தியாகி திலீபனின் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுப்பு !

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்களால் கடந்த வருடம் நடைபயண பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இவ்வருடம் அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்விடயம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *