யாழ்ப்பாணத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்.

dengu_1.gifயாழ். குடாநாட்டில் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் அறிகுறியுடன் சிகிச்சைப்பெற வருவோரின் தொகை யாழ்.வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை குருநகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் டெங்கு நொய் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் அம்மரணத்துடன் இவ்வருடத்தில் டெங்கு நோயினால் மரணித்தவர்களின் தொகை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட தொற்று நோய் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி திருமதி. சிவசங்கர் திருமகள் தெரிவித்துள்ளார். மழை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மீண்டும் டெங்கு தாக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும். இந்நோய் தாக்கத்திற்குள்ளாகி நாளொன்றுக்கு மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *