அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் இன்று (6) ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர உள்ளதாக கட்சி செயலாளர் நந்தன குணதிலக தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.
இதன்படி தமது கட்சி எம்.பிக்கள் அரச தரப்பில் அமர உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை தே.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரையும் ஆளும் தரப்பில் அமர வைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடையாது எனவும் சிலரை மட்டுமே ஆளும் தரப்பில் அமரவைக்க முடியும் எனவும் உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நைல் இத்தவெல கூறினார். ஆளும் தரப்பில் 116 ஆசனங்களே உள்ளதெனவும் சிரேஷ்ட அடிப்படையில் உள்ளவர்கள் ஆளும் தரப்பில் உட்கார வைக்கப்படுவர் எனவும் கூறிய அவர் கூறினார்.