போரின் போது முல்லை மாவட்டத்தில் உடமைகளை கைவிட்டவர்கள் அவற்றை மீட்டுச்செல்ல அனுமதி.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் உடமைகளை கைவிட்டவர்கள் தங்களின் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெறும் விண்ணப்பத்தை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுரம், இரணைப்பாலை. ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் பொருட்களைக் கைவிட்டவர்களே இவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் உரிமையாளர்கள் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய தங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *