கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள ஆயிரம் குடும்பங்களும் தற்போது பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு தற்போது சமைத்த உணவுகளும் மற்றும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.