மருத்துவமனைகளில் சிறுபான்மையின பணியாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் சிரமம்!

பிரித்தானிய மருத்துவமனைகளில் பணியாற்றிய ஆசிய ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் பெரும்பான்மை யினத்தவர்களைக் காட்டிலும் சிக்கல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. மருத்துவமனைகளில் கோவிட்-19 தாக்கத்தினால் இறந்தவர்களில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அடுத்தே அதனை அறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இன்று வெளிவநதுள்ள அறிக்கையில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையின பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் கூடுதல் தடைகள் காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 44 விதமான மருத்துவர்களும் 22 வீதமான மருத்துவ தாதிகளும் ஆசிய ஆபிரிக்க இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த சனத்தொகையில் இவர்கள் 14 வீதத்தினரே.

மேலும் கோவிட்-19 தாக்கத்தில் ஆசிய ஆபிரிக்க இனத்தோர் கூடுதலாக மரணமடைவதற்கு ஆவர்கள் மத்தியில் கூடுதலாகக் காணப்படும் ஏனைய நோய்க்காரணங்களும் காரணமாக உள்ளது. அதைவிடவும் அவர்களுடைய பொருளாதார நிலை, ஒரே வீட்டில் மூன்று தலைமுறையினர் வரை ஒன்றாக வாழ்வது, பொருளாதார நிலைகாரணமாக வீடுகளில் கூடுதலான எண்ணிக்கையானோர் வாழ்வது போன்றனவும் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மைச் சமூகங்களில் கோவிட்-19 தாக்கம் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *