குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை விடவும் குற்றங்களுக்கான காரணிகள் களையப்பட வேண்டும் என யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு.

“தற்போது யாழ்.குடாநாட்டில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதை விடவும் அவர்கள் ஏன் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஆராய வேண்டும். இதற்கான காரணிகள் களையப்பட வேண்டும்” இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்.திருமறைக் கலாமன்றத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.அலுவலகம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னர் ஆயுதப் போராட்டத்திற்குள் வாழ்ந்தவர்கள் இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியாமலுள்ளனர். ஒவ்வொரு இளைஞனுக்கும் பொறுப்புகள் அதிகமுள்ளன. அவர்கள் தொழிலில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வறுமை நீக்கப்பட வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் 60 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. வருடமொன்றிற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 100 இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க முன்வரவேண்டும். பட்டதாரிகளாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் பலர் மாவட்டச் செயலகத்தில் சிற்றூழியர் நியமனமாவது கிடைக்க வேண்டும் எனக்கோரி கடிதங்களை அனுப்புகின்றனர். யாழ்.குடாநாட்டின் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மை இவ்வாறு தான் உள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *