நல்லிணக்க ஆணைக்குழு தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் வருண டி சேரம் தெரிவித்துள்ளார். இவ்வகையில் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம் மற்றம் காலி, பூஸா முகாம்களுக்கும் ஆணக்குழுவினர் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம், மன்னார் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 7ஆம் திகதி புத்தளத்திலும், 8, 9ஆம் திகதிகளில் மன்னாரிலும், 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அம்பாறையிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆணக்குழுவின் அமர்வுகள் மொனராகலை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *