முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள 6000 குடும்பங்களும் மீள்குடியமர்த்தப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அப்பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள் துரிதமாக அகற்றப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் 6ஆயிரம் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளதாகவும், முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் முல்லை மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 6ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பேர் மாத்திரமே இன்னமும் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *