விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் 160 பேருக்கு தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள 160 விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குள் இருந்தபோது கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப்பிரினரால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களின் தடுப்புக்காவல் நேற்று புதன் கிழமையுடன் முடிவடைவதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவர்களை நேற்று கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்புக் காவலிலுள்ள இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என இவர்களை விசாரணை செய்யும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *