வன்னியில் சட்டவிரோத மதுபான விற்பனை.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்கள் நடைபெற்று வருகின்றமை பொலிஸாரினால் கண்பிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிப்பணம். மற்றும் வீடமைப்புப்பணிகள் என்பனவும் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்ட விரோத சாராயம் காச்சும் தொழிலினாலும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களாலும் சமூகச் சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களை சட்டபூர்வமாக விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *