வடமாகாண சபை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.

வடமாகாண சபை அலுவலகங்கள் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இயங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபையின் ஏழு அலுவலகங்கள் நேற்று பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகம் கைதடியிலும், திட்டமிடல் அலுவலகம் கல்வியங்காட்டிலும், கணக்காய்வுத் திணைக்களத்தின் அலுவலகம் நாயன்மார்கட்டிலும், வடமாகாண ஆளுநரின் அலுவலகம் சுண்டுக்குழியிலும், கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் நல்லூரிலும், திறைசேரி அலுவலகம் றக்கா வீதியிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் இவ்வலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *