மாணவர் அனுமதிக்கு பணம் அறவிடும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- வடமாகாண கல்விப்பணிப்பாளர்.

Students_Hindu_Ladies_Jaffna2010 ஆம் அண்டு நிறைவடைந்து, புதிய கல்வியாண்டிற்குப் புதிய மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அனுமதிக்கு பணம் அறவிடும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது நிதி அறவிடும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் ஆதாரத்துடன் முறையிட்டால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாடசாலை அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் போது எவ்விதமான பணத்தையும் பெற்றோர்கள் செலுத்தத் தேவையில்லை எனவும், பெற்றோர்கள் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *