வெளிநாடுகளுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக சென்று மீள நாட்டுக்கு வர முடியாது இருந்தவர்களை மீட்டு இலங்கைக்கு கொண்டு வரும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 305 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அதனடிப்படையில் ஜோர்தானில் இருந்து 285 இலங்கையர்களும் கட்டாரில் இருந்து 22 இலங்கையர்களும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.