லண்டன் தமிழர்களின் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Angajan_Ramanathanலண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையினரின் ஏற்பாட்டிலும் படையினரின் ஏற்பாட்டிலும் அந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றன. இப்பேரணிகள் முதலில் தனித்தனியாக ஒழங்கு செய்யப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பான பேரணி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளுடன் முற்றவெளிப் பகுதியூடாக யாழ்.பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இ. அங்கஜன் அங்கு உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதியூடாக சென்று ஆரியகுளம் சந்தி, ஸ்ரான்லி வீதி வழியாக பேரணி மீண்டும் யாழ்.பஸ்நிலையத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பட்ட நடவடிக்கைக்காக குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பஸ்கள் மூலம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இப்பேரணி நடைபெற்றதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • karuna
    karuna

    இதை இங்குள்ள சிலர் ஒரு ஜோக்காக எடுத்து இவர்களையும் துரோகிகள் என்று வேறு சில புலன்பெயர் தமிழ் ஊடகங்கள் சாடுகின்றன! போற போக்கில் துரோகிகள் தான் தமிழ் மக்கள் என்ற அளவிற்கு போயுள்ளது. முடிந்தால் கீழ் உள்ள உரையாடலை கேட்டால் புலம்பெயர் சமூகமும் தாயக சமூகத்திற்குமிடையிலான இடைவெளி கூடுவதை பார்க்க முடிகிறது!

    -http://www.youtube.com/watch?v=HhO6mm46-hw&feature=player_embedded

    Reply
  • M.Desmond
    M.Desmond

    வாழ்த்துக்கள் அங்கஜன்.

    Reply
  • sri
    sri

    ஆமியும் மாற்று இயக்கங்களும் யாழ்பாணத்தில் இல்லாமல் இது நடந்திருந்தால் உண்மையிலே வெற்றி தான்.. ஆனால் மக்களாக வந்து இதில் கலந்திருப்பார்கள் என்பதை நம்புவது இன்றைய சூழலில் கொஞ்சம் கஷ்டம் தான்.

    Reply
  • Raasan
    Raasan

    வாழ்த்துக்கள் அங்கஜன். முன்னர் கப்பலில் பம்பாய் வெண்காயம், உருளைக்கிழங்கு ஏற்றி அதன் மேலே அழுகிய வெண்காயம் உருளைக்கிழங்கைப் பரப்பி இந்திய ஏஜன்ற் இடமும் ஸ்ரீலங்கா கப்பல் கொம்பனியிடமும் இன்சூரன்ஸ் கிளெய்ம்பண்ணி அழுகிய கிழங்கையும் கலந்து பெற்றா மாக்கற்ரில் விற்று அதில்லும் பணம் சம்பாதித்த கோஷ்டிக்கு இதெல்லாம் செய்வது பெரிய விடயமா?

    Reply
  • rohan
    rohan

    //வாழ்த்துக்கள் அங்கஜன்.//
    புலி எழுதிக் கொடுத்த சுலோக அட்டைகள் பிடித்தவர்கள் இப்போது சிந்தனா வால்கள் கொடுத்தவற்றைப் பிடிக்கிறார்கள். அது தவறு – இது சரி, அப்படியா?

    Reply