யாழ். வெள்ள அனர்த்தத்திற்கு அவசர நிதி ஒதுக்கிடு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்த நிலமையை சீர்செய்வதற்காக அவசரமாக பத்து இலட்ச ரூபா நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூவாயிரம் ரூபாவிற்கு குறைவாக மாதாந்தம் வருமானம் பெறும் மக்களுக்கே இந்த நிதியிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலம் ஈரமாகியுள்ள நிலையில் தங்கியுள்ள மக்களுக்கு பிளாஸ்ரிக் விரிப்புக்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *