நேர்டோவின் யாழ் கிளை வடமராட்சியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

NERDO_Logoநேர்டோ அமைப்பினர் தமது யாழ் மாவட்டத்திற்கான செயற்பாடுகளை வடமராட்சி பகுதியில் ஆரம்பித்துள்ளனர். யுத்தம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்து பாதிப்புக்குள்ளான கரையோரப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமராட்சியில் இன்புருட்டி பகுதியல் 7 பெரிய ஒழுங்கை, வியாபாரிமூலை, பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் ஏற்கனவே வன்னி அலவலகத்திலிருந்து பல்வேறு உதவிகளை இந்தப்பகுதி மக்களிற்கு மேற்கொண்டு வந்தனர். பாதிப்புக்குள்ளான மக்கள் பெருமளவில் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யுமுகமாகவே இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக நேர்டோவின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர் திரு இளங்குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேர்டோவின் கிளை அமைப்பான டாக்டர் துரைரட்ணம் ஊனமுற்றோர் மறுவாழ்வு நிலையம் ஒன்றும் கிளிநொச்சிப் பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. TDRC என்றழைக்கப்படும் இந்த நிறுவனத்திற்கு காலம்சென்ற முன்னை நாள் சுகாதார அமைச்சின் விநியோகப்பிரிவின் இயக்குனர் மருத்துவர் திரு துரைரெட்ணம் நினைவாக அவர்கள் குடும்பத்தினரின் அனுசரனையுடன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற அனைவரிற்கும் உதவுமுகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது உளவியல் சிகிச்சையிலிருந்து செயற்கை அவயவங்கள் பொருத்துவது மற்றும் ஊனமுற்றவர்களிற்கான தொழில் பயிற்சி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் -http://www.tdrc.anbuillam.org இல் இருந்து பெற முடியும்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *