அடைமழையிலும் வடபகுதிக்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்.

Jaffna_Touristஇலங்கையின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்ற நிலையிலும் வடபகுதிக்கான சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்த வண்ணமே உள்ளன. வவுனியாவிற்கு அப்பால் கனகராயன்குளம் தொடக்கம் கிளிநொச்சி, ஆனையிறவு என ஏ-9 பாதையின் பல இடங்களில் இச்சுற்றுலாப்பயணிகள் தங்கி நின்று போரின் எச்சங்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை, வன்னிப் பகுதிகளுக்கு வந்து பாதையோர வியாபாரங்களை மேற்கொண்டு வரும் தென்னிலங்கை வியாபாரிகள் தற்போது தங்கள் மனைவி பிள்ளைகளுடன் வருகை தந்து வியாபாரத்திலீடுபட்டு வருவதை காண முடிகின்றது. பாடசாலை விடுமுறை என்பதால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து இடங்களைப் பார்வையிடுவதுடன் வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *