யாழ்.குடாநாட்டில் மீண்டும் வழிப்பறி மற்றும், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணியளவில் மானிப்பாயில் பெண்ணொருவர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் இருவர் அவரின் தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அவர்கள் தப்பியோடும் பொழுது குறித்த பெண் கூக்குரலிட அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் திருடர்களைப் பிடித்து நையப்புடைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு கைதடியில் ஒரு இரவில் முன்று வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் .இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தற்போது கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.