வடக்கில் இரு நெற்களஞ்சியங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

பெரும்போக நெற்செய்கையினால் கிடைக்கப்பெறும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வடக்கில் இரு நெற் களஞ்சியங்களை 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விரு நெற்களஞசியங்களையும் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்களஞ்சியங்களை அமைக்க வடமாகாண சபை, வடக்கின் மீள்எழுச்சித்திட்டம் என்பவற்றின் ஊடாக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *