கொழும்பு நகரின் பாதுகாப்புக் கருதி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அது பிற்போடப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாதுகாப்பு கமராக்களை ஒரு வருடத்திற்கு கொழும்பு நகரில் பொருத்தி வைப்பதற்கான திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்வைத்திருந்தார். இதற்கான செலவு அதிகம் என்பதால் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்குடனும், கொழும்பு நகரின் கேந்திர நிலையங்களில் 108 பாதுகாப்பு கமராக்களைப் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mohamed Shareef Asees
I am haappy that things are improving in Sri Lanka.
Mohamed Shareef Asees