ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

batti-mayer.jpgமட் டக்களப்பு மாவட்டத்தில் ஞயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு நாள் இடம்பெற்ற இந்து இளைஞர் பயிற்சி முகாமில் பங்குபற்றிவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 174 அறிநெறி பாடசாலைகள் இயங்குகின்றன. ஞாயிற்று கிழமைககளில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதால் அறநெறி பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *