02.08.2020 நள்ளிரவு முதல் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்துப் பரப்புரை நடவடிக்கைகளும் எதிர்வரும் 2ஆம் திகதி [ஞாயிற்றுக்கிழமை] நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் தினமான 05ஆம் திகதி வரை அமைதிக்காலம் பேணப்படவுள்ளது.

இதேவேளை கொரோனா அச்சநிலையிலும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காத்திரமான தேர்தலை நடத்த முன்வர வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *