மீசாலையில் இராணுவத்தின் துப்பக்கிப் பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு.

தென்மராட்சி மீசாலை புத்தூர் பகுதியில் இராணுவச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் நோக்கி வீதியில் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றை இரும்புக்கம்பி ஒன்றினால் தாக்கினார் எனவும், பின்னர், அவ்வழியாகச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றையும் தாக்கினார் எனவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடமையிலிருந்த படைச்சிப்பாய் ஒருவர் அவரைத் தடுக்க முற்பட சிப்பாய் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றுமொரு இராணுவச்சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து படையினரே அவ்விளைஞனின் உடலைக் கொண்டு சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிந்த இளைஞர் மீசாலையைச் சோந்த துரைரட்ணம் துஸ்யந்தன் (வயது 25) எனவும் இவர் ஒரு மனநோயாளி எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *