தொடரும் தற்கொலைகள் ! – தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்களின் சடலம் பரந்தனில் மீட்பு!

இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் வாகன விபத்துக்களால் ஏற்படும்  இறப்புக்கள் மலிந்துள்ளதை போல இளைஞர்களின் தற்கொலை தெடர்பான செய்திகளும் நாளொன்றுக்கு ஒன்றுவீதமேனும் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றது.
பரந்தன் ஓசியர் சந்திப்பகுதியிலுள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ம் திகதி 12 மணியில் இருந்து காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியுரியும் பரந்தனைச் சேர்ந்த சுசிதரன் வயது 28 மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த தனுஷியா வயது- 27 ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இருவரும் காதலர்கள் எனவும் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாககவும் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *