பழம் பறிப்பதற்கு விமானங்களில் வேiயாட்கள் தருவிப்பு!

பிரிக்சிற் வந்தால் பிரித்தானியாவில் தேனும் பாலும் ஓடும் என்ற இந்த கொன்சவேடிவ் அரசு, பிரித்தானிய வேலைகள் பிரித்தானியாவிற்கே என்றவர்கள் இன்று ருமேனியாவில் இருந்து 6 வீமானங்களில் பழங்கள் பிடுங்குவதற்கு வேலையாட்களை வரவழைக்க ஏற்பாடு செய்கின்றனர். இதையெல்லாம் கேட்க வேண்டிய நேரம் இது.

இந்த அரசியல் வாதிகளுடன் கைகோர்த்து இந்த மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்கின்ற பிரச்சாரங்களுக்கு ஒரு எல்லை கிடையாது. காலம்காலமாக பொய்ப்பரப்புரைகளைச் செய்து உலகம் முழுவதும் யுத்தத்தை உங்பத்தி செய்தவர்களுக்கு சொந்த மக்களைக் கூட காப்பாற்ற இயலாமல் இல்லை காப்பாற்ற விருப்பமின்றி செயற்படுகின்றனர். இன்றைக்கு எடுக்கப்படும் முடிவுகள் தங்கள் வருமானத்தை எதிர்காலத்தில் பாதித்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கின்றன இந்த அரசியல் வாதிகளுக்கு பின்னால்லுள்ள வர்த்தகப் பெரும்புள்ளிகள். நிற்க.

இந்த கொன்சவேடிவ் அரசும் சில தீவிர இடதுசாரிகளும் கூட பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து வெளியேற வேண்டும் சன்னதம் ஆடி வெளியேறி விட்டனர். இன்று கொன்சவேடிவ் கட்சியின் சன்னதத்துக்கு வாக்களித்தவர்களையே காப்பாற்ற விரும்பமின்றி உள்ளது அரசு. அவர்களை மருத்துவ மனையில் வயோதிபர் இல்லங்களில் வைத்து பராமரிப்பவர்கள் இன்று பிரித்தானியாவுக்கு உணவு வழங்கிக்கொண்டு இருப்பவர்கள் பிரித்தானியாவை இயக்குபவர்கள் யார்? ஐரோப்பியர்கள், குறிப்பாக கிழக்கு ஐரோப்பியர்கள் ஆசியர்கள் ஆபிரிக்கர்கள். இவர்கள் தங்கள் உயிரைக்கொடுத்து பிரித்தானியாவை இயக்குகின்றனர். மக்களைக் காப்பாற்றுகின்றனர். நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து அனைத்தும் அரசியலே. ஆனபடியால் அரசியல் வழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *