நேர்டோ நிறுவனத்தினால் நிவாரண கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நிவாரண கிராமங்களில் இருந்த மாணவர்கள் கீழ்வரும் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தனர். தற்போது நலன்புரி முகாம்களில் இருந்து கா.பொ.தா சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கு அவசரமாக கீழ்வரும் பொருட்கள் தேவைப்படுகிறது.

பாடசாலை சீருடை முதல் கணித பாட உபகரணங்கள் வரையான தேவைகளிற்கு உடன் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ மாணவிகளின் விபரங்கள்:

கதிர்காமர் முகாம் : 30 ஆண்கள் 40 பெண்கள் மொத்தம் 70.

ஆனந்தக்குமாரசாமி :38 ஆண்கள் 62 பெண்கள் மொத்தம் 100

இந்த வேண்டுகோளை புலம்பெயர் சொந்தங்களின் உதவியுடன் நேர்டோ உடன் தீர்த்து வைத்தது!

மேற்படி நிகழ்வானது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் நேர்டோ நிறுவனத்தினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 17.11.2010 அன்று காலை 9.30 தொடக்கம் மாலை 2.00 மணிவரை நிவாரணக் கிராமங்களாகிய அருணாச்சலம், ஆனந்தகுமாரசாமி, கதிர்காமம் போன்ற கிராமங்களை சேர்ந்த க.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றவுள்ள ஆண், பெண் இருபாலரும் உள்ளடங்களாக 322 மாணவர்களுக்கான சீருடை, பாதணிகள், உபகரணங்கள், என்பன வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக வட மாகண கல்விப் பணிப்பாளர் வ அரியரட்ணம், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் S. கிருஸ்ணகுமார், ஆசிரிய ஆலோசகர் தேவதாஸ் ஆகியோர் மாணவர்களுக்கான பொருட்களை வழங்கி அவர்களின் எதிர்கால கல்வி செயற்பாட்டிற்கு உதவினர் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • சுபமங்களா
    சுபமங்களா

    படங்களை பாரக்க இங்கு அழுத்தவும்!
    -http://www.nerdo.lk/?p=975

    Reply