புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரிமாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு !

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் கனடாவிலுள்ள முதலீட்டாளர்களான சுகந்தன், சண்முகநாதன் மற்றும் சதீஸ் இராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய இந்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்வாங்கியதற்காக பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். தற்போது நாட்டிலுள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்குள்ள மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *