மீசாலையில் பொதுமக்களிடம் பணம் சேகரித்த சிங்கள இளைஞர்கள் இருவர் கைது.

மீசாலைப்பகுதி வீடுகளில் பணம் சேகரிக்கச் சென்ற இரு சிங்கள இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி இவர்கள் மீசாலைப் பகுதி வீடுகளில் பணம் சேகரித்துள்ளனர். பணம் வழங்க மறுப்புத் தெரிவித்தவர்களிடம் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

அப்பகுதி சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குச் சென்று இவர்கள் பணம் கேட்ட போது விட்டிலிருந்த பெண் கணவருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சாவகச்சேரி பெலிஸாரினால் குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவ்விளைஞர்களுக்கு பணம் வழங்கியவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் கிளிநொச்சிப் பகுpகளிலும் இவ்வாறு சிலர் சிறுவர் இல்லம், அநாதைகள் இல்லம் எனக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் நிதி சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *