117 தற்கொலைதாரிகள் கொழும்பினுள் ஊடுருவல்

laksman-yaappa.jpgவடக் கில் தமக்கு ஏற்படும் தோல்விகள் காரணமாக கொழும்பிலும், முக்கிய நகரங்களிலும் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் எனவே இது குறித்து ஊடகங்கள் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படையச் செய்யும் பணியில் அனைத்து ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *