பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்கிறார் கி.துரைராசசிங்கம் !

தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக அம்பாறையைச்சேர்ந்த கலையரசன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சி அங்கத்தவர்களிடையே நீண்ட இழுபற் நடந்தேறியது. குறிப்பாக கலையரசனை தெரிவு  செய்த போது பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஏனையவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற விடயமானது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து  இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார் .

இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன்.எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

119008549 354886052344596 2873696060065358033 n

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *