ஜனாதிபதியின் பதவியேற்பு – கொழும்பு 01, 02, 03, 04 இல் விசேட விடுமுறை தினம்

தேசிய நிகழ்வாக நடத்தப்படும் ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் நடைபெறும் நவம்பர் 19 ஆம் திகதியன்று கொழும்பு 01, 02, 03, 04 ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் துறை அலுவலகங்களுக்கும் கொடுப்ப னவுடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு தேசிய நிகழ்வாக கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள ஜனாதிபதியின் செயலக வளவில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பு 01 கோட்டை, கொழும்பு 02, யூனியன் பிளேஸ், கொம்பனித்தெரு, கொழும்பு 03 கொள்ளுப்பிட்டி, கொழும்பு 04 பம்பலப்பிட்டி பகுதிகளிள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் தேசிய அலுவலக நிகழ்வாக இருப்பதனாலும், அன்றைய தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடங்கலைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறை தாபனங்களின் பணியாளர்களுக்கு 19 ஆம் திகதியன்று கொடுப்பனவுடன் கூடிய லீவினை வழங்குமாறு உரிய தொழில்தருநர்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *