யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவிகளின் மத்தியில் நடத்தைப்பிறழ்வுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமகாலத்தில் 15 வயது தொடக்கம் 19 வயது வரையிலான மாணவிகள் மத்தியில் இந்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய நிபுணர்களும் உளநல மருத்துவ நிபுணர்களும் இணைந்து பெற்றோர் ஆசிரியர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி வருகின்றனர்.
மாணவர்களின் நடப்தைப்பிறழ்வுகள் தொடர்பான காரணிகளை ஆராய்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் எவ்வாறு அவர்களை வழிநடத்தலாம் என்பது குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டு வருகின்றது. யாழ் நகரிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர்களை உள்ளடக்கி இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவிகள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் எதிர்கொள்ளும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து வைத்திய நிபுணர்களும் உளமருத்துவ நிபுணர்களும் உணர்வு பூர்வமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.