எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயார் ! – டொனால்ட் ட்ரம்ப்

ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டு வரும் அமெரிக்கா அடுத்து தன்னுடைய பார்வையை இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை நோக்கி திருப்பியுள்ளது. சீனாவுடன் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தமை முதல் தன்னுடைய வெறுப்பை சீனா மீது காட்டி வரும் அமெரிக்கா இந்த பிரச்சினையிலும் இடைத்தரகராக தலையிட ஆரம்பித்துள்ளது.

எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன இராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது.

இதனால் இந்திய – சீனா  ஆகிய  நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.

இந்நிலையிலேயே இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.

சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். ஆகவே, சீனா- இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம்.

இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *