கிழக்கு மாகாண முதலமைச்சரரையும் செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கென இரு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள் முதலமைச்சரரையும் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து தங்களது குறை நிறைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட இந்த இரண்டு நாட்களும் பூரணமாக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்களின் சிரமங்கள் குறைவடையும், இதேவேளை மற்றைய நாட்கள் அதிகாரிகள் தங்களது அலுவலக வேலைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.