நாட்டிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளும் அதன் வெளிநோயாளர் பிரிவுகளை காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து வைத்து சிகிச்சைகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து இவ்வாறு சிகிச்சையை வழங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. ப. பவானி தெரிவித்துள்ளார்.