காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதியன்று கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மனிஉரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோரைத் தேடியறியும் குழு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு இப்போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை காலமும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்காத நிலையில் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களும், மனிநேய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.