தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இரா.சம்பந்தன் தெரிவிப்பு.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு இதுவரை கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு வருமானால் அதில் கலந்து கொள்வது பற்றி ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஓன்பதாவது கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை கொழும்பில் ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை செவ்வாய் கிழமை இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *