க.பொ.த பரீட்சையில் தோற்றியுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் விடுவிக்கப்படவுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலிருந்து தற்போது க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 175 பேர் எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் 45பேர் பெண்களாவர். இவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *