யாழ்ப்பாணத்தில் 153 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளன. மேலும் 350 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளன.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் 153 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் இதுவரை புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் பலர் இருப்பிட வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு கூடார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்குமாறும், யாழ்.முஸ்லிம்களின் மனிதஉரிமைகளுக்கான நலன் விரும்பிகள் என்ற அமைப்பு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *