கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் 17 பாடசாலைகள் விரைவில் மீள இயங்கவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படாமலுள்ள 17 பாடசாலைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலுள்ள 17 பாடசாலைகளின் புனர்நிர்மானப்பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில் இவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 84 பாடசாலைகள் மீள இயங்கி வருவதாகவும், இப்பாடசாலைகளில் 26 ஆயிரத்து 649 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும், ஆயிரத்து 494 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *