக்கு தெரியும் நாங்கள் “யோனக(சோனகர்)” என்பது.

    நாம் “சோனகர்” என்பது தமிழருக் தெரியும் என்பதே 1997 ஜூலை வரை எனது நம்பிக்கை. ஆனால் தெரியாதது போல் நடிக்கின்றார்கள் என்பதை ஐ.பீ.சி வானொலி மூலமாக அறியக் கிடைத்தபோது இதை விளங்கப்படுத்த எடுத்த நடவடிக்கை இப்போதும் தொடர்கிறது. ஏன் தெரியுமா ஐ.பீ.சி. அன்று அதை மறைக்க முற்பட்டதால். ஆகவே இப்போது நீங்கள் இதை மறைக்க முயல வேண்டாம். இல்லாவிட்டால் 2020 இதை மீண்டும் கதைப்போம். அது சரி அரசரத்தினம் நாங்கள் தனியான இனம் என்பதை ஏற்பதில் உங்களுக்கு என்ன கஸ்டம்?

    ஒரு வேளை இப்படியும் இருக்குமோ, 1983ல் அரக்கன் ஜே. ஆர் ரினால் தமிழர் வாழ்வு நிலை குழைந்ததை 7 வருடங்களில் மறந்துதானே சோனகரை புலிகள் வெளியேற்றினர். பிறகேன் 1983யை மீண்டும் மீண்டும் கதைகிறீர்களோ தெரியவில்லை. அது எப்படி உஙகள் பார்வையில் இரட்டை தன்மை?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நிஸ்தார்! /“இஸ்லாம்” என்பதுதான் மதம். முஸ்லிம் என்பது அதை பின்பற்றுபவனை குறிக்கும்/ இது அனைவருக்கும் தெரிந்தவிடயம். எனக்குத் தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்லாமியன் என்பதம் அந்த மதத்தைப் பின்பற்றுபவன்.

    /நீங்கள் ஒரு நயவஞ்கர் என்பதை இன்று உறுதியாக நிரூபித்து விட்டீர்கள். அதாவது பயங்கரவாத தலைவருக்கு கடிதம் மூலம் சோனகர் பற்றி எச்சரித்ததாகவும், பின்பு அவர்கள் துரத்தப்படும் போது போர் கொடிபிடித்ததாகவும் கூறி இரு பகுதிக்குமே நயவஞ்ஞகமாக நடந்துள்ளிர்கள் என்பது புரிகிறது/
    இதில் என்ன நயவஞ்சகம் இருக்கிறது. நயமாய் இருந்தோம் எம்மை முற்றாக அன்றில் இருந்து வஞ்சித்தவர்கள் முஸ்லீம்கள். இருந்தும் அவர்கள் தனித்து வாழ்வதால் இரு இனத்தின் சுதந்திரமும் பாதுகாக்கப்படும் என்று எண்ணினேன். முஸ்லீம்களை யாழைவிட்டு அகற்றியது பிழை என்பதைக் கண்டித்தற்குக் காரணம் மனிதம். 24மணித்தியாலத்துள் ஒருவன் வீட்டை விட்டுக் காலிசெய்வது என்பது கொடூரம். ஆனால் இஸ்லாமியருடன் சோர்ந்து வாழஇயலாத என்பதையும் புரிந்திருநதேன். இன்றும் அதைத்தான் சொல்கிறேன். சிங்களவனுடன் தமிழன் சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீமுடன் சேர்ந்து வாழ்ந்தால் தமிழ் இனமே காலிதான். யார் பயங்கரவாதிகள் உலகப்பெரும் பயங்கரவாதிகளே முஸ்லீங்கள் என்பதை உலகமே பறைசாற்றியுள்ளது. இதில் பிரபாகரன் பிஞ்சு சார் பாவம். எனது கண்ணில் கூறானைத் தூக்கித்திரியும் ஒவ்வொருவனும் பயங்கரவாதிதான். இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒவ்வொருவனின் மூளையிலும் ஏற்றப்படுகிறது.

    /குசும்பு நீங்கள் எம்மை தமிழினத்துக்குள் எதற்காகவோ அடக்க முற்பட்டீர்கள், நாங்கள் அது பிழை என்றோம் / அறியாத சின்னவயசு தமிழ் பேசுபவனை தமிழன் என்று ஏற்றுக்கொண்டோம். இஸ்லாமிய வெடிகுண்டுகள் என்பதை நிஸ்தார் விளங்கப்படுத்தினார் ஏற்று கொள்கிறேன். விலத்தியே இருங்கள் என்றுதானே சொல்கிறோம். ஏன் தமிழ்பேசி எம்முடன் ஒட்டவருகிறீர்கள்.

    /எம்மை தனியினமாக அங்கிகரியுங்கள் / எத்தனை தரம் சொல்வது நீங்கள் நாடற்று வியாபாரம் செய்ய வந்த இலங்கைப் பூர்வீகமற்ற சோனகஇனம் என்று ஏற்றுக்கொள்கிறோம். உங்களது அரேபிய அல்லது துருக்கிய (துலுக்க) சோபிய மொழிகளைக்கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இனத்தினது வரலாற்றை வாசித்துப்பாருங்கள் இலங்கைப் பூர்விகம் அற்ற சோனன் என்பது புரியும். நீங்கள் யாராகவும் இருந்திட்டுப்போங்கள் எங்களுடன் ஒட்டுறவு வேண்டாம் என்று தானே சொல்கிறோம். எங்களை விட்டு விலத்தியிருங்கள் என்று தான் சொல்கிறோம்: அரசரத்துனம் இரட்டைத் தன்மையுள்ளவர் என்பதை ஒரு முஸ்லீம் சொல்வது வேடிக்கைதான்.

    நிஸ்தாரிடன் நான்கேட்டத்துக்குப் பதிலைக் காணவில்லை. மீண்டும் எழுதுகிறேன் நான் மதத்தால் இந்து: மொழியால் தமிழ் இனத்தால் நான் யார்?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் சோனகர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்களே இவர்கள் வந்தேறு குடிகளான பலருடன் கூட்டு சேர்ந்ததாலும் மதம் மாற்றிக்கொண்டதாலும் தமிழர்களில் சிலர் தம்மை சோனகர் என்றும் சிலர் தம்மை முஸ்லிம்கள் என்றும் மாற்றம் பெற்றனர்.

    ஒரு இனம் என்ற வரையறையை மாக்சிசம் தவிர வேறு ஒருவராலும் திட்டவட்டமாக இனத்துக்குரிய வரைவிலக்கணத்தை முன்வைக்கவில்லை
    “ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியை கொண்டவர்கள் தம்மை தாம் வாழம் சூழலில் இருந்து தமக்கென ஒரு இன அடையாளம் உண்டு என அந்த தொகை மக்கள் கருதுவார்களானால் மக்களை அந்த மக்களை ஒரு இனமாக அங்கீகரிக்க வேண்டும்”
    இதில் அவர்கள் தம்மை மதத்தால் நிறத்தால் பேசும்மொழியால் வாழும் பிரதேசத்தால் தமக்கென உள்ள விசேட கலாச்சாரத்தால் தம்மை ஒரு இனமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

    இதன்படி இலங்கையில் தமிழ் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்துக்கு அடுத்து மலையக தமிழர்கள் ஒரு தனி இனம் இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் சோனகர்கள் ஒரு தனி இனம் இன்னும் பல இனங்களுக்கான காரணங்களுடன் இலங்கையில் பல பிரிவு மக்கள் உள்ளார்கள்

    நாம் இங்கு விவாதிப்பது எழுதுவது எம்மடையே ஒரு நல்லறிவை வளர்க்க, இனங்களிடையே உறவுகளைப் பலப்படுத்தவே. இவற்றிக்காக பலவிடயங்களை பேச வேண்டியும் உள்ளது. இதில் பல விடயங்களை பலர் அறிந்திராத போது அவை சிலருக்கு புதிதாக சில விடயங்களில் அவர்களது அறிவை சிந்தனையை திறக்கும் என்பதே எனது வாதமாகும் அல்லது அவர்கள் வேறு ஒரு விடயத்தை வாசிக்கும்போது அல்லது கேள்விப்படும் போது இந்த புதிய தகவல்களில் தரத்தை பலப்படுத்தும் அல்லது மேலும் சிந்தனைக்கு வித்திடும் இதைவிட இங்கு வேறு இல்லை.

    ஆனால் நான் எழுதிய பல விடயங்களில் சிலவற்றை மட்டும் பொறுக்கி எடுத்து கருத்து அல்லது பதில் எழுதும் ஆழுமையை பார்க்கும்போது உங்களில் சிலர் சமய வாத அடிப்படைவாதிகளாகவே உள்ளீர்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றதை நான் அவதானித்துக் கொண்டேன். எனது அவதானத்தை என்னுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இலங்கையில் உள்ள சோனகர்கள் எனப்படுவோர் யார் இவர்களது பூர்வீகம் என்ன? இவர்கள் முஸ்லிம்களாக மாறினார்களா? அப்படி மாறினார்கள் என்றால் இப்படிமாற முன்பு இவர்களின் மதம், சமயம் என்ன? சரி இவர்கள் இஸ்லாத்தவர்கள் என்றால் இவர்கள் வகாபி முஸ்லீமா? அல்லது சுகிபி முஸ்லீமா? இவர்கள் பாட்டுப்பாடி தமது மக்களுடன் ஆடிப்பாடி தொடர்பு கொள்வதை விரும்புபவர்கள் (இது வைஸ்ணவர்களின் ஆடிப்பாடி கடவுளை வணங்கும் தரம் கொண்டவர்கள் இவர்களை சவுதி அரேபியாவில் தடைசெய்துள்ளார்கள் என நினைக்கிறேன்) அல்லது சியா முஸ்லிம்களா அல்லது சுன்ணி முஸ்லீம்களா? இது பற்றி சோனகர் என்ற இனம்தாம் என்று பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் தெரிவிக்க வேண்டும் கருத்துக்களை தரல் வேண்டும்.

    இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் ஏன் முஸ்லீம்கள் சவுதியில் ஆடை அணிபவர்கள் போன்று அணிய வேண்டும் ஏன் தாடி வளர்க்க வேண்டும் இது இஸ்லாத்தின் அடையாளமா? அப்படியாயின் ஏன் துருக்கியர்களும் ஜரோப்பிய முஸ்லீம்களும் இப்படி தாடி உடுப்புக்களுடன் இல்லை? அல்லது அதைவிட வேற எப்படி இஸ்லாமியனாக அடையாளப்படுத்தலாம்?

    இன்றைய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலத்திற்கு முன்பு எந்த மதத்தை பின்பற்றினர். அந்த மதங்களில் கண்ட தவறுகள் என்ன? இஸ்லாமிய காலத்திற்கு முன்பு அரபு நாடுகளில் பின்னபற்றப்பட்ட மதங்கள் சமயங்கள் என்ன? அவற்றிக்கு என்ன நடந்தது அவை ஏன்? யாரால் எப்போது அழிக்கப்பட்டது என்ன? காரணங்களுக்காக அழிக்கப்பட்டது? எப்படி பெருந்தொகையான முஸ்லிம்களை கொண்ட பிரதேசமாக மத்திய கிழக்கு கொண்டு வரப்பட்டது இதில் உள்ள ஏதோ ஒரு இரு காரணங்களே மேற்கு நாடுகளும் இதர நாடுகளும் இன்றும் பயப்பிடுகின்ற விடயமாக உள்ளதாக நான் விளங்கிக்கொள்கிறேன்.

    இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் முஸ்லீம் இனம் என கருத்து முன்வைப்போர் முஸ்லீம்களின் வரலாறு எப்போ இருந்து என்று கூறுங்கள் அந்த வரலாற்றுக்காலங்கள் பற்றி ஆராய்வோம்? இஸ்லாத்திற்கு முன்பு அரபுக்களின் கலாச்சாரம் என்ன? என்ன காரணத்திற்காக அழிக்கப்பட்டது யாரால் அழிக்கப்பட்டது என்ன நோக்கத்திற்காக அழிக்கப்பட்டது?

    ஏன் இலங்கையில் முஸ்லிம்களை சிங்கள மக்கள் மரகயா அல்லது மரக்லயா போன்ற வசனத்தால் ஏசுவது வழமை ஏன்? இந்த பெயர் வரக் காரணம் என்ன?

    அரபிலிருந்த வந்த பல வியாபாரிகளில் பலர் இஸ்லாத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பலர் இருந்துள்ளனர் ஆனால் யாழ்ப்பாணத்தில் சாதாரண மக்கள் இவர்கள் முஸ்லீம்கள் என்றே கருதி இன்றும் கருத்துக்களை எழுதுகின்றனர்

    இஸ்லாம்தான் இன்றைய விஞ்ஞானத்தின் தோற்றுவாய் என்று பொய்யாக அறிவுக்குறைவாக சிலர் சொல்லி திரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது/கூடாது. அரபு வியாபாரிகள் தான் இந்தியாவிலிருந்த பல தொழில்நுட்பங்களை அரபு பிரதேசத்திற்க்கு எடுத்துப்போனவர்கள் என்பது உண்மை அவை பின்னர் அரபிலிருந்து ஜரோப்பாவிற்கு கிறீக்கும் பின்னர் கிறீக்கிலிருந்து ரோம்க்கும் வந்த அவை ரோம்ல் இருந்து லண்டனுக்கும் வந்தது இதற்கு நல்ல உதாரணம் கணிதம் பரம்பல் – இப்படி பரம்பல் நடக்கும்போது அவை ஒவ்வோரு இடத்திலும் அவை விரிவுபடுத்தப்படும் அல்லது திருத்தப்படும் அதில் அல்ஜிபிரா இதில் உள்ள அல் என்ற அரபு மொழிப்பாவனையை எடுத்துக்கொண்டு அதில் இருந்து இது இஸ்லாமிய கண்டுபிடிப்பு என்ற பொய்களை காணலாம் இதர கணிதப்பிரிவுகளுக்கு மட்டும் ஏன் அல் என்ற வார்த்ததை பிரயோகம் காணவில்லை என்று கேட்டால் விளங்காமல் உள்ளனர். நாம் பிரச்சினைகளை காலத்துடன் அதன் பரம்பலுடன் ஆய்வு செய்தல் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு பலநூறுவருடங்கள் முந்தியது அரபு மொழி என்பதை ஞாபகம் கொள்ள வேண்டும். (இன்று இது உன்னுடையது இது நாளை இன்னொருவனுடையதாவது தவிர்க்க முடியாதது.)

    திடீரென வானத்திலிருந்த ஒரு இரவில் ஒரு நாட்டில் ஒரு சில காலப்பகுதியில் முழு கணிதவியலும் ஆதியும் அந்தமுமாக உருவாகிட முடியாது என்ற யதார்த்தத்தை விளங்க ஏற்றுக்கொள்ள அறிவு விருத்தி தேவை. அல்லாவிடின் இது கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் கண்ணை மூடிக்கொண்டு கேட்பவர்களுக்கு மட்டுமே சொல்ல முடியும். மாற்றம் ஒவ்வொன்றையும் மாற்றியே தீரும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும் (பெளத்தம் இதை கூறுகின்றது) மாற்றத்தை மறுதலிப்பது புத்திசாலித்தனம் அல்ல

    அரபுக்கள் தம்மை இஸ்லாமிய இனம் என்று கூறுவதில்லையே தம்மை அரபுக்கள் என்றே கூறுகிறார்கள் இரானியர்கள் தம்மை பேசியன்கள் என்றே கூறுகிறார்கள் பேசியன்கள் தமது அரசர்களை பல்லவ என்று கூறுவது வழமை இவர்களுக்கும் இந்திய பல்லவர்களுக்கும் தொடர்புகள் இருந்துள்ளது. ஈரானியர்கள் தம்மை அரபுக்களிடம் உள்ள தொடர்பிலும் இந்தியாவுடன் உள்ள தொடர்பு நீண்ட காலமாக இருந்தது என்கிறார்கள் அதாவது இஸ்லாத்திற்க்கு முந்திய காலப்பகுதிகளை குறிப்பிடுகிறார்கள்? இவர்களுடன் தான் பஞ்ச கம்மாளர்கள் அரபு நாடுகளுக்கு போயிருந்தனர் என்ற இந்தியர்களின் ஆய்வும் உண்டு. இந்த பஞ்ச கம்மாளர்கள் இரும்பு வேலை செய்பவர்கள் பொன் உருக்கி வேலை செய்பவர்கள் மரவேலை செய்பவர்கள் மண் வேலை செய்பவர்கள் என பிரிவுகள் உண்டு இன்றும் ஈரானில் உள்ள மிக ஆதிகால மண் வீடுகளின் அமைப்பு திராவிட கலாச்சார மொகஞ்சதாரோ கரப்பாவை ஒத்ததாக உள்ளதை வெளிவந்த படங்கள் மூலம் அவதானிக்கலாம்.

    இந்தியா எவ்வளவு காலத்திற்கு முன்பே இரும்புத்தொழிலில் முன்னேறியவர்கள் என்று இன்றும் அதிசயமாக பார்க்கப்படுவது டில்லியில் உள்ள மிகப்பெரிய இரும்புத் தூண் ஆயிரக்கணக்கான தொன் நிறையுடைய இந்த இரும்பு தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பழுதடையாமல் இருப்பது பற்றியது இந்தியாவில் செய்யப்படும் வாளுக்கு அரபு நாடுகளில் நல்ல மதிப்பு இருந்துள்ளது பின்னர் காலங்களில் கிறீக் மன்னர்கள் அரபு மன்னர்களுக்கு இந்திய வாள் பரிசாக கொடுத்துள்ளார்கள் பின்னாளில் இந்திய வாள்களையே கொண்டு வந்த முஸ்லீம்கள் இந்தியர்களை கைப்பற்றி இஸ்லாத்தை வாள் முனையில் இந்தியாவில் புகுத்தினராம்.

    மொரோக்கர்களும் துருக்கியர்களும் இந்தியாவை இலங்கை பாக்கிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் உட்பட முழுபிரதேசமான இந்துஸ்த்தான் என்றே அழைத்தனர் அதன்காரணமாகவே தான் இன்றும் இந்திய பிராந்திய முஸ்லீம்களை (துருக்கியர்களும் மொரேக்கர்களும் ஈரான் ஈராக்கிலுள்ள உள்ள சிலபிரிவினரும்) இந்துக்கள் என்றும் இவர்கள் உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.

    இதேபோன்று இன்று மலேசியாவில் உள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம்’ கேட்டால் மலேசியாவின் கடைசி மன்னன் ஒரு இந்து எனவும் இவர் தமிழன் என்றும் சொல்லுவார்கள் இங்கும் இஸ்லாம் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டால் பாக்கிஸ்தான் நிலைதான்?

    மலேசியாவை அண்டிய பகுதியான யாவாவில் ஆதிகால வியாபாரங்கள் செய்ததிற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளது இதில் வியாபார வங்கிகள் நடாத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை யாவா அரசு இன்றும் வைத்திருக்கிறது இதில் பல கணக்குகள் இன்றும் தமிழில் உள்ளனவே?

    இலங்கையின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தமிழன், பின்னர் ராஜசிங்க என்ற சிங்களவராக்கப்படும் முயற்சிகள் நடைபெற்றது அதற்கிடையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல இவற்றிக்கு தடையாக வந்துவிட்டது -பதவியா குளம் நாரததேசிகரால் கட்டப்பட்டது ஆனால் சிங்கள அரசு இந்த குளம் சிங்கள மக்களால் கட்டப்பட்டதாகவே கூறுகின்றது.

    இலங்கையில் புத்தளத்தை அண்டிய பகுதியில் பெம்பரிப்பு என்ற இடத்தில் செய்யப்பட்ட ஆய்வில் இந்த இடத்துக்கும் இந்தியாவில் அரிக்கமேடு என்ற இடத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெண் உடல்களின் கழுத்தில் அவர்களின் திருமணத்தின்போது கணவனால் கட்டப்பட்ட தாலியுடனேயே மரணசடங்கின் இறுதியில் அடக்கம் செய்துள்னர் இந்த இந்தமுறை இந்திய உப கண்டத்திலேயே இந்த இரு இடங்களிலும் மட்டுமே தான் அறியப்பட்டுள்ளது.

    இந்த தாலி இந்துக்களின் தாலி என்பதும் உறுதியாக உள்ளது இந்த தாலிகளை யாழ்ப்பாணத்தில் சரடுவுடன் சேர்த்து பாவித்தார்கள் என்றும் என்றும் கூறப்படுகின்றது (யாழ்ப்பாணத்தில் தாலியும் சரடும் தாலிக்கான கொடியும் பாவிக்கப்படுவது கொடி பிற்காலத்திலேயே பாவனைக்கு வந்தது சாதாரணமாக சரடுகளே பாவித்தனர்) (இன்றய காலத்தில் தாலியை இறுதிச்சடங்கில் வைத்து விட்டு அதை மீளப் பெற்றுவிடுவார்கள்).

    புத்தளம் உடப்பு பிரதேசத்தில் உள்ளவர்களில் பலர் தாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பு இந்தியாவிலிருந்த வந்த இனம் என்றும் தம்முடைய இனத்தவர்களே புத்தளம் இஸ்லாமியர்கள் என்றும் இவர்கள் பிற்காலத்தில் அரபு நாட்டவரின் வருகைகளின் போதே மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்றும் சிலர் இந்தியாவில் கேரளாலிலிருந்து வந்தவர்கள் என்றும் சிலர் இந்தியாவிலிருந்தே மதமாற்றம் செய்யப்பட்டு வந்தவர்களால், மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்றும் கருத்துக்களை பரிமறிக்கொள்கிறார்கள்

    புத்தளம் பிரதேசத்திற்கு அண்மையாக இருந்த துறைமுகம் இந்த தொடர்புகளின் வாயிலாகவே உருவாகப்பட்டது என்றும் இங்கிருந்தே கேரளாவிற்கும் இந்தியாவிற்கும் வணிகம் நடாத்தப்பட்டது என்றும் கருத்துக்களை வைத்துள்ளார்கள்

    இதே போன்று காரைநகரிலும் காரைநகர் மேற்கு கரையோரமாகவே சில காரைநகர் குடியினர் தாம் வந்ததாகவும் இன்றும் கூறப்படுகின்றது இவர்களில் சிலர் தமது உறவினர்கள் இறந்தபோது அவர்களின் அஸ்தியை காரைநகரின் மேற்கு கரையோரம் எடுத்துப்போய் தாம் வந்த வழிபார்த்து அஸ்தியை கரைக்கும் வழக்கம் உள்ளது இவர்களிடமும் இந்த புத்தளத்தின் வரலாறு போன்ற கருத்துக்கள் உண்டு இவர்களும் காரைநகரின் துறைமுகத்திலிருந்து கேரளாவிற்கும் நாகபட்டினத்திற்கும் வணிகம் நடாத்தியுள்னர். அதைவிட கேரளாவுடன் தொடர்பும் இருந்துள்ளது. இன்றும் காரைநகரில் பாவிக்கப்படும் பல சொல்பதங்கள் கேரள சொற்பதங்களே (பறைதல், ஏநாட்டியம்)
    காரைநகரில் இரு துறைமுகங்கள் இருந்தள்ளது ஒன்று கடல் பெருக்கினால் அழிந்து விட்டது இது காரைநகர் கோவளத்தில் இருந்தது. இங்கிருந்து இந்தியா கேரளாவில் உள்ள கோவளம் என்ற பெருடைய இடத்திலுள்ள துறைமுகத்திற்கே தொடர்பும் இருந்துள்ளது கடல் நடுவே பிரிக்க இருபக்கமும் ஒரே பெயரைக்கொண்ட இடமாக இருந்துள்ளது மக்களின் பரம்பலின் தாக்கங்களை குறித்துக்கொள்கிறது. இன்றும் காரைநகரில் உள்ள ஈழத்து சிதம்பரம் சிவன்கோவிலின் பிராமணர்கள் தாம் உத்தமகோச மங்கையிலிருந்த வந்தவர்கள் என்பதை கூறுகிறார்கள் பின்னர் இன்று தொடர்பற்றுப் போனார்கள்

    சீனாவிலிருந்து பல தடவைகள் செங்கோ என்ற zen ku என்ற அரசன் 5 தடவைகள் சீனாவிலிருந்து வந்த ஒகினோ பேசியன் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சின்னங்களை பல இடங்களிலும் பதித்து சென்றுள்ளான் இதில் ஒன்று இலங்கையிலும் உள்ளது இதை இப்போது சிங்கள ஆய்வாளர்கள் தமிழின் வரலாற்று ஆய்வினை மறைக்க இது தமிழ் அல்ல மலையாளம் என்றே கூறி இருந்த இடம் தெரியாமல் மறைத்துள்ளனர். இதனால் தமிழை மறைக்கப்போய் சிங்கள மக்களின் வரலாற்றையும் மறைப்பதாகவே முடியும்.

    இலங்கையில் தென்பகுதிகளிலும் மட்டக்களப்பு மாகாணத்திலும் தற்போது இஸ்லாம் கடுமையாக பின்பற்றப்படும் நிலைமைகளை அவதானிக்கப் படுவதாகவும் இங்கே தவறுகள் மறைக்கப்படுவதற்கே இவைகள் வழிகோலுகின்றன என்றும் அல்லது இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரபிய நாடு எது? என்றும் கேள்விகள் வெளிவர ஆரம்பித்தள்ளது?

    ஒரே அளவான ஒரு சமயம் எல்லாருக்கும் பொருந்தும் என்ற கனவில் யாரோ செயற்படுவதாகவே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர். இது இலங்கையில் அரச தரப்பிலுள்ள இராணுவதரப்பிலுள்ள பலஅதிகாரிகளின் கருத்தாக உள்ளதை அவதானித்துள்ளேன்.

    இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை முஸ்லிம் இனம் என்பதா? அல்லது சோனக இனம் என்பதா? அழைப்பது எது சரியானது என்றவாதத்தை ஆரம்பிக்கப்படல் வேண்டும்? இருதரப்பினரும் இந்த வாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் அத்துடன் இந்த இருவரும் இனங்கள் இல்லை இவர்கள் தமிழ்பேசும் இனமே என்ற வாதத்தை முன்வைப்பவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    அல்லது இலங்கையில் இரண்டு இனங்களே வேறு இனங்கள் என்று ஒன்று இல்லை என்ற வாதங்களை கொண்டுள்ளவர்களும் உள்ளனர் இவர்களுக்கு எதிர்வாதம் என்ன?

    இங்கே குறிப்பிடும் ஆய்வுகள் வைக்கப்படும் கருத்துக்களினால் வரலாறுகளின் சில தகவல்கள் என்ற பார்வைக்கு மட்டுமேயாகும் இதில் எழுதப்படும் கருத்துக்களால் இலங்கையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த இனத்தையும் அவர்களின் இலங்கையில் வாழும் உரிமையை மறுதலிக்கும் கருத்தாக அல்லது துணைபோகும் நடவடிக்கைகளாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படியாக உள்ள பல தரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து இந்த வாதப் பிரதிவாதங்களை ஆரம்பிப்பதன் மூலமே இதன் உள்ளார்த்தம் விளங்கியும் வரலாறு அறியப்பட்டும் மக்கள் ஒருவருக்கொருவர் உணர்ந்து ஒற்றுமையாக வாழும் சூழ்நிலைகளை உருவாக்க முடியும் என நான் கருதுகிறேன் இதே போன்ற கருத்துக்கள் எழுத்துக்களை தமிழ்மக்கள் சிங்கள மக்களை நோக்கியும் சோனக – இஸ்லாமிய மக்களால் எழுப்பப்படல் வேண்டும் எனவும் நான் கருதுகிறேன்.

    இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் இலங்கையர்கள் இலங்கை நாட்டினுள் பல்வேறுபட்ட கலாச்சார பண்புகளுடன் வாழும் பல் இனங்களை கொண்ட சமூகமேயாகும்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இன்றுள்ள நல்லூர் கோவில் 1750களில் கட்டப்பட்டதாகும் ஆனால் ஆரம்பத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட நல்லூர் கோயில் இருந்த இடத்தில் இன்று கிறிஸ்தவ சேர்ச் உள்ளது. இந்த சேர்ச்சின் வாசலில் உள்ள வசனம் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகும். இன்றுவரையிலும் இந்த சேர்ச் சம்பந்தமாக யாரும் பேச ஆரம்பிக்கவில்லை என்றே கூறலாம் இனிமேல் இது பற்றிய சர்ச்சைகள் பல எழும் சாத்தியக்கூறுகள் உண்டு.

    யாழ்ப்பாணத்தில் ஆரம்பகாலத்தில் இருந்த முதலியார்களில் மூவர் முக்கிய முதலியார்கள். ஒன்று சந்திரமுதலி இவர்கள் இணுவிலை அண்டிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இவர்களுக்கு இன்றும் உரிமையுள்ள கோவில்கள் இணுவில் பகுதிகளில் குறிப்பாக மேற்கில் உண்டு. இவர்களது பரம்பரையினரே பரராசசேகரன் செகராசசேகரன் பரம்பரையினராகும்.

    இரண்டாவது சூரியமுதலியார் இவர் யாழ் வலிகாம் கோவில்பற்று பகுதிகளில் பெரும் உடைமைகள் கோவில்களையும் கொண்டிருந்தவர்கள் மூன்றாவது முதலியார் பெயர் மாப்பாண முதலியார். இந்த மாப்பாண முதலியார் பரம்பரையினரே சங்கிலியன் பரம்பரையினராகும்.

    இந்த மாப்பாண முதலிகள் பரம்பரையினர்க்கே நல்லூரின் பெரும்பகுதி நிலங்கள் உடமையாக இருந்துள்ளது. சங்கிலியன் அவனது சகாக்களும் ஜரோப்பியர்களுடன் சண்டைபிடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் நல்லூர்கோயிலை இடித்து (இன்று உள்ள சேர்ச்) சேர்ச்சை கட்டினர் பின்னர் சங்கிலியனை கொன்றொழித்தனராகும்.

    இன்று நல்லூர் இருக்கும் இடத்தில் போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் வருகைக்கு முன் பலகாலங்களாகவே இந்த இடத்தில் சந்தை கூடுவதும் இந்த சந்தைக்கு மாப்பாண முதலிகள் கட்டணம் அறவிடுவதும் இந்த சந்தையை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தனர் இந்த சந்தைக்கு அரபிலிருந்தும் மொரோக்காவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் இந்தியா கேரளாவிலிருந்தும் நாகபட்டினத்திலிருந்தும் பல வியாபாரிகள் வந்து போவது வழக்கம். இந்த வியாபாரிகள் மாதகல் துறைமுகம் வழியாகவும் பருத்தித்துறை வழியாகவும் காரைநகர் கோவளம் மற்றும் துறைமுகம் வழியாகவும் பலதரப்பட்ட வியாபாரிகள் வந்துபோவது வழக்கம். இவர்களில் பலர் தோல், கறுவா, வாசனைத் திரவியங்கள், எருது மாடுகள் போன்றவற்றை எடுத்து வந்தும் யாழ்ப்பாணத்திலிருந்த பருத்தியையும் வெற்றிலையும் எடுத்துச்சென்றும் வணிகம் செய்திருந்தனர். இங்கே இந்த வியாபாரிகள் வந்து போன காலங்களிலேயே தான் நல்லூர்கோயிலும் இடித்து அங்கே சேர்ச் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

    (இதே காலகட்டத்தில் காரைநகரில் உள்ள அம்மன் கோவில் இடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு கோவிலை இடித்தவர்களுக்கு அம்மன் நோய் வந்ததால் கோவில் இடிப்பது தடைப்பட்டது இந்த அம்மன் கோவில் சிலைகளை காரைநகர் பட்டங்கட்டிகள் அல்லது முக்கியர் என்ற சாதியினர்தாம் தூக்கிச்சென்று பாதுகாத்தனர். இதன்காரணமாக இன்றும் இந்த வெள்ளாளர் கோவிலில் இந்த வேறு சாதியினருக்கு கெளரவம் கொடுக்கும் முகமாகவும் அவர்களிடையே உருவான திருமண உறவு காரணமாகவும் இன்றும் இந்த கோயிலில் இரு சாதியினரும் திருவிழாக்கள் செய்கின்றனர் காரைநகர் சிவன் கோவிலில் உள்ள மூலஸ்தான விக்கிரகங்கள் போத்துக்கீசர் ஒல்லாந்தர்களால் கோவிலின் கேணிகளில் தூக்கிவீசப்பட்டது. இந்த சிலைகள் பின்னர் கண்டெடுக்கப்பட்டு இன்றும் கோவிலின் உள்வீதியில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.)

    யாழ். பிரதேசத்தில் மட்டும் சைவர்கள் பலதரப்பட்ட கொடுமைகளை ஒல்லாந்தர் போத்துகீசரினால் அனுபவித்த காலம் இதே போன்று முன்னைய நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மூலஸ்தானத்தில் சைவர்கள் வைத்து வணங்கிய வேல் விக்கிரகம், இந்த சந்தைப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இரகசியமாக வைத்து சைவர்களால் இரகசியமாகவே வணங்கப்பட்டு வந்தது. இந்த மாதிரியாகவே யாழ்ப்பாணத்தில் சைவ சமயம் போத்துக்கீசர் ஒல்லாந்தர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு சைவத்தவர்களாலும் குறிப்பிட்டு பேசப்படுவதாகும்.
    சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக வரும்போது பூசைகள் வணக்கங்கள் செய்வதும், சிக்கலான நேரங்கள் வரும்போது சந்தைப்பகுதியில் விக்கிரகத்தை ஒளித்துவிடுவதுமான சைவ நடவடிக்கைகளே இருந்துள்ளது. (சந்தை என்றதும் தனியே அரேபியர்கள் மட்டும்தான் வியாபாரிகள் என்று முடிவு கொள்ள வேண்டாம்)

    போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் வெளியேறிய பின்னர் இந்த மாப்பாண முதலிகளின் பரம்பரையினர் தமது உரிமையுள்ள நிலத்தை மீண்டும் கைப்பற்றி அங்கே நல்லூர் கோயிலை ஸ்தாபித்தனர். இந்த முதலிகளின் பெருந்தன்மை காரணமாகவே இன்றும் அந்த சேர்ச் நிமிர்ந்து நிற்கிறது.

    இந்த வியாபாரம் செய்ய வந்த நாடோடிகளில் பல இந்தியர்களும் பெளத்தர்களும் இந்திய கேரளர்களும் (சிலர்) மீண்டும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கும் மீளவும் சென்று விட்டனர் ஆனால் அரபுக்காரர்களில் சிலரும் இந்தியாவிலும் இருந்து வந்த சிலரும் மற்றும் வேறு இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நல்லூர் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியமர்ந்தனர். இது யாழ் ஓட்டுமடம் மானிப்பாய் றோட் வரையில் நல்லூர் என்றே அழைக்கப்பட்டது. இந்த பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் தமது வாழ்விடங்களாக அமைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழத்தொடங்கினர் இவர்கள் வாழும் பிரதேசங்களே பின்னர் சோனகத்தெரு, சோனக கடை, சோனக குறிச்சி, எனவும் பெயர் பெற்றும் யாழ்ப்பாணத்தில் சோனகர்கள் வரலாறு உருவாகியது.

    இந்தக்காலத்திலிருந்தே பல கேரள இந்தியர்கள் சைவ ஹோட்டல்களை தொழிலாக கொண்டனர் இவர்கள் நாளடைவில் தென்இலங்கை நோக்கியும் இடம் பெயர்ந்தனர்

    இவர்களிடமிருந்த இன்றைய நல்லூர் கோயில் இருக்கும் இடத்தை மீளப்பெற்றதாலும் இந்த சந்தை இல்லாமல் போனதாலும் இந்த சந்தையை அடிப்படையாக கொண்ட ஜீவனம் நடாத்திய இந்த புதிய யாழ்வாசிகளான சோனகர்கள் அரபுக்களுக்கு மாப்பாணமுதலியார் இந்த கோயில் பிரதேசத்தில் வியாபாரம்செய்யும் உரிமைகளை வழங்கினார். இதன் ஒருவிடயமாகவே நல்லூர் கோவிலின் இடது பக்கத்தில் உள்ள வீதிப்பிரகாரத்தில் சோனகர்களுக்கு-முஸ்லீம்களுக்கு மட்டுமே கற்பூரம் விற்பதற்கு உரிமை கொடுக்கப்பட்டது. இது மாப்பாண முதலியாரின் பரம்பரையினரின் பெருந்தன்மை காரணமாகவே இந்த ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் எங்கும் கோயிலில் உரிமையோ நிலத்தில் உரிமையோ கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.

    இதையே பின்நாட்களில் சோனகர்கள்(முஸ்லிம்கள்) எல்லாவற்றையும் மாற்றி இந்த நல்லூர் கோயிலின் உள்ளே தமது பிரேத அடக்கம் உள்ளது அதையே நீங்கள் போய் வணங்குகின்றீர்கள் என்றும் கதைகள் இவர்களாலே கட்டப்பட்டது.

    ஒரு பிரேதம் இருந்தால் அந்த இடத்தில் இந்துக்கோயில் கட்டுவார்களா? அதைவிட பின்னாளில் அரையும் குறையுமாக இந்த கதைகளை தெரிந்த முஸ்லீம்கள் சோனகர்கள் நல்லூர் தமது சொத்து என்றும் இதை மீளப்பெற வேண்டும் என்றும் தமது பரம்பரையினரே நல்லூர் பரம்பரையினர் என்றும் பல பொய்யான புனைவுகளை பலதடவைகள் விட்டுள்ளனர் என நல்லூரின் உரிமையுள்ள பரம்பரையினர் நல்லூர் கோயில் நடாத்தும் உரிமையாளர்களும் எனக்கு கருத்து சேர்த்தனர்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //சோனகர் அரேபியர்களிடம் சோரம் போனவர்கள்.//குசும்பு..
    உங்கள் வாதப்படி பார்த்தால் இன்றுள்ள இலங்கைத் தமிழர் எல்லாம் இந்தியப் படையினரிடமும் இலங்கைப் படையினரிடமும் சோரம் போனவார்களா..? ஏனெனில் இந்தியப் படை காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் இலங்கைப் படையாலும் கலப்பின விருத்தி நடக்கவில்லையா? அது தான் பத்திரிகைச் செய்திகளில் நாளாந்தம் வெளிவருகின்றதே..

    அதையெல்லாம் கண்டித்தும் கவலைப்பட்டும் வந்த எங்களுக்கு அப்படிச்செய்யத் தேவையில்லை என்று நீங்கள் அறிவுறுத்தியுள்ளீர்கள் நன்றி…

    //முன்னரே நாங்கள் இயக்கர் நாகர் பரம்பரைப் பூர்வீககுடிகள். //
    சிங்களவரிடம் சொன்னால் அழகாக ஏற்றுக் கொள்வார்கள். அன்றைய சோழப் பேரரசின் ஆக்கிரமிப்பு சதிகாரர்கள் என்றல்லவா அவார்களை உங்களை அடையாளப்படுத்துகின்றார்கள். மகாவம்சம் சூள வம்சம் என்பனவும் அப்படித்தானே உங்களைக் குறிப்பிடுகின்றன.. இலங்கையின் பூர்விக குடிகளான வேடர்களும் உங்களுக்குப் பின் வந்தவர்கள் தானோ…

    இலங்கைக்கு வருகை தந்த பாகியன் தன் பயணக்குறிப்பில் இலங்கையில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளாரே.. அதை வைத்து தமிழர்கள் வாழவில்லை என்று நாங்கள் மறுக்க முடியுமா?

    குசும்பு.. ஒன்றை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலங்கையில் என்ன உரிமை இருக்கின்றதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.சிங்களவர்களுக்கும் உண்டு.அதை யாரும் மறுக்க முடியாது.

    நீங்கள் எங்கள் பூர்வீகத்தை மறுப்பதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக சிங்களவர்கள் உங்கள் பூர்வீகத்தை மறுக்கின்றார்கள்.அதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இப்படியாக நாங்கள் ஒருவர் பூர்வீகத்தை மற்றவர் மறுப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை. நமக்குள்ளான முரண்பாடுகள் தான் அதிகரிக்கும். அது நமது மனிதத்தன்மைக்கே இழுக்கானதாகும்.

    அத்துடன் மனிதர்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் நாடோடிகள் தான். குடியேற்ற வாசிகள்தான். இன்றைக்கு அபோரிஜின்களின் நாடான அவுஸ்திரேலியா வெள்ளைக்காரர் ஆட்சியில். செவ்விந்தியர்களின் அமெரிக்கா… கனடா என்று அதற்கான உதாரணங்களை முன் வைக்கலாம்.

    உலகளாவிய வரலாறு இப்படி இருக்க நாங்கள் தான் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கின்றோம்.

    //எனது எண்ணப்படி சிங்களவனுடன் நாம் மதத்தால் இணையத்தயார் ஆனால் சோனகனுடன் மொழியால் கூட இணையத்தயாராக இல்லை.//
    உங்களை வெளிக்காட்டிக் கொண்டமைக்கு நன்றிகள்…

    //கூட இருந்து குழிபறிப்பது முஸ்லீங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. இதை அறிந்திருந்தும் அவர்களை ஆதரித்தீர்கள் பாருங்கள்//
    குசும்பு.. நந்தா ஆதரித்தது காதல் ஜோடியை.. முஸ்லிம்களை அல்ல.. கூட இருந்து குழி பறிப்பது முஸ்லிம்கள் மட்டும் தானா.. நான் ஆதாரங்களை எடுத்து வைத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஆனால் அவற்றை முன் வைத்து இருக்கின்ற முரண்பாடுகளை மேலும் வலுப்படுத்த நான் தயாரில்லை. விட்டுவிடுங்கள்… நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றவன் நான்.

    இன்னொரு புறத்தில் நீங்கள் சிங்களவர்களுடன் கூடிக் கும்மாளமிடலாம். அது தப்பில்லை.சமயோசிதம். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் சிங்களவர்களிடம் நல்லுறவு கொண்டிருந்தால் கூட அது காட்டிக் கொடுப்பு… உங்கள் நியாயம் கேட்டு உடம்பு புல்லரிக்கின்றது…

    // இந்துக்கள் போத்துக்கேயர்களுடன் பிரச்சனைப்படும் போது எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல் நல்லூர்பகுதிகளில் அடாத்தாக அமரமுயன்றவர்கள்//
    முஸ்லிம்களையும் அவர்களின் வாணிபத்தையும் அழிக்கும் நோக்கில் தான் மேற்கு நாட்டவரின் கீழைத்தேய பயணங்கள் ஆரம்பமானதாக ஆங்கில வரலாற்றாசிரியர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே நிலை தான் இலங்கையிலும். போர்த்துக்கேயரின் முதல் எதிரி முஸ்லிம்கள் தான். அதன் காரணமாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த அவர்கள் படிப்படியாக உள்நாட்டுக்கு குடிபெயர்ந்தனரே தவிர கரையோரப் பிரதேசங்களில் குடியமர முற்படவில்லை. அதனை சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூட தெளிவாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அக்காலத்தில் திருமலை தொடக்கம் அம்பாறை வரையான கரையோரப் பிரதேசம் மட்டும் கண்டி இராச்சியத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க இது எங்கேயிருந்து வந்த புதுக் கண்டுபிடிப்பு…?

    //இங்கே எவரையும் மதம் வரையறுக்கவில்லையே. நீங்கள்தான் எழுதினீர்கள் உம்மிடமே கேட்கிறேன் எங்கே மதம் வரையறுக்கிறது//
    அதைத் தான் நானும் கேட்கின்றேன்.. தமிழ் பேசுவதால் மட்டும் அவர்கள் தமிழர்களாகி விட முடியுமா? இந்தி பேசினாலும் சீக்கியர்கள் தனி இனம். அவர்களின் மதம் வேறு என்பதால்..இப்படி மொழியை மட்டும் வைத்துக் கொண்டு இனங்கள் வரையறை செய்யப்படுவதில்லை. அதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி.

    //இடுகுறிப்பெயர் என்று தமிழ் மரபின்படி பறங்கியரானவர்கள்.//
    அது ஒன்றும் தமிழ் மரபின் படி வந்ததல்ல…சிங்களவர்கள் தான் முதலில் பறங்கியரைத் தனி இனமாக ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் தான் நீங்கள்.. இன்னொன்று.. சிங்களவர் பறங்கியரை வெறுத்தொதுக்குவது இல்லை.. ஆனால் மட்டக்களப்பில் நான் கண்ட பறங்கியர் நிலை மோசம்…

    //பியசேனா தமிழ்பேசினாலும் அவரின் தாய்மொழி மட்டுமல்ல பெற்றோர் மொழியும் சிங்களமே// புதிய கண்டுபிடிப்பு… அவரின் பெற்றோர் மொழி தமிழாக இருந்ததனால் தான் அவரும் தமிழ் பேசினார்.பியசேனவுக்கும் சிங்களம் அடியோடு தெரியாது.

    //. நான் மொழியால் தமிழன்: மதத்தால் இந்து: நான் என்ன இனம்? சொல்லும் பார்க்கலாம்/
    தமிழர் தான்..மதம் அல்ல.. அங்கே கலாசாரம் தான் அதனைத் தீர்மானிக்கின்றது.

    // எனது கண்ணில் கூறானைத் தூக்கித்திரியும் ஒவ்வொருவனும் பயங்கரவாதிதான்// புதிய கண்டுபிடிப்பு.. இதைத் தான் சிங்களவர்கள் பொட்டு வைத்துக் கொண்டு திரிந்த தமிழ்ப் பெண்களைப் பார்த்து புலி என்று பட்டம் கட்டினார்கள். பின்பு அவர்களே திருந்தி விட்டார்கள்.. ஆனால் உங்களைப் போன்றவர்கள் திருந்தப் போவதில்லை.

    //இலங்கைப் பூர்வீகமற்ற சோனகஇனம் என்று ஏற்றுக்கொள்கிறோம்//
    அரசரத்தினம்..பூர்வீகம் என்பதன் மேற்கோள்களை நான் இதில் ஆரம்பத்தில் தந்திருக்கின்றேன். அதை வாசித்துப் பாருங்கள்.

    அடுத்தது இன்றைய சார்வதேச நியதிகளின் படி ஒரு நாட்டுக்கு மேலாக -எடுத்துக்காட்டுக்கு லண்டன் என்று வைத்துக் கொள்வோம்.- விமானம் பறக்கின்ற போது அதில் பயணிக்கும் பெண்ணுக்கு குழந்தையொன்று பிறந்தால் அந்தக் குழந்தை அந்நாட்டின் குடியுரிமை கொண்டது. அப்படியிருக்க இன்னும் பூர்வீகம் மண்ணாங்கட்டி என்பதெல்லாம் சுத்தப் பம்மாத்து. காலங்காலமாய் வாழ்ந்தால் அது பூர்வீகம் தான். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இன்றைய யாழ்ப்பாணத்தில் பலர் பூர்வீகக் குடிகள் அல்ல. வேறு பிரதேசங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான்.

    //அப்படி மாறினார்கள் என்றால் இப்படிமாற முன்பு இவர்களின் மதம், சமயம் என்ன? சரி இவர்கள் இஸ்லாத்தவர்கள் என்றால் இவர்கள் வகாபி முஸ்லீமா? அல்லது சுகிபி முஸ்லீமா? இவர்கள் பாட்டுப்பாடி தமது மக்களுடன் ஆடிப்பாடி தொடர்பு கொள்வதை விரும்புபவர்கள் (இது வைஸ்ணவர்களின் ஆடிப்பாடி கடவுளை வணங்கும் தரம் கொண்டவர்கள் இவர்களை சவுதி அரேபியாவில் தடைசெய்துள்ளார்கள் என நினைக்கிறேன்) அல்லது சியா முஸ்லிம்களா அல்லது சுன்ணி முஸ்லீம்களா? இது பற்றி சோனகர் என்ற இனம்தாம் என்று பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் தெரிவிக்க வேண்டும் கருத்துக்களை தரல் வேண்டும்.//

    இலங்கைத் தமிழர்கள் வைஷ்ணவரா.. சைவரா… கபாலிகளா…ஏன் ஹரிஜன்…. இப்படி தமிழரிலும் மதம் சார்ந்த பல உட்பிரிவுகள் இருப்பதை மறந்து விடாதீர்கள் சோதிலிங்கம்….அப்படித் தான் இலங்கை முஸ்லிம்களும்.. ஏன் இலங்கைச் சிங்களவார்களிடத்தில் கூட கரையோர.. கண்டி… மகாயான.. தேரவாத என்று மதப் பிரிவுகள் இருக்கின்றனவே.. சியாமோபாலி நிகாய என்பது கரையோரம்… அஸ்கிரிய என்பது மகாயானம் உள்ளிட்ட ஏனையோர்.. மல்வத்து என்பது தேரவாத பிரிவு..

    //அப்படியாயின் ஏன் துருக்கியர்களும் ஜரோப்பிய முஸ்லீம்களும் இப்படி தாடி உடுப்புக்களுடன் இல்லை? அல்லது அதைவிட வேற எப்படி இஸ்லாமியனாக அடையாளப்படுத்தலாம்?//

    இங்கிருக்கும் கலாசார சுதந்திரம் அங்கில்லை; ஆயினும் அதற்கான அமைதி வழிப் போராட்டங்கள் ஆர்ப்பாட்ஙகள் நடைபெறத்தான் செய்கின்றன.

    //அவற்றிக்கு என்ன நடந்தது அவை ஏன்? யாரால் எப்போது அழிக்கப்பட்டது என்ன? காரணங்களுக்காக அழிக்கப்பட்டது? எப்படி பெருந்தொகையான முஸ்லிம்களை கொண்ட பிரதேசமாக மத்திய கிழக்கு கொண்டு வரப்பட்டது இதில் உள்ள ஏதோ ஒரு இரு காரணங்களே மேற்கு நாடுகளும் இதர நாடுகளும் இன்றும் பயப்பிடுகின்ற விடயமாக உள்ளதாக நான் விளங்கிக்கொள்கிறேன்.//
    அன்றைக்கும் கஃபாவை மையமாகக் கொண்ட மதம் தான் இருந்தது. அது சீர்கெட்டிருந்தது.ஏன் சைவமும் நாயன்மார்.. ஆழ்வார்களால் அடிக்கடி சீர்திருத்தப்பட்டது தானே.. அது முடியாத போது தானே கடவுள் அவதாரம் என்றெல்லாம் வருகின்றது…?

    மரக்கல என்பது மாரெக்க லே என்று களனிப் பல்லைக்கழகத்தின் சிங்களப் பேராசிரியார் சந்திரசிறி பள்ளியகுரு தெளிவாக சொல்லி விட்டார். அதாவது கண்டி மன்னனை ஒரு தடவை ஆங்கிலேயார்களினடமிருந்து காப்பதற்காக முஸ்லிம் பெண்ணாருத்தி சிந்திய இரத்தம் கண்டு என்னைப் பாதுகாத்த இரத்தம் (மா ரெக்க லே) என்று குறிப்பிட்டதுடன் அதற்குப் பின் எல்லா முஸ்லிம்களையும் நன்றியுடன் அதே வார்த்தையைப் பயன்படுத்தி விளிக்க நாளடைவில் அது மருவி மரக்கலயா என்றாகி விட்டது என்று அவர் தெளிவாக கூறுவார். போய்க் கேளுங்கள்.

    //முஸ்லீம்கள் இந்தியர்களை கைப்பற்றி இஸ்லாத்தை வாள் முனையில் இந்தியாவில் புகுத்தினராம்//
    இதற்கு நான் ஏற்கெனவே பதில் எழுதி விட்டேன்.மோகன்தாஸ் விடயத்தில்…வாசித்துப் பாருங்கள்.. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று.தவிரவும் அன்றைய போர்கள் எல்லாம் சாம்ராஜ்ஜிய விருத்திக்காக நடைபெற்றதே தவிர மதத்தின் பரம்பலுக்காக அல்ல..

    //இலங்கையின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தமிழன், பின்னர் ராஜசிங்க என்ற சிங்களவராக்கப்படும் முயற்சிகள் நடைபெற்றது அதற்கிடையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல இவற்றிக்கு தடையாக வந்துவிட்டது -பதவியா குளம் நாரததேசிகரால் கட்டப்பட்டது ஆனால் சிங்கள அரசு இந்த குளம் சிங்கள மக்களால் கட்டப்பட்டதாகவே கூறுகின்றது//
    இப்படித்தான் தமிழர்களும் முஸ்லிம்களின் வரலாற்றை மறுக்கின்றார்கள்.

    மீண்டும் தொடர்வேன். இன்னும் வரும்.. காத்திருங்கள்.. ஆதாரங்களையும் எடுத்து வருவேன்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //சீனாவிலிருந்து பல தடவைகள் செங்கோ என்ற ணநn மர என்ற அரசன் 5 தடவைகள் சீனாவிலிருந்து வந்த ஒகினோ பேசியன் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சின்னங்களை பல இடங்களிலும் பதித்து சென்றுள்ளான்//

    அது கூட ஒரு முஸ்லிம் தான் என்பதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனார். அவரது இயற்பெயர் ஹஜ்ஜி மொஹம்மத் சம்ஸ் என்பதே ஆகா ஸெங்க் ஹே என்று சீன மொழியில் மருவியதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவர் சீனாவின் கடற்படைத்தளபதியே தவிர பேரரசன் அல்ல…

    இது விக்கிமீடியாவில் ஸெங்க் ஹே வின் உலக வரைபடம் என்று கூறப்பட்டுள்ளது.

    -http://commons.wikimedia.org/wiki/File:Zheng_He_map.jpg

    இவை அவர் பற்றிய யூடியூப் ஆதாரங்கள்..
    -http://www.youtube.com/watch?v=L1POtlzbJ7U&feature=player_embedded
    -http://www.youtube.com/watch?v=tY8uouoOAyQ&feature=player_embedded

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…… இந்தியப் படை காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் இலங்கைப் படையாலும் கலப்பின விருத்தி நடக்கவில்லையா? அது தான் பத்திரிகைச் செய்திகளில் நாளாந்தம் வெளிவருகின்றதே…..//

    நீங்கள் பணிப்பாளராக இருந்து வெளியிட்ட (ஆளாளுக்கு விருப்பப்படி) செய்திகளின் அங்கம் தானே. நான் முன்னர் கேட்டிருந்தேன் கற்பழிப்பு கேசெல்லாம் கள்ளக்காதல் எனச் சொல்லி தட்டிக்கழிக்க நீங்கள் ‘துணை’ (சோரம் எனவும் சொல்லலாம்) போனீர்கள் இல்லையா? கேட்டால் நான் செய்யவில்லை ஆளாளுக்கு செய்துபோட்டாங்கள் என மணியான பதில் சொன்னீர்கள் இல்லையா?

    குசும்புவின் வாதங்களுடன் நான் ஒத்துபோகவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பற்றி குசும்பு சொல்வதுபோல் சில தமிழர்களும் மிகப்பல சிங்களவர்களும் சொல்லக் கேட்டிருகிறேன். இச்சிங்களவர்களில் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து மிகமேல்மட்டத்தில் வாழுவோர் அடக்கம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    நல்லூர் முருகன் ஆலையம் புவனேகபாகு மன்னனால் கட்டப்பட்டது. போர்த்திகீசரினால் அழிக்கப்பட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் செங்குந்த இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள “பூதராயர்” குளத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதிகமாக சிறி சபாரத்தினத்தின் உறவினர்களால் ஒளித்து வைக்கப்பட்டு ஒல்லாந்தர் காலத்தில் இந்துக்களுக்கு வணங்கும் உரிமை கொடுக்கப்பட்ட பொளுது கட்டப்பட்ட முருகன் ஆலையத்தில் வைக்கப்பட்டன.

    இன்றும் கோவிலின் “கட்டியம்” சொல்லும்பொளுது “சிறி சங்க போதி புவனேக பாகு” பெயர் உச்சரிக்கப்படுவதை அவதானிக்கலாம்.

    ஒல்லாந்தர் காலத்தில் கத்தொலிக்க மதம் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. காணி உரிமையும்(தோம்பு) மாற்றி எழுதப்பட்டது. தற்பொழுது முத்திரை சந்தியில் உள்ள கிறிஸ்தவ ஆலையம் ஒல்லந்தர்களால் கட்டப்பட்டது.

    யாழ் மன்னர்களால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை முஸ்லிம்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலையத்துக்கு கொடுத்து உதவினார்கள். கற்பூரம் விற்கும் உரிமை யாழ் மன்னர்கள் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

    முஸ்லிம்களை “மரக்கலயா” என்று சிங்களவர் சொல்லுவது அவர்கள் ‘மரக்கலத்தில்” இலங்கைக்கு வந்தவர்கள் என்ற காரணமே!

    சோனகர் என்பது “யவனர்” என்பதன் திரிபு! கேரளாவில் இன்றும் ஒரு “ஜோனகப் பாலம்” என்று ஒரு இடம் உள்ளது.

    Reply
  • BC
    BC

    //அப்படியாயின் ஏன் துருக்கியர்களும் ஜரோப்பிய முஸ்லீம்களும் இப்படி தாடி உடுப்புக்களுடன் இல்லை? அல்லது அதைவிட வேற எப்படி இஸ்லாமியனாக அடையாளப்படுத்தலாம்? இங்கிருக்கும் கலாசார சுதந்திரம் அங்கில்லை.//

    துருக்கியில் ஓரளவும், ஜரோப்பிய நாடுகளில் முழுமையாகவும் முஸ்லீம் மதத்தவரால் சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் வீட்டில் மட்டும் நிர்பந்தம் இல்லாவிட்டால் தாடி, உடுப்புக்கள், பர்த்தா இல்லாமல் சுதந்திரமாக அவர்களால் நடமாட முடிகிறது. இப்படியான சுதந்திரம் இலங்கையில் முஸ்லீம் மதத்தை சேர்ந்தோருக்கு இப்போ அறவே கிடையாது என்பதை அறிந்தேன். துருக்கி குடும்பம் ஒன்றின் துருக்கியில் எடுக்கபட்ட புகைபட அல்பம் பார்த்தேன். அதில் பர்த்தா அணியாத பெண்களும் இருக்கிறார்கள்.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Please see below a useful discussion on Racial Classification which might help to clarify your views:

    RACIAL CLASSIFICATION

    Anthropologists distinguish groups of people on the basis of common origin, living, or having lived, in certain defined regions and possessing differing characteristic features in their appearance. But one should remember that there are no strict lines of demarcation between races. All these groups blend imperceptibly into one another with intermediate types possessing various combinations of physical characteristics. Modern man is biologically uniform in basic features (for example upright posture, welldeveloped hand and feet, prominent chin, absence of bony eye brow, an intricately struc-tured brain encased in a big skull with a straight high forehead and 46 number of chromosomes) and polymorphous as regards many secondary features. Scientists consider all human beings as belonging to a single species, Homo sapiens. The variations found in groups living in different
    geographical areas reflect only a differentiation within the single species due to host of biological,social and other factors.

    In anthropology there are two schools of thought on the origins of man and the major races—the polycentric and the monocentric schools. The polycentric theory (Franz Weidenreich, U.S.A.) claims that modern man evolved in several regions relatively independent of one another and that peoples developed at different rates. This theory claims that modern man evolved from the “oldest” and “old” people in each region and that this gave rise to the formation of the major races—Europoid, Negroid, Australoid, Mongoloid, etc. On the other hand monocentrists (for example Henri-Victor Vallois and G. Olivier in France, Francis Howell in the U.S.A., Kenneth Oakley in Britain, Vsevolod P. Yakimov, U.S.S.R.) consider modern man to have evolved in a single region. The ancient Homo sapiens who evolved there did not possess clearly distinguished traits of any of the modern races. It was only when human groups spread geographically and settled in definite territories that racial types evolved. That is why the races of modern mankind resemble one another so closely. This resemblance is a sign of their common origin, of their emergence in a single region. Darwin more than 100 years ago, ventured to predict- that one day it would be found that man had originated in Africa. Mourant (1983) in his book “Blood Relations” stated that it is almost certain that man evolved from his pre-human ancestors and emerged as a unique tool-making animal somewhere in tropical Africa and that we are therefore, in a sense, all of African origin. Using five polymorphic restriction sites on b gene cluster, Long et al. (1990) worked out, the evolutionary histories and relationships among Africans, Eskimos and Pacific Island populations and reported an African origin for modern Homo sapiens and a phyletic structuring in the major geographical regions. It is probably rather over a million years ago that man entered Asia from Africa; bones of the early human species, Homo erectus have been found in China as well as in Java, which could have reached only through Asia. Moreover, to reach Europe, which he probably very soon did, he must have passed through south-west Asia.

    India has served as a major corridor for the dispersal of modern humans out of Africa (Cann 2001; Underhill et al. 2001; Cavalli – Sforza and Feldman 2003; Kivisild et al. 2003; Palanichamy et al. 2004; Cavalli- Sforza 2005). It probably was in Asia that Eurasian man, by now of the modern Homo sapiens species, diverged from African man, and then became differentiated into Caucasoid and Mongoloid types. Another differentiation, which probably took place in Asia, is that of the Australoids, perhaps from a common type before the separation of the Mongoloids. The Caucasiods and the Mongoloids almost certainly became differentiated from one another somewhere in Asia and Caucasoids subsequently spread to the whole western part of the continent and thence to Europe and north Africa (Mourant 1983). The divergence lines among the three major races—Negroid, Caucasoid and Mongoloid— estimated by Nei and Roychoudhury (1982) by using a number of genetic markers, reported the divergence between the Negroid and the Caucasoid-Mongoloid groups seem to have occurred about 110,000 ± 34,000 years ago.

    On the other hand the divergence between the Caucasoid group and the Mongoloid group seems to have occurred about 41,000 ± 5,000 years ago. This corresponds to the time when classic Neanderthals were living. These estimates of divergence lines are much earlier than Cavalli-
    Sforza and Bodmer’s (1971) (20,000-50,000 years ago), but they are not unreasonable in view of the fossil records available (Birdsell 1972). The Mongoloids are the most numerous of the three major races of mankind and China in the centre of the Mongoloid area has the largest population of these than any country in the world, so the Chinese must be taken as the typical Mongoloids. The ancestors of Japanese passed through Korea to reach Japanese Islands, where they found ancestors of the present Ainu. Through an area to the south of China, extending from the Vietnamese border to the tip of Malaya peninsula, through this there must have passed
    Homo erectus very long ago on his way to Java1 the ancestors of the Australian aborigines. Then came the Indonesians, and finally the Mongoloids in narrower sense, represented by the Mons and the Khmers, the Tibeto-Burmans and the Thais, all of whom probably entered the region before 1000 B.C. (Mourant 1983).
    The populations of Siberia are important in supplying evidence regarding the original peopling of the American continent. This took place perhaps about thirty thousand years ago, it was through the Bering Strait which was then dry land owing to the recession of sea level accompanied by last glaciation. Perhaps about thirty thousand years ago, populations of Mongoloid physical type moved into north eastern Siberia and thence into America (Mourant 1983). The differences between Mongoloids and Caucasoids appear rather sharp as one crosses the mountains in the northern boundary of the Indian sub-continent. The passage from India to
    Burma is somewhat more gradual, probably because contact here has been present for a long time and some mixing has taken places, whereas the Mongoloids north of the mountains were probably fully differentiated in the Far East before the retreat of the ice allowed them to enter Tibet (Mourant 1983).

    In Asia, Australoid if people now live in South of India, the deep ocean between India and Australia means that the direct ancestors of the Australians could not have set out from there. We must picture both India and south-east Asia as being at one time inhabited largely by Australoids who were driven by technologically more advanced people from the north, in the one instance into southern India and Sri Lanka and in other, across Burma and Malaysia and so ultimately through Indonesia and New Guinea to Australia (Mourant 1983).
    A number of racial classifications of human populations have been reported in the literature, but there seems to be no agreement about these classifications among anthropologists. However the human populations are broadly divided into three major races: Caucasoid, Negroid and Mongoloid. Many anthropologists have considered two more major groups i.e., Amerind and Australoid or Oceanian (Boyd, 1963). These schemes of classification of human populations were largely based on morphological and anthropometric characters. In the last few decades,
    however, new methods with elaborate statistics and biometry along with the latest concepts on human genetics have added fresh dimension to the study of human population groups.

    To the Indian subcontinent came several
    waves of immigrants at different periods of history and entered into the ethnic composition of the population at different levels from a very early phase of human civilization. The intrusions of these people with several racial elements have left the strains of various developed races together with their ethnic and cultural substrata
    in the land, thus representing the elements of all the main divisions of mankind (Fig. 6). In India the range of somatic variations in different physical traits of its people is remarkably wide. To account for the heterogeneity and to highlight the underlying pattern of the observed variations, earlier European anthropologists, like
    Charles de Ujfalvy (1881-82) and Captain Drake- Brockman, Sir T.H. Holland (1902) and Waddell
    (1899) measured groups from various parts of India and attempted various taxonomic classification of
    the Indian peoples. During the early part of the last century the schemes of classification of Indian people were largely based on morphological and anthropometric characters. The list of various classifications that have been given on the people of India by different authors is as follows:

    1. Risley’s Classification (1915)
    2. Giuffrida-Ruggari’s Classification (1921)
    3. Haddon’s Classification (1924)
    4. v. Eickstedt’s Classification (1934, 1952)
    5. Guha’s Classification (1935, 1937)
    6. Roy’s Classification (1934-38)
    7. Sarkar’s Classification (1958)
    8. Biasutti’s Classification (1959)
    9. Roginskij and Levin’s Classification (1963)
    10. Büchi’s Classification (1968)
    11. Bowles’s Classification (1977)

    So many classifications on the people of India have been reported and almost all seem to make some sense. An attempt has been made to evaluate the distribution of various racial strains/elements present in the peoples of India and this is represented in figure 7 (This figure has been drawn while taking into consideration the
    classifications reported by Guha and others).
    1“Sundashelf, a dry land as the route from Asian mainland to Java is now so well accepted that Shutler and Braches (1987) in their review of the paleoanthropology of Pleistocene island Southeast Asia see it as the route to Java from the Asian mainland for all migrating land
    mammals” (p. 186) cited from Tumer II (1990). Than perhaps (some- forty thousand years ago.

    Genetics of Castes and Tribes of India:
    Indian Population Milieu
    M. K. Bhasin
    Kamla-Raj 2006

    Reply
  • ashroffali
    ashroffali

    //நீங்கள் பணிப்பாளராக இருந்து வெளியிட்ட (ஆளாளுக்கு விருப்பப்படி) செய்திகளின் அங்கம் தானே. நான் முன்னர் கேட்டிருந்தேன் கற்பழிப்பு கேசெல்லாம் கள்ளக்காதல் எனச் சொல்லி தட்டிக்கழிக்க நீங்கள் ‘துணை’ (சோரம் எனவும் சொல்லலாம்) போனீர்கள் இல்லையா?//

    சாந்தன்…
    குசும்பு வின் வாதத்துக்கு எதிர்வாதமாககத் தான் அதனை முன்வைத்தேன். அது தவறு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அந்த வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டுகின்றேன்.

    ஆனால் முஸ்லிம்கள் அரபியர்களிடத்தில் சோரம் போனவர்கள் என்ற அருவறுக்கத்தக்க துவேச கருத்து முன்வைக்கப்பட்ட போது எவரும் அதைத்தட்டிக் கேட்க முன் வரவில்லை. அதைத் தான் பக்கச்சார்பு என்று கூற வேண்டும்.

    என்னைப் பொறுத்தவரை இன்று வரைக்கும் வட-கிழக்கு மட்டுமல்ல.. இலங்கை எங்கிலும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க்பபடுவதை எதிர்ப்பவன். அதன் காரணமாகத்தான் என் பதவி அதிகாரம் எல்லாவற்றையும் உதறி எறிந்து விட்டு வந்திருக்கின்றேன். தமிழ் மக்களும் என் உடன்பிறவா சகோதரர்களே.. அதில் நான் உறுதியாகவே இருக்கின்றேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    சீனத்து செங் கோ என்ற கடல்படை ஜெனரலையும் “முஸ்லிம்” ஆக்கியாகிவிட்டது. அந்தநாள்க்களில் சீனத்தில் “முஸ்லிம்” என்று யாரும் கிடையாது.

    மிங் அரச பரம்பரையில் ஒரு முஸ்லிம்? பெரிய காமெடி!

    செங் கோ கோட்டை அரசு பரம்பரைகளை சீனாவுக்கு கப்பலேற்றியவன். 60 வருடங்களாக இலங்கை சீனாவுக்கு திறை கொடுத்து பின்னர் அவர்களால் அனுப்பபட்ட “தமிழ்” வீர அழகேஸ்வரனை கோட்டை மன்னன்னாக ஏற்றுக் கொண்டவர்கள்.

    சீனர்கள் தமிழை அங்கீகரித்துள்ளனர். அதனால் அவர்கள் காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளனர்.

    தமிழர்கள் சீனத்தை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. கராத்தே என்பது தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை சீன மக்கள் இன்றும்நினைவு கூருகிறார்கள்.

    செரென்டிப் என்பது அரபு வார்த்தை என்றுஎல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது சேரன் தீவு என்பதன் திரிபு என்பதை எப்பொளுது சொல்லப் போகிறார்கள்?

    அரபு மொழியில் செரன்டிப் என்று ஒரு வார்த்தையும் கிடையாது அப்படியாரும் குரிப்பிடுவதும் கிடையாது!

    இலங்கை எப்பொழுதும் “வரவேற்கும்” இடமாகவே உள்ளது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    //சோனகர் அரேபியர்களிடம் சோரம் போனவர்கள்.//குசும்பு..
    உங்கள் வாதப்படி பார்த்தால் இன்றுள்ள இலங்கைத் தமிழர் எல்லாம் இந்தியப் படையினரிடமும் இலங்கைப் படையினரிடமும் சோரம் போனவார்களா../ அசுரப்- கற்பழிப்புகளை கள்ளக்காதலாக மாற்றுவதும்: பெண்களை இரண்டாந்தரப் பிரசைகளாய் நடத்துவதும் இஸ்லாமே தவிர எந்தமதமும் கிடையாது.மற்றுமொரு முக்கிய விடயம் நாங்கள் சிங்களவர்கள் தென்னிந்தியர்கள் எல்லோரும் ஒரே இனம் என்பதை மறந்து விடாமல் இருப்பது முக்கியம். எமது இனத்துடன் இணைந்த வாழத்தான் விரும்புகிறோம்.
    /சிங்களவரிடம் சொன்னால் அழகாக ஏற்றுக் கொள்வார்கள்./ அவர்களில் பாமரர் சிலருக்கும் உமக்கும் சரித்திரம் தெரியாது என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல குசும்பு.. ஒன்றை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலங்கையில் என்ன உரிமை இருக்கின்றதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.சிங்களவர்களுக்கும் உண்டு. /
    இனி இலங்கை முஸ்லீங்களின் நாடு என்பீர்கள் போலுள்ளது. சோனகன் வியாபாரத்துக்காக வந்தவன் பூர்வீகமற்றவன் இலங்கைப் பூர்வகுடியின் உதிரத்தில் இல்லாத அன்னியர். இது எனது முடிவுமட்டுமல்ல சரித்திர உண்மையும் கூட. அதை யாராலும் மாற்ற இயலாது.
    கனடா அமெரிக்கா அவுஸ்ரேலியா எல்லாம் நாடோடிகளின் நாடு இலங்கை சோனகநாடோ?
    நந்தா வாழ்க்கையில் மட்டுமல்ல யார் வாழ்க்கையிலும் யார் குழிபறித்தாலும் நான் நேரடியாகக் கண்ட அனுபவித்தது முஸ்லீங்கள் தான் கூட இருந்து குழிபறித்தது. இது இஸ்லாத்தின் பாடமோ தெரியாது. ஏன் நீர் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒரே மொழி பேசும் தமிழருக்கு குழிபறித்தீர். இப்போ ராஜபக்சபுக்கு பறிக்கிறீர்.
    /நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றவன் நான்/ உங்களுடனா? போதும் சாமி பட்டது போதும்:
    /முஸ்லிம்களையும் அவர்களின் வாணிபத்தையும் அழிக்கும் நோக்கில் தான் மேற்கு நாட்டவரின் கீழைத்தேய பயணங்கள் ஆரம்பமானதாக ஆங்கில வரலாற்றாசிரியர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்./ மொத்ததில் நீங்கள் எங்களின் வளங்களை அள்ளவந்த வாணிபப் கொள்ளையர்கள் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
    வட இந்தியனுக்கு இந்தி இருக்கிறது சீக்கியனுக்கு பஞ்சாபி இருக்கிறது சோனகனுக்கென்று எந்தத் தனிமொழி இருக்கிறது. சோனகன் மொழியில்லாதவன்.
    /தமிழ் பேசுவதால் மட்டும் அவர்கள் தமிழர்களாகி விட முடியுமா?/ தமிழைத்தாய் மொழியாகவும் தமிழ் பெற்றோரைக் கொண்ட ஒவ்வொருவனும் தமிழினே. சோனகனைத் தவிர. தாய்மொழி என்பதை அழுத்தம் திருத்மாக மனதில் கொள்ளும்.

    //. நான் மொழியால் தமிழன்: மதத்தால் இந்து: நான் என்ன இனம்? சொல்லும் பார்க்கலாம்/
    தமிழர் தான்..மதம் அல்ல.. அங்கே கலாசாரம் தான் அதனைத் தீர்மானிக்கின்றது/
    தமிழை மொழி என்கிறீர் பின் இனம் என்கிறீர். சுயமாகத்தான் எழுதுகிறீரா? பின்பு என்ன கலாச்சாரம்? நல்லகக் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.

    //பியசேனா தமிழ்பேசினாலும் அவரின் தாய்மொழி மட்டுமல்ல பெற்றோர் மொழியும் சிங்களமே// புதிய கண்டுபிடிப்பு… அவரின் பெற்றோர் மொழி தமிழாக இருந்ததனால் தான் அவரும் தமிழ் பேசினார். பியசேனவுக்கும் சிங்களம் அடியோடு தெரியாது/ பியசேனவின் சரித்திரம் எனக்குத் தெரியவேண்டய அவசியம் இல்லை நான் அறிந்தவரை அவர் சிங்களவர் என்றும் தமிழர்களுடன் பழகி தமிழ்பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் என்றும் அறிந்தேன். இது நான் அறிந்தது மட்டும்தான். இதற்கு ஒரு கண்டுபிடிப்பு? பியசேனவைப்பற்றி எழுதிய நீங்கள் இதை விளங்கியிருக்க வேண்டும்.
    /இப்படித்தான் தமிழர்களும் முஸ்லிம்களின் வரலாற்றை மறுக்கின்றார்கள்./
    இஸ்லாம் என்பதே தெற்காசியாவில் பிறக்கா ஒன்று இதற்கு வரலாற்றை மத்திய கிழக்கில் அல்லது சவுதியில் தேடுங்கள்.
    // எனது கண்ணில் கூறானைத் தூக்கித்திரியும் ஒவ்வொருவனும் பயங்கரவாதிதான்// புதிய கண்டுபிடிப்பு./ அசுரப்அலி! ஜிகாத் என்று பயங்கரவாதம் கொண்டு திரிவது யார்? அல்கைடா என்ற உலகின் நின்மதியைக் கொடுத்தவன் யார்? தலிபான் என்று கூறான் படிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட குழு கொலை கொள்ளை சொந்தப் இனப்பெண்களையே காதறுப்பு மூக்கறுப்பு என்று செய்வது யார்? சரியா என்று பெண்களைக் கற்பழிக்க அனுமதியழிப்பது எது? இஸ்லாம்: அந்த இஸ்லாமியன் எவனுடனும் நாம் சேர்ந்து வாழ விரும்பவில்லை.இதற்கு எனக்குப் பதில் தேவையில்லை கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

    அசுரப் அலி! தன் முதலும் மூலமும் அறியாமல் அறியாது புரியாதவற்றை விக்கிப்பீடியா இன்ரர்நெட்டில் இருந்து பண்டிதர் பட்டம் பெற எண்ணலாம். சரித்தித்தையே தலைகீழாக்க முயல்கிறார். தன் மொழிகொண்ட தமிழர்ளை அழிக்க அரசுடன் நின்றவர் இன்று மகிந்தவுக்கே ஆப்பா?
    ஆதிப்பெரு இனங்கள் மொழிவாரியாவே வகுக்கப்பட்டன. உ.ம் அசுரப் அலி கொண்ட வந்த வடஇந்தியரையும் சீக்கியரையும் எடுத்துக் கொண்டால் வட இந்தியர்கள் இந்தி மொழி சீக்கியருக்கு பஞ்சாபி மொழி என்பதைக் கூட அறியவில்லையோ. அவர்களைப் பஞ்சாபியர் என்பது வழக்கம்.
    விக்கிப்பீடியாவில் யாரும் எழுதலாம்.

    நந்தா!/சீனத்து செங் கோ என்ற கடல்படை ஜெனரலையும் “முஸ்லிம்” ஆக்கியாகிவிட்டது. அந்தநாள்க்களில் சீனத்தில் “முஸ்லிம்” என்று யாரும் கிடையாது.

    மிங் அரச பரம்பரையில் ஒரு முஸ்லிம்? பெரிய காமெடி/
    நந்தா இங்கே முஸ்லீங்கள் எழுதுவது எது காமெடி இல்லை என்று சொல்லுங்கள்.
    மதத்திற்கும் இனத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு என்னத்தைத்தான் சொல்லி விளங்கப்படுத்தப் போகிறீர்களோ. விளங்காதவர்களுக்கல்ல விளங்க மறுப்பவர்களுக்கு எதை எழுதினாலும் புரியாது. அதுவிழலுக்கு இறைந்த நீராகும். என்பதால் அசுரப்அலிக்கு எழுதுவதை நிறுத்துவது உசிதமானது. இதுவே எமது கெளரவத்தைக் காத்துக்கொள்ளும்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    //இலங்கைத் தமிழர்கள் வைஷ்ணவரா.. சைவரா… கபாலிகளா…ஏன் ஹரிஜன்…. இப்படி தமிழரிலும் மதம் சார்ந்த பல உட்பிரிவுகள் இருப்பதை மறந்து விடாதீர்கள் சோதிலிங்கம்// அஸ்ரப்அலி

    இலங்கையில் உள்ள தமிழர் இனம் தம்மை சமயத்தால் அடையாளப்படுத்தவில்லை. அவர்கள் கிறீஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் எல்லாம் ஒன்று சேர தமிழ் இனம். இந்த விடயத்துடன் நீங்கள் சைவத்தை இணைத்து ஒப்பிடக் கூடாது ஆனால் சைவம் தமிழுடன் இணைந்தே எழுந்துள்ளது. உங்கள் விடயத்தில் அப்படி இல்லை. இஸ்லாமிய முஸ்லீம்கள் ஒரு இனம். ஆகவே தான் இவர்கள் எந்த முஸ்லீம்கள் என கேள்வி எழுப்பினேன் காரணம் உங்கள் முஸ்லீம்களில் சிலர் தம்மை சோனகர் இனம் என்றும் அதற்கும் சமயத்துக்கும் உறவுபடுத்தி சோனக இனத்தை பார்க்க தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்;

    இது போன்ற பல கேள்விகளை தயாராக்குங்கள் தமிழர்களிடம் கேட்டு அறிய பதில் பெற்று தருகிறேன்

    நான் ஒரு துருக்கியரை நேற்று சந்தித்தேன் அவர் கூறினார் 5 வேளை தொழுவதுதான் இஸ்லாத்தின் கடமை என்று ஆனால் தாங்கள் துருக்கியர்கள் இதில் உடன்பாடு இல்லாதவர்கள் என்றும் தாம் கடவுளை காதலிப்பவர்கள், 5 வேளை தொழத்தேவையில்லை, மது அருந்துவது கூட தாம் ஒரு பெக் அடிக்கலாம் என்றும் காரணம் மனிதர்கள் ஆசை கொண்டவர்கள் அதை இஸ்லாம் தடைசெய்யவில்லை என்றார். மற்றைய இஸ்லாமியர்கள் கடும் போக்கு கொண்டவர்கள் என்றும் இதனாலேயே குண்டுகள் வெடிக்கிறார்கள் என்றும் இதற்கு அவர் தந்த உதாரணம் பாக்கிஸ்தானில் உடல்கள் புதைத்து இருக்கும் இடங்களிலே நடக்கும் சண்டைகளை.

    //முன்னரே நாங்கள் இயக்கர் நாகர் பரம்பரைப் பூர்வீககுடிகள். //
    சிங்களவரிடம் சொன்னால் அழகாக ஏற்றுக் கொள்வார்கள். அன்றைய சோழப் பேரரசின் ஆக்கிரமிப்பு சதிகாரர்கள் என்றல்லவா அவார்களை உங்களை அடையாளப்படுத்துகின்றார்கள்.//
    இயக்கர் நாகர்கள் திராவிடர்கள் என்பதை மரபணுச் சோதனை நிரூபித்து விட்டது.

    சோழப்பேரரசர்களின் பரம்பரையில் வந்தவர்களின் படைத்தறைத்தளபதியே கோட்டையை வென்றான் பெளத்தத்தை ஆதரித்தான் …..இந்துக்கோயிலை கட்டினான்…..இவற்றிக்கும் இந்து பெளத்த விடயங்களுக்கும் பின்னர் தேசத்தில் எழுதுவோம். வேடர்கள் இயக்கர்களாகும்.

    ஒரு இராணுவத்தளபதி சொன்னார் முஸ்லீம்களால் இலங்கைக்கு ஆபத்து என்று. நான் சொன்னேன் இப்படித்தான் அமெரிக்காவும் சொல்லுகிறது, ஆனால் இஸ்லாத்தால் ஆபத்து இருக்கலாம் ஆனால் இஸ்லாமிய மக்களால் அல்ல என்று இதை நீங்கள் புலிகள் இஸ்லாமியர்களுக்கு செய்ததிலிருந்து படித்திருக்க வேண்டும் என்றேன்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //இயக்கர் நாகர்கள் திராவிடர்கள் என்பதை மரபணுச் சோதனை நிரூபித்து விட்டது.//

    சோதிலிங்கம்.. எங்கே எடுத்தீர்கள் மரபணுச் சோதனை..? என்ன கூத்தய்யா இது..? யாருக்குமே தெரியாத மரபணுச்சோதனையை நீங்கள் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை ஊடகங்களில் வந்திருக்க வேண்டுமே..?

    //முஸ்லீம்களில் சிலர் தம்மை சோனகர் இனம் என்றும் அதற்கும் சமயத்துக்கும் உறவுபடுத்தி சோனக இனத்தை பார்க்க தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்;//

    முஸ்லிம்கள் எனும்போது இலங்கை முஸ்லிம்கள் தான் குறிப்பிடப்படுகின்றார்கள். பாக்கிஸ்தானி பரம்பரையினர் பாய்கள் என்றும் இந்தியப் பரம்பரையினர் மரைக்காயர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அத்துடன் மலே இனத்தவர் மற்றும் ஜாவா இனத்தவர் என்றெல்லாம் உட்கூறுகள் உண்டு. அது அவரவர் பாரம்பரியத்தை ஒட்டி வகைப்படுத்தப்பட்டது. ஆனால் பொதுவாக சோனகர் என்பதே அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள விடயமாகும். அவ்வளவுதான்.

    //சீனர்கள் தமிழை அங்கீகரித்துள்ளனர். அதனால் அவர்கள் காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ் சமஸ்கிருதம் சீனம் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளனர்.// நந்தா

    ஆமாம் .. குறித்த கல்வெட்டு பிரித்தானியப் பொறியியலாளர் டொம்லின்சன் என்பவரால் 1911ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அதில் தமிழும் இருந்ததை ஏற்றுக் கொள்கின்றேன்.. ஆனால் ஆரம்ப காலத்தில் இலங்கையில் தமிழ் இருந்ததை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கின்றார்கள். காரணம் சோழப் பேரரசின் ஆக்கிரமிப்பு படையெடுப்புகள். ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்ட போது நாடு முழுதும் பரந்து வாழ்ந்தார்கள். காடுகளில் புதிய வாழிடங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்படித்தான் இலங்கையில் தமிழ் பரவல் பெற்றது என்று பரணவித்தான மற்றும் கலாநிதி ஜானக குணதிலக்க ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    அதே கலாநிதி ஜானக குணதிலக்கவும் கூட செங்கோ ஒரு முஸ்லிம் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.

    அன்றைய மிங் அரசன் பெளத்தன் தான். அதை காலி கல்வெட்டு நிரூபிக்கின்றது. ஆயினும் செங்கோ ஒரு முஸ்லிம். அதை சீன வரலாற்றாசிரியர்களே ஏற்றுக் கொண்டுள்ள போது நீங்கள் மறுப்பதில் பயனில்லை. செங்கோ மற்றும் அன்றைய சீன முஸ்லிம்களின் பரம்பரைதான் இன்றைய உய்குர் முஸ்லிம்கள் என்பது தான் உண்மை.

    மாவீரன் செங்கிஸ்கான் ஆக்கிரமிப்பாளனாக வந்து இஸ்லாத்தின் பக்கம் திரும்பியவன். அவனும் சீனப் பேரரசன் தான். அப்படியிருக்க அக்காலத்தில் சீனாவில் இஸ்லாம் இருக்கவில்லை என்று எந்தப் புரட்டு வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார்?

    Reply
  • ashroffali
    ashroffali

    //செங் கோ கோட்டை அரசு பரம்பரைகளை சீனாவுக்கு கப்பலேற்றியவன். 60 வருடங்களாக இலங்கை சீனாவுக்கு திறை கொடுத்து பின்னர் அவர்களால் அனுப்பபட்ட “தமிழ்” வீர அழகேஸ்வரனை கோட்டை மன்னன்னாக ஏற்றுக் கொண்டவர்கள்.//

    நந்தா.. இந்த இடத்தில் உங்கள் கருத்து சற்றுப் பிழைக்கின்றது என்று நினைக்கின்றேன். யாப்பாபட்டுண ஆர்ய சக்கரவர்த்தியின் படையெடுப்பில் ஐந்தாம் புவனேகபாகு அரசன் அரசுரிமையை இழந்த நிலையில் தான் செங்கோ வீர அழகேஸ்வர வை கோட்டை அரசிற்குப் பொறுப்பாக நியமித்ததாக பேராசிரியர் செனரத் பரணவித்தான தன் சிங்களயொ எனும் நூலில் குறிப்பிடுகின்றார். அதே வீர அழகேஸ்வர வும் சீனாவுக்கு நாடுகடத்த்பபடுகின்றான். 1411ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்த செங்கோ வீர அழகேஸ்வரவைக் கைது செய்து சீனாவுக்கு நாடுகடத்தி விட்டு கோட்டை அரசனாக நியமித்தது சேபானன என்பவன் என்பது வரலாறு. அவன் ஆறாம் பராக்கிரமபாகு வுக்குப் பின் வந்தவன்.

    நான் படித்திருந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆறாம் பராக்கிரமபாகு வின் காலத்தில் தான் கண்டி இராச்சியமும் கோட்டை இராசதானியின் ஆட்சியின் கீழ் வந்திருந்தது. அந்தக் காலத்தில் தான் சப்புமல்குமாரயாவின் யாழ்ப்பாண வெற்றியும் நடைபெற்றது என்று நினைக்கின்றேன். ஆக.. பிரிட்டிஷ் காலத்துக்கு முன் இலங்கை ஒரே குடையின் கீழ் ஆளப்பட்ட கடைசி சந்தர்ப்பம் அதுவென்றுதான் வரலாறு கூறுகின்றது. சரிதானே நந்தா..

    ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் 1416-1420க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும்..நாடு கடத்தப்பட்ட இலங்கை அரச பரம்பரை சீனாவின் குவாங்சூ பிராந்தியத்தில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.அது தானே வரலாறு…?

    அது போலத்தான் செங்கோ ஒரு முஸ்லிம் என்பதும் வரலாறுதான்… அதை மறுக்க முடியாது.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    ஒரு முஸ்லீம் நண்பர் விக்கிபீடியாவை காப்பி அடித்தும் அதை ஆதாரமாக வைத்தும் அதை பின்பற்றி லண்டன் வந்த குடியேறி 3 மாதங்களில் புத்தகம் வெளியிட்டு தன் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்பதை நினைவு படுத்திக்கொள்கிறேன். வேறு சிலர் விக்கிபீடியாவை நம்பி எழுதி புத்தகவெளியீட்டுக்கு முதல் நாள் எல்லா பதிப்புக்களும் தடை செய்யப்பட்டது.

    விக்கிபீடியாவில் இஸ்லாம் சோமசுந்தரத்தால் எழுதப்பட்டது என இருந்தது பல நாட்களாக பல ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துச் சென்றனர் பல காலங்களின் பின்னர் திருத்திக் கொண்டார்கள்.

    பதில் கருத்தை-எதிர்வாதத்தை எதிரியாக பார்க்க வேண்டாம்.

    யாழ் இலங்கை பல்நெடுங்காலமாக இந்தியாவின் இணைந்த நிலப்பரபாகவும் பின்னர் பல நூறு வருடங்களாக பாலத்தினால் போக்குவரத்து கொண்டதாகவும் இருந்தது என்பதையும் வரலாற்றுடன் இணைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கஜபாகு மன்னர்வரையில் இந்தியாவுடன் கேரளத்துடன் சென்னையுடன் மிக நெருங்கிய உறவுகள் இருந்ததையும் இந்த உறவுகள் காலத்துக்குகாலம் முறிவும் இணைவையும் ஏற்படுத்தியவர்கள் என்பதையும், இதன் வரலாற்று பதிவுகளாக கண்டி வரை கோயில்கள் கட்டப்பட்டும் திருமண உறவுகள் செய்தும் இருந்தனர் என்பவற்றையும் இணைத்து வரலாற்றை விளங்க முயற்சிக்கவும்.

    இந்தக்காலங்கள் இந்தியாவுக்கோ இலங்கைக்கோ முஸ்லீம்களின் வருகை என்பது 100 மீற்றர் அளவுகோலில் 2சென்றி மீற்றர் அளவு காலத்திலேயே நடைபெற்றது என்பதையும், ஒரு சென்றிமீற்றர் காலத்திக்குள்ளேயே இந்த ஜரோப்பியர் வரை வருகை உட்பட்டது என்பதையும் சற்று நினைவிற் கொள்ளவும்.

    மாப்பாண முதலியாருக்கும் புகனேகபாகுவிற்கும் என்ன? தொடர்பு (முதலியார் எனப்படுவோர் அரசனுக்கு வரி அறவிடுவோர்)

    ஜயர் வளவு யாருடையது எங்கே நல்லூரில் சந்தைகள் இருந்தது ஜயர் வளவில் கோயிலில் முஸ்லீம்களுக்கு என்ன வேலை?? என்ன உறவு? ஏன் இலங்கையில் எந்தக்கோயிலிலும் சோனக வர்த்தகர்கள் தான் வியாபாரம் செய்வார்கள் இதன் பின்னணி என்ன?

    யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்தெரு அல்ல சோனகத் தெருவே உள்ளது சோனகவீதி சோனக கடைகள் தான் உள்ளது. இவைகளை விக்கிபீடியாவில் காணலாமா? முஸ்லீம் கடை முஸ்லீம் தெரு என்று இல்லையே??

    இஸ்லாத்தை முன்வைத்து இனத்தை நிரூபித்தால் உங்களுக்கு தான் ஆபத்து சோனக இனத்தால் இஸ்லாத்துக்கு வாருங்கள் அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும்

    ஒருகாலத்தில் முஸ்லீம்களை சிங்கள மக்கள் வெட்டியதையும் அதை சேர் சேர் பொன் இராமநாதன் காப்பாற்றியதையும் சேர் பொன் இராமநாதனுக்கு முஸ்லீம்கள் நன்றி சொன்னவிதம் ஞாபகம் இருக்கும் என்றும் நம்புகிறேன்.

    இன்று சொல்லப்படும் வேடர்கள் இயக்கர் நாகர்கள் தமிழர்கள் சிங்களவர்கள் தெலுங்கர்கள் கேரளகாரர்கள் கன்னடர்கள் இவர்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்கள் M-குரோமோசோன் மரபணு கொண்டவர்கள் என மரபணுச் சோதனை நிரூபித்துள்ளது அது மட்டுமல்ல இவர்களின் ஆதி இனமான (80 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) ஆபிர்க்கர்களின் மரபணுவையும் இந்த தென் இந்திய பிராந்தியர்கள் இன்றும் வைத்துள்ளனர் எனபதையும் நிரூபித்துள்ளது. ஆதாரம்: ((Journal of Genetics, Vol. 87, No. 2, August 2008//c_ Indian Academy of Sciences//RESEARCH NOTE//Genetic study of scheduled caste populations of Tamil Nadu M. VIJAYA*, S. KANTHIMATHI and A. RAMESH//Department of Genetics, Dr ALM PGIBMS, University of Madras, Taramani, Chennai 600 113, India))

    இதன்பெயரால் தமிழர் ஒருவர் புத்தகமும் எழுதியுள்ளார்

    Reply
  • ashroffali
    ashroffali

    //ஒருகாலத்தில் முஸ்லீம்களை சிங்கள மக்கள் வெட்டியதையும் அதை சேர் சேர் பொன் இராமநாதன் காப்பாற்றியதையும் சேர் பொன் இராமநாதனுக்கு முஸ்லீம்கள் நன்றி சொன்னவிதம் ஞாபகம் இருக்கும் என்றும் நம்புகிறேன்.//

    அற்புதமான கண்டுபிடிப்பு சோதிலிங்கம்..

    1915ம்ஆண்டு கலவரத்தில் பிலிப் குணவர்த்தன உள்ளிட்ட சிங்களவர்களின் தூண்டுதலில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை அநீதியானது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆங்கிலேய அரசு அவர்களுக்கு தண்டனை வழங்கியது. அவ்வளவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு இருக்கவே இல்லை. அப்படியான நிலையில் தம்மை ஆதரித்து நின்ற பிலிப் குணவர்த்தன போன்றோருக்கு தண்டனை வழங்குமளவுக்கு அவர்களின் கொடுரம் இருந்துள்ளது.

    அப்படிப்பட்ட கொடுங்கோலர்களை பாதுகாக்கத்தான் பொன் இராமநாதன் கடல் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் முன்பாக மனுச்செய்து அவர்களைக் காப்பாற்றினார். அதாவது முஸ்லிம்கள் மீது அநீதியிழைத்தவர்களை காப்பாற்றினார். அதன் காரணமாக இங்கிலாந்திலிருந்து திரும்பிய அவரை சிங்களவர்கள் தோள் மீது தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றார்கள். அதுதான் வரலாறு. இதில் பொன். அருணாசலத்துக்கும் கணிசமான பங்களிப்புண்டு. பின்னாளில் இவர்கள் இருவரும் தான் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவும் ஆதரவாக செயற்பட்டவர்கள்.

    1915ம் ஆண்டுக் கலவரத்தில் ஹம்பாந்தோட்டை முஸ்லிம்கள் பாதிக்கப்படாத வண்ணம் சிங்கள இளைஞர்களின் பாதுகாப்பில் அரவணைத்தவர் ஜனாதிபதியின் பெரியப்பா டீ.எம். ராஜபக்ஷ. அதேபோல 1949ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதனை எதிர்த்தவர் டீ.எம். ராஜபக்ஷவின் மகனான சுயேச்சை உறுப்பினர் லக்ஷ்மண் ராஜபக்ஷ. பின்னாளில் அவர் யாழ்ப்பாணத் தமிழ் பெண்ணொருவரைத் தான் மணந்து கொண்டார். அவரின் சகோதரர் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் மகள் தான் நிருபமா ராஜபக்ஷ. ஜனாதிபதியின் பெறாமகள். அவரும் தமிழர் ஒருவரைத் தான் மணமுடித்துள்ளார். திருநடேசன் அவரது பெயர்.

    அது மட்டுமல்ல மத்துகமை பிரஸ்கேர்டல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக லக்ஷ்மண் ராஜபக்ஷ மற்றும் ஜோர்ஜ் ராஜபக்ஷவும் டீ.ஏ. ராஜபக்ஷவும் (ஜனாதிபதியின் அப்பா) குரல் எழுப்பியபோதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தான் ராமநாதனும் அருணாசலமும் செயற்பட்டார்கள்.

    இவார்கள் தான் முஸ்லிம்களைக் காப்பாற்றினார்களா? நல்ல கதையாக இருக்கின்றதே சோதிலிங்கம்..

    இன்னொன்று தெரியுமா உங்களுக்கு..பிலிப் குணவர்த்தன முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டின் போது ஆங்கிலேய அரசினால் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாகவே பின்னாளில் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறி ஆங்கிலேயரை எதிர்த்தார். அதன் காரணமாகவே குணவர்த்தன பரம்பரை அன்று தொடக்கம் இன்று வரை முஸ்லிம்கள் என்றாலே துவேசம் கக்குகின்றார்கள். இவ்வளவுக்கும் தங்களை இடது சாரிகள் என்று வேறு அழைத்துக் கொள்கின்றார்கள். இதுதான் ஆதாரபூர்வ தகவல்கள்.

    சோதிலிங்கம்.. நீங்கள் உண்மையிலேயே மாபெரும் கெட்டிக்காரன் தான்.. முஸ்லிம்களை கேவலமாக விமர்சித்துக் கொண்டே பரஸ்பர நல்லுறவுக்காகத் தான் சில விடயங்களை நீங்கள் தொட்டுக்காட்டுவதாக பூசி மெழுகுவதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் சின்னப் பாப்பா அல்ல..

    Reply
  • Mohan
    Mohan

    அன்புடன் அஸ்ரப் அலி அவர்களுக்கு,
    நீங்கள் ஆதிமுதல் அந்தம் வரை எல்லாம் தெரிந்த பண்டிதர் எனறெ வைத்துக் கொள்வோம். ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை என்ற தகமை வேறு.(பெரியப்பா, சித்தப்பா)
    நிற்க! அங்கஜன் பற்றிய தங்கள் தகவலுக்கு நீண்ட மவுனம் உங்கள் “நம்பகத் தன்மையை” கேள்விக்கு உட்படுத்துகிறது.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    அஸ்ரப்அலி அவர்களே இந்த பின்னூட்டத்தில் என்னால் விடப்பட்ட தவறுக்காக வருந்துகிறேன் அதில் சிங்கள மக்களே சேர் பொன் இராமநாதனை தூக்கி போனார்கள் என்பதே சரியானது தவறினை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

    இந்த பின்னூட்டத்தில் அந்த உதாரணம் எடுத்தமைக்கான காரணம் சிங்கள முஸ்லீம் இனஉறவுகளிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டவே தான்.

    //முஸ்லிம்களை கேவலமாக விமர்சித்துக் கொண்டே பரஸ்பர நல்லுறவுக்காகத் தான் சில விடயங்களை நீங்கள் தொட்டுக்காட்டுவதாக பூசி மெழுகுவதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் சின்னப் பாப்பா அல்ல//
    இது அபாண்டமான குற்றச்சாட்டு. நான் எங்கே முஸ்லீம்களை கேவலமாக எழுதினேன் என்பதை சுட்டிக் காட்டுங்கள்.

    Reply
  • karu jaffna
    karu jaffna

    அன்புடன் அஸ்ரப் அலி அவர்களுக்கு

    முள்ளிவாய்க்காலில் தமிழருக்கு புலிகளுக்கு நடந்தது என்ன? எழுத முடியுமா? பலர் கேட்டிருந்தனர் நீண்ட மவுனம் உங்கள் “நம்பகத் தன்மையை” கேள்விக்கு உட்படுத்துகிறது.

    Reply
  • நந்தா
    நந்தா

    கிறிஸ்தவ பரணவிதன செய்துள்ள கலாட்டாவில் எல்லாளனின் சமாதியை துட்ட கைமுனுவின் சமாதியாகியதை என்ன பண்ணப் போகிரீர்கள்?

    என்னுடைய ராஜரட்ட உறவுகள் இன்றும் எல்லாள என்ற அரசனுக்கு மரியாதை செலுத்துவதை இல்லை என்று இந்த பரணவிதான சொல்ல முடியுமா? 2500 வருடங்கள் இருந்த வழிபாட்டை பரண விதான என்ற கிரீஸ்தவன் செய்த வரலாறு மோசடியை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாரில்லை!

    மோசடிகளின் சாட்சியங்கள் இந்த முஸ்லிம்கள்!

    Reply
  • Nackeera
    Nackeera

    நல்லூர்கந்தனின் வரலாற்றுப் பதிவில் இங்கே சிலதப்புக்கள் தடம் புரளத்தொடங்கியதால் நான் இதை எழுதுகிறேன். இது ஆய்வுகளின் தொகுப்பே.
    நல்லூர் கந்தசுவாமியார் கோவிலைக் கட்டியவர் புவனேயபாகு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எந்தப் புவனேயபாகு என்பதில்தான் ஆய்வாளர்களின் பொறுப்பு முக்கிமாகிறது. நல்லூர் எனும் ஆலயம் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டது என்று சரித்திரங்கள் கூறுகின்றன. அது யாழ்பாணத்து நல்லூரில் அல்ல. அதை பூநகரி நல்லூரில் இராஜப்பிரதிநிதியான புவனேயபாகு என்பவரால் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாழ்நல்லூரின் முருகனாலயம் 1248ல் காலிங்க ஆரியச்சக்கரவர்த்தியின் மந்திரயான புவனேயபாகுவால் கட்டப்பட்டது. இது புவனேகவாகு குருக்கள் வளவு என்று இன்று வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆலயம் அனுராதபுரத்தில் இருந்து படையெடுத்து வந்த சிங்களஅசரன் என்று கருதப்பட்ட சப்புமல்குமரயா பல இடங்களை வெற்றி கொண்டு யாபாபட்டுள எனும் யாழ்பாணத்தை பிடித்தான். ஆனால் இவன் சிங்கள அரசனே அல்ல. இவன் தந்தை மலையாள தேசத்தில் இருந்து வந்த பணிக்கனாவான். இவனுடைய தந்தையை 6ம் பராக்கிரமபாகு வாள்பயிற்சி போர்பயிற்சி கொடுத்து தன்னினத்தவனாக்கினான் என்பது வரலாறு.

    இந்த சப்புமல்குமரயா யாழ்பாணநகரை அழித்தான் அவன் மனம்திருந்தி தன் பூர்வீகம் உணர்ந்து தனது பெயரை செண்பகப்பெருமாள் எனமாற்றி மீண்டும் தன்னால் இடிக்கப்பட்ட நல்லூராலயத்தைக் கட்டினான். ஆனால் அந்த ஆலயம் புவனேயபாகுவால் கட்டப்பட்ட இன்று நல்லூர் இருக்கும் இடமல்ல. இன்று சங்கிலியன் சிலைக்குப் பின்னால் கிறிஸ்தவதேவாலயம் இருக்கும் இடமே அது. செண்பகப்பெருமாள் கட்டிய அந்தமுருகன ஆலயம் இந்திய ஆலயங்களுக்கு நிகரானதாகவும் யாழ்பாணத்திலேயே அமைந்த பெரிய ஆலயமாகவும் இருந்தது. குவெறோஸ் சுவாமிகளின் குறிப்பில் இருந்து பெறமுடிகிறது. இதை பின் போத்துக்கேயர் இடித்து கிறிஸ்தவதேவாலயம் கண்டினர். இந்தத் தேவாலயத்தின் பின்புறம்தான் அன்றை யாழ் கல்வித்திணைக்களம் இருந்தது. அங்கே எனது தந்தை முக்கிய பொறுப்புவகித்த காலத்தில் நான் சென்று வருவேன். கல்வித் திணைக்களத்தைப் பெருப்பிக்கும் முகமாக நிலம் தோண்டப்பட்டபோது அகழ்வாய்வுகளுக்குரிய பொருட்கள் தென்பட்டன. அதை உடனடியாக அரசுக்கு அறியத்தரவேண்டிய பொறுப்பு திணைக்களத்துக்கு இருந்ததால் தகவலை கொடுத்தார்கள். இந்த அகழ்வாய்வில் இந்துக்களுக்கான பல உண்மைச்சான்றுகள் கிடைத்துவிடும் என்பதாலோ என்னவோ அரசு உடனடியா அதை மூடுமாறு உத்தரவிட்டது இது இப்படி இருக்க.

    போத்துக்கேயர் ஆட்சி முடிந்து கி.பி 1658ல் ஒல்லாந்தர் பொறுப்பேற்ற போது மீண்டும் நல்லூர் கந்தனாலையத்தை அமைக்க அனுமதி வளங்கப்பட்டது. ஆனால் செண்பகப்பெருமாளால் கட்டிய இடத்தில் தேவாலயம் இருப்பதால் ஐயர்வளவில் புவனேயபாகு முன்பு கட்டிய இடத்தில் கந்தனாலயம் கட்ட அனுமதி வளங்கப்பட்டது. இன்று இருக்கும் நல்லூர் கந்தன் ஆலயம் உள்ள இடம் இந்துக்களுக்குரிய ஐயர்வளவாகும். இதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.

    1) இந்த ஐயர்வளவு இஸ்லாமிய சகோரர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது விற்கப்படவில்லை. ஒல்லாந்தருக்குப் போட்டியாக இஸ்லாமியர்களின் வியாபாரம் பலம்பெற்று இருந்தமையால் அதை அழிப்பதுவும் ஒல்லாந்தரின் நோக்கமாக இருந்தது. இதனால்தான் இன்றும் நல்லூர் கந்தனாலயத்தில் முஸ்லீம்கள் கற்பூரம் விற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2) கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்திருந்த கந்தமடாலயங்களை அகற்றுவது இந்த அனுமதியின் நோக்கமாகம்.
    இதற்கு அனுமதி வளங்கிய ஒல்லாந்தரின் நிறைவேறு அலுவலகமான (கச்சேரியில்) சிறாப்பராக இருந்த தொன்யுவான் மாப்பாண முதலினூடாகவே வளங்கப்பட்டது என அறியப்பட்டாலும் அதில் சில விடயங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியதானவே இருக்கிறது.

    இதை நான் யாழ்பாண வைபவமாலை: கலநிதி க. குணராசாவின் ஆய்வுகள்: யாழ்பாண வரலாறு: பத்மநாதன் ச. ஈழத்து வரலாற்று நூல்கள் பேராதனை 1970; சிலோனின் ஆரியஅரசுகள் எழுதியவர் எஸ். பரணவிதான இவர்களின் கட்டுரைகளில் ஆய்வு செய்தே இதை இங்கே பதிகிறேன்.

    Reply
  • ashroffali
    ashroffali

    மோகன்.. உங்கள் ஊகங்களுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அது தான் மெளனம்..

    நாமலின் சிறு பராயம் முதல் எனக்குத் தெரியும்.நாமலின் நண்பர்கள் யார் வகுப்பில் படித்தவர்கள் யார் என்பது தொடக்கம் அதில் நாமலுக்கு விருப்பமானவர்கள் யார் என்பது வரை எனக்குத் தொரியும். அங்கஜனிடம் கேளுங்கள்.. நான் சொன்னது பிழையா என்று. .அவரே உங்களுக்குப் பதில் தருவார்.

    நாமலுடன் பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்தவன் நான். அமைச்சர் பசிலுடனும் வந்துள்ளேன். எனவே அரசியல் விடயங்களில் தவறான தகவல்களைத் தருமளவுக்கு நான் அரசியலுக்கு எட்ட நின்று தொட்டுப் பார்க்கும் ஒருவனல்ல… அவ்வளவுதான்.

    //இது அபாண்டமான குற்றச்சாட்டு. நான் எங்கே முஸ்லீம்களை கேவலமாக எழுதினேன் என்பதை சுட்டிக் காட்டுங்கள்.//

    அப்படியா.. கீழே உள்ளவையெல்லாம் வேறு யாரோ ஒரு சோதிலிங்கம் பதிவிட்டதா..?

    //இவர்கள் வந்தேறு குடிகளான பலருடன் கூட்டு சேர்ந்ததாலும் மதம் மாற்றிக்கொண்டதாலும் தமிழர்களில் சிலர் தம்மை சோனகர் என்றும் சிலர் தம்மை முஸ்லிம்கள் என்றும் மாற்றம் பெற்றனர்//

    //பின்னாளில் இந்திய வாள்களையே கொண்டு வந்த முஸ்லீம்கள் இந்தியர்களை கைப்பற்றி இஸ்லாத்தை வாள் முனையில் இந்தியாவில் புகுத்தினராம்//

    //அவரின் பெயரால் ஆக்கிரமிப்புக்களும் நடைபெறுகின்றன இந்த சமயத்தில் எல்லோரும் கடவுளின் படைப்புக்ள என்று கூறிவிட்டு வெட்கம் கெட்ட சாதிய வேறுபாடுகளை அங்கீகரித்து வளர்ந்து நிற்கிறது இஸ்லாம் கல்லெறிந்த கொல்லுவதும் கைமுறித்தவனின் கையை எடுத்தல் கொலைக்க கொலை என்ற பாதகத்திலும் இன்று எம்முன் நிற்கின்றது.//

    //வாழ்க்கை முறையை இஸலாமிய வாழ்வியல் அடையாளம் அடிப்படையாக கொண்டு இந்த வாதத்தையும் பிரதிவாதங்களையும் எழுப்ப முடியும்இ ஆனால் மத அடையாளம் பிற்போக்குததனமானது//

    அப்படியெல்லாம் எழுதிவிட்டு இப்படிக் கூறுவதைத் தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதாய் கூறுவது….

    //இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் இலங்கையர்கள் இலங்கை நாட்டினுள் பல்வேறுபட்ட கலாச்சார பண்புகளுடன் வாழும் பல் இனங்களை கொண்ட சமூகமேயாகும்.//

    //நாம் இங்கு விவாதிப்பது எழுதுவது எம்மடையே ஒரு நல்லறிவை வளர்க்கஇ இனங்களிடையே உறவுகளைப் பலப்படுத்தவே. இவற்றிக்காக பலவிடயங்களை பேச வேண்டியும் உள்ளது. //

    உங்கள் கீழ்க்கண்ட பதிவிற்கு நான் முன்னமே இட்ட ஒரு பதிவையே மீண்டும் விடையாய்த் தருகின்றேன்.. படித்துப் பாருங்கள்…

    //பின்னாளில் இந்திய வாள்களையே கொண்டு வந்த முஸ்லீம்கள் இந்தியர்களை கைப்பற்றி இஸ்லாத்தை வாள் முனையில் இந்தியாவில் புகுத்தினராம்//

    //Hajjaj responded to a casus belli provided by the kidnapping of Muslim women and treasures by pirates off the coast of Debal//

    ஆமாம் மோகன் தாஸ் ஏதோ விளக்கம் எல்லாம் கொடுத்து எங்களை மடக்கப் பார்க்கின்றார். அவரே ஒத்துக் கொள்கின்றார்.. //

    இந்தியாவில் முஸ்லிம்களின் வருகை என்பது வலிந்து வரவழைத்துக் கொண்டது. தவறு செய்தவனைத் தட்டிக்கேட்ட படையெடுப்பு. வாளால் மதத்தைப் பரப்ப வந்ததல்ல..

    //இந்த பின்னூட்டத்தில் அந்த உதாரணம் எடுத்தமைக்கான காரணம் சிங்கள முஸ்லீம் இனஉறவுகளிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டவே தான்.//
    //ஒருகாலத்தில் முஸ்லீம்களை சிங்கள மக்கள் வெட்டியதையும் அதை சேர் சேர் பொன் இராமநாதன் காப்பாற்றியதையும் சேர் பொன் இராமநாதனுக்கு முஸ்லீம்கள் நன்றி சொன்னவிதம் ஞாபகம் இருக்கும் என்றும் நம்புகிறேன்.//

    மேற்சொன்ன இரண்டுக்கும் இடையில் அடிப்படையில் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? முற்றுமுழுக்க முரண்பாடானது. இதில் எங்கே சிங்கள -முஸ்லிம் உறவுகளின் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது இருக்கட்டும்.. அதற்கான அடியாவது எடுத்து வைக்கப்பட்டுள்ளதா..? விளக்கம் தருவீர்களா..?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அப்படிப்பட்ட கொடுங்கோலர்களை பாதுகாக்கத்தான் பொன் இராமநாதன் கடல் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் முன்பாக மனுச்செய்து அவர்களைக் காப்பாற்றினார். அதாவது முஸ்லிம்கள் மீது அநீதியிழைத்தவர்களை காப்பாற்றினார். அதன் காரணமாக இங்கிலாந்திலிருந்து திரும்பிய அவரை சிங்களவர்கள் தோள் மீது தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றார்கள். அதுதான் வரலாறு. இதில் பொன். அருணாசலத்துக்கும் கணிசமான பங்களிப்புண்டு. பின்னாளில் இவர்கள் இருவரும் தான் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவும் ஆதரவாக செயற்பட்டவர்கள். ….///

    இதேபோல கொடுங்கோலர்களை நீங்கள் செல்லப்பிள்ளை சேட்டிபிக்கேற் பணிப்பாளராக இருந்து செய்தீர்கள் எனச் சொல்கிறேன் நான். கற்பழிப்பு கொலைகளைக பயங்கரவாதம் கள்ளக்காதல் என அறிக்கை கொடுத்து செல்லப்பிள்ளையாக எஸ்.எம்.ஏ பால்பேணிகள் மழையில் குளித்து வாழ்ந்தீர்கள். பின்னர் இன்னொரு புதிய சொல்லாடலான ‘கலப்பினவிருத்தி’ என கேவலமாக பயன்படுத்தி இருந்தீர்கள். இந்த கற்பழிப்புகளை நீங்கள் வேண்டுமானால் ‘கலப்பின விருத்தி’ எனச் சொல்லி மனதார ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் அவ்வாறில்லை. மேலும் இஸ்லாமிய பேரரசுகள் உலகைக் கொள்ளையடித்து எழுந்தவை. அவை சென்ற இடமெல்லாம் இஸ்லாம் மதம் மாறாதவர்களைக் கொன்றும் அவர்களின் பெண்களைக்கற்பழித்தும் செல்வங்களைக்கொள்ளையடித்தும் சென்றது வரலாறு. எனவே உங்களுக்கு அக்கற்பழிப்புகளை கலப்பின விருத்தி என நளினமாக அழைக்கவேண்டிய தேவை இருக்கலாம்.
    இந்த சிங்களக் கொடுங்கோலர்களுக்கு வால்பிடிக்கும் (பணிப்பாளர்)வேலையில் உங்களுக்கும் சேர்.பொன் இராமநாதனுக்கும் எப்படி ஒரு அருமையான ஒற்றுமை பார்த்தீர்களா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்த கற்பழிப்புகளை கொலைகளை பூசிமெழுகி அறிக்கை கொடுத்ததற்காக மஹிந்தாவும் சிங்கலவர்களும் உங்கலை தோளில் தூக்கிவைத்து இஸ்லாமிய சகோதரா என அழைத்து மகிழ்ந்தனர். ஆனால் இராமநாதன் தமிழரின் உரிமையை வற்புறித்தியபோது அவரைத்தூக்கி வீசினர். நீங்கள் முஸ்லிம்களின் உரிமை கேட்டபோது உங்களை கொலைசெய்ய முயல்கிறார்கள் (இது நீங்கள் சொல்வது, உண்மை யாமறியோம்) இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் சிங்களவர்கள் யாருக்கும் உரிமை கொடுக்க மாட்டார்கள். மற்றவனை நசுக்க உங்களை அன்பொழுக அழைத்து பயன்படுத்துவார்கள் என்பதுதான். இதனை அறிய மாற்றுக்கருத்தோ அல்லது செல்லப்பிள்ளை சேட்டிபிக்கேற்றோ தேவையில்லை!

    Reply
  • ashroffali
    ashroffali

    //முள்ளிவாய்க்காலில் தமிழருக்கு புலிகளுக்கு நடந்தது என்ன? எழுத முடியுமா? பலர் கேட்டிருந்தனர் நீண்ட மவுனம் உங்கள் “நம்பகத் தன்மையை” கேள்விக்கு உட்படுத்துகிறது.//

    பொறுத்திருங்கள் நண்பரே.. கட்டாயம் எழுதுவேன்.. அவற்றைக் கண்டு மனம் வெதும்பி வந்த நான் உண்மைகளை மறைக்கத் துணை போக மாட்டேன். அதற்காகத் தான் வெளியில் வந்ததே….ஆனால் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. நீங்களே எதிர்பார்த்திராத விடயங்களை வெளியில் கொண்டு வருவேன். ஆனால் தேசம் நெற் ஊடாக அல்ல…

    //2500 வருடங்கள் இருந்த வழிபாட்டை பரண விதான என்ற கிரீஸ்தவன் செய்த வரலாறு மோசடியை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாரில்லை!//

    ஆமாம்.. உங்களுக்குச் சார்பாக கருத்து வந்து விட்டால் பரணவித்தான தான் உலக மகா தொல்பொருள் ஞானி. அதில் கொஞ்சம் உண்மை இருந்து விட்டால் அவன் கிறித்தவன். பொய்யன்.. நீங்கள் தான் பரணவித்தானவின் கருத்துக்களை இங்கே கொண்டு வந்தீர்கள். நான் அதன் ஆழம் வரை சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தேன்.. உடன் தடம் மாறி விட்டீர்கள்..

    சரி நந்தா… நக்கீரனும் பரணவித்தானவின் கருத்தை எடுத்தாண்டிருக்கின்றார். அதையும் பொய் என்று மறுப்பறிக்கை விட்டால் வசதியாக இருக்குமல்லவா?

    //மோசடிகளின் சாட்சியங்கள் இந்த முஸ்லிம்கள்//
    நீங்கள் காவிக்கொண்டு திரிந்தால் அது வேதவாக்கு. நாங்கள் அதையே சுட்டிக்காட்டினால் புண்ணாக்கு.. நன்றாக இருக்கின்றது உங்கள் நியாயம்…

    நீங்கள் மேற்கோள் காட்டும் இராணுவ அதிகாரிகளை உங்களால் குறிப்பிட முடியுமா? பொய்யாக பூச்சாண்டி காட்ட முற்பட வேண்டாம். சிசில் வைத்தியரத்தின தொடக்கம் சரத் பொன்சேக்கா வரை நான் ஒன்றாக அமர்ந்து கதைத்துப் பேசி உணவுண்டிருக்கின்றேன். நந்த மல்லவராச்சி தொடக்கம் ஹெரி குணதிலக்க வரை நட்புடன் பழகியிருக்கிறேன். அவர்களில் பலர் என்னிடம் சொன்னதை நான் வெளியிட்டு நமக்கிடையிலான நட்புறவுக்கு பங்கம் விளைவித்துக் கொள்ள மாட்டேன்.. அவ்வளவுதான்..

    எங்கள் சிவில் விடயங்களில் இராணுவம் தலையிடவோ கருத்துக் கூறவோ முடியாது. அவர்கள் வேலை வேறு. அதைப் பார்த்துக் கொள்ளட்டும். வீணாக அவர்களை இழுக்க வேண்டாம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    சாந்தன்…..//நீங்கள் முஸ்லிம்களின் உரிமை கேட்டபோது உங்களை கொலைசெய்ய முயல்கிறார்கள் //

    நண்பரே… உங்கள் கருத்துப் பிழையானது.. நான் தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

    பாலம்பிட்டி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையும் அதற்கு அப்பாலும் நான் நேரடியாகக் கண்ட காட்சிகள் சாட்சிகள் அடிப்படையில் தான் என் மனமாற்றம் நிகழ்ந்தது. அவை பற்றி நான் உரிய இடங்களில் விவாதித்தபோது கிடைத்த தான்தோன்றித்தனமான பதில்கள் என் மனச்சாட்சியை உறுத்தியது. அதன் காரணமாகத் தான் நான் வெளியே வந்தேன். அதன் பின் தான் அவர்கள் என்னைத் தேடத் தொடங்கினார்கள். இல்லாவிட்டால் இன்றை வரைக்கும் இனியும் இருந்திருக்கலாம்..

    மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வெட்டு.. கிழக்கு மாகாண சபை முதலமைச்சரைக் கொல்வதற்கான சதி… ரகுவின் கொலை.. கடத்தல்கள்.. கப்பம் கோரல்கள்.. கோரப் படுகொலைகள்.. இதையெல்லாம் நான் என் இனம் சார்பில் அனுபவிக்கவில்லை. ..என் இனம் சம்பந்தப்படவுமில்லை.. ஆனால் என் உடன்பிறவா தமிழ்ச் சகோதரர்கள் பாதிக்கப்பட்டார்கள். என் வாழ்வின் ஏணியாக இருந்த சமூகம் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாகத் தான் விலகி வந்தேன். அவ்வளவுதான் நண்பரே..

    எனக்குள் இன்னும் ஏராளம் இருக்கின்றது. அதையெல்லாம் சமயம் வரும்போது வெளிப்படுத்துவேன். அதுவரை பொறுத்திருங்கள் சகோதரரே…

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    அஸ்ரப்அலி
    முஸ்லீம்களை கேவலமாக விமர்சித்தேன் என நீங்கள் எடுத்துக்காட்டியவற்றை பார்க்கையில் எனக்கு புரிவது என்னவெனில், எனது விமர்சனங்கள்/ விவாதங்கள்/ மொழியாளுகை எதுவும் உங்களுக்குப் புரியவில்லை என்பதாகும்.

    மேலும் இதர பின்னுட்டக்கார்களும் நானே என நீங்கள் முடிவு எடுத்துள்ளதும் உங்கள் எழுத்தினூடாக விளங்கக்கூடியதாக உள்ளது.

    இப்படியான புரிந்துணர்வற்ற, மொழிவிளக்கமற்ற, உங்களுடன் விவாதிப்பதில் அர்த்தமில்லை

    ::இலங்கையில் மதத்தால் இனத்தை அடையாளப்படுத்துவது இனக்குரோதத்தையே வளர்க்கும்::

    Reply
  • ashroffali
    ashroffali

    //இந்த கற்பழிப்புகளை நீங்கள் வேண்டுமானால் ‘கலப்பின விருத்தி’ எனச் சொல்லி மனதார ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் அவ்வாறில்லை//

    சாந்தன்.. அதற்கான பதிலை ஏற்கெனவே ஒரு தடவை தந்து விட்டேன்.

    அரபிய வர்த்தகர்களின் திருமணத் தொடர்பு மற்றும் ஒருசில அரபியரின் குடியிருப்பு காரணமாகத் தான் இலங்கையில் முஸ்லிம்கள் உருவானார்கள். அதனை நீங்கள் அரபியர்களுக்கு சோரம் போன முஸ்லிம்கள் என்று கேவலப்படுத்தியபோது அதனைத் தப்பு என்று சுட்டிக்காட்டத்தான் அந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி இருந்தேன். அவ்வளவுதான். அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் மனச்சாட்சியற்றவர். உங்கள் கருத்துக்கு மன்னிப்பை விட்டு மனவருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அது தான் நமக்கிடையிலான நாகரீக மற்றும் பண்பாட்டு வித்தியாசம்.. சரியா நண்பரே…?

    Reply
  • ashroffali
    ashroffali

    சோதிலிங்கம்…

    //முஸ்லீம்களை கேவலமாக விமர்சித்தேன் என நீங்கள் எடுத்துக்காட்டியவற்றை பார்க்கையில் எனக்கு புரிவது என்னவெனில்இ எனது விமர்சனங்கள்/ விவாதங்கள்/ மொழியாளுகை எதுவும் உங்களுக்குப் புரியவில்லை என்பதாகும்.

    மேலும் இதர பின்னுட்டக்கார்களும் நானே என நீங்கள் முடிவு எடுத்துள்ளதும் உங்கள் எழுத்தினூடாக விளங்கக்கூடியதாக உள்ளது//

    ஆமாம்.. நான் பால்குடிப் பாப்பா..தமிழ் என்னவென்றே தெரியாமல் தான் நான் ஊடகத்துறையில் இருந்திருக்கின்றேன்…

    எனக்கும் நன்றாக தமிழ் தெரியும். கட்டுரைப் போட்டிகளில் வாங்கிய சான்றிதழ்கள் மட்டும் நூறுக்கும் அதிகம்.. எனக்கே அர்த்தம் சொல்லித் தருகின்றீர்கள்.. பரவாயில்லை… நான் விரல் கடிக்கத் தெரியாத பாப்பா என நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது..?

    உங்களுடைய மட்டுமல்ல.. சாந்தன்.. நந்தா.. என அனைவரினதும் பின்னூட்டங்களுக்கும் தான் பதிலளித்துள்ளேன். அவரவர் அவற்றுக்கான பதிலைத் தரட்டும்… தனித்தனியாக விளித்து எழுத முடியாமல் போனது நேரமின்மை காரணமாகத்தான். மன்னித்துக் கொள்ளுங்கள்…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….உங்கள் கருத்துக்கு மன்னிப்பை விட்டு மனவருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அது தான் நமக்கிடையிலான நாகரீக மற்றும் பண்பாட்டு வித்தியாசம்.. சரியா நண்பரே…?….//

    ஆஹா…கற்பழிப்புகளை எல்லாம் கலபினவிருத்தி என சொல்லி எமது சகோதரிகளையும் அப்பெண்களின் தாய்மார்களையும் கொழும்பில் சிறச்சாலை வாசல்களிலும் ஆஸ்பத்திரி சவக்காலைகள் முன்னாடியும் அழவிடத்துணை (சோரம்) போவீர்கள். எத்தனை இளம்பெண்கலை கொலைசெய்து விட்டு பயங்கரவாதி என கையெழுத்துவை அப்போதான் பிரேதம் கிடைக்கும் என அடம்பிடித்தனர் ராணுவம். பாவப்பட்ட தாய்மாரும் சகோதரர்களும் உடலையாவது பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என கையெழுத்திட அதனை அறிக்கயாக்கி வெளியிட்டிருப்பீர்கள். பின்னர் ஈஸியாக மன்னிப்புக் கேட்பீர்கள். அதனை நாகரீக பண்பாட்டு வித்தியாசம் என பூசி மெழுகுவீர்கள். அதற்கு நான் உடன்பட வேண்டுமாம்? நல்ல ஜோக் அஷ்ரஃப் அலி! அப்படியான ‘பண்பாட்டு கலாச்சார’ சேட்டிபிக்கேற் எனக்குத் தேவையில்லை! நீங்கள் ஒரு முஸ்லிம் தானே அல்லாவை ஒருநாள் சந்திக்க வேண்டிவருமல்லவா?

    Reply
  • BC
    BC

    //இவர்கள் வந்தேறு குடிகளான பலருடன் கூட்டு சேர்ந்ததாலும் மதம் மாற்றிக்கொண்டதாலும் தமிழர்களில் சிலர் தம்மை சோனகர் என்றும் சிலர் தம்மை முஸ்லிம்கள் என்றும் மாற்றம் பெற்றனர்//
    மேலே உள்ளது.எங்கள் தமிழ் ஆட்கள் சிலர் வந்தேறு குடிகளான பலருடன் கூட்டு சேர்ந்ததாலும், முஸ்லீமாக மதம் மாற்றிக்கொண்டதாலும் இப்போ அவர்களில் சிலர் தம்மை சோனகர் என்றும், சிலர் தம்மை முஸ்லிம் என்ற மதத்தை சொல்லியும் அடையாளபடுத்துகிறார்களே! என்ற ஆதாங்கம் தான் அது.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் அஸ்ரப் அலி, சோதிலிங்கம்,

    அலி,
    சோதிலிங்கம் எப்போதும் சோனவரும், தமிழரும் மாத்திரமல்ல,அவர்கள் சிங்களவர்களுடனும் இணைவாக, அன்பாக, இன ஒற்றுமையுடன் வாழவேண்டும் என விரும்புபவர், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் எழுத்தில், கருத்து சொல்லும் விதத்தில் உங்களுக்கு அவரை குற்றங்காண நேர்ந்துள்ளது என நினைக்கிறேன்.

    சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் வாசகர்கள் சீக்கிரம் கண்டுவிடித்து விடுவார்கள் அல்லவா? அதையும் தாண்டி அவர் எம் இனத்தை,நாம் பின்பற்றும் மதத்தை வஞ்ஞிக்கிறார் என வைத்துக் கொள்வோமே, ஏன் நாம் அது பற்றி அலட்டிக் கொள்ள. எமது நிலப்பாட்டை சந்தேகத்துக் கிடமின்றி நிரூபிப்பது தான் கடைமையாக இருக்கமுடியுமே தவிர அதனோடு தொடர்புபடும் ஆனால் இன்று முக்கியமில்லாத விடயத்தில் நம் கவனத்தை செலுத்தி நாம் எதை நிலை நாட்ட முயல்கிறோமோ அதை செய்யத் தவறிவிடுவோம். ஆகவே அவரின் உரிமையை அவர் அனுபவிக்க விடுங்கள். நாம் நமக்கு தெரிந்த பழக்க வழக்கங்களோடு வாதிப்போம்.

    சோதிலிங்கம்,
    ஒரு விடயத்தை கவணித்திருப்பீர்கள், அனேக தமிழர் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் இனவாத கொள்கைளுக்கும் எதிராக கோஷமிட்டாலும், இலங்கையின் க்கிரிகெட் டீம் விளையாடும் போது இலங்கை அணிக்கே சார்பாக நிற்பார்கள். அதே நேரம் அணிக்கு எதிரான நிலையெடுத்தாலும்கூட முத்தையா முரளிதரன் தமிழர் என்பதால் அவர் பந்தெறியும் போது காட்டும் ஆனந்தம், ஆரவாரம் நான் சொல்ல வேண்டியதில்லை. என்ன காரணம்? அது ஒரு வகையான இணைப்பு. அதில் எந்த குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியான ஒரு இணைப்பின் வெளிப்பாடுதான் இந்த “அல்ஜிப்ரா” கதையும். ஆபிரிக்கன் ஒருவன் எதாகிலும் கண்டுபிடித்தான் என்பதற்காக அடிமைகளுக்கும் இப்படி அறிவா என்று அமெரிக்கன் ஒதுக்கித்தள்ளுவதாக நான் காணவில்லை. இப்படியே இந்தியாவின் கண்டுபிடிப்பை சீனாவோ, ஒரு அறபியின் கண்டுபிடிப்பை ஆங்கிலேயனும் வெறுப்பதில்லை. அப்படியே நாமும் பருத்தித்துறை வடை தமிழனின் கண்டுபிடிப்பென்று சாப்பிடாமல் விடுவதுமில்லை. யாரோ கண்டுபிடித்த எதை எல்லாமோ யார், யாரோ அனுபவிக்க இதில் ஏன் பிரச்சினை என்றும் எனக்குத் தெரியவில்லை.

    ஆனாலும் அல்ஜிப்ரா என்ற ஒற்றைச் சொல்லை இரன்டாக பிரித்து அதில் வரும் “அல்” என்ற வார்த்தையை வைத்து அதற்கு அறபிகளோ அல்லது அந்த மனிதன் முஸ்லிம் பெயர் கொண்டவர் என்ற கற்பனையில் முஸ்லிம்கள் சந்தோஷப்படவோ முடியாது என்று உண்மைக்கு புறம்பாக கூறுவது ஏன் என்றும் தெரியவில்லை. அதைவிடவும் சமயங்களுக்கு அப்பால் நின்று யோசிப்பதாக சொல்லும் சோதிலிங்கம் ஏன் அல்ஜிப்ராவின் முன்னோடிகள் இந்தியர் என்று சொல்லாமல் “(H)கிந்து”க்கள் என்றார்? இதுதான் சொல்லுவது ஒருவகை இணைவு என்று. அதைத்தான் முஸ்லிம்கள் இந்த “அல்ஜிப்ரா” விடயத்தில் காட்ட முன் வருகின்றனர். சோதியின் தகவல் பிழை என்பது உலகறிந்த உண்மை. “அல்ஜிப்ரா”வுக்கு சொந்தக்காரர் முகம்மது இப்னு மூஸா அல் கெளவ்வாரிசினி என்ற அறபு முஸ்லீமே. இவர் கி.பி. 815-820 இதை உலகத்துக்கு தந்தார். இது இரண்டு மாதங்களுக்கு முன் செனல்4 என்ற யூ.கே தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது, நிரூபிக்கப்பட்டது.

    இதைவிடவும் விஞ்ஞானத்துடன் ஒவ்வாத சமயமாக இஸ்லாத்தை காட்ட வெளிக்கிட்டது எல்லா வகையில் பிழையாகும். ஏனெனில் நமது உடனடி விவாதம் “இனம்” பற்றியது. அது முடிய மதம் பற்றி நிறைய பேச வேண்டும் ஏனெனில் அது சமுத்திரம் போல் ஆழமானது.

    சரி ஒரு மாற்றத்துக்காகா சமயத்தை இந்த விவாதத்தில் கலந்தார் என்றால் அதற்கு, அதாவது அவரின் முன்னோக்கிய பயணத்துக்கு சிறு குறிப்பொன்று விடுதல் நலம் என நினக்கிறேன். சோதிலிங்கம் ஏனோ தெரியவில்லை “விஞ்ஞானம்” என்று பொதுப்படையாக கருத்து விட்டார். இன்னும் ஒருவரும் விஞ்ஞானம்” முஸ்லிம்களுக்கு “(H)கராம்”(தடை) என்றார். இவர்கள் எல்லாம் எந்த விஞ்ஞானம் பற்றி கதைக்கிறார்கள் என்று தெரியவில்லை. சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், விண்வெளி விஞ்ஞானம், ஆழ்கடல் விஞ்ஞானம், பிரபஞ்ச விஞ்ஞானம், பெளதிக விஞ்ஞானம் என்று கேள்வி மேல் கேள்விகள் கேட்டு அத்தனை விஞ்ஞானங்களுக்கும் குர்-ஆனின் மூலம் மிக இலகுவான பதிலும் அளித்துவிடலாம்.

    இன்றைக்கும் பெரிய விடயமாகக் கருதப்படுவது “(B)பிக் (B)பெங்” தியரி. இது 20/21ம் நூற்றாண்டின் உங்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. ஆனால் அவர்கள் இதற்கான அடிப்படை அறிவைப் பெற்ற இடம், ஒக்ஸ்போர்ட், (H)கவாடர்ட் , உப்ஸலா பல்கலைக் கழகங்கள் அல்ல. இந்த முஸ்லிம்களின் குர்-ஆன். இதோ குர்-ஆன் இந்த பிரபஞ்சம் பற்றியும் நீங்கள் உலாவித்திரியும் பூமி கோள் பற்றியும் என்ன சொல்கிறது, எப்போது சொல்லியது என்பதை பாருங்கள், “அவிசுவாசிகளே இந்த வானங்களையும், பூமியையும் நாம் வெவ்வேறாக பிரித்தெடுக்கமுன் அவை ஒன்றோடொன்று இணைந்திருந்ததை நீங்கள் பார்கவில்லையா?” (21:30)என்று கூறுகிறது. அது உங்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின் பின் அல்ல. 1432 ஆண்டுகளுக்கு முன்பு. மேலும், உங்கள் விஞ்ஞானிகள் பூமி சுற்றுகிறது, சூரியன் நிலையாக ஒரே இடத்தில் நிற்கின்றது என்று கூறி அதை புவியியல் என்று பாடசாலையில் படித்த காலங்களின் பன்மடங்கு காலங்களுக்கு முன்.

    உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடுத்துவிட்டர்களே சூரியன் இன்னும் சுமார் ஐந்து பில்லியன் வருடங்களுக்குத்தான் தாக்கு பிடிக்கும் அதன் பிறகு அழிந்துவிடும், அணைந்து விடும் என்று. ஆகா, அப்படியா என்பீர்கள். அனால் முஸ்லிம்கள் அப்படியல்ல அதுதான் நம்ம குர்-ஆன் 1400 வருடங்களுக்கு முன் சொல்லிய செய்தியாச்சே என்கிறார்கள். ஏனெனில் பின்வரும் வசனம் அவர்களின் வாதத்திற்கு வலு சேர்ப்பதால், “..அத்துடன் சூரியன் அதன் குறிப்பிட்ட பாதையில் அதற்காக குறிப்பிட்ட காலம் வரை சுற்றிக் கொண்டிருகிறது” என்பதாகும்.

    ஆகவே தேவையில்லாமல் விடயங்களை கூட்டிக் கொண்டே செல்லாமல் ஒருநேரத்தில் ஒரு விடயமாகா பார்த்தால் எல்லாருக்கும் இலகுவாகவும் இருக்கும், நன்மையாகவும் இருக்கும். நாளையும் ஒருநாள் உண்டு என்பதை நாம் ஏன் நினைவில் வைத்து செயல்படமுடியாது. மீண்டும் சந்திப்போம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    போர்த்துக்கீசரினால் துரத்தப்பட்டநல்லூர் மன்னனின் பல உறவினர்கள்,நண்பர்கள், பரம்பரைகள் பூனகரி, கரவெட்டி, முள்ளியவளை, பருத்தித்திதுறை. திருமலை, மட்டுனகர் ஆகிய இடங்களில் குடியேரினர்.

    போர்த்துக்கீசர் துரத்தப்பட்டதன் பின்னர்நல்லூர் மீண்ட சிலர் தமது காணிகளை ஒல்லாந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீளப் பெற்றனர். எனது மூதாதைகள் உட்பட பலர்நல்லூர் வந்த வரலாறு அது.

    250 வருடங்களுக்கு மேலாக பூதராயர் குளத்திலிருந்த வேல் மற்றும் விக்கிரகங்கள் நல்லூரில் பின்னர் வாலஸ்த்தாபனம் செயப்பட்டதும் என்னுடைய சரித்திரம்!

    எனது பாட்டன் சொல்லிய வரலாறுகள் இவை. எனது பரம்பரை காணியின் பெயர் ” பின் வாசல் இராச முதலி வளவு!

    நல்லூர் செல்லர் வீதியில் உள்ள காணிகளின் பெயர்களை பார்ப்பது நல்லது! சில வேளை போர்த்துகீச அன்னியர்களோடு வந்தவர்வகள் பளைய இராஜ வம்சத்தினரை மதிக்காத செயல் வியப்பனது அல்ல!

    முஸ்லிம்கள் நல்லூர் அரசர்களினால் மதிக்கப்பட்டவர்கள். மலையாளி கூலி படைகள் நல்லூரை ஆக்கிரமித்து செய்த அபத்தங்கள் பலருக்குத் தெரியாத விடயங்கள். யாழ் முஸ்லிம்கள் யாழ் வர வேண்டும். என்னுடைய நண்பர்கள் சலாம், அமீர் அனைவரும் வரவேண்டும். சமூக சவ்ஜன்னியம் மீண்டும் வரவேண்டும்!

    இதன் அர்த்தம் பாகிஸ்தான் பயங்கரரவாதம் அல்ல! என்னுடைய தந்தையும் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனும் முஸுலிமை யாழ் மானகரசபை மேயரரக்கியவர்கள். யாழ் மக்கள் ஒரு பல்லின சமூகம் என்பதை காண மீண்டும் ஒரு ஆசை!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    The Truth about the 1915 Riots –September 20, 2010, 7:40 pm — By Rohana R. Wasala

    Mr K.T. Rajasingham, editor of The Asian Tribune, carried a part of his evidence given before the Lessons Learnt and Reconciliation Commission in his online daily news publication on September 19, 2010. It contained the following patently erroneous references to the so-called Sinhalese –Muslim Riots of 1915:

    After the Kandyan Rebellion of 1817-18 to overthrow British rule, the British, by a proclamation dated November 21, 1818, greatly reduced the privileges granted to Sinhalese chiefs and changed the guarantees on religion given in the Kandyan Convention. Consequently, it was absurd that the Sinhalese wanted to celebrate a clause in a convention that was no longer in force.

    Also, the government agents of Kandy had informed the trustees of the Gampola Buddhist temple that in taking their annual perahera (procession) in Kandy they would not be allowed to beat drums or play any musical instruments within 100 yards of a new mosque in Castle Hill Street.

    The trustees turned to the courts, arguing that a perahera of the old Kandyan kingdom was permitted in terms of the Kandyan Convention of 1815. The District Court of Kandy decided in their favor, but on an appeal by the government the Supreme Court reversed the judgment. The trustees then appealed to the Privy Council in England.

    In the meantime, Buddhist preachers went about the country urging Buddhists to demonstrate against Muslims. Incidentally, the anniversary of the birth of The Lord Buddha fell on May 28, 1915, and a procession began that night. The celebrations were marred by an incident near the mosque, where some 25 men were arrested on charges of housebreaking and rioting.

    Sinhalese attacks on Muslims continued, spreading from the central province to the western and northwestern provinces until June 6, 1915. Muslims sustained heavy losses. According to available records, losses sustained included 86 damaged mosques, more than 4,075 looted boutiques and shops, 35 Muslims killed, 198 injured and four women raped. Seventeen Christian churches were burnt down…….

    This article is an attempt to set the record straight on the misconceptions that such incorrect and irresponsible utterances might cause among those ignorant of the truth about the 1915 incidents. I am writing in the interests of the unity of our beleaguered nation and the promotion of fellow-feeling among the diverse communities which share Sri Lanka as their home.

    The Paddy Tax, the Waste Lands Ordinance, and the legislation to permit the opening of liquor shops across the island – all measures designed to increase the revenue of a rapacious imperial government – added fuel to an already burning political agitation in the country around the beginning of the last century. The first two were particularly oppressive to the rural paddy cultivators and small landowners. The Government used the Waste Lands Ordinance to sell what it considered crown lands to capitalists for development. This caused problems for large numbers of rural villagers who had traditionally owned and cultivated lands for which they did not possess any legal titles; they were just dispossessed of those lands. The liquor taverns legislation naturally caused much opprobrium among the predominantly Buddhist native population.

    Such arbitrary pieces of legislation and other similar acts of omission and commission were inflicted on the local people by a colonial government in which their participation was negligible. The only gesture towards conceding popular participation was to have one elected member in the Legislative Council to represent the educated classes in the person of Mr Ponnambalam Ramanathan. But the politically aware sections of the country who were not satisfied with a single member agitated for more representation.

    It was in this context of political ferment that the 1915 Riots broke out. The colonial authorities resorted to some excessively violent repression of the Sinhalese Buddhists during and after the unrest, apparently because of their wrong conclusion that the latter were staging a revolt against the government. There is no doubt that the government’s (over)reaction was, at least partly, yet another manifestation of the colonialists’ well-established ‘divide and rule’ policy. In any case most political activists of the time thought that the obvious insensitivity of the rulers to the needs and aspirations of the ruled was due to a lack of communication between the two sides. They attributed the government’s uncalled for violence against the Sinhalese Buddhists to this alleged communication gap. In fact they were being generous to the English rulers by choosing to explain away their excesses as a result of misunderstanding rather than any deliberate hostility towards the Buddhist Sinhalese. They also knew that the rioting between the Muslims and Sinhalese was due to a sudden flare up of emotions following the fanatical conduct of a few irresponsible elements among the so-called Coastal Moors or ‘hambankarayas’ and that the incidents did not indicate any serious threat to the longstanding amity between the Sinhalese and the Muslims.

    Muslims arrived in the island many centuries ago as traders. Some of them found permanent residence here . They have lived in this country in complete peace and harmony with the Sinhalese and other communities. At various times some of them were given titles of honour by the Sinhalese kings for services done for them. But this state of affairs became threatened with the coming of the ‘hambankarayas’ (Coast Moors) from South India during British times. Some of these Moors were among the most extremist and intolerant Muslims of India. The local Muslims looked askance at them and treated them with disapproval.

    The incidents that rapidly escalated into widespread clashes between the Sinhalese and Muslims originated at Gangasiripura (Gampola) over a dispute concerning the route of the historic annual Esala Perahera of the Walahagoda Devale about a mile (one and a half kilometers) from the town. The Walahagoda Devale was built by King Parakramabahu in 1236 CE. It was dedicated to God Katharagama. Four peraheras are conducted every year at this temple, the Esala Perahera being the most important one of these.

    The Esala Perahera starts on the 8th day of the waxing moon of Esala and continues for 15 days. The ceremonies are held for fourteen days within the premises of the Devale. The final and culminating 15th day perahera concludes with a ritual called the ‘diyakepuma’ (water-cutting) ceremony. The final day perahera from immemorial times had taken a route from the Devale to a place called Porutota on the Mahaveli Ganga for the ritual of water-cutting along a road known as the Ambagamuwa Road. The perahera had to pass a number of places of worship belonging to other faiths – some Christian churches, Hindu temples, and some mosques. Among these there was one mosque built not long ago (in the 1890’s) by the Coast Moors. Until 1912 the perahera had proceeded along its traditional route with the usual music unchallenged by anyone. That year, the Coast Moors threatened to riot if the perahera passed within 100 yards (metres) of their mosque. The Government Agent, presumably on the instructions of the police , subjected the issue of a license for the perahera to the fulfillment of the demand of the Muslims.

    The Basnayake Nilame of the Devale refused to abide by this unacceptable condition, and cancelled the perahera for that year. Instead, on legal advice, he instituted action against the Attorney General on 30th September 1913. The trial of the case came before the District Court of Kandy on 20th March 1914 before Dr (later Sir) Paul E. Pieris, Acting District Judge of Kandy. The learned judge delivered his judgement on 4th June 1914, declaring the plaintiff ‘entitled to the privilege set out in the second paragraph of his complaint’ (viz. “the right and privilege of marching and to and from and through all the streets of the town of Gampola including that portion of Ambagamuwa street……. With elephants to the accompaniment of tom-tom drums and other musical instruments”).

    Although this was an extremely fair judgement by all accounts the British authorities (not ready to accept it for the obvious reason that it was damaging to their prestige as the representatives of the glorious Empire on which the sun never set) appealed to the Supreme Court, which duly dismissed the plaintiff’s action. But the Basnayake Nilame and his supporters appealed to the highest tribunal of the British Empire, the Privy Council, and retained the eminent Sir John Simon to argue the appeal. There were signs that justice in this case was going to be asserted at last.

    The 1915 riots broke out in this time of indecision. On 28th May that year, the Vesak Fullmoon Poya Day, the traditional Esala Perahera of the Walahagoda temple was held. The perahera followed its usual route along the Ambagamuwa road. But the Police prevented the procession from passing the disputed place. The Moors, encouraged by what they assumed to be support of the Police for their cause started jeering at the Buddhists marching in the procession and threw stones at them from the steps of the mosque. Retaliation was swift and inevitable. Rioting between Buddhists and Muslims spread to other parts of the island. As usual in such situations criminal elements took to looting and arson; shops of Moor traders were attacked and goods stolen; mosques were set on fire. The Governor Sir Robert Chalmers declared martial law. By the time order was restored and martial law withdrawn three months after the rioting had started 63 people had been killed by the Military and the Police. Ad hoc commissions dispensed summary justice.

    The needless severity with which the British authorities dealt with the situation was partly due to the fact that Britain was at war with Germany, a powerful and pitiless enemy. The Turkish Empire made common cause with the Germans against the British. The British Government did not want to displease the Muslims, especially the many millions of them in India, for fear that this might lead to an uprising among them in favour of their co-religionists of the Turkish Empire.

    Although the hearing of the appeal of the Gampola Perahera Case before Privy Council began promisingly for the aggrieved Devale authorities, it did not go on until a final decision was delivered because the new Governor of Ceylon Sir John Anderson was trying to settle the dispute after 1915 riots by adopting a more conciliatory attitude towards the Esala Perahera. He gave binding orders that the Perahera was not to be interfered with any restrictions. When the Coast Moors found that the Government was no longer behind them they gave up their extremist demands. In 1917 the Governor himself attended the Perahera as the Sinhalese kings of yore had done.-http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=7150

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நிஸ்தார்.
    //….ராஜபக்ஸ முஸ்லிம்களின் தியாகத்திருநாள் தினத்தில் ஆடு வெட்ட தடைவிதித்து விட்டதாக வீடியோ படம் வேறு காட்டுகிறிகள். ஆடு விடயம் முஸ்லிம்களின் தலை போகும் விடயமுமல்ல. …… ……///

    நான் ஒன்றும் வீடியோ காட்டவில்லை. சிங்களவர்களால் நடாத்தப்படும் இணையத்தில் ஆதாரங்களுடன் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கான இணைப்பையும் தந்துள்ளேன்.
    மேலும் இந்த ஆடுவிடயம் தலைபோகும் விடயம் அல்ல என்கிறீர்கள். ஆனால் இது ஒரு மதக்கடமை என்கிறார்கள் எனது முஸ்லிம் நண்பர்கள் (இராக், பாகிஸ்தான், துருக்கி, மொராக்கோ). இவர்களில் ஒருவருடன் ஆடுவெட்டும் இடத்துக்குப் போயிருந்தேன். கூட்டமோகூட்டம்!
    மேலும் 1980களில் இங்கிலாந்து வீதியில் வைத்தி இப்பெருநாளுக்கு ஆடுவெட்டி தமது மதக்கடமை நிறைவேற்றிய ஈரான் தூதராலய ஊழியர்கள் பற்றிய விடயங்கள் அறியவில்லைப்போலும். தலைபோகாத விடயத்துக்கெல்லாம் சர்வதேச மனித உரிமை/ராஜீக உறவுகள்/அடிப்படை ஒழுக்கம் எல்லாவற்றையும் மதத்தின் பெயரால் மிதிப்பவர்கள் முஸ்லிம்கள் என அப்போது பத்திரிகைகள் எழுதின.

    //…அதுவேறு “ஆப்பு” என்று சொல்கிறிர்கள் எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை…//

    ஆப்பு இறங்கும்போது விளங்காது. போகப்போகத்தான் விளங்கும். அஷ்ரஃப் அலியைக் கேட்டுப்பாருங்கள் சொல்வார்!

    Reply
  • ashroffali
    ashroffali

    குசும்பு.. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற கலவரம் பற்றி நேற்றுவந்த ராஜசிங்கத்தின் கட்டுரையை அதுவும் த ஐலண்டில் வந்த கட்டுரையை கொண்டு வந்திருக்கின்றீர்கள்.. நல்லது.. இப்படியே நாங்களும் திவயின மற்றும் த ஐலண்டில் தமிழ் மக்களின் வரலாற்றை அப்பட்டமாக மறுக்கும் கட்டுரைகளை கொண்டு வரமுடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். நான் ஆரம்பத்தில் கடமையாற்றிய நிறுவனம் அது. பல்லாண்டுகளுக்கு முந்திய அதன் கட்டுரைகள் கூட என்னிடம் இன்னும் இருக்கின்றது. ஆனால் இன நல்லுறவு கருதும் காரணத்தால் தான் நான் அதனை மேற்கோள் காட்டுவதில்லை..

    தவிரவும் அந்தக் கட்டுரை கூட தவறு சிங்களவர்களின் என்பதாகத் தான் கூறுகின்றது. முஸ்லிம்கள் மீதல்ல. ராஜசிங்கத்தின் கண்டுபிடிப்புத்தான் கரையோர முஸ்லிம்கள் தீவிர குணம் கொண்டவர்கள் என்பது.

    கரையோரப் பிரதேசத்தில் வாழும் யாரும் தீவிர போராடும் குணம் கொண்டவர்கள்தான். அது அவர்களின் இயல்பு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே. அதன் காரணமாகத் தான் அவர்கள் போராடும் குணம் கொண்டிருந்தார்கள். அது பொதுவான இயல்பு.

    தவிரவும் கம்பளை என்பது கண்டி இராசதானியில் அமைந்திருந்தது. கரையோரப் பிரதேசம் அல்ல. கரையோரப் பகுதி மக்கள் என்றைக்கும் அங்கு வாழ்ந்ததில்லை. அப்படியிருக்க கரையோர முஸ்லிம்களின் தீவிர போக்குத் தான் கலவரத்துக்குக் காரணம் என்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு விடயம். அதுவும் அன்றைய தகவல் தொழில்நுட்ப வசதியோ உடனடிப் போக்குவரத்தோ இல்லாத காலத்தில் அதற்கான சாத்தியமே இல்லை. கண்டபடி வரலாற்றைத் திரிப்பதற்கு பெயர் வரலாற்றுத் தகவல்கள் அல்ல. தேவையெனில் அதற்குமப்பால் என்னால் கொண்டு வர முடியும். ஆனால் நல்லுறவு பாதிக்கப்படும்.

    இனிவரும் காலமாவது இலங்கை அமைதியான நாடாக அனைத்து மக்களும் சமாதானம் ஒற்றுமையுடன் வாழும் நாடாக இருக்க வேண்டும். அது தான் என் விருப்பம். அதனை கடுகளவேனும் பாதிக்கும் எந்த விடயத்திலும் நான் ஈடுபட மாட்டேன். அவ்வளவுதான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    சாந்தன்.. //சகோதரிகளையும் அப்பெண்களின் தாய்மார்களையும் கொழும்பில் சிறச்சாலை வாசல்களிலும் ஆஸ்பத்திரி சவக்காலைகள் முன்னாடியும் அழவிடத்துணை (சோரம்) போவீர்கள். எத்தனை இளம்பெண்கலை கொலைசெய்து விட்டு பயங்கரவாதி என கையெழுத்துவை அப்போதான் பிரேதம் கிடைக்கும் என அடம்பிடித்தனர் ராணுவம். பாவப்பட்ட தாய்மாரும் சகோதரர்களும் உடலையாவது பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என கையெழுத்திட அதனை அறிக்கயாக்கி வெளியிட்டிருப்பீர்கள்//

    நான் செயற்பட்டது அரசியல் தளத்தில் மட்டும் தான்.. நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் இராணுவ தளம் சம்பந்தப்பட்டது நண்பரே.. அதில் நாங்கள் தலையிடுவதில்லை. எங்களுக்குக் கீழ் இராணுவ ஊடகப் பிரிவு இயங்கினாலும் அது தனியாக இயங்கியது. அத்துடன் அரசியல் தளம் சதா வேலைப்பளுவுடன் இயங்கியது.தவிர்க்க முடியாத கட்டங்களில் நாங்கள் இராணுவச் செயற்பாடுகளின் கட்டமைப்புக்களை கடந்து செல்ல நேரிட்டிருந்தாலும் அதன் ஊடகக்கட்டமைப்புக்குள் பங்கேற்கவில்லை. தவிரவும் எந்த நாட்டின் இராணுவத்தினதும் வியூகம் மற்றும் ஊடகப் பிரிவுகளில் சிவில் நபர்கள் ஆலோசனை கூறுவோராக இருக்க முடியுமே தவிர.. முழு அதிகாரம் கொண்டவர்களாக இருக்க முடியாது. பிரதம நீதியரசர் பிரதமர் ஜனாதிபதி போன்றோருக்கே அந்த அதிகாரம் இருக்கும். அதிலும் வியூகம் வகுத்தலிலும் ஊடக செயற்பாடுகளிலும் பிரதம நீதியரசர் மற்றும் பிரதமர் கூட தலையிட முடியாது. இராணுவக் கட்டமைப்பு அப்படியானது.நான் ஜனாதிபதியின் ஒரு அதிகாரியே தவிர நான் தான் ஜனாதிபதியல்ல.. எனக்கிருந்த எல்லைகளுக்குள் நான் செயற்பட்டிருக்கின்றேன். அதற்குள் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கின்றேன்.

    இராணுவத்தின் ஒரு சில கட்டமைப்புக்கள் போர்க்காலங்களில் நெகிழ்த்தப்படும். அதன் போது சிவில் நபர்கள் அதில் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும். பெரும்பாலும் அவ்வாறு நெகிழ்த்தப்படும் முனைகள் நிவாரண நடவடிக்கை சார் அலுவல்களாகவும் மற்றும் களமுனை ஒருங்கிணைப்பிற்கான பங்காற்றுகைகளாகவும் இருக்கும். அதில் நான் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் பங்கேற்றிருக்கின்றேன். அதற்கான அதிகாரங்களை உச்சபட்சமாக பயன்படுத்தியிருக்கின்றேன்.

    முள்ளிவாய்க்கால் இறுதித் தருணத்தில் எத்தனையோ வயோதிபர்களை தோள் மேல் தூக்கி வந்ததில் நானும் பங்காற்றியிருந்தேன். சிறு குழந்தைகளின் போசாக்கு விடயங்களில் பங்கெடுத்திருந்தேன். முதலுதவிக்கான இராணுவப் பிரிவின் கட்டளை அதிகாரி போன்று செயற்பட்டிருக்கின்றேன். அதாவது நான் பணித்த விடயங்களைச் செய்யுமாறு அவர்கள் ஏவப்பட்டிருந்தார்கள்.அதற்கப்பால் களமுனையில் நடக்கும் மோதல்களைக் கட்டுப்படுத்தவோ இராணுவத்தினரின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வதற்கோ எங்களுக்கு அதிகாரம் இல்லை. எந்தக் கட்டத்திலும் சிவில் நபர்களுக்குக் கிடைக்கவும் கிடைக்காது.

    எனவே உங்கள் குற்றச்சாட்டு இராணுவ ஊடகத்துறையுடன் தொடர்புபட்டது என்பதால் நான் அதிலிருந்து விடுபடுகின்றேன். அந்தப் பிரிவில் முழுக்க முழுக்க தமிழ் நண்பர்கள் தான் இருந்தார்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் என்னால் அவர்களை வெளிப்படுத்த முடியாது. அது அவர்களுக்கு ஆபத்தானது.

    Reply
  • karu
    karu

    எனவே உங்கள் குற்றச்சாட்டு இராணுவ ஊடகத்துறையுடன் தொடர்புபட்டது என்பதால் நான் அதிலிருந்து விடுபடுகின்றேன். அந்தப் பிரிவில் முழுக்க முழுக்க தமிழ் நண்பர்கள் தான் இருந்தார்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் என்னால் அவர்களை வெளிப்படுத்த முடியாது. அது அவர்களுக்கு ஆபத்தானது.

    // அஸ்ரப்அலி இது எல்லாருக்கும் தெரிந்த விடயம். அந்த தமிழ் பேசும் நண்பர்களில் பெரும்பான்மை உங்களைப் போன்ற காட்டிக் கொடுப்பு வேலைக்குப் பொன முஸ்லிம்கள் என்றதும் தெரியும். காரியம் முடிந்ததும் இப்ப மகிந்த ஆங்காங்கே ஆப்பு வைப்பது உங்களை மாதிரி ஆட்களுக்க பிரச்சினையாகிவிட்டது என்பதும் தெரியும்.

    மற்றது உங்கட உள்விளையாட்டுக்களை தேசத்தில் எழுத மாட்டன் வேறு இடத்தில் எழுதப்போறன் எண்டீர்கள். காரணம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள உங்களால் முடியாது. புழுகுமூட்டைகள் அம்பலத்துக்கு வந்துவிடும். தொடருங்கள் உங்கள் சந்தர்ப்பவாத வாழ்க்கையை… karu jaffna

    Reply
  • ashroffali
    ashroffali

    கரு… //அந்த தமிழ் பேசும் நண்பர்களில் பெரும்பான்மை உங்களைப் போன்ற காட்டிக் கொடுப்பு வேலைக்குப் பொன முஸ்லிம்கள் என்றதும் தெரியும்//
    சரி.. நீங்கள் சொல்வது போன்று காட்டிக் கொடுப்பு வேலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் செய்தது முஸ்லிம்கள் அல்ல.. முற்றுமுழுக்க யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். அது புலிகளுக்கும் தெரிந்தே இருந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளின் ஓரிரு இணையத்தளங்களில் இராணுவ ஊடகப்பிரிவில் கடமையாற்றிய சில தமிழர்கள் குறித்த செய்திகளும் வெளிவந்திருந்தன. திரும்பவும் சொல்கின்றேன். அங்கே ஒரு முஸ்லிம் கூட இருக்கவில்லை..

    முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் காட்டிக்கொடுப்பு.. நீங்கள் சேர்ந்தால் மட்டும் அது சாமர்த்தியம்..என்ன அருமையான வரைவிலக்கணம்… சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்படி என்னதான் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்..?

    புலிகளுக்கு உள்ளேயிருந்து இயங்கிக் கொண்டே அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்கியவர்களை விடவா முஸ்லிம்கள் புலிகளின் தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள்..? முதலில் இனத்துவேச கண்ணாடியைக் கழற்றி விட்டு கருத்துக்களை முன் வையுங்கள். அல்லது உங்களைப் போன்ற இனவாதிகளின் முன் நானும் என் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு அப்படியே மெளனித்துப் போய் விடுவேன். யார் எக்கேடு கெட்டால் தான் எனக்கென்ன.. என் வேலையை நான் பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்து விடுவேன்.

    //காரியம் முடிந்ததும் இப்ப மகிந்த ஆங்காங்கே ஆப்பு வைப்பது உங்களை மாதிரி ஆட்களுக்க பிரச்சினையாகிவிட்டது என்பதும் தெரியும்.//
    எனக்கொன்றும் ஆப்பு வைக்கவில்லை. இன்று வரை நான் தான் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் முடிவில் இருக்கின்றேன். மற்றபடி அரசாங்கம் எனக்கெதிராக அநீதியிழைக்கவில்லை. ஆனால் என்றைக்கு நான் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்தேனோ அன்று தான் அரசாங்கம் என்னைப் பின் தொடர ஆள் வைத்தது. அதுவரை நான் சுதந்திரப் பறவை தான்..தெரிந்து கொள்ளுங்கள். .

    //உள்விளையாட்டுக்களை தேசத்தில் எழுத மாட்டன் வேறு இடத்தில் எழுதப்போறன் எண்டீர்கள். காரணம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள உங்களால் முடியாது. புழுகுமூட்டைகள் அம்பலத்துக்கு வந்துவிடும். தொடருங்கள் உங்கள் சந்தர்ப்பவாத வாழ்க்கையை//

    அர்த்தமற்ற எழுத்து..
    நான் எழுதினாலும் தேசம் நெற் இடம் தராது. காரணம் அதில் இருக்கும் ஆசிரியர் பீடம் அதனை விரும்பாது என்று நினைக்கின்றேன். அது தான் காரணம். என் கஷ்டத்தில் எனக்கு உதவி வரும் ஒரு பெருந்தகையிடம் அது பற்றிக் கதைத்துள்ளேன்… மிக விரைவில் எழுதுவேன். அதுவரை என் மன நிலையை கெடுத்து விடாதீர்கள். அதனால் எனக்கொன்றும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை… மனசாட்சி மட்டும் தான் அவற்றை வெளியிடவில்லை என்று உறுத்திக் கொண்டிருக்கும். ஆனால் என்னையே அவமானப்படுத்திக் கொண்டு அவற்றை வெளியிட்டு அரசனும் இன்றி புருஷனும் இன்றி எல்லாப் பக்கத்திலும் எதிரிகளை நான் சம்பாதித்துக் கொள்ளத் தயாரில்லை. முஸ்லிம்கள் என்றாலே உங்களைப் போன்றவர்கள் எழுதும் விசமத்தனமான இனவாதக் கருத்துக்கள் என்றைக்கும் இரண்டு சமூகங்களுக்குமிடையேயான ஆரோக்கியமான புரிந்துணர்வுக்கு தடைக்கால்லாக அமைந்து விடும்.. ஏனெனில் ஒரு கட்டத்துக்கு மேல் யாரும் அடிபணிந்து போகத் தயாராக இருக்க மாட்டார்கள். விசேடமாக நான் தயாரில்லை. ஒரு தொலைபேசி அழைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் வரை அதட்டும் அதிகாரம் கொண்டிருந்த நான் தற்போதைக்கு கண்டவர்களிடம் எல்லாம் பந்தாடப்படுவதற்கான காரணம் என் தியாகம் என்பதை புரிந்து கொள்ளாதவர்களிடம் நான் என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை..எதற்கும் ஒரு அளவுண்டு.. உங்களைப் போன்றவர்களின் இனவாதக் கருத்துக்கள் பொறுமையின் எல்லையையும் உடைத்து தகர்க்கின்றது. அதற்குப் பின்பும் உங்களுக்கு அடிபணிந்து கொண்டு நீங்கள் சொல்வதையெல்லாம் ஆமோதிக்க நான் ஒன்றும் சுயமரியாதை இல்லாதவன் அல்ல.. அதை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்… இப்படியான இனவாதம் கக்கப்படுவது தொடருமாக இருந்தால் தேசம் நெற் இற்கான எனது பின்னூட்டங்கள் கூட இனி தொடராது.. அதன் மூலமாக சிற்சில உண்மைகள் வெளிவரவும் மாட்டாது.

    நீங்கள் சொல்வதைக் கேட்டு கொண்டு தலை தாழ்த்தி நிற்க நான் ஒன்றும் இளிச்சவாயனோ கையாலாகாதவனோ இல்லை.. அதனை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..

    இப்படியான நீங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களை என்ன பாடுபடுத்தியிருப்பீர்கள் என்பதை என்னால் நன்றாகவே உணார்ந்து கொள்ள முடிகின்றது. இப்படித்தான் அவர்கள் மீதும் அபாண்டம் சுமத்தியிருப்பீர்கள்.. அப்படித்தானே…அநியாயமாக விரட்டியடித்திருப்பீர்கள்..இல்லையா…?

    Reply
  • BC
    BC

    அனேக இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டுகளில் இலங்கைக்கு ஆதரவாக ஆரவாரம் செய்வார்கள். எனது அவுஸ்ரேலியாவில் உள்ள உறவினரும் (முன்பு )தீவிர புலி ஆதரவாளரும் அப்படி தான் செய்தார்.இந்து மதத்தை பின்பற்றும் தமிழர்களாலும், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழர்களாலும் அந்த மதங்கள் போதையை தந்தாலும் ஓரளவு உண்மையை உணரகூடியவர்களாக இருக்கிறார்கள்.இலங்கையில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவோருக்கு அது இயலாத காரியமாக இருக்கிறது.

    Reply
  • karu
    karu

    அஸ்ரப்அலி நீர் எழுதி தேசம் போடாதெண்ட நொண்டிச் சாட்டெல்லாம் வேண்டாமே.

    உங்களுக்கு சார்பாய் கருத்து வந்தால் சகோதரன் எனவிளிபதாலும் உங்களுக்கு சார்பாய் கருத்து வராட்டால் ஜயோ இனவாதம் கக்கிறான் என்பதாலும் தமிழ் முஸ்லிம் இனஉறவு என்பதாலும் பிரச்சினை எதுவும் தீராது.
    யாழ்ப்பாண முஸ்லிம்களை ஏன் விரட்டியடித்தார்கள் என்பதில் இருந்து தொடங்குங்கோ கதைக்க. சும்மா இருந்த முஸ்லிங்களை புலி சும்மா விளையாட்டுக்குக் கலைத்த மாதிரி கதை வேண்டாம்.

    புலிகளுக்கு உள்ளேயிருந்து முள்ளிவாய்க்கால் வரை போராடிய முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று இங்கு எழுதியதும் நீங்கள் தான்

    Reply
  • ashroffali
    ashroffali

    //யாழ்ப்பாண முஸ்லிம்களை ஏன் விரட்டியடித்தார்கள் என்பதில் இருந்து தொடங்குங்கோ கதைக்க. சும்மா இருந்த முஸ்லிங்களை புலி சும்மா விளையாட்டுக்குக் கலைத்த மாதிரி கதை வேண்டாம்.//
    எல்லாம் தெரிந்த பண்டிதர் நீங்களே எழுதுவது தானே…புலிகளே அது வரலாற்றுப் பிழை என்று ஒத்துக் கொண்ட பின்னும் நீங்கள் அதனை நியாயப்படுத்தினால் அதன் தன்மையை என்னவென்று கூறுவது..? உங்கள் இயல்பு அதுதான்..

    //புலிகளுக்கு உள்ளேயிருந்து முள்ளிவாய்க்கால் வரை போராடிய முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று இங்கு எழுதியதும் நீங்கள் தான்//
    ஆமாம். எழுதினேன் தான்.. புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஆனந்தபுரம் சமரில் வீர மரணம் எய்தினார். தெரியாவிட்டால் கடைசி வரை களத்தில் நின்ற புலிகளிடம் கேட்டுப்பாருங்கள். சொல்வார்கள்…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நான் செயற்பட்டது அரசியல் தளத்தில் மட்டும் தான்.. நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் இராணுவ தளம் சம்பந்தப்பட்டது நண்பரே.. அதில் நாங்கள் தலையிடுவதில்லை. ….//
    வங்காலை மாட்டின் குடும்பக்கொலைகளில் இருந்து ராணுவத்தை விடுவித்ததெல்லாம் தலையீடு இல்லையா?

    //…எனவே உங்கள் குற்றச்சாட்டு இராணுவ ஊடகத்துறையுடன் தொடர்புபட்டது என்பதால் நான் அதிலிருந்து விடுபடுகின்றேன்….//
    நீங்களே நீதிபதியாக உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள். கில்லாடிதான் நீங்கள். ஸ்ரீலங்கா அரசு தன்னை போர்க்குற்றங்களில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளது. அதேபோலத்தான் இதுவும் போல் இருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது மஹிந்தா தனது செல்லப்பிள்ளைக்கு இருக்கும் தகுதிகளை நன்றாகத்தான் பயன்படுத்தி இருக்கிறார்!

    Reply
  • karu
    karu

    அஸ்ரப் அலி /எல்லாம் தெரிந்த பண்டிதர் நீங்களே எழுதுவது தானே/…/ நான்தானே எழுதினேன் உங்களின் காட்டிக் கொடுப்புபற்றி ஏன் மறுக்க வேண்டும்.
    முள்ளிவாய்க்கால் முடிந்து முகாம் வாழ்க்கை முடிந்து சனங்கள் இன்னும்தான் தங்கட குடும்பத்தைத் தேடிக் கொண்டிருக்க உங்களுக்கு முஸ்லிம் புலியில் இருந்ததும் எந்தச் சமரில் மரணித்தார் என்பதும் அச்சொட்டாய் எப்படியாம் தெரிய வந்தது.

    /தெரியாவிட்டால் கடைசி வரை களத்தில் நின்ற புலிகளிடம் கேட்டுப்பாருங்கள். சொல்வார்கள்…/
    கடைசி வரை களத்தில் நின்ற புலிகளும் உங்களின் காட்டிக் கொடுப்புபற்றிதான் சொல்கிறாங்கள். இராணுவத்திலும் உளவிலும் இருந்து தமிழருக்கெதிராய் முஸ்லிம்கள் வேலை செய்தார்கள் என்று. இப்பவும் மன்னார் பகுதியில் பெண்களுடன் சேட்டைவிடுவதும் முஸ்லிம் ஆமிக்காரங்களாம் என்று மன்னார் உறவுகள் சொல்கிறார்கள்.

    /வரலாற்றுப் பிழையோ/ ரஜீவுக்கு துன்பியல் சம்பவம் எண்டாலும் சொன்னாங்கள் எங்களுக்க அதுகும் இல்லையோ என்றுதானே முஸ்லிம் பெருமக்கள் கேட்கிறார்கள்.

    சரி. புலிகள் செய்ததை சரி என ஏற்றுக் கொண்டுதானெ அந்த முஸ்லிம்கள் தொடர்ந்தும் புலியில் இருந்திருக்கினம்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அசுரப் /குசும்பு.. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற கலவரம் பற்றி நேற்றுவந்த ராஜசிங்கத்தின் கட்டுரையை அதுவும் த ஐலண்டில் வந்த கட்டுரையை கொண்டு வந்திருக்கின்றீர்கள்.. நல்லது.. இப்படியே நாங்களும் திவயின மற்றும் த ஐலண்டில் தமிழ் மக்களின் வரலாற்றை அப்பட்டமாக மறுக்கும் கட்டுரைகளை கொண்டு வரமுடியாது என்று மட்டும் நினைக்க வேண்டா/ சரி ராஜசிங்கம் நேற்றுவந்தாரென்றால் நீர் எப்பவந்தனீர். ஒரு நூற்றாண்டு கட்டுரையை மட்டுமல்ல கோடிவருட பிரச்சனைகளை நேற்றுவந்த ஆய்வாளர்கள் தான் கண்டுபிடிக்கிறார்கள்.
    உமது முறைப்படி நான் உமக்குப் பதில் எழுதுவதானால் எதையும் விளங்கிக் கொள்ள அறிவு வேணும். கூரான் கொண்டு போட்டு மடைமைகளை ஒளிக்கவேண்டும். இங்கு பின்நோட்டும் எழுதுவர்கள் உம்மைப்போன்றவர்கள் என்பதை எடைபோடுவதை நிறுததுவது நல்லது. நீங்கள் இராஜசிங்கம் பற்றி எழுதியதில் இருந்து புரிவது என்ன என்றால் ஒட்டு மொத்தம் நீங்கள் அனைவரும் சுத்துமாத்துக் கும்பல் என்பதே. உலகத்தில் எழுதுபவர்கள் கண்டுபிடிப்பவர்கள் எல்லாம் நேற்றுவந்த…….. நீங்கள் மட்டும் தான் புத்திசாலியோ? தேசம் நெற்றில் பினனோட்டம் எழுதுபவர்கள் பட்டதாரிகள் முதுநிலைப்பட்டதாரிகள்: டாக்டர் பட்டம் பெற்றவர்கள் கூட எழுதுகிறார்கள் என்பதை மனதில் கொள்வது முக்கியம். எனது பார்வையில் இஸ்லாமியர்களுக்கு கூரானைத்தவிர எதுவுமே விளங்காது என்பது எனது முடிவு. .

    கரு! முஸ்லீங்களை பற்றி நீங்கள் என்னும் அறியவில்லையா. கூடிப்போனீர்களே திரும்பி வரமாட்டீர்கள். முஸ்லீங்கள் எங்கு எங்கு வாழ்கிறார்களே அங்கே பிரச்சனை இருக்குமானால் அதற்கு அடிப்படைக்காரணம் கூறான் அல்லது இஸ்லாமாக இருக்கும். நான் கேட்டதற்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை. சகோரத்துவம் பற்றிப் பேசும் இஸ்லாம் எந்த நாட்டில் மற்ற இனத்துடன் ஜனநாயக முறையில் வாழ்கிறது. உலகில் ஒருநாடு. கால்வெட்டு கைவெட்டு கழுத்துவெட்டு கற்பழிப்புக்கு கூறான் வழிவகுக்கிறது. சரியில்லாத சட்டத்துக்குப்பெயர் சரியா சட்டம். இது உலகிலேயே மனிதர்கள் வாழ்ந்தால் மனிதம் இருந்தால் முழுமையாகத் தடைசெய்யப்படவேண்டிய மதம் இஸ்லாம். அசுரப் அலி என்ன சொன்னாலும் அவர் வாழ்வது வேறு ஒருஉலகம். நாம் எதை எழுதினாலும கதைத்தாலும் அதை உள்வாங்கும் சக்தி அவருக்குக் கிடையாது. எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்.

    Reply
  • நந்தா
    நந்தா

    எனது நண்பன் புலிகளால் கொல்லப்பட்டவன். அவனுடைய மகள் இன்று இராணுவத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல். அவளுடைய தகவல்களின்படி அரசுக்கு தமிழர்கள் பற்றி தவறான தகவல்கள் முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டுள்ளன என்பது உண்மை.

    இராஜபக்ஷ அரசு அதனை உணர்ந்துள்ளது என்பது இன்னுமொரு உண்மை!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா/எனதுநண்பன் புலிகளால் கொல்லப்பட்டவன். அவனுடைய மகள் இன்று இராணுவத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல். அவளுடைய தகவல்களின்படி அரசுக்கு தமிழர்கள் பற்றி தவறான தகவல்கள் முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டுள்ளன என்பது உண்மை.
    / நன்றி நந்தா. அள்ளிவைப்பு வேலைகளை அவர்கள் எங்கே செய்யவில்லை. ஆய்வுகள் எல்லாம் பிழையானவை.நேற்றுவந்தவர்கள் எழுதியவை. விக்கிப்பீடியாதான் சரியானது என அசுரப் எண்ணுகிறார் போலும். நந்தா நீங்கள் என்னத்தைத்தான் சொன்னாலும் அசுரப்க்கு மட்டமல்ல எந்த முஸ்லீமுக்கும் விளங்காது. விளங்குகிறது என்றால் பின் இராமன் சீதைக்கு என்னமாதிர என்பார்கள்.

    விக்கிப்பீடியாவில் இருந்து இலங்கையில் முஸ்லீம் அன்னியர் பற்றிய குறிப்புக்கள்.

    இலங்கையின் முதற்கலவரம் பற்றிய குறிப்புக்களுடன் இலங்கை முஸ்லீங்கள் அன்னியர்கள் என்பதற்கான ஆராரங்கள்.

    Riots of 1915
    During the widespread and prolonged Sinhalese-Muslim Riots of 1915 (from May 28—June 5, 1915) the British Governor came down with a heavy hand on the Sinhalese community. The Governor declared Martial Law (June 2—August 30, 1915)[4] and ordered the Police and the Army to arrest and imprison several prominent Sinhalese leaders. Among those imprisoned were D. S. Senanayake, D. R. Wijewardena, Dr. Cassius Pereira, E. T. De Silva, F.R. Dias Bandaranaike, H. Amarasuriya, A.H. Molamure and several others. It was reported that other leaders were shot without trial. On the request of Anagarika Dharmapala, Ramanathan came to the rescue of the Sinhalese community and fought hard and long against the tyranny of the British Government.
    D. S. Senanayake, the first Sri Lankan prime minister, called Ramanathan ‘the greatest Ceylonese of all times’, while Sir Baron Jayatilaka, the Head of the Cabinet in the State Council, referred to him as ‘the greatest man Ceylon has produced during the past 50 years

    he Sri Lankan Moors (commonly referred to as Muslims) are the third largest ethnic group in Sri Lanka comprising 8% of the country’s total population (approx. 2 million people in 2005). They are predominantly followers of Islam. The Moors trace their ancestry to Arab traders who settled in Sri Lanka some time between the 8th and 15th centuries. The Arabic language brought by the early merchants is no longer spoken, though many Arabic words and phrases are still commonly used. Until the recent past, the Moors employed Arwi as their native language,[1] though this is also extinct as a spoken language.
    he Tamils of Sri Lanka, throughout history, have attempted to categorize the Sri Lankan Moors as belonging to the Tamil race. It is claimed that this was a bid to eliminate the minority community from having its own unique identity. The Government of Sri Lanka, however, treats the Muslims as of origin and as a distinct ethnic group from the Tamils.[1]
    The manner in which Islam developed in Sri Lanka is very similar to that on the Malabar coast of India. Tradition has recorded that Arabs who had settled down on the Malabar coast used to travel from the port of Cranganore to Sri Lanka on pilgrimage to pay homage to what they believed to be the footprint of Adam on the top of a mountain, which, even today, is called Adam’s Peak.[1]
    Ibn Batuta, the famous 14th century Arab traveller, recorded many facets about early Arab influence in Sri Lanka in his travelogues.
    Before the end of the 7th century, a colony of Muslim merchants had established themselves in Ceylon. Fascinated by the scenic splendour and captivated by the traditions associated with Adam’s Peak, Muslim merchants arrived in large numbers and some of them decided to settle in the island encouraged by the cordial treatment they received by the local rulers. Most of them lived along the coastal areas in peace and prosperity, maintaining contacts, both cultural and commercial, with Baghdad, Hadramout, Oman and other Islamic cities.[1]
    According to Tikiri Abeyasinghe in his Portuguese Rule in Ceylon, 1594-1612, Colombo (1966), Lake House Investments Ltd., p 192, tradition has it that,
    […]the first Mohammadans of Ceylon were a portion of those Arabs of the House of Hashim, who were driven from Arabia in the early part of the 8th. century by the tyranny of the Caliph, Abdel Malik bin Marwan, and who proceeding from the Euphrates southwards made settlements in the concan in the southern parts of the peninsula of India, on the island of Ceylon and Malacca. The division of them that came to Ceylon formed eight considerable settlements along the Nort-East, North and Western coast of that island; viz., one at Trincomalee, one at Jaffna, one at Colombo, one at barbareen, and one at Point de Galle.[…]
    The first Arabs who practiced Islam arrived in Sri Lanka around the 7th-8th century, and there is evidence that there was a settled community of Arabs in Ceylon in pre-Islamic times.[1]
    The circumstances that helped the growth of Muslim settlements were varied. Most of the majority Sinhalese depended more on agriculture than trade, thus trade wide open to the Muslims. The Sinhalese Kings considered the Muslim settlements favourably on account of the revenue that they brought them through their contacts overseas both in trade and in politics. The religious tolerance of the local population was also another vital factor in the development of Muslim settlements in Ceylon.[1]

    The early Muslim settlements were set up mainly around ports on account of the nature of their trade. It is also assumed that many of the Arab traders may not have brought their womenfolk along with them when they settled in Ceylon. Hence they would have been compelled to marry the Sinhalese and Tamil women of the island after converting them to Islam. The fact that a large number of Moors in Sri Lanka speak the Tamil language can be attributed to the possibility that they were trading partners with the Tamils of South India and had to learn Tamil in order to carry out their business. The integration with the Muslims of Tamil Nadu (Marakkar), in South India, may have also contributed to this. Moors are also sometimes referred to as Marakkala in Sinhala language. It is also possible that the Arabs who had already migrated to Ceylon, prior to Islam, had adopted the Tamil language as a medium of communication in their intercourse with the Tamil speaking Muslims of South India. The Muslims were very skillful traders who gradually built-up a very lucrative trading post in Ceylon. A whole colony of Arab Muslims is said to have landed at Beruwela (South Western coast) in the Kalutara District in 1024.[1]
    Though the Muslims did not engage propagating Islam amongst the natives of Ceylon, many of the native women they married were converted to Islam.[1]
    There is also a report in the history of Sri Lanka of a Muslim ruler, Vathimi Raja, who reigned at Kurunegala (North Central Province) in the 14th century. This factor cannot be found in history books due to their omission, for reasons unknown, by modern authors. Vathimi Raja was the son of King Bhuvaneka Bahu I, by a Muslim spouse, the daughter of one of the chiefs. The Sinhalese son of King Bhuvaneka Bahu I, Parakrama Bahu III, the real heir to the throne was crowned at Dambadeniya under the name of Pandita Parakrama Bahu III. In order to be rid of his step brother, Vathimi Raja, he ordered that his eyes be gouged out. It is held that the author of the Mahavamsa (ancient history of Ceylon) had suppressed the recording of this disgraceful incident. The British translator, Mudaliyar Wijesinghe, states that original Ola (leaf script) was bodily removed from the writings and fiction inserted instead. The blinded Vathimi Raja (Bhuvaneka Bahu II or Al-Konar, abbreviated from Al-Langar-Konar, meaning Chief of Lanka of Alakeshwara) was seen by the Arab traveller Ibn Batuta during his visit to the island in 1344. His son named Parakrama Bahu II (Alakeshwara II) was also a Muslim. The lineage of Alakeshwara kings (of Muslim origin) ended in 1410. Although all the kings during this reign may not have been Muslims, the absence of the prefix -Shri Sangha Bodhi- (pertaining to the disciples of the Buddha) to the name of these kings on the rock inscriptions during this hundred year period may be considered as an indicator that they were not Buddhists. Further during Ibn Batuta’s visit a Muslim ruler called Jalasthi is reported to have been holding Colombo, maintaining his hold over the town with a garrison of about 500 Abyssinians.[1]
    In spite of this the Muslims have always maintained very cordial relationships with the Sinhalese Royalty and the local population. There is evidence that they were closer to the Sinhalese than to the Tamils. The Muslims’ relationship with the Sinhalese kings grew stronger and in the 14th century they even fought with them against the expanding Tamil kingdom and its maritime influence.[1]
    By the beginning of the 16th century, the Muslims of Sri Lanka, the descendants of the original Arab traders, had settled down comfortably on the island. They were very successful in trade and commerce and integrated socially with the customs of the local people. They had become an inseparable, and even more, an indispensable part of society. This period was one of ascendancy in peace and prosperity for the Sri Lankan Muslims.[1]

    Since the beginning of the 20th century, the population of Moors in Sri Lanka has grown from approximately 100,000 persons in the 19th century to over 2 million in 2005. (The population of Sri Lanka is 21,128,772 as of 2009.) In the pa

    Reply
  • ashroffali
    ashroffali

    //ஆப்பு இறங்கும்போது விளங்காது. போகப்போகத்தான் விளங்கும். அஷ்ரஃப் அலியைக் கேட்டுப்பாருங்கள் சொல்வார்!//
    சாந்தன்.. குறித்த ஆடு பலியிடும் விடயம் முதன்முதலாக முன்னேஸ்வரம் காளி கோயிலுக்கு ஆடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கவே வந்தது. அதன் பின் தான் முஸ்லிம்களையும் உள் வாங்கியது.. ஆக ஆப்பு எங்களுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் தான்.. நமக்குத்தான்… ஓகேயா…

    //வங்காலை மாட்டின் குடும்பக்கொலைகளில் இருந்து ராணுவத்தை விடுவித்ததெல்லாம் தலையீடு இல்லையா?//
    சாந்தன்.. நான் எங்கே இராணுவத்தை விடுவித்தேன்.. எனக்குத் தெரிந்த வரையில் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். தவிரவும் இராணுவத்தை விடுவிக்க நான் ஒன்றும் நீதபதியல்ல..

    //முஸ்லிம் புலியில் இருந்ததும் எந்தச் சமரில் மரணித்தார் என்பதும் அச்சொட்டாய் எப்படியாம் தெரிய வந்தது.//
    கரு.. அதைத் தான் புலிகளிடமே கேட்டுப் பாருங்கள் என்று சொல்லி விட்டேனே.. அவர் ஒரு தையற்காரர் என்பதும் கடைசி வரை அவர்தான் புலிகளின் சீருடைகளைத் தைத்துக் கொடுத்தார் என்பதும் மேலதிக தகவல்கள் கரு.. கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..

    இவர்கள் மட்டுமல்ல.. ….புலிகளின் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்களை பட்டியலிடலாம்.. பொய் என்றால் அந்தந்தப் பகுதி மக்கள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்… இன்றைக்கும் கூட முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் புலிகளின் ஆதரவாளர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

    //கடைசி வரை களத்தில் நின்ற புலிகளும் உங்களின் காட்டிக் கொடுப்புபற்றிதான் சொல்கிறாங்கள். இராணுவத்திலும் உளவிலும் இருந்து தமிழருக்கெதிராய் முஸ்லிம்கள் வேலை செய்தார்கள் //
    ஒரு நாளும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இராணுவ புலனாய்வுத்துறையில் மொத்தமாக இருந்தது தமிழர்கள் (அதுவும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தான் அதிகம்) மற்றும் சிங்களவர்கள் என்பது புலிகளின் புலனாய்வு அமைப்புக்குத் தெரிந்தே இருந்தது. இன்றைக்கும் அவர்கள் தான் இருக்கின்றார்கள்.

    அதில் சந்தேகம் இருந்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட யாரிடமாவது கேட்டால் தெளிவாக சொல்வார்கள்.

    //இப்பவும் மன்னார் பகுதியில் பெண்களுடன் சேட்டைவிடுவதும் முஸ்லிம் ஆமிக்காரங்களாம் என்று மன்னார் உறவுகள் சொல்கிறார்கள்.//
    கரு.. மன்னாரில் உள்ள இராணுவத்தில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை…கடற்படை முகாமில் மட்டும் தான் ஒரு முஸ்லிம் அதிகாரி இருக்கின்றார்.. அவரும் அதிகாரி என்பதால் வெளியில் வருவது கிடையாது..

    பொலிசில் முஸ்லிம்கள் இருந்தாலும் பூநகரிப் பக்கமாகத் தான் இருக்கின்றார்கள். பொய்யென்றால் மன்னார் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கேட்டுப்பாருங்கள் சொல்வார்..

    //ரஜீவுக்கு துன்பியல் சம்பவம் எண்டாலும் சொன்னாங்கள் எங்களுக்க அதுகும் இல்லையோ என்றுதானே முஸ்லிம் பெருமக்கள் கேட்கிறார்கள்//
    அது பிழை என்பதை புலிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். .

    //புலிகள் செய்ததை சரி என ஏற்றுக் கொண்டுதானெ அந்த முஸ்லிம்கள் தொடர்ந்தும் புலியில் இருந்திருக்கினம்.//
    அப்படியில்லை கரு.. கூடி வாழ்ந்த பிணைப்பில் இன்றும் பல முஸ்லிம்கள் புலிகள் மேல் அனுதாபிகளாகத் தான் இருக்கின்றார்கள். அதில் பிழையில்லை கரு.. மனித சுபாவம் அதுதான்..

    //ஒரு நூற்றாண்டு கட்டுரையை மட்டுமல்ல கோடிவருட பிரச்சனைகளை நேற்றுவந்த ஆய்வாளர்கள் தான் கண்டுபிடிக்கிறார்கள்.//
    குசும்பு.. வாஸ்தவம் தான்.. அதற்காக எந்தக் கட்டத்திலும் கம்பளைக் கலவரத்துக்கு தீவிரப் போக்குடைய முஸ்லிம்கள் தான் காரணம் என்று யாரும் எழுதி வைக்கவில்லை.. அது ராஜசிங்கத்தின் திணிப்பு.. அவருக்கு முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றுதான் நினைப்பு..

    //அவனுடைய மகள் இன்று இராணுவத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல். //
    நந்தா.. கொத்தலாவலை இராணுவ பீடத்தில் பெண்களுக்கான பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் மட்டில் தான் ஆரம்பமாகின்றது. அதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் சாதாரண சிப்பாய் தரத்தில் இராணுவத்தில் இணைந்தவர்கள். அதன் பின் பாடநெறிகளில் இணைக்கப்பட்டவர்கள்.

    கொத்தலாவல பாடநெறி இரண்டு வருட காலம் கொண்டது. முடிவில் செகண்ட் லெப்டினன்டாகத் தான் பதவியில் இணைக்கப்படுவார்கள். அதன் பின் சுமார் பதினைந்து வருடங்கள் சேவையில் இருந்தால் தான் லெப்டினன்ட் கேணல் தரம் வரை செல்ல முடியும். அதற்கடுத்தது கேணல். அதன் பின் உள்ள தரங்களை வெறும் பன்னிரண்டு வருடங்களில் எட்டிப்பிடிக்கலாம். இதுதான் இராணுவக்கட்டமைப்பு.. அப்படியிருக்க நந்தாவின் நண்பர் மகள் மட்டும் எப்படி லெப்டினன்ட் கேணல்.. ? என்ன நந்தா.. இராணுவ விதிகளுக்கே முரணானதே..

    //அவளுடைய தகவல்களின்படி அரசுக்கு தமிழர்கள் பற்றி தவறான தகவல்கள் முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டுள்ளன என்பது உண்மை.//
    நண்பார் மகளின் பதவி நிலையே பொய்.. அதற்குப் பின் மற்றதெல்லாம் எப்படி ஆகும் மெய்..?

    நந்தா… இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்பது பலமான கட்டமைப்பு.. சாதாரண வீரர்கள் யாரும் அதன் தகவல்கள் மற்றும் தகவல் வட்டாரங்கள் பற்றி அறிந்து கொள்ளவே முடியாது. அதன் பணிப்பாளர்கள் பெரும்பாலும் மேஜர் தரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளாகத் தான் இருப்பார்கள். அவார்களும் தங்களுக்கு மேல் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகளுடன் மட்டும் தான் தகவல்களை விவாதிப்பார்கள். ஆனால் தகவல் மூலங்களை வெளிவிட மாட்டார்கள். அப்படியிருக்க உஙகள் நண்பர் மகள் எப்படி…?

    //விக்கிப்பீடியாதான் சரியானது என அசுரப் எண்ணுகிறார் போலும். // குசும்பு.. நான் எங்கே சொன்னேன்..

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    இனம் சோனகரா முஸ்லிமா என்று எழுதி வரலாறு எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்து கடைசியில் அவர்கள் இனம் சோனகர் மதம் இஸ்லாம் என்று எழுதினால் பிரச்சனை முடிந்ததா?? ஆனால் இன்று இலங்கை முஸ்லிம்கள் இலங்கைச் சனத்தொகையில் இரண்டாவது இடம். அவர்கள் வாழும் நிலப்பரப்பு மூன்றாவது இடம். இங்கு பதிவிடப்படும் சில வார்த்தைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும். இன்றைய நிலையில் நாம் எப்படி ஒற்றுமையாகப் பயணிப்பது என்பதே முக்கியம்.

    இலங்கை பல்லின மக்களைக் கொண்ட சமூகம். அதில் நாம் இலங்கையர் என்று ஏற்றுக் கொள்ளாமல் மூவினத்துக்கும் தனித்தனியே இடத்தையும் பிரச்சினையையும் தீர் என்றால் அது முடியாத விடயம். இவ்வளவு பெரிய இந்திய நாட்டிலேயே கூட்டாட்சி இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்கமுடியாது. எனவே இனம் மதம் சாதி மறந்து மனிதத்துடன் தீர்வைக் காண முயல்வோம்.

    சிங்களவன் தார்ப்பீப்பாக்குள் எரித்தான் என்று கிளர்ந்து எழுந்து நாம் எமது உறவுகளையே ரயர் போட்டுக் கொழுத்தியதை எந்த இனம் மதம் என்று சொல்வது. மனித நேயத்தோடு பிரச்சனைகளை அணுகுவோம்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    சாந்தன் அன்றும் குண்டு போடும் அமெரிக்கன் கோயில் கட்டகேட்டால் அனுமதிபீர்களா என்றீர்கள். அமெரிக்காவில் அமெரிக்க முஸ்லீம்கள் மசூதி கட்ட கேட்டதற்கும், ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவையும் கணக்கில் எடுக்காமல் ஒரு தனி சர்வாதிகாரி சதாமை பிடிக்கவென்று யுத்தத்தின் முதல் நாள் இரவில் குண்டு போட்டு சுமார் 3000 அப்பாவி ஈராக்கியரை பரலோகம் அனுப்பிய அமெரிக்கா எந்த அடிப்படையில் ஈராக்கில் கோயில் கட்ட கேற்பது? அமெரிக்கன் என்ன இரட்டை பிரஜாஉரிமையா வைத்துள்ளான். ஈராக்கில் கிறிஸ்தவர் கோயில் கட்டி தமது சமயத்தை பின்பற்ற சர்வாதிகாரி சதாம் கூட அனுமதித்துதானே இருந்தான். அவரின் சர்வ அதிகார அமைச்சரவையில் பிரதமராக இருந்தவர் தாரிக் அஸிஸ் என்ற ஒரு கல்வினிஸ்ட் கிறிஸ்தவர் என்பதையும் நினைவு கூறலாமல்லவா? மீண்டும் இப்படி பேசியுள்ளீர்கள். அதாவது சிங்களவருடன் சேர்ந்தவாழ முடியும் என்றும் ஆனால் சோனகருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் சொல்லிவிட்டு, மகிந்த அடிக்கும் ஆப்பு எமக்கு இன்னும் சரியாக ஏறவில்லை, ஏறும்போது புரியும் என்றீர்கள். நீங்கள் சொன்ன ஆப்பு உங்களுக்கு இன்னும் அடிக்கவில்லையா? அல்லது அடித்தும் அதன் ஆழம் இன்னும் புரியவில்லையா? பிறகு எப்படி சிங்களவருடன் சேர்ந்து வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தீர்கள். இது நல்ல முடிவு, நானும் வரவேற்கிறேன், ஆப்பு கதை கதைத்துக் கொண்டு நேசக்கரம் நீட்டுவது என்பதுதான் யோசிக்க சற்று சிக்கலாக உள்ளது.

    ராஜபக்ஸ ஆப்பு அடிக்க வெளிக்கிட்டாலும் அதை அணுகுவதற்கு முன் என் மனதில் எழுவது இதுதான்.

    1976ல் என் நண்பன் உட்பட பலர் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதை செய்தது இலங்கை போலிஸ் படை. அதை வைத்து தேர்தல் வியாபாரம் செய்தது அன்றைய தமிழர்.ஐ.வி.மு. அதாவது இந்த வெடி சம்பவத்தை இலங்கை பாராளுமன்றில் முதலில் பேசியவர் தந்தை செல்வா, ஆகவே எங்களுக்கு வாக்கு போடுங்கள் என்றார்கள். அதன் பிறகு நடந்தவை இங்கு தேவைப்படாது.

    இது ராஜபக்ஸ இலங்கை சட்டக் கல்லூரியில் பயிலும் வேளை. அப்போது வேறு ஒரு சிங்கள மாணவன் ராஜபக்ஸவிடம் இவ்வாறு கூறியுள்ளான் புத்தளம் தம்பிகளுக்கு (இழிவான நோக்கத்தில்) வெடி கொடுக்கப்பட்டுள்ளது என்று. அப்போது இந்த ராஜபக்ஸ கேட்டாராம் “அதில் உனக்குள்ள சந்தோசம் என்ன?” என்பதாகும். இது அவருடன் கூட படித்த என் தாய் மாமன் சொன்னது. ஆகவே ஓர் அளவுக்கு ராஜபக்ஸ மேல் நம்பிக்கை வைக்கலாம் என்பதே. அதைவிடவும் அஸ்ரப் அலியின் கேள்வி நியாயமானதே, அதாவது நாம் சிங்களவருடன் சேர்ந்திருந்தால் அடுக்காத விடயம். நீங்கள் சேர்ந்திருந்தால், அல்லது சேர முற்பட்டால் ராஜதந்திரம். சாந்தன் நீங்கள் அணுகுண்டினால் நாசம் செய்யப்பட்ட கீரோஷிமாவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு சிலை வைக்க கேட்டு இது மனித உரிமை என்றால் நாம் என்ன செய்வது? அப்படியான விடயம்தான் இது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /இலங்கை முஸ்லிம்கள் இலங்கைச் சனத்தொகையில் இரண்டாவது இடம். அவர்கள் வாழும் நிலப்பரப்பு மூன்றாவது இடம்/ஜெயராஜா
    மனிதர்களுக்குக் கட்டுமுடுப்பாடு என்பது அவசியம். அது இல்லாவிட்டால் எமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் கிடையாது. இது காமத்தில் இருந்து கோபம் வரை கட்டுப்பாடு தேவை இல்லையென்றால் அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும். தேசத்தில்தான் ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தார் முதுகெலும்புள்ளவன் பிள்ளைகளைப் பெறுவான் என்று. இப்ப ஐரொப்பாவில் இருந்து கொண்டு படித்தவர்களே இப்படி எழுதும் போது ஜெயராஜ் நாங்களும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்: உங்களது மனிதநேயமும் உணர்வுகளும் புரிகின்றன. இப்படித்தான் நானும் இருந்தேன் மதம் என்பது மனிதனையும் மனிதத்தையும் அழிக்க முயலும் போது நாமும் சேர்ந்து போகமுடியாது. அப்பச் செய்வோம் என்றால் மனிதவிரோதிகளாகி விடுகிறோம். மேலே இஸ்லாமியர்களின் வருகைபற்றியும் எத்தனைபேர் 19ம் நூற்றாண்டில் இருந்தார்கள் இப்போ எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பது பற்றுயி முழுக்குறிப்பும் உள்ளன. இனப்பெருக்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்லாமை தொடர்ந்து ஆதரிப்பதா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல பெற்ற பெண்ணினத்தையே கற்பழிப்பது மட்டுமல்ல கொலையே செய்யும் ஒருமத்தையும் இனத்தையும் ஆதரிக்க வேண்டுமா? சரியா சட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த இனம்பெருகினால் நாளை உமது எனது பெண்பிள்ளைகளுக்கும் நடுத்தெருவில் கல்லெறிச்சாவுதான். இதை ஐரொப்பா உணரத்தொடங்கியுள்ளது. மற்ற இனமதத்தவர்கள் இதை சிறிது ஆளமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளீர்கள். இதற்கான பதிலை நிச்சயமாக ஒரு முஸ்லீமிடம் இருந்து எதிர்பாக்கவில்லை. எனது முடிவிலும் மாற்றம் இருக்காது. அவர்களுக்கு அவர்களின் முறையிலேயே பதில் சொல்வது தான் சரியானது. நாம் எதைச்சொன்னாலும் இராமன் சீதைக்கு சித்தப்பாதான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //மேலே இஸ்லாமியர்களின் வருகைபற்றியும் எத்தனைபேர் 19ம் நூற்றாண்டில் இருந்தார்கள் இப்போ எத்தைனபேர் இருக்கிறார்கள் என்பது பற்றுயி முழுக்குறிப்பும் உள்ளன. இனப்பெருக்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்லாமை தொடர்ந்து ஆதரிப்பதா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது//

    சாந்தன்..
    இலங்கைப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் படி 1921ம் ஆண்டில் இலங்கையில் வாழ்ந்த இலங்கைத் தமிழார்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து இலட்சத்தி பதினேழாயிரத்து முன்னூறுதான். அதே ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழரின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தி இரண்டாயிரத்து எண்ணூறு என்று தரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கைத் தமிழரின் எண்ணிக்கையானது மொத்த சனத்தொகையின் 11.50 வீதம் ஆகும். இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கையானது 12.93 சதவீதம் என்றிருக்கின்றது. அதே ஆண்டில் இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டு இலட்சத்து ஐம்பத்தியோராயிரத்து தொள்ளாயிரம். மொத்த சனத்தொகையில் 5.60 சதவீதம் என்றிருக்கின்றது. அதன் பின் 1989ம் ஆண்டின் சனத்தொகையை எடுத்துப் பார்த்தால் இலங்கைத் தமிழர்கள் 12.62 வீதமாக அதிகரித்து 21 இலட்சத்து 24 ஆயிரம் மொத்த சனத்தொகையைக் கொண்டிருந்தார்கள். அது 1983ம் ஆண்டின் கறுப்பு ஜுலை வரையான நிகழ்வுகள் காரணமாக இலங்கையை விட்டு புலம் பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களை உள்ளடக்காத தொகையாகும். அவர்களையும் உள்ளடக்கியிருந்தால் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். இந்தியத் தமிழரின் எண்ணிக்கையானது பொன் அருணாசலம் மற்றும் பொன் இராமநாதன் போன்றவர்களின் மேலாதிக்கச் சிந்தனை காரணமாக பிரசாஉரிமை பறிக்கப்பட்ட நிலையிலும் 873000 ஆகவும் 5.19 வீதம் ஆகவும் இருந்துள்ளது. அதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12 49000 ஆகவும் 7.42 வீதம் ஆகவும் இருந்துள்ளது.

    அப்படிப்பார்த்தால் இலட்சக்கணக்கான மக்களின் இடம் பெயர்வின் பின்பும் தமிழ் மக்களின் சனத்தொகை அதிகரிப்பானது சுமார் 1.12 வீதம் அதிரித்துள்ளது. முஸ்லிம்கள் 1.80 வீதம் அளவுதான் சனத்தொகை அதிகரிப்பைக் கண்டுள்ளார்கள். இது தான் உண்மையான தரவுகள். இல்லையேல் இலங்கை புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கத்தை நான் உங்களுக்குத் தருகின்றேன்.. நீங்கள் நேரடியாக கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.. உங்கள் பதிவு கண்டதும் நான் இந்த இரவில் மலேசியாவிலிருந்து இலங்கையின் நள்ளிரவு நேரத்துக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் புள்ளிவிபரவியல் பணிப்பாளர் நாயகத்தைத் தொடர்பு கொண்டு பெற்ற உத்தியோகபூர்வ தகவல்களே இவையாகும். அந்த வகையில் பார்க்கும் போது எந்த இனமும் அசாதாரணமான முறையில் இனப்பெருக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகும். அதன் பின் வந்த இரண்டு தசாப்த காலத்தில் தமிழ் மக்களில் கால்வாசிப் பேருக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அது ஒரு ஊகம் மட்டும் தான். சரியான தரவுகள் இல்லை. அடுத்த வருடம் தான் சரியான தரவுகள் கிடைக்கும். அன்றைக்கு நான் உயிருடன் இருந்தால் எந்தத்தலைப்பின் கீழாவது அதனை உங்களுக்கு அறிவிப்பேன்.

    //இங்கு பதிவிடப்படும் சில வார்த்தைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும். இன்றைய நிலையில் நாம் எப்படி ஒற்றுமையாகப் பயணிப்பது என்பதே முக்கியம்.//
    ஆமாம் ஜெயராஜா.. அதனை நான் முடிந்த மட்டிலும் கடைப்பிடிக்க முயற்சி செய்கின்றேன். ஆனால் மற்றவர்கள் தான் அதனை தகர்க்க முயற்சி செய்கின்றார்கள். மனவருத்தத்துடன் தான் அவர்களுடன் எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றேன்.

    //இலங்கை பல்லின மக்களைக் கொண்ட சமூகம். அதில் நாம் இலங்கையர் என்று ஏற்றுக் கொள்ளாமல் மூவினத்துக்கும் தனித்தனியே இடத்தையும் பிரச்சினையையும் தீர் என்றால் அது முடியாத விடயம். இவ்வளவு பெரிய இந்திய நாட்டிலேயே கூட்டாட்சி இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்கமுடியாது. எனவே இனம் மதம் சாதி மறந்து மனிதத்துடன் தீர்வைக் காண முயல்வோம்//

    யதார்த்தம் கலந்த அற்புதமான வார்த்தைகள்..அதைத் தான் நானும் வலியுறுத்துகின்றேன்…

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அஸ்ரப் அலி! /அது ராஜசிங்கத்தின் திணிப்பு.. அவருக்கு முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றுதான் நினைப்பு/ இதுதப்புத்தான் தீவீரவாதிகள் அல்ல மதவாதிகள் என்பதே சரியானது.

    /நாள் இரவில் குண்டு போட்டு சுமார் 3000 அப்பாவி ஈராக்கியரை பரலோகம் அனுப்பிய அமெரிக்கா எந்த அடிப்படையில் ஈராக்கில் கோயில் கட்ட கேற்பது? / நிஸ்தார்! சொந்தநாட்டில் குறிடிஸ்ய மக்களை இரசாயணவாயு அடித்த பல்லாயிரக்கணக்காக துடிக்கத்துடிக்க சதாம் கொன்றது பற்றி? இதையும் அமெரிக்காவில்தான் சாட்டப் போகிறீர்களோ?

    சோனகரை நாட்டுக்குள் விட்டதே பிழை. அதன்விளைவை தமிழர்களும் சிங்களவர்களும் அனுபவித்தே ஆகவேண்டும்.

    /இந்து மதத்தை பின்பற்றும் தமிழர்களாலும், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழர்களாலும் அந்த மதங்கள் போதையை தந்தாலும் ஓரளவு உண்மையை உணரகூடியவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவோருக்கு அது இயலாத காரியமாக இருக்கிறது/ பி.சி மதம்: மதம்பிடித்தால் என்ன செய்யும். இதுதான் இஸ்லாம். சைவத்தை சமயம் என்பர். சைவமதம் என்பது தவறு. சைவம் சமயம். ஆனால் மதங்களாக இருந்தவற்றையும் தன்னுள் இணைத்தது இந்து. இதனால்தான் இந்து மதம்: இஸ்லாம் அடிப்படிடையிலேயே மதம் தான். கிறீஸ்தவமும் இஸ்லாமின் அண்ணன் தம்பியானாலும் காலத்துக்கேற்ற மாற்றங்களை கிரகித்து வளர்வதான் இதையும் சமயம் எனலாம்: இஸ்லாம் அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கம் மதம். மதம் மதம்பிடித்த மதம்.

    /இனிவரும் காலமாவது இலங்கை அமைதியான நாடாக அனைத்து மக்களும் சமாதானம் ஒற்றுமையுடன் வாழும் நாடாக இருக்க வேண்டும். அது தான் என் விருப்பம். அதனை கடுகளவேனும் பாதிக்கும் எந்த விடயத்திலும் நான் ஈடுபட மாட்டேன். அவ்வளவுதான்/ இதற்கான சாத்தியமோ அடிப்படையோ இலங்கையில் இல்லை. தமிழ் முஸ்லீம் பகுதிகளின் சிங்களக்குடியேற்றம் என்பது ஒரு தனித்தமிழனையோ தனி முஸ்லீமையோ வெகுண்டெளச் செய்யாது. இனத்தையே கிளப்பிவிடும் வேலை. ஆயுதங்களால் என்றும் அமைதி காக்கப்பட்டதில்லை. 72ல் ஜேவிபி போட்டு துவக்குகளை தமிழர்கள் 76ல் தூக்கினார்கள். இன்றும் இன மத மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையை வலுப்படுத்தாது குடியேற்றங்களை செய்வது குடியேறியவர்களை கூட நிம்மதியாக வாழவிடாது என்பதை மகிந்த மறந்து விடுகிறார். இங்கே முஸ்லீம்களுடன் நாம் அடிபடுவது கூட நாளை இஸ்லாம் என்று மதத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு 1915ல் ஆரம்பித்தது போல் மீண்டும் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக. இலங்கையின் எதிர்காலம் மீண்டும் 1915ல் இருந்து ஆரம்பமாகும் பார்க்கலாமா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….முதன்முதலாக முன்னேஸ்வரம் காளி கோயிலுக்கு ஆடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கவே வந்தது. அதன் பின் தான் முஸ்லிம்களையும் உள் வாங்கியது.. ஆக ஆப்பு எங்களுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் தான்.. நமக்குத்தான்… ஓகேயா…//

    அஷ்ரஃப் அலி,
    அதைத்தானே சொல்ல வந்தேன். முன்னேஸ்வரம் பிரச்சினை வரும்போது அரசில் பணிப்பாளராக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது. அப்போது ஆப்பு எனத்தெரியவில்லை. செல்லப்பிள்ளை எஸ்.எம்.ஏ பால்பேணிகளாகத் தெரிந்தது இப்போது தெரிகிறதல்லவே?
    மேலும் ஆடுவெட்டுவதை எல்லாம் ஒரு மதக்கடமை என ரோட்டில் இறங்கி இந்துக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. தடை செய்தால் செய்துவிட்டுப் போகிறார்கள் என விட்டுவிடுவார்கள். ஒரு சிலரே அதனை ஒரு பெரிய விடயம் ஆக்குவார்கள். அதுவும் புலிகள் தடை செய்தால் அரசு தானாகவே முன்வந்து தமக்குப்பிடித்த ‘மத சுதந்திரத்தை’ அள்ளி வழங்கி சீராட்டும்.

    //…சாந்தன்.. நான் எங்கே இராணுவத்தை விடுவித்தேன்.. எனக்குத் தெரிந்த வரையில் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். தவிரவும் இராணுவத்தை விடுவிக்க நான் ஒன்றும் நீதபதியல்ல..//

    கீழே உள்ளது நீங்கள் எழுதியதில்லையா??

    //…ashroffali on November 11, 2010 1:00 pm
    வங்காலை மார்ட்டின் குடும்பத்தார் படுகொலை செய்யப்பட்ட போது அதனைச் செய்தது அரச படைகள் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டது. அன்றைய நிலையில் நான் அன்று உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தேன். அதற்கும் மேலாக மார்ட்டின் என்னுடனும் தொடர்பில் இருந்ததுடன், இலங்கைப் புலனாய்வுத்துறையின் சம்பளத்தையும் பெற்று வந்தவர். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட என்னுடன் முக்கியமான விடயம் ஒன்று பற்றிக் கதைத்திருந்தார். ஆக அந்த விடயத்தில் அரச படைகளின் மறைகரம் இல்லை என்பதை மட்டும் தான் நான் மறுத்திருக்கின்றேன். …//

    Reply
  • BC
    BC

    //குசும்பு – தேசத்தில்தான் ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தார் முதுகெலும்புள்ளவன் பிள்ளைகளைப் பெறுவான் என்று. //

    எனது நண்பர் மூலம் அறிந்தேன் அவர்களின் மதநூல் முதுகெலும்பில் இருந்து தான் இனபெருக்கம் நடைபெறுவதாக கூறியுள்ளது. அதனால் எதிர்கால நிதிநிலமை, குழந்தைகள் எதிர்காலம் என்பது பற்றி திட்டமிடுபவர்களை முதுகெலும்பு அற்றவர்கள் என்று நம்புகிறார்கள். இப்படி பல விடயங்களை தப்பாகவே நம்புகிறார்கள். முதுகெலும்பில்லாத ஒரு மனிதனால் எப்படி காலால் நடக்க முடியம் என்று யோசிக்கிறார்கள் இல்லை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பிசி: /அவர்களின் மதநூல் முதுகெலும்பில் இருந்து தான் இனபெருக்கம் நடைபெறுவதாக கூறியுள்ளது/ தகவலுக்கு நன்றி பிசி. இவர்கள் இன்னும் பூமிக்கு வரவில்லை. என்னுள் ஒருகேள்வி என்றும் இருந்தது. இவர்களுக்கு உலகின் நடைமுறையே அல்லது மனிதம்: மனிதத்துவம்:புரிந்துணர்வு: யதார்த்தம் போன்ற பலவிடயங்கள் ஏன் விளங்குவதில்லை என்று. உங்களின் பதிலில் இருந்து புரிந்துகொண்டேன் கற்காலமனிதர்கள் என்று.

    Reply
  • ashroffali
    ashroffali

    //முன்னேஸ்வரம் பிரச்சினை வரும்போது அரசில் பணிப்பாளராக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது. அப்போது ஆப்பு எனத்தெரியவில்லை. செல்லப்பிள்ளை எஸ்.எம்.ஏ பால்பேணிகளாகத் தெரிந்தது இப்போது தெரிகிறதல்லவே?//

    முன்னேஸ்வரம் பிரச்சினை வந்தது கடந்த செப்டம்பரில் … அப்போது நான் நாட்டை விட்டு வந்து ஒரு மாதம் கடந்திருந்தது. முஸ்லிம்களை அச்சுறுத்திய அதே மேர்வின் சில்வா தான் முன்னின்று அதனையும் செய்திருந்தார். அதன் பின் தான் முஸ்லிம்கள் பக்கம் திரும்பினார்.

    இந்துக்கள் முன்னேஸ்வரம் விடயத்தில் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பது தவறு நண்பரே.. அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மனோ கணேசனும் கூட எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் பல பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் அவை வெளிவந்திருந்தன.

    நான் நாட்டில் இருந்திருந்தால் எதிர்த்திருப்பேன். எவருக்காகவும் பயந்து நான் அடங்கிக் கொண்டிருக்கவில்லை.. அதன் காரணமாகத் தான் ஈரோஸ் அமைப்பின் முன்னை நாள் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காலமான போது பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகள் மற்றும் அரசாங்க அமைச்சர்களைப் பகைத்துக் கொண்டு ஜனாதிபதி சார்பில் மலர்வளையம் அனுப்பி வைத்திருந்தேன். அன்றைய நிலையில் அவரது குடும்பத்தாருடன் நான் தான் ஜனாதிபதி சார்பில் கதைத்து அனுதாபம் தெரிவித்திருந்தேன். தேவையென்றால் நீங்கள் அவரது குடும்பத்துடன் அல்லது த.தே.கூ. இன் இரத்தினசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள்..

    கொழும்பிலிருந்து மலர் வளையம் அனுப்ப நேரமில்லாத நிலையில் நான் தம்புள்ளையில் நின்றிருந்தேன். உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மலர்வளையத்தை சீகிரியா கொண்டு வர வைத்து எனது காரில் தான் அனுப்பியிருந்தேன். இவ்வளவுக்கும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஈரோஸ் அமைப்பு புலிகளின் தீவிர விசுவாசிகள் என்பது எனக்கு மட்டுமல்ல.. அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அப்படியான விடயங்களைச் செய்ய எனக்கு துணிச்சல் இருந்தது. முன்னேஸ்வரம் விடயத்தில் கூட அப்படித் தான் நடந்திருப்பேன்.. இருந்திருந்தால்…

    //அரச படைகளின் மறைகரம் இல்லை என்பதை மட்டும் தான் நான் மறுத்திருக்கின்றேன். …//
    மறுப்பது வேறு.. தீர்ப்புச் சொல்வது வேறு.. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.. எந்தக் கட்டத்திலும் உண்மை மரணிக்கக் கூடாது.. தன்னால் முடிந்த கட்டங்களில் அதனை வெளிப்படுத்துவது ஒவ்வொருவரினதும் கடமை. அதனைத் தான் நான் செய்துள்ளேன்..

    Reply
  • நந்தா
    நந்தா

    முப்படைகளிலும் டாக்டர்களும் எஞினியர்களும் மேஜர் தரத்துக்கு மேல்பட்ட பதவிகளிலேயெ அமர்த்தப்படுகிறார்கள் என்ற விஷயம் அலிக்கு தெரியவில்லை.சட்டத்தரணிகளும் மேஜர் தரத்துக்கு மேல்ப்பட்ட பதவிகளில் இருக்கிறார்கள்.

    மரைக்காயர்கள் என்பவர்கள் கேரளா, தமிழ்னாடு, இலங்கை ஆகிய இடங்களில்த்தான் இருக்கிறார்கள்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //முப்படைகளிலும் டாக்டர்களும் எஞினியர்களும் மேஜர் தரத்துக்கு மேல்பட்ட பதவிகளிலேயெ அமர்த்தப்படுகிறார்கள் என்ற விஷயம் அலிக்கு தெரியவில்லை.சட்டத்தரணிகளும் மேஜர் தரத்துக்கு மேல்ப்பட்ட பதவிகளில் இருக்கிறார்கள்.//

    இல்லை நந்தா.. பணியில் சேரும்போது பெரும்பாலும் கப்டன் பதவி தான். அதன் பின்பு தான் அவர்கள் பணி உயர்த்தப்படுவர்கள். ஆயினும் அவர்கள் இராணுவத்தின் சிவில் பிரிவுதான். அதிகாரம் குறைந்தவர்கள். இயந்திரப் பிரிவுக்கு உள்ள அதிகாரம் கூட இவர்களுக்கிருக்காது. அதே நேரம் இந்த வகையில் இன்னும் பெண்கள் சேர்க்கப்பட்டதில்லை.

    இன்னொன்று.. மருத்துவ மற்றும் சட்டத்தரணி பிரிவுகளில் வருகின்றவர்கள் ஒருபோதும் பிரிகேடியர் தரத்துக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் ஒருபோதும் அவர்கள் இராணுவத்தளபதியாகவோ கட்டளைத் தளபதிகளாகவோ வர முடியாது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…மறுப்பது வேறு.. தீர்ப்புச் சொல்வது வேறு.. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.. எந்தக் கட்டத்திலும் உண்மை மரணிக்கக் கூடாது.. தன்னால் முடிந்த கட்டங்களில் அதனை வெளிப்படுத்துவது ஒவ்வொருவரினதும் கடமை. அதனைத் தான் நான் செய்துள்ளேன்…//

    நல்லது அதேபோல இராணுவம் அனியாயம் செய்தபோது (கற்பழிப்பு, கொலை, கொள்ளை, ….) வெளியிட உங்களால் முடியவில்லை இல்லையா? அது உங்களது கடமை இல்லையா?

    மேலும் அகில இலங்கை இந்துமாமன்றம் ஒன்றும் இந்துக்களை தலைமை தாங்கும் அமைப்புக் கிடையாது. அவர்கள் கொழும்பில் இருக்கும் அரசுகளுக்கு வால்பிடிப்பவர்கள் என்கின்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆமிக்காரன் ஊரை எரித்துக்கொண்டிருப்பான் ஆனால் திருக்கேதீஸ்வரத்துக்கு பஜனக்குப் போக மேதகு ஜநாதிபதியிடம் ஸ்பெசல் அனுமதி எடுத்தோம் என் அறிக்கை விடுவார்கள். இவர்களைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் இந்த கோஷ்டியில் பலர் எனது ‘நண்பர்கள்’!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    எமது கலைகள் வெள்ளையர்கள் கைகளில் கதைசொல்லப்புறப்பட்டு விட்டன. இதோ எல்லை கடந்த பயங்கரவாத்தை ஒரு இஸ்லாமிக் குழுக்கள் அறிமுகம் செய்யும் போது எல்லைகடந்த கலைபயணத்தை எம்மவர்கள் செய்கிறார்கள். அன்றும் சோனகர் நாட்டினுள் நுளையும்போது நாம் வரவேற்காவிட்டால் இவர்கள் தமிழா பேசுவார்கள்? அன்று நாம் இவர்களை வரவேற்றிருந்தோம் என்பதற்கு இவர்கள் பேசும் மொழி சான்று கூறுகின்றன. கூடுதலான சோனகர்கள் தமிழையே தாய்மொழியக் கொண்டவர்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

    -http://www.youtube.com/watch?v=Q3q7-g6AKEo
    -http://www.youtube.com/watch?v=ZTnC5B0UaDs&feature=related
    -http://www.youtube.com/watch?v=RRgeKB85BIU&feature=related

    Reply
  • நந்தா
    நந்தா

    General
    Lieutenant General
    Major General
    Brigadier
    Colonel
    Lieutenant Colonel
    Major
    Captain
    Lieutenant
    Second Lieutenant
    Officer Cadet

    The above RANKS (in order) in the Sri Lankan army. Salary of a civilian or volunteer is also considered in determining their RANKS in the army.

    Civilians or Volunteer officers cannot be the field or regimental commanders anywhere.

    ALI talk about REGULAR army.

    But their(volunteer/civilian) services are very important when a WAR situation comes. My friend’s daughter is still a Lt.Col in the army because she is a doctor with a FRCS.

    Reply
  • ashroffali
    ashroffali

    //நல்லது அதேபோல இராணுவம் அனியாயம் செய்தபோது (கற்பழிப்புஇ கொலைஇ கொள்ளைஇ ….) வெளியிட உங்களால் முடியவில்லை இல்லையா? அது உங்களது கடமை இல்லையா?//

    சாந்தன்.. நான் எத்தனை தடவை சொல்லியிருக்கின்றேன்.. இராணுவ விடயங்களின் போது நான் தலையிட முடியாது என்று… அத்துடன் நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விவரம் மற்றும் அவர்களின் பின்னணி தெரியாமல் நான் மறுத்துரைக்க முடியாது.

    ஒரு சின்ன உதாரணம் தருகின்றேன்.. திரைப்படக்ககூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் தேவதாசன் எனக்கும் அறிமுகமானவர்.பழகுவதற்கு அருமையானவர்.என்னுடன் பேசிய தருணங்களில் எல்லாம் அரசுக்கோ புலிகளுக்கோ எதிரானவராக தன்னை காட்டிக் கொண்டதில்லை. அதே போன்று ஆதரவாளனாக காட்டிக் கொள்ளவுமில்லை.

    அவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டபோது நான் ஜனாதிபதியின் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இணைச்செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அவர் மீதிருந்த நல்லபிப்பிராயம் காரணமாக அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு) இளங்கக்கோனுடன் தொடர்பு கொண்டு தேவதாசனுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தேன். அதன் பின்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட விசாரணைப் பிரிவு இராணுவ புலனாய்வுப் பிரிவு என ஒரு மாதம் வரை என்னைத் துளைத்தெடுத்து விட்டார்கள். ஆனாலும் மிக நீண்ட காலம் வரை தேவதாசன் நிரபராதி என்றே நான் கருதியிருந்தேன். ஊடகங்கள் உட்பட அனைவரும் அப்படித்தான் நம்பினார்கள். கருத்துக்களை வெளியிட்டார்கள்.

    ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் வண்ணம் அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார்.அவர் நிரபராதி என்று வாதாடிய எங்கள் நிலை குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்…?

    இப்படித்தான் பல விடயங்களில் ஆழமறியாமல் காலை விட முடியாத நிலை இருந்தது. அவ்வாறான கட்டங்களில் மெளனம் தான் சிறந்த வழியாக இருந்தது. ஆதரவாக கருத்துச் சொல்வதோ மறுப்பதோ புத்திசாலித்தனமல்ல.. அதனால் தான் சில விடயங்களில் நான் மெளனமாக இருந்தேன்.

    என் கண் முன்னே கண்ட காட்சிகள் காரணமாக சிலவற்றைத் தட்டிக் கேட்டேன்..பலவற்றை விமர்சித்தேன்.கூடாத விடயங்களை சுட்டிக் காட்டினேன். அதன் காரணமாகத் தான் அரசாங்கத்துக்குள் என் மீதான அவநம்பிக்கை உருவானது. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய நிலை.

    யுத்த காலத்திலும் கூட அரசுக்கு சார்பான ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனங்கள் விடயத்திலும் நான் குரல் கொடுத்திருக்கின்றேன். பலரைப் பகைத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.

    இப்படியாக என்னால் முடிந்த மட்டும் செய்தேன். முடியாத போது விலகி வந்து விட்டேன். அதற்காக நான் ஒரு போதும் எந்த ஆணைக்குழுவின் முன்பும் போய் பொய்யாக செய்திகளை புரட்டவில்லை. பதவியைப் பாதுகாக்க வேண்டி உண்மைகளை மறைக்கத் தயாராக இருக்கவில்லை.. நல்லிணக்க ஆணைக்குழு விடயம் உங்களுக்குத் தெரியும் தானே…?

    /Civilians or Volunteer officers cannot be the field or regimental commanders anywhere.//

    நந்தா அதைத் தான் நானும் சொல்லியிருக்கின்றேன். சிவில் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாக விடயங்களில் கூட தலையிட முடியாது. அப்படியிருக்க உங்கள் நண்பர் மகள் மட்டும் எப்படி புலனாய்வுத் தகவல்கள் விடயங்களை தெரிந்து கொண்டார்…?

    தவிரவும் எனக்குத் தெரிந்த வகையில் இன்னும் பெண் மருத்துவர்கள் இராணுவத்தில் இல்லை. ஆனால் இராணுவ மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்கள் மருத்துவ ஆலோசகர்கள் என்ற பதவியில் இணைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கும் இராணுவ அடையாள அட்டை தான் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பொது நிர்வாக அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் மூலம் நியமனம் பெறுகின்றவர்கள்.இராணுவ மருத்துவமனைகளுக்கு மாற்றலாகி வரும்போது அவர்களின் பதவி மூப்புக்கு ஏற்ப கப்டன் பதவி வரைதான் வழங்கப்படும். ஆகக் கூடியது ஐந்து வருட காலத்துக்குள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். உங்கள் நண்பர் மகள் அவ்வாறான பிரிவில் இருக்கலாம்.

    ஆனால் லெப்டினன்ட் கேணல் என்பது டூ மச்.. ஏனெனில் இலங்கை இராணுவத்தின் மருத்துவப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் தர அதிகாரி நாஜிப் கூட மேஜர் தர அதிகாரி தான். அவர்தான் களமுனை மற்றும் விசேட மருத்துவ பிரிவின் பிரதானியும் கூட.. முல்லைத்தீவில் கடும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடமாடும் மருத்துவமனை உத்தியைக் கையாண்டு இராணுவ வட்டாரங்களில் பாராட்டப்பட்டவர்.அப்படியிருக்க அவரை விட யாரும் பதவியில் கூடியவர்கள் மருத்துவப் பிரிவில் இருக்க முடியாது.

    Reply
  • karu
    karu

    அஸ்ரப்அலி, உங்கள் பசியில் அழும் குழந்தைக்கு எஸ்எம்எ பால்மா, யூஸ் வாங்க முடியாமலிருக்குது. பள்ளிக்கப் போகும் பிள்ளைகளைப் பார்த்து தான் பள்ளி போக முடியாமல் ஏங்கி அழும் உங்கள் பிள்ளையை பார்த்துக்கொண்டும் அடுத்தவேளையை நினைத்துக் கலங்கிக்கொண்டும் இருக்கிறீர்கள். பாதுகாப்புக்கு, உயிருக்கு உத்தரவில்லாமல் பயந்து ஓடி ஒளிந்துகொண்டு இருக்கிறீர்கள். இத்தனை துன்பங்களுக்கும் இடையில் உங்களில் அனுதாபத்தில் ஒருவர் தந்த இணையவசதியில் (இணையவசதி இவர் குடும்பம் அனுபவிக்கிற துன்பத்துக்கு மாற்றீடு) விடிந்தால் பொழுதுபட்டால் தேசத்துக்குள் பின்னூட்டம் விடுவதில் இருந்து தெரிகிறது உங்கள் எழுத்தின் ‘நம்பகத்தன்மை’. அதுமட்டுமில்லை குசும்பின் கருத்தையும் சாந்தன் கருத்தையும் ஆள்மாறிப் பாவித்து குழப்புவதைப் பார்க்கத் தெரிகிறது உங்கள் போன்றவர்கள் எப்படியான கதையையும் இடத்துக்கேற்ப விடுவீர்கள் என்பதை.

    மேலும் எஸ்எம்ஏ வாங்க காசில்லா நிலைப்பாட்டிலும் இப்ப இந்தியாவில் இருந்து மலேசியா போய்விட்டீர்கள். அதில் வேறு தேசத்துப் பின்னூட்டத்திற்காக நீர் காசு செலவளித்து போன் போட்டு தகவல் எடுத்து (இத்தனைக்கும் எஸ்எம்ஏ வாங்க காசில்லை) பின்னூட்டக்காரருக்கு பின்னூட்டம் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் . இவ்வளவும் போதும் உங்கள் எழுத்தின் நோக்கத்தைக் காட்டிக்கொடுக்க.

    /முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் காட்டிக்கொடுப்பு.. நீங்கள் சேர்ந்தால் மட்டும் அது சாமர்த்தியம்..என்ன அருமையான வரைவிலக்கணம்…// அது நீங்கள் தான் சொல்லுறியள் சாமர்த்தியம் ராஜதந்திரம் எண்டு. நாங்களில்லை. நாங்கள் காட்டிக் கொடுப்பு எண்டுதான் சொல்லுறம். நீங்கள் அரசுக்கு செய்த காட்டிக் கொடுப்பைத்தான் இப்பவும் ராஜதந்திரம் என நினைத்துக்கொண்டு ராஜதந்திர கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறியள்.

    அடுத்து ஏயர்போட்டில் யாழ்பாணத் தமிழர் காட்டிக் கொடுப்பதாக எழுதியிருந்தீர்கள். உண்மை. அரசு பிடித்த புலிகள் வெளிநாட்டுப் புலிகளை காட்டிக் கொடுக்கிறார்கள். இதே வேலையைத்தான் நீங்கள் செய்தனீங்கள். அதாவது அரசுக்கு புலிகளை காட்டிக் கொடுத்தனீங்கள்.
    சரி புலிகள் வடக்கில் சோனகரை கலைத்தபிறகும் நீங்கள் சொல்லும் சோனகர்கள் ஏன் புலிக்கு வேலை செய்தவர்களாம்?

    /கேபி அரசொடை நிக்கிறதைச் சொல்வது அரசின் செல்லப்பிள்ளை எண்டு/. அதாவது நீங்கள் முதல் அனுபவித்த செல்லப்பிள்ளை விளையாட்டு. புரிகிறதா? உங்கடை இடம் பறிபோன ஆதங்கம்தான் உங்கட ஆட்களின் குமுறல். அதுக்காக அரசை முழுமையாக உங்களால் பகைக்கவும் முடியாது. பகைத்துப்போட்டு என்ன செய்யேலும் அதுக்காக கேபியைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருங்கோ.

    மூன்றாவது சிறுபான்மை எப்பவும் அரசின் செல்லப்பிள்ளைதான்.
    karu jaffna

    Reply
  • ashroffali
    ashroffali

    கரு.. நான் தற்போது மலேசியா வந்து விட்டேன் நண்பரே.. இங்குள்ள தொலைத் தொடர்பு முகவர் நிலையமொன்றில் கனணி இயக்குனராக தொழில் செய்து கொண்டிருக்கின்றேன். இந்தியாவில் எனக்குப் பாதுகாப்பிருக்கவில்லை. அது தான்…

    மற்றது முஸ்லிம்கள் ஒரு போதும் புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். அதற்கும் தனிப்பட்ட கோபங்கள் தான் காரணமாக அமைந்திருக்கும். அதற்காக ஒட்டுமொத்த இனத்தின் மீதே பழி போட முடியாது..

    அப்படியே வைத்துக் கொண்டால் அன்றைக்கிருந்து இன்றைக்கு வரை புலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் நிற்பதும் தமிழர்கள்தான். புலிகளுக்கு எதிராக அரசாங்க ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் தமிழர்கள் தான்..என்பதை வைத்து தமிழர்கள் தங்களுக்குள் காட்டிக்கொடுத்ததாக கூற முடியுமா..?

    இப்படித்தான் புலிகளுடன் நட்புக் கொண்டிருந்த ஒரு சிலர் இயக்கத்திலும் இருந்தார்கள். அதன் காரணமாக இன்றைக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் பல முஸ்லிம்கள் சித்திரவதைக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.பலர் ஆசிட் குளியலுடன் காணாமலேயே போய் விட்டார்கள்.

    ஆனால் விமான நிலைய யாழ்ப்பாணத் தமிழர் போன்று ஒரு போதும் முஸ்லிம்கள் நடந்து கொண்டதில்லை..

    //உங்கடை இடம் பறிபோன ஆதங்கம்தான் உங்கட ஆட்களின் குமுறல். அதுக்காக அரசை முழுமையாக உங்களால் பகைக்கவும் முடியாது. //

    எங்கள் இடம் பறிபோகவில்லை. நாங்கள் உதறி எறிந்தால் ஒழிய. அதனை பல தடவைகள் நான் சொல்லி விட்டேன்.

    Reply
  • karu
    karu

    //கரு.. நான் தற்போது மலேசியா வந்து விட்டேன் நண்பரே.. இங்குள்ள தொலைத் தொடர்பு முகவர் நிலையமொன்றில் கனணி இயக்குனராக தொழில் செய்து கொண்டிருக்கின்றேன்./
    பால்ப்பேணிக்கு காசில்லை. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் திரிய காசிருக்குது?? அதுமட்டுமா.. நீங்கள் தேசத்தில் பின்னூட்டம் விடும் வேகத்தைப் பார்த்து மலேசியா வியந்து கணணி வேலையே போட்டுத் தந்திட்டுது. (தேசத்தக்குப் பின்னூட்டம் விடும் வேலை). கேட்கப் புல்லரிக்கிறது. அப்பிடியே உங்கடை தமிழில் கட்டுரை எழுதின சேர்ட்டுப்பிக்கற்டுகளையும் பார்த்திட்டு நாசா கூப்பிட்டு தமிழ்ப் பிரிவிற்குள் (சோனக இனத்து) போட்டுவிடவும் கூடும்.

    //முஸ்லிம்கள் ஒரு போதும் புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். அதற்கும் தனிப்பட்ட கோபங்கள் தான் காரணமாக அமைந்திருக்கும். அதற்காக ஒட்டுமொத்த இனத்தின் மீதே பழி போட முடியாது..//
    முதலில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கவில்லை சேர்ந்து போராடினாங்கள். இப்ப ஒருசிலர் காட்டிக் கொடுத்ததாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அதைத்தான் நானும் சொன்னேன். ஓட்டுமொத்த சோனகரும் காட்டிக் கொடுப்பு செய்ததாக நான் சொல்லவில்லையே.

    /அப்படியே வைத்துக் கொண்டால் அன்றைக்கிருந்து இன்றைக்கு வரை புலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் நிற்பதும் தமிழர்கள்தான். புலிகளுக்கு எதிராக அரசாங்க ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் தமிழர்கள் தான்..என்பதை வைத்து தமிழர்கள் தங்களுக்குள் காட்டிக்கொடுத்ததாக கூற முடியுமா..? //

    கூறமுடியும். அதனால்தான் அவர்களை தமிழினத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றார்கள் புலிகள். அதேபோல காட்டிக் கொடுத்த சோனகரும் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்றார்கள். இதிலுள்ள பெரிய வித்தியாசம். அடிபடும் தமிழர்கள் சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அவர்கள் உடன்பிறப்புக்கள். ஆனால் சோனகர்கள் சகோதரன் என விளிப்பது உதட்டளவில். அது உறவல்ல. அடிபடும் தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்வார்கள் காரணம் அவர்களிடையே வரலாற்றுப் பிணைப்பு உண்டு. நீங்கள் வேறு இனத்தவர்கள். எப்பவும் ஒட்டாத உறவைத்தான் இவர்கள் இருவருடனும் சோனக இனம் வைத்திருக்கம். மேலும் மதஅடிப்படைவாதிகள்.

    /இப்படித்தான் புலிகளுடன் நட்புக் கொண்டிருந்த ஒரு சிலர் இயக்கத்திலும் இருந்தார்கள். அதன் காரணமாக இன்றைக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் பல முஸ்லிம்கள் சித்திரவதைக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். பலர் ஆசிட் குளியலுடன் காணாமலேயே போய் விட்டார்கள்./
    அரசாங்கம் அசிட் குளிப்பும் செய்ததை நிருபித்ததுக்கு நன்றி. நன்றி. போர்க்காலத்தில் அசிட் ஊத்தி அழித்திருந்த உடல்களின் படங்கள் வந்தபோது அதையும் புலிகள் தலையில் போட்டார்கள்.

    /ஆனால் விமான நிலைய யாழ்ப்பாணத் தமிழர் போன்று ஒரு போதும் முஸ்லிம்கள் நடந்து கொண்டதில்லை.. //
    அதென்ன யாழ்ப்பாணத் தமிழர்? கிழக்குப் பக்கத்துடன் முண்டாமல் முன்னேற்பாடோ??
    உந்த வேலையை முன்பு செய்த கருணா பிள்ளையான் எந்த ஊர்?

    /எங்கள் இடம் பறிபோகவில்லை. நாங்கள் உதறி எறிந்தால் ஒழிய./
    நீங்கள் முந்தி அரசின் செல்லப்பிள்ளை இப்;ப கேபி அரசின் செல்லப்பிள்ளை. இடம் பறி போய்விட்டது

    முந்தி வெளிநாட்டுப் புலிகள் உசுப்பேத்தி உள்நாட்டுத் தமிழரை அழித்தமாதிரி இப்ப வெளிநாட்டு சோனகர்கள்(முஸ்லிம்கள்) கூத்துக்காட்டுவதில் வேகமாக இருப்பது எல்லோர்க்கும் அப்பட்மாகத் தெரிகிறது.
    karu jaffna

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நான் தற்போது மலேசியா வந்து விட்டேன் நண்பரே.. இங்குள்ள தொலைத் தொடர்பு முகவர் நிலையமொன்றில் கனணி இயக்குனராக தொழில் செய்து கொண்டிருக்கின்றேன்….//

    எனது நண்பன் சொன்னது சரியாக இருக்கும் போல் தெரிகிறது. அஷ்ரஃப் அலி, நீங்கள் இந்தியாவில் ரோட்டில் படுக்கிறேன், கொலை முயற்சி நடக்கிறது…….போன்ற இன்னோரன்ன கதைகளைக் கேட்டு எனது இந்திய நண்பர் (1983 இல இடம் பெயர்ந்தவர்) ஒருவரிடம் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? எனக்கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் இப்படி இங்கே கனபேர் வ்ந்து கதை விடுகிறார்கள். இவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்களின் இலக்கு தமிழ் நாட்டில் ஊடுருவல் செய்வதே. இவர்களை வீட்டுக்கு அழைத்தால் இரண்டு கிழமைகளில் இந்தியப் புலனாய்வுத்துறை எனச் சொல்லி ஒரு கூட்டம் வாசலுக்கு வரும். அவர்கள் அனேகமாக ஸ்ரீலங்காவினராக இருப்பார்கள். இந்தியப்பொலிஸ் இவர்களைத் தெரியாது எனக் கை விரிப்பார்கள். எனவே இவர்களை நம்பவேண்டாம். இந்த மாடமாளிகை, சுகபோக வாழ்வு (எஸ்.எம்.ஏ பால்பேணீக்கதை) எல்லாம் நாம் கேட்டதுதான். ஒரே கதையை வெவ்வேறு விதமாக விடுவார்கள். இவர்களில் அனேகர் தாம் எவ்வாறு கொழும்பில் புலிகளுக்கு உதவினர், அரசுக்குத் தெரியாமல் புலிகளின் சடலங்களை எடுத்துச் செல்ல உதவினர் (மலர்வளையம் கேஸ்) எனவெல்லாம் சொல்வார்கள். நம்பிச்சேர்த்தால் அம்போதான். எனச் சொன்னார். அவர் சொன்னது சரிதான் போல் இருக்கிறது. அதற்கு அணிசேர்ப்பது போல் நீங்கள் சொல்லி வைத்தது போல் இப்போ மலேசியாவில் நிற்கிறீர்கள். அடுத்த குறி அவுஸ்திரேலியாவா?

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்த அலிக்கு முஸ்லிம்கள் தமிழ் ஏன் பேசுகிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.

    இராணுவத்தில் உள்ள அனைவரையும் தெரியும் என்று பெரும் புலுடா வேறு விடுகிறார். யாரோ ஒரு முஸ்லிதான் பெரிய மருத்துவ அதிகாரியாம்.

    இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. முஸ்லிம்கள் என்பவர்கள் பொய்களை சொல்லி லாபம் தேடும் விளையாட்டுக்கள் அம்பலமாகி அரசு பதவிகளில் இருந்து துரத்தப்படுகிறார்கள். பகிரங்கமாகவே பொய்களை சொல்லும் இந்த ஆள் “பதவி” கிடைத்திருந்த வேளையில் என்ன கூத்தடித்திருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது.

    இலங்கை வரலாற்றுக்கு தான் தான் ஒரு ஒதோரிட்டி என்ற பாணியில் கதை விடுவதை அவதானிக்கவும்! இவருடைய “கதைகளின்படி” இவர் குந்தியிருந்து வேலை செய்தார் என்பது நடக்கவில்லை என்பதே உண்மை.

    Reply
  • ashroffali
    ashroffali

    சாந்தன்.. என் நிலைமை கண்டு உதவ முன்வந்ததற்கு நன்றி நண்பரே.. நாம் என்னதான் விவாதித்துக் கொண்டாலும் நமக்குள் இருக்கும் பிணைப்பு என்றைக்கும் மாறாது.அதை நாம் மறைக்கவும் முடியாது..

    நான் என்னைப் பற்றிய சில விடயங்களை வெளியில் மொத்தமாக கொட்ட முடியாது சாந்தன்.. அது என் பாதுகாப்புக் கருதியது மட்டுமே.. அதில் மேலதிக விபரங்கள் தேவையாயின் தேசம் நெற்றில் எனது ஈமெயிலைப் பெற்று எனக்கு மெயிலிடுங்கள். நான் அனைத்தையும் மனம் திறந்து உங்களுடன் உரையாடுவேன்..
    என்னைப் பொறுத்தவரை இங்கு நமக்குள் ஆரோக்கியமான கருத்துப் பாரிமாறல் மட்டும் தான். இவற்றையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் நான் எடுத்துக் கொள்வதில்லை.. அவ்வளவுதான்.. இன்று நான் கொஞ்சும் அலுவல் அதிகமாக உள்ளேன். நாளை அனைவருக்கும் பின்னூட்டம் இடுவேன்.. நன்றி நண்பர்களே…

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் Karu,
    வெளிநாட்டு சோனவர் மாத்திரமல்ல, உள்நாட்டு சோனகரும் உங்கள் ரேஞ்சுக்கு கெட்டிக்காரராக இல்லாவிட்டாலும் தம் இன சனத்தை அழித்து ஒப்பாரிவைத்து பின் கதவால் நாடு பிடிக்க முற்படாத அளவுக்கு சற்று அறிவுடையோர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….தம் இன சனத்தை அழித்து ஒப்பாரிவைத்து பின் கதவால் நாடு பிடிக்க முற்படாத அளவுக்கு சற்று அறிவுடையோர்….//

    உண்மைதான் நிஸ்தார்.
    முஸ்லிம்கள் அவர்கள் உள்நாடென்றாலென்ன இன்ரனசனல் எண்டாலென்ன தமது இனத்தை அழிப்பதில்லை அடுத்த இனத்தையே அழிக்கிறார்கள். பின்கதவு என்றால் என்ன முன்கதவு என்றாலென்ன நீங்கள் கைபர் கணவாயைச் சொல்லவில்லை என நினைக்கிறேன்?
    தேவை என்றால் இந்திய சரித்திரத்தைப் படித்துப்பார்க்கவும். அல்லது பொஸ்னியாவும் நல்ல உதாரணம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் தமிழர்களின் செலவில் தங்களது வரும்படிகளை கடந்த பல தசாப்தங்களாகப் பெருக்கிக் கொண்டிருந்தனர். இப்பொழுது அந்த விளையாட்டுக்கள் ஆவியாகத் தொடங்கி விட்டன.

    முஸ்லிம்கள் தற்பொழுது போட்டி போட்டுக் கொண்டு இராஜபக்ஷவுக்கு முண்டு கொடுப்பதன் நோக்கம் அதனை தெளிவு படுத்துகிறது.

    இந்த அலியும் நிஸ்தாரும் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கி எதனையும் சாதிக்க முடியாது. அமெரிக்கர்களின், அதாவது “காபிர்களின்” அடியாளாக வாழும் முஸ்லிம் நாடுகள் இப்பொழுது வறுமையான அல்லது சிறுநாடுகளில் தங்கள் முஸ்லிம் செல்வாக்கை நிலை நிறுத்தப் பகீரதப் பிரயத்தனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    தமிழர்கள் அரசுடன் நெருக்கம் கொள்வது முஸ்லிம்களுக்கு இப்பொழுது தலையிடியாக மாறியுள்ளது தமிழர்கள் அரசியல் தீர்வு ஒன்றைப் பெறும் பட்சத்தில் முஸ்லிம்கள் எதையும் பெற முடியாது என்பது தெளிவாகியுள்ளது.

    ரவூப் ககீம் போன்றவர்கள் அரசுடன் சேர்ந்தது பற்றி தமிழர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது! கூடியிருந்து குழி பறிப்பது இராஜதந்திரம்!

    Reply
  • ashroffali
    ashroffali

    கரு.. நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளன். ஊடகம் மற்றும் கணனித்துறை தவிர எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாது. அதன் காரணமாக வந்த இடத்தில் கணனித் துறையில் தற்காலிக வேலையொன்றை ஏற்பாடு செய்து கொண்டேன். அதன் காரணமாக தேசம் நெற்றில் பதில் தந்து கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான்.

    //முதலில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கவில்லை சேர்ந்து போராடினாங்கள். இப்ப ஒருசிலர் காட்டிக் கொடுத்ததாக ஏற்றுக் கொள்கிறீர்கள். //

    முஸ்லிம்கள் புலிகளைக் காட்டிக் கொடுத்ததாக நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. புலிகளுக்கு எதிரானவர்கள் இருந்ததாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஒருபோதும் முஸ்லிம்கள் புலிகளின் இரகசியங்களை அறிந்திருக்கவில்லை. அவர்களது கட்டமைப்பு பலமானது மட்டுமன்றி இறுக்கமானது. உலகில் பல நாடுகள் புலிகளின் இரகசியப் புலனாய்வு கட்டமைப்பை வியந்து பார்த்துள்ளன. அதன் முக்கிய தலைவர்களுக்குக் கூட அடுத்து என்ன நடக்குமென்பது கடைசி வரை தெரியாமல் தான் இருக்கும். அப்படியிருக்க முஸ்லிம்கள் எப்படிக் காட்டிக் கொடுக்க முடியும் நண்பரே..? ஆனால் புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் தான் கடைசி வரை உள்வீட்டு இரகசியங்களை அரசாங்கத்துக்கு விற்று பெரும் பணம் உழைத்தனர். அது சர்வதேசத்துக்கே தெரிந்த பரகசியம்.

    //அடிபடும் தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்வார்கள் காரணம் அவர்களிடையே வரலாற்றுப் பிணைப்பு உண்டு//
    தமிழ்-சிங்கள உறவுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. பாலமாகத் தான் இருந்துள்ளார்கள். மறைந்த சம்ஷ் தினகரன் சாளரம் ஊடாக பெரும் இணைப்புப் பாலமாக செயற்பட்டிருந்தார். பல தமிழ்ச் சிறுகதைகள் கட்டுரைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருந்தார். திக்வல்லை கமால் திக்வல்லை சப்வான் மற்றும் இக்பால் போன்றவர்கள் இன்றும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் ஊடகவியலாளரான அயூப் இன்றும் சிங்கள மத்தியில் தமிழ் மக்கள் சார்பான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார். ஏன் சிங்களத்து கம்பெரலியவை கிராமப் பிறழ்வாக தந்ததும் ம.மு. உவைஸ் எனும் ஒரு முஸ்லிம் தான்.

    //நீங்கள் வேறு இனத்தவர்கள். எப்பவும் ஒட்டாத உறவைத்தான் இவர்கள் இருவருடனும் சோனக இனம் வைத்திருக்கம்//
    உங்கள் இனத்துவேச உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டியதற்கு நன்றி. உங்களைப் புரிந்து கொள்ள உதவியது. சோனகர்கள் என்றைக்கும் ஏனைய இனத்தவருடன் நல்லுறவுடன் தான் வாழ்ந்தார்கள். அதற்கான சாட்சிகள் ஏராளம் வரலாற்றுக் குறிப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    //அரசாங்கம் அசிட் குளிப்பும் செய்ததை நிருபித்ததுக்கு நன்றி. நன்றி.//
    நான் கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் சில விடயங்களை படிப்படியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான்.

    //கிழக்குப் பக்கத்துடன் முண்டாமல் முன்னேற்பாடோ??// அரசாங்கத்தையே பகைத்துக் கொண்டு வந்த எனக்கு கிழக்குத் தான் தேவையா..?

    Reply
  • ashroffali
    ashroffali

    // இப்படி இங்கே கனபேர் வ்ந்து கதை விடுகிறார்கள். இவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்களின் இலக்கு தமிழ் நாட்டில் ஊடுருவல் செய்வதே. இவர்களை வீட்டுக்கு அழைத்தால் இரண்டு கிழமைகளில் இந்தியப் புலனாய்வுத்துறை எனச் சொல்லி ஒரு கூட்டம் வாசலுக்கு வரும். அவர்கள் அனேகமாக ஸ்ரீலங்காவினராக இருப்பார்கள். இந்தியப்பொலிஸ் இவர்களைத் தெரியாது எனக் கை விரிப்பார்கள்//
    சாந்தன்… இலங்கையிலிருந்து தப்பி வந்த எந்த முஸ்லிமும் (என்னைத் தவிர) இந்தியா சென்று அங்கிருந்து வெளிநாடு சென்றது கிடையாது. அது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.. இந்திய தமிழும் இலங்கை முஸ்லிம்களின் தமிழும் வித்தியாசம்.அப்படியிருக்க இந்தியப்புலனாய்வுத்துறை கதையெல்லாம் சாத்தியமா..?

    //இந்த அலிக்கு முஸ்லிம்கள் தமிழ் ஏன் பேசுகிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.//
    நந்தா.. அன்றைய அரபியர்களின் வணிகத் தொடர்பு இந்தியா மற்றும் இலங்கையுடன் இருந்தது உலகறிந்த விடயம். அதன் காரணமாக அன்றைய அரபியர் இலங்கை மற்றும் இந்தியாவின் பொதுமொழியான தமிழை வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் தான் கற்றிருந்தார்கள். தவிரவும் அன்றைய சிங்களவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் தமிழ் மொழி நன்றாகத் தெரிந்திருந்தது. அதுதான் வரலாற்று உண்மை.

    //இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. முஸ்லிம்கள் என்பவர்கள் பொய்களை சொல்லி லாபம் தேடும் விளையாட்டுக்கள் அம்பலமாகி அரசு பதவிகளில் இருந்து துரத்தப்படுகிறார்கள். // இதுவரை எந்த முஸ்லிமும் அப்படித் துரத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..ஆனால் விலகி வந்தவர்கள் ஏராளம்.

    //முஸ்லிம்கள் தமிழர்களின் செலவில் தங்களது வரும்படிகளை கடந்த பல தசாப்தங்களாகப் பெருக்கிக் கொண்டிருந்தனர். இப்பொழுது அந்த விளையாட்டுக்கள் ஆவியாகத் தொடங்கி விட்டன.// ஆமாம் நந்தா.. அது தான் யாழ்ப்பாணத்தில் நடந்ததே.. புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் யாரால் கொள்ளையடிக்கப்பட்டது? அதற்காக புலிகளால் தண்டிக்கப்பட்டவர்கள் யார்.. ? போராட்டத்தின் ஆரம்பமே வங்கிக் கொள்ளைகள் மற்றும் விடயங்களில் தானே ஆரம்பமானது நந்தா..?

    //இந்த அலியும் நிஸ்தாரும் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கி எதனையும் சாதிக்க முடியாது.// எப்போது வக்காலத்து வாங்கினோம்..?
    //தமிழர்கள் அரசுடன் நெருக்கம் கொள்வது முஸ்லிம்களுக்கு இப்பொழுது தலையிடியாக மாறியுள்ளது தமிழர்கள் அரசியல் தீர்வு ஒன்றைப் பெறும் பட்சத்தில் முஸ்லிம்கள் எதையும் பெற முடியாது என்பது தெளிவாகியுள்ளது. ரவூப் ககீம் போன்றவர்கள் அரசுடன் சேர்ந்தது பற்றி தமிழர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது! கூடியிருந்து குழி பறிப்பது இராஜதந்திரம்!//

    தமிழர்கள் என்றைக்கும் அரசுடன் சேர்ந்து தான் இருந்தார்கள். பொன். இராமநாதன் மற்றும் பொன் அருணாச்சலம் காலம் தொட்டு இன்று வரை அதுதான் உண்மை. அவ்வாறானவர்களால் தான் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற ஆதரவும் கொடுக்கப்பட்டது. 1949ம் ஆண்டின் பிரசாவுரிமைச் சட்டம் (பொன். அருணாசலம் மற்றும் பொன். இராமநாதன்) 1966ம் ஆண்டின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான சட்டம் (திருச்செல்வம் போன்றோர்.) என பல ஆதாரங்கள் உள்ளன.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன்… இலங்கையிலிருந்து தப்பி வந்த எந்த முஸ்லிமும் (என்னைத் தவிர) இந்தியா சென்று அங்கிருந்து வெளிநாடு சென்றது கிடையாது. அது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.. இந்திய தமிழும் இலங்கை முஸ்லிம்களின் தமிழும் …//

    என்ன சொல்கிறீர்கள் முஸ்லிம் ஒருவரும் இந்தியா போகவில்லையா (ஸ்ரீலங்கா அரசுக்கு தப்பி) நல்ல ஜோக். எல்லாம் நீங்கள் மட்டும் செய்தீர்கள் வேறொருவரும் செய்யவில்லை பாணி கதைவிடலுக்கு இன்ன்னொரு உதாரணம். இதனை எனக்குச் சொன்னவர் 1983 இல் இருந்து இந்தியாவில் வசிக்கும் ஒருவர். மேலும் இங்கே நான் வதிக்கும் நாட்டில் பல முஸ்லிம்கல் அகதி அந்தச்து பெற்றிருக்கின்றனர் (எல்லாம் புலியைக் காரனம் காட்டித்தான்!) அவர்களின் கதைகளை நான் அறிவேன் அஷ்ரஃப். பலர் இந்தியா சென்று இந்திய முஸ்லிம்களின் பாஸ்போட்டில் மலேசியா சென்று வந்து சேர்ந்தவர்கள்!

    //….அப்படியிருக்க இந்தியப்புலனாய்வுத்துறை கதையெல்லாம் சாத்தியமா..? …//
    சாத்தியமாக இருக்கிறதே! நீங்களே சொன்னீர்கள் உங்களைக்கொல்லும் முயற்சிகூட நடக்கிரது தப்பி மலேசியா போனேன், கணனி இயக்குனராக வேலை பார்க்கிறேன் என! இதெல்லாம் ஸ்ரிலங்கா புலனாய்வுத்துறையால் சாத்தியமா? அவர்கள் பேசும் சிங்கலத்துக்கும் இந்தியத் தமிழுக்கும் நிறைய வேறுபாடுள்ளதல்லவா?

    ///…அது என் பாதுகாப்புக் கருதியது மட்டுமே.. அதில் மேலதிக விபரங்கள் தேவையாயின் தேசம் நெற்றில் எனது ஈமெயிலைப் பெற்று எனக்கு மெயிலிடுங்கள். நான் அனைத்தையும் மனம் திறந்து உங்களுடன் உரையாடுவேன்…..//

    உங்களின் பாதுகாப்புக்கருதிய விடயங்களை எப்படி எனக்கு நம்பிக்கொடுப்பீர்கள்? தேசத்தில் எழுத முடியவில்லையாம். ஆனால் எனக்கு நம்பிச் சொல்லுவாராம் அஷ்ரஃப் அலி!! என்மேல் அவ்வளவு நம்பிக்கையா?

    Reply
  • ashroffali
    ashroffali

    //இதெல்லாம் ஸ்ரிலங்கா புலனாய்வுத்துறையால் சாத்தியமா? அவர்கள் பேசும் சிங்கலத்துக்கும் இந்தியத் தமிழுக்கும் நிறைய வேறுபாடுள்ளதல்லவா?//
    அரசாங்கம் இரண்டும் இணைந்து செயற்படும்போது எதுவும் சாத்தியம் தான் சாந்தன்.. அதனால் தான் இன்றைக்கு தாய்லாந்து இந்தோனேசியா என பல நாடுகளில் நம்மவர்க்கு அநியாயம் நடக்கின்றது. அங்கெல்லாம் கூட சிங்களம் தெரிந்த அரசாங்கமோ இராணுவமோ இல்லை. ஆனால் அரசாங்கங்களின் கூட்டுறவு அதற்கான காரணமாக இருக்கின்றது.

    Reply
  • BC
    BC

    யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் முஸ்லீமான ஸகசதுல்ல ஜதுரோஸ் முன்பு புலிகளால் புத்தளத்திற்க்கு விரட்டப்பட்டவர், பொங்கு தமிழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். முஸ்லிம்களின் யாழ் மீளக் குடியமர்த்தல் தொடர்பாக கூறியபோது முந்தி இருந்த மாதிரி எங்கட இடத்தை திருத்தி அமைக்க ஏராளம் பணம் வேணும். இந்தியா உதவுகிற மாதிரி முஸ்லிம் நாடுகளும் உதவ வேண்டும். அதை பற்றி யார் யோசிக்கிறார்கள் என்றார்.
    முஸ்லிம் நாடுகளின் யோசனை எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படி ஏற்றுமதி செய்யலாம் பிற மதத்தவரின் நாடுகளில் எப்படி மசூதி கட்டலாம் என்பது பற்றியதே.

    Reply