“பெரும்பான்மை மக்களுடைய கருத்துக்கு அமைவாகவே 19வது திருத்தம் நீக்கப்படுகின்றது ” – கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்  என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரிக்கு அமைச்சர் நேற்று (08) காலை விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், 19 ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.

இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *