வீணானது பேர்ஸ்டோவின் அரைச்சதம் – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது பெங்களூர்!

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில்  வென்ற சன்ரைசர்ஸ் அணி தலைவர் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார்.
36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 பந்துப்பறிமாற்ற முடிவில் 5 இலக்கு இழப்பிற்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி
இதனால் 164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
அந்த ஜோடி ஐதராபாத் அணியின் ஓட்டத்தை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்துவெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 இலக்குகளை இழந்து ஐதராபாத் திணறியது.  இறுதியில் ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து இலக்குகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .
பெங்களூர் அணி தரப்பில் சாஹல் 4 பந்துப்பறிமாற்றங்களில் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். சிவம் துபேயும் 3 பந்துப்பறிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.
நவ்தீப் சைனியும் 4 பந்துப்பறிமாற்றங்களில் 25 ஓட்டங்கள் கொடுத்து 2 இலக்குகளைவீழ்த்தினார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *