வெனிசுலாவில் இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோவை கொலைசெய்ய ட்ரம்ப் முயற்சி ? – 15 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிர்ணயம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டிருப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் கொண்ட தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோ ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டுக்கு எதிரான மிகக்கடுமையான பொருளாதார நடவடிக்கையால் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் இருந்து வருகிறது.

இதற்கெல்லாம் அமெரிக்காவே காரணம் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தன்னை கொலை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தற்போது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதற்காக கூலிப்படையை தேடிக்கொண்டிருப்பதாகவும், தனது தலைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அமெரிக்க அரசு நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 03.09.2020 மதுரோவின் இந்த புகார் சர்வதேச அரங்கில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *