இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் மர்ம நபர் சரமாரி கத்திக்‍குத்து – ஒருவர் உயிரிழப்பு !

இங்கிலாந்து நாட்டின் Birmingham நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Birmingham நகரின் மதுக்குடிப்பகங்கள் நிறைந்த பகுதியில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒருபெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்தில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலோ அல்லது குழுக்கள் இடையிலான முன்விரோத தாக்குதலாகவோ தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *