மரண வீட்டைப் போல காணப்பட்ட பாராளுமன்றம்

sl-parlimant.jpgஇன்று பாராளுமன்றம் 45 நிமிடங்களே கூடியது. பாராளுமன்றம் இன்று கூடிய போது அழுகுரல்களும்,  கூக்குரல்களும், ‘ஊ’ சப்தங்களுமே முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாராளுமன்றத்தில் மத்தியில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் கருப்பு மற்றும் சிவப்பு துணிகளை கட்டியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிவப்பு நிற துணியினால் வாயை மூடிக்கட்டியிருந்தார். அரசாங்கக் கட்சி அமைச்சர்கள் சபையில் பேச எழுந்தநேரத்தில் “ஐயோ கொலைகாரர்களே” என்று கூறிக்கொண்டு மரண விட்டில் அழுவதைப்போல அழுதனர்.

எதிர்க் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. பாராளுமன்றத்துக்குள் எதிர்க் கட்சியினரும்,  ஆளும்கட்சியினரும் அமைதியை கடைபிடிக்காதமையினால் இன்றைய கூட்டத் தொடர் 45 நிமிடங்களில் முடிவடைந்தது. இச்சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சண்டை லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்தும்,  சிரஸ ஊடக நிலைய தாக்குதல் குறித்தும் சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.   

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thambi
    thambi

    Well done UNP please keep on this untill you come to power and do the same or to kill tamils and say to the sinhale peoples…..

    Reply